Athisiya Ulagil Alice
By Sivan
()
About this ebook
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Read more from Sivan
Buddha Jathaga Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsHitchcock Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalukkana Greekka Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Athisiya Ulagil Alice
Related ebooks
Enbathu Naatkalil Ulagai Sutri Rating: 0 out of 5 stars0 ratingsSembulapeyal Neer Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsNesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Veli Rating: 0 out of 5 stars0 ratingsMacedonia Maaveeran Rating: 0 out of 5 stars0 ratingsAgni Kunju Rating: 0 out of 5 stars0 ratingsAal Kadathal Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Vandhuvidu Vasavi.. Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsNadaga Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsSiddharthan Rating: 0 out of 5 stars0 ratingsTom Sawyer Rating: 5 out of 5 stars5/5Robinson Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5Sri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsNana Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vittu Vaa Nilave Rating: 0 out of 5 stars0 ratingsSetril Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Bhuvana Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsNazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Yugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Naalai Varum Rating: 0 out of 5 stars0 ratingsGowri Kalyanam Vaibogame Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Athisiya Ulagil Alice
0 ratings0 reviews
Book preview
Athisiya Ulagil Alice - Sivan
http://www.pustaka.co.in
அதிசய உலகில் ஆலிஸ்
Athisiya Ulagil Alice
Author :
சிவன்
Sivan
For more books
http://www.pustaka.co.in/home/author/sivan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
நிலைக்கண்ணாடியின்
ஊடாக...
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
ஓர் அறிமுகம்
உலகம் முழுவதிலுமுள்ள இலக்கிய ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் லூயிஸ் காரல். 'அதிசய உலகில் ஆலிஸ், நிலைக்கண்ணாடியின் ஊடாக..' என்கிற அவரது இரண்டு படைப்புகளும் அழியாவரம் பெற்றவை. பழமொழிகளைப் போல், நாட்டுப்பறப் பாட்டுகளைப் போல், பாட்டிகதைகள் போல் உலகம் முழுக்க நடைமுறையில் உள்ள எத்தனையோ விஷயங்களும், மரபுகளும், நடைமுறைகளும் இதில் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வளவு விஷயங்களையும் உட்படுத்திக் குழந்தைகளுக்கான புத்தகத்தை நுட்பமாக எழுதிய எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவர் லூயிஸ் காரல்.
குழந்தைகளுக்காகக் கதை எழுதுபவர்கள் சாகசம் மற்றும் வர்ணனைகள் மூலமாக அவர்களைக் கவர முற்படும்போது, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் லூயிஸ் காரல்
நடைமுறைக்கு ஒத்துவராத, சிறிய சிறிய கற்பனைச் சம்பவங்களும் வார்த்தை விளையாட்டுகளும்தான் இந்தக் கதையிலுள்ள கவர்ச்சிகரமான அம்சம். ஒலி மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளின் ஊடாக, ஒரு வார்த்தையை மற்றும் தவறாகப் புரிந்து கொள்ளுதல் போன்ற உத்திகள், குழந்தைகளின் வாக்கு வன்மையை அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.
லூயிஸ் காரலின் உண்மையான பெயர் சார்லஸ் லட்விட்ஜ் டாட்சன் என்பது, 1832ல் இங்கிலாந்திலுள்ள செஷயர் நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே நாடகத்தின் மீது நாட்டம் கொண்டிருந்த சார்லஸ், பல கையெழுத்துப் பத்திரிகைகளையும் தயாரித்திருக்கிறார்.
ரக்பி பள்ளிக்கூடத்தில் மூன்று வருடங்கள் கல்வி கற்ற பிறகு, அது பிடிக்காமல் 1851ல் ஆக்ஸ்ஃபோர்டின் கிறிஸ்ட் சர்ச்சில் கல்வியைத் தொடர்ந்தார். தாயாரின் மரணம், அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய சோகமாக இருந்தது. மகிழ்ச்சிகரமான அவரது குழந்தைப் பருவ நினைவுகளில் மூழ்கியே அவர் தனது பிற்காலத்தைச் செலவழித்தார்.
1854-ம் வருடம் கணக்குப் பாடத்தில் முதல் வகுப்பில், தேறிய அவர், 1861-ல் ஒரு புரோகிதராக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கல்வி கற்ற கிறிஸ்ட் சர்ச் பள்ளிக்கூடத்திலேயே 1855 முதல் 1881 வரை கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுடன் அதிகமாக நட்புகொள்ளத் தொடங்கினார். அதுவரையிலான அவரது எழுத்துக்கள் கணிதம் தொடர்பானவையாகவே இருந்தன. சி.எல்.டாட்சன் என்ற பெயரில், அவரது ஏராளமான கணிதப் புத்தகங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், 'அதிசய உலகில் ஆலிஸ்' அளவுக்கு அவருடைய வேறு எந்தப் படைப்பும் புகழ்பெறவில்லை.
1865ல் வெளியான இந்தப் புத்தகத்துக்கு அவர் முதலில் வைத்த பெயர் 'பூமிக்குள் ஆலிஸின் விசித்திர அனுபவங்கள்' என்பது. பிற்பாடு இதன் பெயர் 'அதிசய உலகில் ஆலிஸ்' என்று மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 1872ல் 'நிலைக்கண்ணாடியினூடாக' வெளியானது. 1886ம் ஆண்டு இது நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. 1928ம் ஆண்டில் அதிசய உலகில் ஆலிஸின் கையெழுத்துப் பிரதியை ஒருவர் பதினைந்தாயிரம் டாலர் விலை கொடுத்து வாங்கினார். அதே வருடத்திலேயே அதை வேறொருவர் அவரிடமிருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் விலைக்கு வாங்கினார். கடைசியில் ஐம்பதாயிரம் டாலர்கள் விலைகொடுத்து அதை வாங்கிய அமெரிக்க நாட்டின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், 1948ம் ஆண்டு இலவசமாக பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு வழங்கியது.
டாட்சனின் படைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள், விஞ்ஞானம், கணிதம், நகைச்சுவை டைரிக் குறிப்புகள் என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவரது புத்தகங்களுக்கான படங்களையெல்லாம் டாட்சனே வரைந்து கொள்வாராம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் குழந்தைகளைப் பல்வேறு வகைகளில் புகைப்படம் எடுப்பதிலும் தேர்ந்தவராக விளங்கினார்.
குழந்தைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்து இன்புறக்கூடிய ஒரு படைப்பு 'அதிசய உலகில் ஆலிஸ்', முற்றிலும் முட்டாள்தனமான சம்பவங்களின் பின்னணியில், அவர் புத்திசாலித்தனமாக நமது தவறான நடைமுறைகளை நையாண்டி செய்யும் பாணி குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. மறக்க முடியாத சம்பவங்கள், இந்த இரண்டு கதைகளிலும் உள்ளன. ஆழ்ந்து கவனித்தால் ஆங்கில மூலத்தில் அவற்றைச் சுலபமாகவே அடையாளம் காண முடியும். ஆங்கிலேயர்களின் தேசிய நாடோடி வாழ்ககை முறையின் தன்மைகளையும் இவை உட்கொண்டிருக்கின்றன. அதே மாதிரி ஆங்கிலேயர்களின் நகைச்சுவை உணர்ச்சியையும் நம்மால் புரிந்து கொள் முடியும்.
கணித ஆசிரியரான சி.எல்.டாட்சன், நகைச்சுவை மிக்க லூயிஸ் காரலாக மாறியது, உலக இலக்கிய வரலாற்றிலும் வியப்புக்குரிய ஒரு மாற்றம்தான். உண்மையில் மிகவும் நுட்பம் வாய்ந்த கணிதவியலுக்கும், அடக்கமுடியாத நகைச்சுவை உணர்வுக்கும் இடையே விளக்க முடியாத வேறு ஏதோ ஒரு தொடர்பு இருக்கவும் கூடும்.
இது முழுக்க முழுக்க ஆங்கில மொழியின் வார்த்தை விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே அவற்றை மொழிபெயர்ப்பில் முழுக்கக் கொண்டு வருவது அசாத்தியமாகவே தோன்றுகிறது. எனவே ஆங்காங்கு அப்படிப்பட்ட சொற்களை அடைப்புக் குறிக்குள் கொடுத்து நமது வாசகர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்திருக்கிறேன். நன்றி.
சென்னை - 600 078 தோழமையுடன்
தொலைபேசி : 4837681 சிவன்
அதிசய உலகில் ஆலிஸ்
1
ஏரிக்கரை ஓரத்தில் அக்காளின் அருகில் உட்கார்ந்திருந்தாள் ஆலிஸ். செய்வதற்கு எந்த ஒரு வேலையும் இல்லாததால், அவளுக்குச் சோம்பலாக இருந்தது. அக்கா படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள். அதில் படங்கள் எதுவும் இல்லை; உரையாடல்களும் இல்லை. 'படமோ, உரையாடல்களோ இல்லாத புத்தக்கத்தினால் என்ன பிரயோஜனம்?' ஆலிஸ் நினைத்தாள்.
கோடைகால வெப்பத்தினால் எதையும் செய்ய முடியாமலும், தூங்குமூஞ்சியாகவும மாறிவிட்டிருந்தாள் அவள். எனவே, டெய்சி பூக்களைக் கோத்து ஒரு பூமாலை கட்டலாம் என்று நினைத்தாள். பூக்களைப் பறிக்கும்போதாவது ஒருவிதப் புத்துணர்ச்சி ஏற்படும் என்று தோன்றியது. அப்பொழுது சிவப்புக் கண்களும், வெள்ளை நிறமும் கொண்ட முயல் ஒன்று அவளைத் தாண்டி ஓடியது! அன்பே... என் அன்பே! இன்று மிகவும் தாமதமாகிவிடும்!
என்று அந்த முயல் மெதுவான குரலில் பேசியது. அதனால்கூட அவள் ஆச்சரியப்படவில்லை. ஆனால், அந்த வெள்ளைமுயல் தன்னுடைய கோட்டுப் பையிலிருந்து ஒரு கடிகாரத்தை வெளியே எடுத்துப் பார்ப்பதைக் கவனித்த ஆலிஸ் வியப்படைந்தாள். காரணம், இதுவரையில் கோட்டுப் போட்ட, பையில் கடிகாரம் வைத்துள்ள ஒரு முயலை அவள் பார்த்ததே இல்லை! வியப்புடன் அந்த முயலைத் தொடர்ந்து ஓடிய ஆலிஸ், அது ஒரு பெரிய பொந்திற்குள் நுழைவதைப் பார்த்தாள். மறுபடியும் எவ்வாறு வெளியே வருவது என்பதையோ, வேறு எதைப் பற்றியுமோ யோசிக்காத ஆலிஸும் உடனே அந்தப் பொந்திற்குள் நுழைந்தாள்.
ஒரு சுரங்கம் போல் நீண்டதாக இருந்தது அந்தப் பொந்து. பொந்திற்குள் ஆழமான ஒரு கிணறு இருந்தது. அங்கு ஒரு கிணறு இருப்பதை உணர்வதற்கு முன்பாகவே பாவம்... ஆலிஸ் அதற்குள் விழுந்து விட்டாள்! கிணறு மிகவும் ஆழமாக இருந்ததாலோ அல்லது தான் விழுந்து கொண்டிருப்பது மிகவும் மெதுவாக நிகழ்ந்ததாலோ எதனால் என்று தெரியவில்லை... சுற்றிலும் உள்ளவற்றைப் பார்க்கவும், மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கவும் அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆலிஸ் முதலில் கீழ்ப்புறமாகப் பார்த்தாள். கடுமையான மையிருட்டாக இருந்தது. வேறு ஒன்றுமே தெரியவில்லை. சட்டென்று கண்களைத் திருப்பிக் கிணற்றின் சுவரைப் பார்த்தாள். அங்கு ஏராளமான பீரோக்களும், புத்தக அடுக்குகளும் தெரிந்தன. ஆங்காங்கே உலகப் படங்களும், அழகான வேறு சில படங்களும் தொங்கிக் கொண்டிருந்தன. கீழ்நோக்கி விழுந்து கொண்டிருப்பதற்கு நடுவே அவள் ஓர் அலமாரித் தட்டிலிருந்து ஆரஞ்சுச் சாறு என்று எழுதப்பட்டிருந்த ஒரு ஜாடியைச் சட்டென்று எடுத்தாள். எடுத்த பிறகுதான் அதற்குள் ஒன்றும் இல்லை என்பது புரிந்தது. ஏமாற்றமடைந்த ஆலிஸால் அந்த ஜாடியைக் கீழே எறியவும் முடியவில்லை. 'யாராவது கீழே இருந்து, ஜாடி அவர்கள் தலையில் விழுந்தால் இறந்து விடுவார்களே' என்று பயந்தாள். ஒருவழியாக, விழுந்து கொண்டிருக்கும்போதே அந்த ஜாடியைச் சட்டென்று மற்றொரு அலமாரித் தட்டில் வைத்தாள்.
'பரவாயில்லை!' ஆலிஸ் நினைத்தாள். 'இப்படிப்பட்ட ஒரு வீழ்ச்சிக்குப் பிறகு ஏணியிலிருந்து விழுவதாக இருந்தால்கூட, இனிமேல் எனக்கு எந்தவிதமான அடியும் ஏற்படாது. வீட்டில் எவ்வளவு செல்லமாக என்னை வளர்க்கிறார்கள்! மேற்கொண்டு வீட்டின் மேல்கூரையிலிருந்து விழுவதாக இருந்தால்கூட எனக்கு எதுவும் ஆகாது!
'கீழே...கீழே.. இன்னும் கீழே.. இந்த வீழ்ச்சிக்கு ஒரு முடிவே கிடையாதா?' இதுவரையில் நான் எத்தனை மைல் ஆழத்தில் விழுந்திருக்கிறேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
அவள் சற்று உரக்கவே கேட்டாள். ஒருவேளை பூமியின் மையப் பகுதியின் அருகில் எங்காவது நாள் அகப்பட்டுக் கொள்ளப் போகிறேன். அதாவது நாலாயிரம் மைல்களுக்குக் கீழே... அப்படித்தான் தோன்றுகிறது
(இதுபோல் ஏராளமான விஷயங்களை ஆலிஸ் பள்ளிக்கூடத்திலிருந்து கற்றக் கொண்டிருந்தாள். செவிமடுப்பதற்கு யாருமில்லாத இந்தச் சந்தர்ப்பத்தில், தனது அறிவை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் பழக்கமாகிவிட்டதால் அவள் பாட்டுக்குப் பேசத் தொடங்கினாள்.)
ஆகா இது அருமையானதொரு தூரம்தான். ஆனால், நான் செல்லும் பாதையின் அட்சரேகை, தீர்க்க ரேகை எவ்வளவு? (உண்மையில் அட்சரேகை, தீர்க்க ரேகை என்பவை என்னவென்றே அவளுக்குத் தெரியாது. இருப்பினும் அந்த வார்த்தைகள் அழகாகவும், கம்பீரமாகவும் தோன்றியதால் அப்போது அதை உபயோகித்துப் பார்த்தாள்.) பூமியின் மையப் பகுதியை நோக்கித்தான் விழுந்து கொண்டிருக்கிறேனா? அப்படியானால் மறுபுறம் தலைகீழாக நடந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பது என்பது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? நான் நினைக்கிறேன். இந்த மனிதகுல வேறுபாடுகள்..
(நல்லவேளையாக அங்கு யாரும் காது கொடுத்துக் கேட்பதற்கு இல்லாததால் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த வார்த்தை எவ்வளவு தூரம் சரியானது என்பதே அவளுக்குப் புரியவில்லை)
'அந்த நாட்டின் பெயர் என்னவாக இருக்கும்? நான் விசாரித்து அறிய வேண்டியிருக்கும். அது உறுதிதான்' மேடம் இது நியூஸிலாந்தா அல்லது ஆஸ்திரேலியாவா?
(இதைச் சொல்லும்போது அவள் ஒரு தடவை உடம்பைக் குனிந்து வணங்க முற்பட்டாள். விழுந்து கொண்டிருக்கும்பொழுது அந்தரத்தில் இருந்தபடி வணக்கம் சொல்வதை ஒரு விநாடி யோசித்துப் பாருங்கள்! உங்களால் அது முடியுமா?) சொல்ல மாட்டார்கள். ஓர் அந்நிய நாட்டுப் பெண் என்று நினைத்து அந்தப் பெண்மணி எனக்குப் பதில் சொல்ல மாட்டாள். ஆனால், நான் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளதே! எங்காவது ஊர்ப் பெயரை எழுதி வைத்திருப்பார்கள்!
'கீழே.. கீழே.. இன்னும் கிழே... இந்த நிலையில் நான் செய்வதற்கு எந்த ஒரு வேலையும் இல்லை. சும்மா பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான்:' டினாவால் இன்றைக்கு இரவு என்னைப் பார்க்க முடியாது (டினா என்பது ஒரு பூனை). தேனீர் அருந்தும் சமயத்தில் அந்தப் பூனைக்கும் அவர்கள் ஒரு சாஸரில் பால் ஊற்றிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அன்புக்குரிய டினா, நீ இப்போது என்னருகில் இருந்தால்... இங்கே இந்த அந்தரத்தில் எலிகள் இருக்காது. ஆனால், வெளவால்கள் இருக்கலாம். அதுவும் ஓர் எலியைப் போலவே இருக்கும். ஆமாம்... பூனைகள், வெளவாலைப் பிடித்துத் தின்னுமா என்ன? தெரியவில்லை!
இப்பொழுது ஆலீஸ் சரியாகவே மயக்கமடைந்து விட்டாள். எனவே கனவில் பேசுவதுபோல் பேசினாள். பூனை, வெளவாலைத் தின்னுமா?
பிறகு அந்தக் கேள்வியும் மறைந்து போனது. 'வெளவால் பூனையைத் தின்னுமா?' இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவளுக்கு இல்லாததால், சிக்கல் எதுவும் இல்லை. எந்தக் கேள்வியாக இருந்தால்தான் என்ன? அவள் கனவில் டினாவின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்: சொல் டினா, உண்மையைச் சொல்! நீ என்றைக்காவது ஒரு வெளவாலைப் பிடித்துத் தின்றிருக்கிறாயா?
அவள் இப்படிக் கேட்டு முடிப்பதற்குள் 'தம்ப்... தம்ப்.. தம்ப்.." என்ற சலசலப்பு, திடுமென்று குவிந்திருந்த இலைச் சருகுகளுக்குமேல் கிடந்தாள் அவள். அவளது வீழ்ச்சி ஒருவாறாக முடிந்து விட்டிருக்கிறது!
நல்லவேளையாக ஆலிஸிற்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு நிமிடத்திற்குள் துள்ளி எழுந்தாள். மேற்புறம் பார்த்தாள். கருமையான இருட்டு மட்டுமே தெரிந்தது. அவளுக்கு முன்பாக ஒரு நீண்ட வழி தென்பட்டது. அந்த வழியில் வெள்ளை முயல் வேக வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. ஆலிஸும் சற்றும் தாமதிக்காமல் அந்த முயலைக் காற்று போல் பின்தொடர்ந்தாள். பாதை வளைந்து திரும்பியபோது முயல் பேசுவது கேட்டது: சே...! என்னுடைய காதுகளும், மீசை முடிகளும்.. இன்றைக்கு மிகவும் தாமதமாகிவிட்டது.
அவன் முயலைப் பின்தொடர்ந்து சென்றாள். ஆனால் பாதை திரும்பியதும் முயல் சட்டென்று மறைந்தது. அதற்குள் நீண்ட, உயரம் குறைந்த ஒரு தரைப்பகுதியை அடைந்திருந்தாள் அவள். அங்கு, அந்தத் தளத்தின் மேற்புறத்தில் நீண்ட வரிசையில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
அங்கிருந்த தரைப்பகுதியில் ஏராளமான கதவுகள் இருந்தன. ஆனால், அவை எல்லாமே பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு கதவையும் பரிசோதித்துப் பார்த்த ஆலீஸ் ஏமாற்றமடைந்தாள். 'இனி எப்படி நான் வெளியே போவது?' என்று யோசித்தபடி அந்தத் தளத்தின் - தரையின் நடுப்பகுதியில் உலாவத் தொடங்கினாள்.
உலாவிக் கொண்டிருந்தவள் உறுதியான, கனம் மிகுந்த கண்ணாடியாலான ஒரு முக்காலியிடம் வந்தாள். தங்கத்தினாலான ஒரு சாவி தவிர வேறு எதுவும் அந்த முக்காலி மீது இல்லை. பூட்டியிருக்கும் ஏதாவது ஒரு கதவின் சாவியாக அது இருக்கும் என்று ஆலீஸ் நினைத்தாள். ஆனால். என்ன துரதிர்ஷ்டம்! அங்கிருந்த கதவுகளின் சாவித் துவாரத்தை விடப் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோதான் அந்தச் சாவி இருந்தது. அதனால் எந்தக் கதவையும் அவளால் திறக்க முடியவில்லை. மீண்டும்