Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Macedonia Maaveeran
Macedonia Maaveeran
Macedonia Maaveeran
Ebook278 pages2 hours

Macedonia Maaveeran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Gauthama Neelambaran was born on 14th-June 1948, and left this world on 14'th September 2015 is an Eminent Journalist & Novelist rendering unprecedented service for more than forty years in Tamil literary world. His contributions to Tamil Literature starts with his first work “Buddharin Punnagai” - a Tamil short story. This story was published in “Swadesamitran” – Tamil daily newspaper during the year 1970. He had penned over 200 short stories on history and social genre, poems, articles and 65 Historical Novels and Dramas. Many of his historical plays has been broadcasted in “All India Radio” and telecasted in Chennai Doordharsan TV Channel. He had also penned down over 10 Spiritual books on Hindu Religion & Philosophy. He had worked in various famous & Prestigious Tamil Journals like Deepam, Idhayam Pesugiradhu, Gnana Bhoomi, Mayan, Maniyan Matha Ithazh, Ananda Vikatan, Kungumam, Muththaram and Kunguma Chimizh for over 40 years and retired from his journalist job in October 2014. Some of his significant works in Historical Novels includes, Sethu Banthanam, Chozha Vengai, Raja Ganganam(Ezhavendhan Sangili), Mohini Kottai, Vijaya Nandhini, Masidoniya Maaveeran, Nila Mutram, Kalinga Mohini, Nayana Dheepangal, Maruthanayagam, Sanakiyarin Kadhal, Vetri Thilagam, Vengai Vijayam, Kochadayan, Suthanthira Vengai ( History of King Poolithevan, a foremost freedom fighter in South India). Driven by his interest toward “Gautama Buddha” he had penned down the detailed Life History of Buddha which was published in “Mutharam Tamil Weekly” as weekly episodes for nearly 3 ½ years. This work was later compiled & published as a book “BuddharPiran”. He was survived by his wife, K Akila and his son Vijaya Sankar.K who works in an IT organization.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102004170
Macedonia Maaveeran

Read more from Gauthama Neelambaran

Related to Macedonia Maaveeran

Related ebooks

Related categories

Reviews for Macedonia Maaveeran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Macedonia Maaveeran - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    மாசிடோனிய மாவீரன்

    Macedonia Maaveeran

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ராஜ இளவல்

    2. காதல் மனம்

    3. காதல் கண்கள்

    4. காட்டு நிலவும் காவிய நாயகியும்!

    5. முரடன் வந்தான்

    6. நேசமே நெஞ்சின் பாரமா?

    7. அந்தப்புர அந்தரங்கம்......!

    8. தலைமை ஏற்றான் தம்பி!

    9. அரியணை உரிமை…

    10. இரவல் மகுடம்

    11. வெற்றிச் செல்வனின் வீர உதயம்!

    12. ஒலிம்பியாஸின் ஆதங்கம்

    13. வளர்ப்பு மகனும் சொந்த மகனும்....

    14. நாகா மங்கை

    15. திருக்குமாரன் ஓர் அருட்குமாரன்!

    16. வீரமகன் அடக்கிய வெற்றிப் புரவி!

    17. தரணி போற்றும் தத்துவ ஆசான்!

    18. பணிவு தரும் உயர்வு!

    19. சிந்தை கவரும் வீரகாவியம்!

    20. தலைவன் பெற்ற தங்கச் சுரங்கம்!

    21. தேவதையைத் தேடி....

    22. அரிடியாஸ் பின்னால் அரசியல் சதி!

    23. காதல் கிளியின் முன்னாள் காதலன்

    24. அலெக்சாந்தரின் ஆவேசம்!

    25. பிலிப் என்னும் பெருங்காவியம்

    முன்னுரை

    நண்பர் கெளதம நீலாம்பரன் அவர்களின் புதிய படைப்பாகிய - 'மாசிடோனிய மாவீரன்' நாவலுக்கு முன்னுரை எழுத வாய்ப்புப் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    நானறிந்து கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ் எழுத்துத் துறையில் பல புதிய எழுத்தாளர்கள் மாறுதல்களும் வளமும் சேர்த்திருக்கிறார்கள். மேலைய நாடுகளில் அநேகமாக மறைந்துவிட்ட வரலாற்று நாவல் என்ற படைப்பு ரகம் தமிழ் வரையில் தொடர்ந்து இருந்து வருவதோடு அதற்கு நிறைய வாசகர் வரவேற்பும் இருப்பதைக் காண முடிகிறது. இந்த ஐம்பத்தாண்டுகளில் இன்னமும் எழுத்தாளர் கல்கி அவர்கள் பிரதான இடத்தை வகித்து வருகிறார். அவர் மறைந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலான போதிலும் இன்றும் அவருடைய படைப்புகள் - முக்கியமாக அவருடைய வரலாற்று நாவல்கள் அடுத்தடுத்தத் தலைமுறையினர் விரும்பிப் படித்த வண்ணமிருப்பது நிதரிசனமான உண்மை.

    கல்கி அவர்களின் வெற்றிக்கு என்னளவுக்கு நான் காணும் காரணங்கள் இரண்டு. ஒன்று, கதை சொல்லும் பாணியில் சுவாரசியம் தளராத தன்மை, இரண்டு, உலகம் மற்றும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகள், உண்மையில் நல்ல எழுத்தையும் அதற்கு எதிரானதையும் வேறுபடுத்திக் காட்டுவதில் அந்தந்த எழுத்தாளர்களின் மதிப்பீடுகளுக்கு முக்கிய இடமிருக்கிறது. கெளதம நீலாம்பரன் அவர்களிடம் இந்த இரு அம்சங்களும் மிகவும் மகிழ்ச்சியடையக் கூடிய வகை யில் பூரணமாக உள்ளன, பிரகாசிக்கின்றன.

    இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் 'தீபம்' என்ற பத்திரிகையின் அலுவலகத்திற்கு அநேகமாகத் தினமும் போக வேண்டியிருந்தது. 'தீபம்’ அச்சகத்தில் நான் பங்கு பெற்ற ஒரு பத்திரிகையும் தயாராகிக் கொண்டிருந்தது. கௌதம நீலாம்பரனின் எழுத்துத் துறை வாழ்க்கை 'தீபம்’ அலுவலகத்தில் தொடங்கியிருந்தது. நான் பங்கு பெற்ற பத்திரிகையில் அவருடைய சிறுகதைகளும் கவிதைகளும் வெளியாகின. அன்றே அவரிடமிருந்த பண்பும் ஆற்றலும் என் கவனத்தைக் கவர்ந்தன. இவ்வளவு நல்ல இளைஞர் கானல் நீர் போன்ற தமிழ் எழுத்துத் துறையை நம்பித் தன் எதிர் காலத்தையே அதனுடன் பிணைத்துக் கொண்டிருக்கிறாரே என்று அச்சப்பட்டிருக்கிறேன். இக் கானல் நீர் லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் நீடித்துச் சலுகை காட்டுகிறது. அந்த நீரில் சிக்கித் தவிக்கும் அனைவரில் பத்துப் பதினைந்து பேர்தான் ஒருவிதமாக நீந்திக் கரையை அடைய - அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தப் பத்துப் பதினைந்து பேரில் என் நண்பர் கெளதம நீலாம்பரனும் ஒருவர் என்று அறிவதில் எனக்கு மிகுந்த ஆறுதலும் பெருமையும் கூட, இன்று தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிந்த எழுத்தாளர் அவர், நிறைய வீச்சுடைய பத்திரிகைகள் அவருடைய படைப்புகளைத் தொடர்களாக வெளி யிட்டிருக்கின்றன. அவையெல்லாமே சிரத்தையுடனும் மிகுந்த ஆய்வுடனும் சிந்தனைக்குப் பிறகே படைக்கப்பட்டிருப்பதை யாரும் எளிதில் கண்டு கொள்வார்கள், கௌதம நீலாம்பரனின் பல நல்ல பண்புகளில் முக்கியமானது அவருடைய சிரத்தை.

    ‘மாசிடோனிய மாவீரன்' சுயமாகத் தமிழில் படைக்கப்பட்டதானாலும் அது தமிழ் நாட்டிலிருந்து சுமார் நான்காயிரம் மைல்களுக்கப்பால் உள்ள பிரதேசத்தைக் களமாகக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகம் திட்டவட்டமாக உருப்பெற்றதற்குக் காரணமான கிரேக்க பூமியையும் அதன் முக்கிய வரலாற்று மாந்தர் சிலரைப் பற்றியும் கூறும் நாவல், 'மாசிடோனிய மாவீரன்' வரலாற்று வகுப்பில் நாம் வெறும் தகவல்களாகப் படித்திருக்கக் கூடியவை.

    கௌதம நீலாம் பரனின் எழுத்து ஜாலத்தில் கண்முன் நடந்த நிகழ்ச்சிகள் போல உருவாகியிருக்கின்றன. உடைந்த சிலைகளாகவும் மங்கிய ஓவியங்களாகவும் நாம் பார்த்திருக்கக்கூடிய மாந்தர் அவருடைய கைவண்ணத்தில் நம்முன் சதையும் ரத்தமும் உணர்ச்சியும் கொண்ட அசல் மனிதர்களாக நடமாடுகிறார்கள்.

    புகழ்பெற்றப் புராதன கிரேக்கக் கட்டிடக் கலையும் நகர அமைப்பும் அரசு மற்றும் போர்ப்படை நிர்வாகித்திறனும் இந்த நாவலில் நல்ல ஒளிக்கீற்றுகளாகப் பளிச்சிடுகின்றன.

    இந்த நாவலைப் படிக்கும் பலருக்குக் கிரேக்க வரலாற்றை இன்னும் விரிவாகப் படிக்க வேண்டும் என்ற அறிவுத் தாகம் அவசியம் ஏற்படும். அந்த முறையில் கௌதம நீலாம்பரனின் இந்த மாசிடோனிய மாவீரன் சிறந்த வெற்றி மகுடமே.

    இத்தருணத்தில் அவர் எழுதிய இதர வரலாற்று நாவல்களையும் நான் நினைத்துப் பார்க்கிறேன் 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் தொடராக வெளிவந்த 'சேது பந்தனம்' வேறு வெளியீடுகளில் வந்த 'விஜய நந்தினி', 'பல்லவ மோகினி', 'வெற்றித் திலகம்' மற்றும் ‘பல்லவன் தந்த அரியணை’ ஆகிய நாவல்களையும் இன்று சேர்த்து மதிப்பிடுவதில் கெளதம நீலாம்பரன் அவர்களிடம் தேர்ச்சியும் திறமையும் கற்பனை வளமும் கூடியிருப்பதையே காண முடிகிறது. ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இவை தவிர்க்க முடியாதவை.

    கௌதம நீலாம்பரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    - அசோகமித்திரன்.

    என்னுரை

    அலெக்சாந்தரின் அன்னை என்றொரு சிறுகதையை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 'குண்டூசி' இதழில் எழுதினேன். பிறகு, சுமங்கலி இதழில் மாவீரன் பெற்ற மணிமுடி என்றொரு சிறுகதை எழுதினேன். இரண்டுமே அலெக்சாந்தரின் வரலாற்றுச் சம்பவங்களை அடித்தளமாகக் கொண்டவை.

    இவ்விரு கதைகளையும் வாசித்த அன்பர்கள் சிலர் 'இதை நீங்கள் ஒரு நாவலாகவே எழுதலாம். அவ்வளவு சம்பவங்களை இந்தச் சிறு கதைகளில் திணித்துள்ளீர்கள்' என்றனர். பின்னர் ஒரு சமயம் தினமலர் 'வாரமலர்' இதழில் வரலாற்றுத் தொடர்கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அலெக்சாந்தர் வெற்றி மகுடம் பெற்ற வரலாற்றை - அதற்காக அவன் அன்னை செய்த சாகசங்களை விரிவாக எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்திய மக்கள் முதன் முதலாக அறிந்து கொண்ட ஒரு வெளிநாட்டுக்காரன் பெயர் அலெக்சாந்தர் எனலாம், அவனுடைய பாரசீகப் படையெடுப்பின் ஒரு பகுதியாக அவன் பண்டைய இந்திய மண்ணிலும் பிவேசித்தான்; அது முழுமை பெறவில்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அலெக்சாந்தர் பற்றி என்றுமே ஒருவிதப் பெருமிதத்துடன்தான் பேசுவர் இந்திய மக்கள், அவன் கதையை நாடகமாக நடத்தாத பள்ளிகளோ, மாணவர்களோ இல்லையென்றே சொல்லலாம். ஆனால், அது வேறு கதை, அலெக்சாந்தர் - போரஸ் எனப்படும் புருஷோத்தமன் இடையே நடந்த யுத்தம், சந்திரகுப்தனுக்கும் சிவ்யூகஸ் நிகேடார் எனப்படும் அலெக்சாந்தரின் தளபதி பற்றிய சமவங்களைப் பிரதிபலிப்பவை அவை.

    இந்தக் கதை முற்றிலும் வேறுபட்டது. இது முழுக்க முழுக்க கிரேக்க பூமியிலேயே நிகழ்கிற சம்பவங்களை மையமாகக் கொண்ட கதை. ஓர் ஒற்றுமை சொல்ல வேண்டுமானால், இந்திய சரித்திரத்தில், சரித்திரகுப்தன் மணிமுடி தரிக்க அரசியல் வித்தகன் சாணக்கியன் எத்தனை சாகச உத்திகளையெல்லாம் கையாண்டானோ, அத்தனை சாகச உத்திகளையும் அங்கே அலெக்சாந்தர் அரியணையில் அமர, அவன் அன்னை ஒலிம்பியாஸ் கையாள்கிறாள். அந்த சாகச சரித்திரம் படித்து இன்புறத் தக்கவை.

    இக்கதைக்கு மதிப்பிற்குரிய எழுத்தாளர் அசோகமித்திரன் முன்னுரை வழங்கியுள்ளார். இது இந்தப் படைப்பிற்கு இலக்கிய கனம் சேர்த்து, கவுரவம் அளிப்பதாகவே எண்ணுகிறேன். அப்பெருந்தகைக்கும் எனது ஆரம்பகால படைப்பாகிய 'சோழ வேங்கை' நவீனத்தையும், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'மருதநாயகம் பற்றிய 'வீரத்தளபதி நவீனத்தையும் இந்த நான்காம் தொகுதியில் சேர்த்து வெளி யிடும் ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தாருக்கும் எனது இதயபூர்வ நன்றி உரித்தாகுக.

    - கௌதம நீலாம்பரன்

    மாசிடோனிய மாவீரன்

    1. ராஜ இளவல்

    பெல்லா நகரத்து அரண்மனையின் சித்திர மண்டபத்தில் மாசிடோனிய மாமன்னன் பெர்டிகாஸ் குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தான். ஆழ்ந்த சிந்தனையின் அடையாளம் அது.

    அந்த அழகிய சித்திரமண்டபத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று கூட அவனது கவனத்தை அப்போது ஈர்க்கவில்லை. உயரமான கற்தூண்கள், அவற்றில் ஏராள சித்திர வேலைப்பாடுகள். மேலே பெரியதொரு தங்கக் கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்தது போன்ற விதானம். அதில் திராட்சைக் குலைகள் நிறைந்த கொடி இவைகளுடன் பின்னிக் கிடப்பது போன்ற செதுக்கு வேலைப்பாடுகள் - சுவர் முழுக்க கிரேக்க புராணத்தில் வரும் தேவதைகளின் வண்ண ஓவியங்கள். ஆங்காங்கே ஆடல் மகளிர் அபிநயக் கோலம் காட்டும்போது அப்படி அப்படியே உறைந்து நின்றது போன்று வியக்க வைக்கும் எழில் சிற்பங்கள்... இத்தனையும் உள்ள அந்த மண்டபத்தில் மாசிடோனிய மாமன்னன் கீழே பளிங்குத் தரையில் விரிக்கப்பட்டிருந்த இரத்தினக் கம்பளத்தில் உள்ள பூ வேலைப்பாடுகளை ஆராய்பவன் போலவும், அதன் வளைவு நெளிவுகளையும் வண்ணப் பூக்களின் இதழ்களையும் எண்ணிவிட முடிவு செய்து விட்டவன் போலவும் குனிந்த தலை நிமிராமல் உலவிக் கொண்டிருப்பது வியப்பிற்குரிய விஷயம்தானே?

    பெர்டிகாஸ் எப்போதும் எதற்காகவுமே மூளையைக் குழப்பிக் கொண்டு சிந்திப்பவனல்ல. எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகாரம் அவன் கைக்குள் ஆயத்தமாக வைத்திருப்பவன் போல் பட்டுப் பட்டென்று முடிவெடுத்துவிடும் வழக்கமுள்ளவன் அவன். அன்று மட்டும் அப்படி நீண்ட நேர நடை பழகலுடன் சிந்தனையில் ஆழ்ந்து கிடக்கிறானென்றால் அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கத்தான் வேண்டும் என்று முடிவு செய்து, மெளனம் காத்து நின்றனர் அரண்மனை ஊழியர்கள்.

    சற்று நேரத்திற்கு முன்புதான் அங்கே சாமோஸ் தீவிற்குப் பிலிப் உடன் சென்றிருந்த மெய்க்காவலர்கள் வந்திருந்தனர். அவர்கள் பிலிப்பின் நடவடிக்கைகளையும், அவனை சாமோஸ் தீவிலிருந்து அழைத்து வரத் தாங்கள் பட்ட பாட்டினையும் - பிலிப்பின் மனம் பேரழகி ஒருத்தியிடம் மயங்கிக் கிடப்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறினர். அதைக் கேட்டதிலிருந்துதான் பெர்டிகாஸ் அப்படி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான். அவர்கள் சென்ற பிறகு பணியாளை அழைத்து, உடனே பிலிப்பைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தான். பிலிப் இன்னும் வந்து சேரவில்லை. அவன் வரும்வரை அங்கேயே காத்திருப்பது என்று தீர்மானித்துதான் அதோ பெர்டிகாஸ் உலவிக் கொண்டிருக்கிறான்.

    பிலிப் - ராஜ இராவல். பெர்டிகாவின் உடன் பிறப்பு. தம்பியின் போக்கு தடம் மாறிப் போய்விடக் கூடாதே என்னும் ஆதங்கத்தினால் தான் பெர்டிகாஸ் அத்தனை சிந்தித்தான்.

    அதோ காவலன் ஒருவன் வந்து பிலிப்பின் வருகையை அறிவிக்கிறான். பெர்டிகாஸ் உடனே நடை பழகிய கால்களுக்கு ஓய்வளிக்க எண்ணியவன் போல், அலங்கார இருக்கை ஒன்றில் அமர்கிறான். வண்ணப்பறவையொன்று சிறகுகளை விரித்த நிலையில் இருப்பது போன்ற தோற்றம் காட்டும் ஆசனம்.

    சிங்கம் போல் கம்பீரமாக நடந்து வந்த பிலிப், அழைத்தீர்களாமே அண்ணா! என்று வினவியவாறே வணக்கம் காட்டினான்.

    கரம் உயர்த்தி தம்பியை வாழ்த்தி வரவேற்ற பெர்டிகாஸ். அங்கு இருந்த ஆசனம் ஒன்றை சுட்டிக்காட்டி அமரச் சொன்னான். பிறகு, ஆம் தம்பீ! இப்போதெல்லாம் நான் அழைத்த பிறகுதானே உன் விஜயம் இங்கு நிகழ்கிறது. உனக்கு ஓய்வும் இல்லை; அண்ணனைப் பற்றிய நினைவும் அறவே இல்லை... என்றான் குரலில் எள்ளல் துள்ளியது.

    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வந்தவுடன் அரண்மனையில் உங்களைத்தான் விசாரித்தேன். சித்திரக் கூடத்தில் இருப்பதாகக் கூறினார்கள். பயணக்களைப்பு அடங்கச் சிறிது ஓய்வு எடுத்த பின் வரலாமென்று எண்ணினேன். தாங்கள் அழைத்ததாக ஆள் வந்து கூறிய பிறகு, ஓய்வெடுத்துக் கொள்ளக்கூட மனமின்றி இதோ உடனே புறப்பட்டு வந்து விட்டேன். தங்கள் குரலில் ஏதோ வருத்தம் தோய்ந் திருப்பதாகத் தோன்றுகிறது.... என்றான்.

    அதெல்லாம் ஒன்றுமில்லை. உன்னைச் சில நாட்கள் தனியே பிரிந்திருக்க நேர்ந்த வருத்தம் தவிர வேறு ஒன்றுமில்லை. அதிருக்கட்டும்; நீ சாமோஸ் தீவில் வசந்தத்தை நன்கு அனுபவித்தாயல்லவா? அங்கு திருவிழா எப்படியிருந்தது? மக்கள் உற்சாகமாக இருந்தார்களால்லவா?" என்று உவகை காட்டி விசாரித்தான் பெர்டிகாஸ்.

    சாமோஸ் தீவு உண்மையிலேயே ஒரு சொர்க்கபுரி அண்ணா! உலகின் பல நாட்டு மனிதர்களையும் அங்கே சந்திக்க முடிகிறது. பல நாடுகளிலிருந்து விலை உயர்ந்த அரிய பொருள்களெல்லாம் அங்கே வந்து குவிந்து கிடக்கின்றன. உலகின் உல்லாசச் சந்தையாக அது காட்சியளிக்கிறது. விதம் விதமாக மனிதர்கள் கூடியிருக்கிறார்கள். வேடிக்கையான நிகழ்ச்சிகள் பலவற்றை அங்கே காண நேர்ந்தது. பல தேசத்துக் கலைஞர்கள் அங்கே அற்புதமான கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். தீவின் நாலா திசைகளிலும் இயற்கையெழில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. மரங்களும் செடி கொடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. குன்று ஒன்றிலிருந்து ஒரு நதி உற்பத்தியாகி, அழகாகப் பல இடங்களிலும் பாய்ந்து கடலில் கலக்கிறது. சிறு தோணிகளில் ஏறி மக்கள் அந்த நதியில் உல்லாச உலா வருகின்றனர். நானும் அப்படி தோணி உலா வந்தேன். உண்மையிலேயே அந்தத் தீவின் வசந்தவிழா சமயம் வருடா வருடம் நாம் போய்வர வேண்டியது அவசியம் என்பது என் கருத்து..... என்று மனம் கனவுகளில் மூழ்கக் கூறினான் பிலிப்.

    அவனுடைய ரசனை மிக்க அந்த வர்ணனைகளைச் செவிமடுத்த பெர்டிகாஸ், நகை தவழும் முகத்தோடு, தம்பி! சாமோஸ் தீவு உன் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. என்பதில் சந்தேகமில்லை. நீ நல்ல ரசிகன், அங்கேயே தங்கி விடலாம் என்று கூட எண்ணியிருப்பாய், அப்படித்தானே... என்று வினவினான்.

    ஆமாம் அண்ணா! அப்படித்தான் நினைத்தேன். அந்தத் தீவின் இயற்கைக் காட்சிகள் அந்த அளவு என் மனதைக் கவர்ந்துவிட்டது உண்மைதான்...... என்றான் பிலிப்.

    சாமோஸ் தீவின் இயற்கைக் காட்சிகள் மட்டும் தானா உன் மனதைக் கவர்ந்தது... அதற்காக மட்டும் தானா அங்கேயே தங்கிவிட நினைத்தாய்? மோடிக்கையாக இருக்கிறதே... என்றான் பெர்டிகாஸ்.

    என்ன அண்ணா இது.... இப்போது நான் நல்ல ரசிகன் என்றீர் கள். அதற்குள் வேடிக்கையாக இருக்கிறது என்கிறீர்களே...? என்று சந்தேகத்துடன் கேட்டான் பிவிப்.

    வேடிக்கையாகத்தான் இருக்கிறது பிலிப், அந்தத் தீவைப் பற்றி இவ்வளவு வர்ணனைகளைக் கூறிய நீ, உன் மனத்தை அங்கே முக்கியமாக எது கவர்ந்ததோ அதைக் கூறாமல் மறைக்க முயல்கிறாய் பார். அது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. உன் மீது எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன் நான் உன்னிடம் எதையாவது ஒளிவு மறைவாகப் பேசியிருக்கிறேனா நான்? அப்படியிருக்கும்போது நீ மட்டும் ஒன்றை மறைக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்...... என்னிடமிருந்து சற்று விலகியிருக்கவே எண்ணுகிறாய் என்பதுதானே அதன் பொருள். ஒரு பெண் விஷயம் முன்னால் வந்ததும் மற்றவை அனைத்தும் பின்னுக்குப் போய் விடுகின்றன. அப்படித்தானே.....? என்று சிரித்த முகம் மாறாமலேயே வினவினான் பெர்டிகாஸ்.

    அண்ணன் மனம் வேதனைப்படுவதையும் - உள் வேதனையைக் குரலில் காட்டாமலே அவன் பூடகமாக எதைக் குறிப்பிட்டுப் பேசுகிறான் என்பதையும் பிலிப் நன்றாகவே உணர்ந்தான்.

    ***

    ஒலிம்பியாஸ் –

    உலகத்துப் பேரழகு அனைத்தும் ஒன்றாகத் திரண்டு உருவான கிரேக்க நங்கை.

    அந்த எழிலரசியைத்தான் அவன் சாமோஸ் தீவிலே சந்திக்கவும் பழகவும் - நேசிக்கவும் நேர்ந்தது.

    நினைவுகளில் சுகம் சேர்த்து, அவனது நெஞ்சத்தடாகத்தில் மலர்ந்து கிடக்கும் அந்த ராஜ தாமரையைப் பற்றித்தான் அவன் எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டதாக வருத்தம் காட்டுகிறான் அண்ணன்.

    அவன் சாதாரண அ ண்ணன் என்றால் இதை மறைத்திருக்கமாட்டான் பிலிப். பெர்டிகாஸ் மாசிடோனிய மாமன்னன் ஆயிற்றே! அதுதான் தயக்கம்.

    மாசிடோனியப் பிரபுக்கள் வசந்தத்தைக் கொண்டாட சாமோஸ் தீவுக்குப் புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி எங்கும் பேசப்பட்ட தருணத்தில், பிலிப்பும் ஆவல் அலைமோத அண்ணனிடம் சென்று அனுமதி கேட்டு நின்றான்.

    அப்போது பெர்டிகாஸ்-

    "தம்பீ! சாமோஸ் தீவின் வசந்த விழா குதூகலம் நிறைந்தத., அதை அற்புதமான உலகச் சந்தை என்றும் கூறலாம., அனைத்து கிரேக்க நாடுகளின் வணிகப் பெருமக்களும் அங்கே ஒன்று

    Enjoying the preview?
    Page 1 of 1