Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamilaga Harry Potter Kadhaigal
Tamilaga Harry Potter Kadhaigal
Tamilaga Harry Potter Kadhaigal
Ebook324 pages3 hours

Tamilaga Harry Potter Kadhaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Gauthama Neelambaran was born on 14th-June 1948, and left this world on 14'th September 2015 is an Eminent Journalist & Novelist rendering unprecedented service for more than forty years in Tamil literary world. His contributions to Tamil Literature starts with his first work “Buddharin Punnagai” - a Tamil short story. This story was published in “Swadesamitran” – Tamil daily newspaper during the year 1970. He had penned over 200 short stories on history and social genre, poems, articles and 65 Historical Novels and Dramas. Many of his historical plays has been broadcasted in “All India Radio” and telecasted in Chennai Doordharsan TV Channel. He had also penned down over 10 Spiritual books on Hindu Religion & Philosophy. He had worked in various famous & Prestigious Tamil Journals like Deepam, Idhayam Pesugiradhu, Gnana Bhoomi, Mayan, Maniyan Matha Ithazh, Ananda Vikatan, Kungumam, Muththaram and Kunguma Chimizh for over 40 years and retired from his journalist job in October 2014. Some of his significant works in Historical Novels includes, Sethu Banthanam, Chozha Vengai, Raja Ganganam(Ezhavendhan Sangili), Mohini Kottai, Vijaya Nandhini, Masidoniya Maaveeran, Nila Mutram, Kalinga Mohini, Nayana Dheepangal, Maruthanayagam, Sanakiyarin Kadhal, Vetri Thilagam, Vengai Vijayam, Kochadayan, Suthanthira Vengai ( History of King Poolithevan, a foremost freedom fighter in South India). Driven by his interest toward “Gautama Buddha” he had penned down the detailed Life History of Buddha which was published in “Mutharam Tamil Weekly” as weekly episodes for nearly 3 ½ years. This work was later compiled & published as a book “BuddharPiran”. He was survived by his wife, K Akila and his son Vijaya Sankar.K who works in an IT organization.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580102001046
Tamilaga Harry Potter Kadhaigal

Read more from Gauthama Neelambaran

Related to Tamilaga Harry Potter Kadhaigal

Related ebooks

Reviews for Tamilaga Harry Potter Kadhaigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamilaga Harry Potter Kadhaigal - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    தமிழக ஹாரிபாட்டர் கதைகள்

    Tamilaga Harry Potter Kadhaigal

    Author:

    கௌதம நீலாம்பரன்

    Gowthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மந்திரச் சிலம்பு

    2. மரணக் கிடங்கு

    3. பவளத் தீவு

    4. பாறாங்கல் பல்லி

    5. கோட்டைத் திருடன்

    6. கண்ணனின் திருவிளையாடல்

    7. பாம்பு நகரம்

    8. மன்னர் மார்பில் உதைத்தவன்!

    9. உழைத்த பணம்

    10. சிந்திக்க வைத்த சீனமன்னன்

    11. ரயில் மீது ஒரு கல்...

    12. விஷம் பாம்பு வீரய்யா

    13. பன்றி அரக்கன்

    14. திமிங்கிலக் கோட்டை

    15. அராபியக் கொள்ளைக்காரர்கள்

    16. மொட்டைத்தலை மாயாவி

    17. அவ்வை காட்டிய அன்பு

    18. ராஜ பொக்கிஷம்

    19. மாயப் பூக்கள்

    முன்னுரை

    ‘தமிழ்நாட்டு ஹாரிபாட்டர்’ என்று எனக்கு ஒரு சிறப்பு முத்திரை குத்தி, அடையாளப் படுத்துகிறார். ‘நிவேதிதா புத்தகப் பூங்கா’ பதிப்ப நண்பர் எஸ்.ஆர். சுவாமிநாதன். இது எந்த அளவு பொருத்தம், எத்தனைபேர் ஏற்பர்... எனக்கு தெரியாது. ஆனால். தனிப்பட்ட முறையில் என் வாசக அன்பர்கள் சிலர் இதே விதமாய் என்னை மிகைப்படப் பாராட்டிக் கடிதங்கள் எழுதியதுண்டு. என் சிறுவர் நவீனங்கள் பலவும் தினமலர் சிறுவர் மலரில் தான் தொடராக வெளிவந்தன. அப்போது அதன் பொறுப்பாசிரியர் திருமிகு. கி. இராமசுப்பு அவர்கள், ‘இந்த எழுத்தாளர் மிகச் சிற்ப்பாக எழுதுகிறார். இவரை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும்’ என்று கூறுவாராம். அவருடைய உதவி ஆசிரியர்கள் இதை என்னிடம் பலமுறை கூறியதுண்டு. அவரே என்னை நேரில் அழைத்தும் பாராட்டியிருக்கிறார். வேறு சில எழுத்தாள நண்பர்களிடம் அவர் என்னைப் புகழ்ந்துரைத்ததுண்டு. அவர்கள் என்னிடம் அதைக்கூறி, ‘உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது’ என்று அன்புடன் கூறுவர்.

    என் கதைகள் பத்திரிகைகளில் தொடராக வரும் பொழுது, அதைப் பாராட்டி எழுதும் வாசகர் கடிதங்களை நான் கேட்டு வாங்கிப் படித்துப் பார்ப்பேன். புகழுரைகள் கண்டு மயங்கி நிற்கவல்ல, சில உண்மையான விமரிசனங்களை நேரில் அறிய இது உதவியாக இருக்கும் என்பதாலேயே அப்படிச் செய்தேன்.

    நான் ஏராளமான சிறுவர் கதைகளை வேறு வேறு பெயர்களில் எழுதியுள்ளேன். அவ்வளவு கதைகளையும் தொகுத்து வைக்க என்னால் முடியவில்லை. மேலும் தெனாலிராமன், பீர்பால், ராயர் அப்பாஜி கதைகளிலிருந்து நான் பத்திரிகைத் தேவைகளுக்காக அவ்வப்போது எழுதிய பல கதைகளை நானே சேகரித்து வைக்காமல் விட்டுவிட்டேன். அவை எல்லாருக்கும் தெரிந்த கதைகள்தானே? சில நீதி நெறிகளை இளம் உள்ளவங்களுக்கு உணர்த்த மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்வதில் தவறில்லை தான். அதே சமயம் அவை நம் சொந்த எழுத்துக்களின் தொகுப்பில் இடம்பெறுவது அவசியமில்லை அல்லவா?

    "சிறுவர் இலக்கியம் படைக்கும் பலரும் ஒருவித அலட்சிய மனோபாவத்துடன் தங்கள் படைப்புகளை எழுதுகிறார்கள்; தேவையின்றி பிஞ்சு மனங்களை மிரட்டும் அளவு அமானுட உத்திகளைக் கையாள்கிறார்கள்; பேய் பிசாசுகள், இரத்தக் காட்டேரிகள், அதிபலம் வாய்ந்த அரக்கர்கள் இருப்பதாகப் புருடா விடுகிறார்கள். மந்திர வாக்கியங்கள் என்கிற பெயர்களில் ‘கிலி... கிலி... கல்கத்தா காளி, ராயர்கடை போளி’ என்பது போன்ற உளறல் வாக்கியங்களை உச்சரிக்கை வைக்கிறார்கள்’ என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

    என் கதைகளை நான் இப்படியெல்லாம் எழுதுவதில்லை. கற்பனை ஊர், கற்பனை மனிதர்கள், கற்பனைச் சம்பவங்கள்தான் எல்லாமே என்றாலும், அவற்றில் ஓர் உண்மையின் சாயல் அவசியம் அமைய வேண்டும் என்று எண்ணுபவன் நான். எனவே வரலாற்று நிகழ்வுகளைப் போன்ற ஓர் வலுவான கதைக் களத்தை உருவாக்கிப் பின்பே நான் அதை விரித்துரைக்க ஆரம்பிப்பேன். மாய மந்திரங்களைப் போல சில விஷயங்களைச் சொன்னாலும், இளம் உள்ளங்களில் துணிவும் நம்பிக்கையும் அறிவு விழிப்பும் ஏற்படுகிற விதமாகவே என் கதைச் சம்பவங்கள் அமையும். இதை நீங்கள் ‘மாயப் பூக்கள்’ கதையைப் படிக்கும் போது, நிச்சயம் உணரலாம். தோடராக வந்தபோது இதை வாசித்த ஒருவர், ‘இந்தக் கதையை ஆங்கிலத் திரைப்படமாக யாராவது எடுத்தால் உலகம் உங்களைப் பாராட்டுவது மட்டுமில்லாமல், ‘தமிழில் இத்தனை அற்புதமான கற்பனை வளம் உள்ள படைப்புகள் எழுதவும் ஆள் இரக்கிறார்களா? என்று வியந்தே போவார்கள்’ என்று கடிதம் எழுதியிருந்தார்.

    மாயக் கோட்டை, மாயத்தீவு, நெருப்பு மண்டலம், நந்தியின் கனவு போன்ற என் பிற படைப்புகளையும் இவ்வாறே பலர் புகழ்ந்துரைத்தது உண்டு.

    சிறுவயதில், கிராமத்தில் உள்ள கூரைவீட்டின் முன் வாசலில், நிலா வெளிச்சத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி அம்மா, அக்கா, அண்ணன், மாமா போன்ற பல பெரியவர்கள் சொன்ன ஏராளமான கதைகள்தான் என் சிந்தனைக்கு அடிஉரமாய் அமைந்தன. அவைபெரும்பாலும் இராமாயண, மகாபாரதக் கதைகளாகவோ, விக்கிரமாதித்தனின் வீரசாகசக் கதைகாளகவோ தான் இருக்கும். பிறகு நானே ‘அம்புலிமாமா’ மூலம் நிறைய கதைகளை வாசித்தேன். பெரியவன் ஆனதும், வரலாற்று நவீனங்களையே நிறைய விரும்பி வாசித்தேன். கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், நா. பார்த்தசாராதி, அகிலன், கோவி. மணிசேகரன், ஜெகசிற்பியன் போன்றோரின் புதினங்கள்தான் என்னைப் புதுமனிதனாகவும் எழுத்தாளனாகவும் ஆக்கின என்றால், அது மிகையில்லை.

    நல்ல படைப்புகளைத் தேடித்தேடிப் படிப்பவர்கள் நாளும் வாழ்வில் உயர்வார்கள். நலங்கள் வந்து சூழும் என்பதில் ஐயமில்லை.

    நீங்களும் படியுங்கள்; நிச்சயம் இதை உணர்வீர்கள்.

    -கௌதம நீலாம்பரன்

    1

    மந்திரச் சிலம்பு

    மங்களபுரி மன்னனுக்கு விக்ரமன் என்ற வீரப்புதல்வன் ஒருவன் இருந்தான். அவன் சிறுவயதிலேயே வீரமும், எதைக் கண்டும் அஞ்சாத நெஞ்சுறுதியும் கொண்டவனாக இருந்தான்.

    மங்களபுரிக்குப் பக்கத்திலுள்ள காட்டில் பயங்கரமான பேய் ஒன்று இருப்பதாக மக்கள் அனைவரும் நம்பி அந்தக் காட்டுப் பக்கம் போவதற்கே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். பகல் வேளையில்கூட அங்கே பேய் உலவுவதாகவும், ‘ஜல்...ஜல்..’ என்ற சதங்கை ஒலி அந்தக் காட்டையே அதிர வைப்பதாகவும் மக்கள் பேசிக் கொண்டனர்.

    தப்பித்தவறி அந்தக் காட்டுப் பக்கம் போக நேர்ந்த யாருமே உயிரோடு திரும்பி வந்ததில்லை. அந்தப் பேய் அறைந்ததால் பல மாட்டுக்காரச் சிறுவர்கள் அந்தக் காட்டில் ரத்தம் கக்கிச் செத்துப் போய்விட்டனர். எனவே அந்தக் காட்டுப் பக்கம் யாரும் மாடுகளை மேய்க்கக்கூடப் போவதில்லை.

    மாடுகளை காட்டுக்குள் ஓட்டிவிட்டுவிட்டு ஊருக்குள்ளேயே எல்லாரும் இருப்பார்கள். மாடுகள் தாமாகவே மேய்ந்துவிட்டு வீடுகளுக்கு வந்து சேரும். அப்படி வராமல்போன மாடுகளையெல்லாம் அந்தப் பேய் அடித்துக் கொன்று விட்டதாகவே மக்கள் நம்பினர்.

    இப்படி யாருமே அந்தக் காட்டுப் பக்கம் போக அஞ்சியதால் மக்களுக்கு நஷ்டமும், நிறைய மாடுகள் காணாமல் போகவும் நேர்ந்தது. இதைத் தடுக்க வழி தெரியாமல் மங்களபுரி மன்னன் தவித்துக் கொண்டிருந்தான்.

    இந்தச் சந்தர்ப்பத்தில் எப்படியாவது விக்ரமனைக் காட்டுப் பக்கம் அனுப்பிவைத்தால் அந்தப் பேய் அவனை அடித்துக் கொன்றுவிடும். நாமும் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினாள்.

    அவள் வஞ்சக எண்ணத்தை அறியாத விக்ரமன் அவளிடம் ‘சின்னம்மா, சின்னம்மா’ என்று உயிரையே வைத்துக் கொண்டிருந்தான்.

    ஒரு நாள் ரத்னாதேவி விக்ரமனை அழைத்து, ‘நீ ஒரு வீரன் என்பது உண்மையானால் காட்டுக்குப் போய் அந்தப் பேயோடு சண்டையிட்டு ஜெயித்து வரவேண்டும். உன்னால் முடியுமா?’ என்று கேட்டாள்.

    சிறுவனான விக்ரமன் சிறிதும் ஆஞ்சாமல் தான் காட்டுக்குப் போய் அந்தப் பேயோடு சண்டையிட்டு ஜெயித்து வருவதாகக் கூறிவிட்டுத் தன் உடைவாளை எடுத்துக் கொண்டு குதிரையில் ஏறி காட்டை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

    விக்ரமன் காட்டுக்குப் போனதை அறிந்து மன்னர் மிகவும் மனம் வருந்தினார். தன் மகன் உயிரோடு திரும்பி வருவதே சந்தேகம்தான் என்று தோன்றியது அவருக்கு. ராணி ரத்னாதேவி மிகவும் சந்தோஷத்தோடு இருந்தாள். அவள் மனம் விக்ரமன் பேயிடம் அடிபட்டுச் செத்துவிட வேண்டும். திரும்பி வரவே கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிடேயிருந்தது.

    விக்ரமன் காட்டுக்குள் நுழைந்து வெகு நேரமாகச் சுற்றியலைந்து கொண்டிருந்தான். அந்தப் பேய் அவன் கண்ணில் தென்படவே இல்லை. ஒரு வேளை அங்கே பேய் இருப்பதாகச் சொல்வதும் மக்கள் பயப்படுவதுமே அர்த்தமற்றதோ என்று கூட அவன் எண்ணினான்.

    அவன் இப்படி எண்ணிக் கொண்டே குதிரையை மெல்ல செலுத்திக் கொண்டிருந்தபோது ஒரு புளிய மரத்தினடியில் ஒரு இளம் பெண் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் விக்ரமன் ஐயோ பாவம் யாரோ வழி தெரியாமல் காட்டுக்குள் தனியே வந்து பேய்க்குப் பயந்து அழுது கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது என்று எண்ணியபடி அவளருகில் குதிரையைச் செலுத்தி நிறுத்திவிட்டு, ‘ஏனம்மா எதற்காக இங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாய்?’ என்று விசாரித்தான். அதற்கு அந்தப் பெண் பக்கத்திலிருந்த புளிய மரத்தை அண்ணாந்துகாட்டி.

    ‘அதோ பாருங்களய்ய என் கணவர் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குகிறார். வீட்டில் கொஞ்சம் மனஸ்தாபம் என்றதும் இப்படி கோபித்துக் கொண்டு ஓடிவந்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அந்தப் பிரேதத்தைக் கீழே இறக்க வழி தெரியவில்லை எனக்கு. நேரம் ஆக ஆக தனியாக இருக்கப் பயமாக வேறு இருந்தது. அதனால்தான் அழுது கொண்டிருந்தேன். நல்ல நேரத்தில் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள் - என்றாள்.

    விக்ரமன் அவளுக்காக இரக்கப்பட்டு, ‘அந்தப் பிணத்தை நான் கீழே இறக்கித் தருகிறேன்’ என்றான். ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாள். தன் கணவன் பிணத்தை தானேதான் இறக்க வேண்டுமென்றும், மேலே ஏறி கயிற்றை அவிழ்ப்பதற்கு உதவி செய்யுமாறும் அவனிடம் வேண்டினாள்.

    விக்ரமனும் அவள் விருப்பப்படியே உதவுவதாகக் கூறிவிட்டு தன் குதிரையைப் புளிய மரத்தினடியில் நிறுத்தி அவளைக் குதிரையின் மேல் ஏறி, தன் தோளின் மேல் ஏறி நின்று கொண்டு பிணத்தை அவிழ்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் வெகு நேரமாகியும் அவள் பிணத்தைக் கீழே இறக்கவுமில்லை. அவளும் இறங்கவில்லை. நேரம் ஆக ஆக அவள் கனம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. விக்ரமன் சந்தோகத்தோடு கொஞ்சம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

    மேலே அந்தப் பெண் பயங்கரமான பேய் வடிவத்தோடு நின்று கொண்டு அந்தப் பிணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. அந்தப் பிசாசின் கண்கள் நெருப்புத் துண்டுகளைப் போல் பளபளத்தன.

    விக்ரமன் கொஞ்சம்கூடப் பயப்படவில்லை. சட்டென்று அவன் உடைவாளை உருவி அந்தப் பேயின் காலை வெட்டினான். அது பொத்தென்று பூமியில் விழுந்தது. பேய் ஒரு பக்கமும், அதன் வெட்டுப்பட்ட கால் ஒரு பக்கமுமாக விழுந்தது.

    விக்ரமன் அந்தப் பேயின் இன்னொரு காலையும் வெட்டுவதற்காக வாளை ஓங்கிக் கொண்டு குதிரையிலிருந்து கீழே குதித்தான். அந்தப் பேய் பயந்து கொண்டு அவனிடம் மன்றாடியது.

    ‘என்னை விட்டுவிடு. நான் உனக்கு எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்’ என்று அது அவனிடம் கெஞ்சியது. விக்ரமன் அப்போதம் விடவில்லை. ‘என்னை மட்டுமல்ல, இனி இந்தக் காட்டுக்குள் வருகிற யாரையும் எதுவும் செய்யக் கூடாது. இல்லையென்றால் இப்போதே உன்னுடைய இன்னொரு காலையும் வெட்டி விடுவேன்’ என்று கூறினான்.

    அந்தப் பேய் பயந்து நடுங்கியவாறு அவன் சொன்னபடியே நடந்து கொள்வதாக வாக்களித்தது. விக்ரமனும் போனால் போகிறதென்று அந்தப் பேயை அத்துடன் விட்டுவிட்டான்.

    அங்கே அவன் வெட்டியெறிந்த அந்தப் பேயின் கால் ஒரு பக்கத்தில் கிடந்தது. அந்தக் காலில் ஒரு தங்கச் சிலம்பு இருந்தது. விக்ரமன் அதை எடுத்துப் பார்த்தான். அதைக் குலுக்கியபோது அதனுள்ளிருந்த மாணிக்கப்பரல்கள் ‘ஜல்... ஜல்’ என்ற ஒலியை எழுப்பின.

    ஓகோ! இந்தச் சத்தத்தைக் கேட்டுத்தான் நம் மக்களனைவரும் பயந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நான் இதைக் கொண்டு போய் எல்லாருக்கும் காட்டி அவர்கள் பயத்தைத் தெளிய வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அந்தச் சிலம்பைக் கையில் வைத்துக் கொண்டு குதிரையிலேறிக் கொண்டு வேகமாக ஊருக்குள் நுழைந்தான்.

    குதிரை ஓடுகிற வேத்தில் அந்தச் சிலம்பு குலுங்கியது. அதன் ஜல்... ஜல் என்ற சப்தத்தைக் கேட்டு பேய் தான் இளவரசன் உருவத்தில் வருவதாக எண்ணிக் கொண்டு மக்களனைவரும் சிதறி ஓடினர். நிறையப் பேர் அரண்மனை வாசலில் கூடிவிட்டனர். அரசனும் ரத்னாதேவியும் கூட வாசலில் வந்து நின்று கொண்டிருந்தனர்.

    விக்ரமன் தந்தைக்கு முன். குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி நடந்ததனைத்தையும் கூறி பேயைத் தான் நொண்டியாக்கி விட்டதையும் அது இனி மக்களை எதுவும் செய்யாது என்பதையும் கூறினான். அரசரும் மக்களும் விக்ரமனின் வீரத்தைப் பாராட்டினர்.

    ரத்னாதேவியும் ‘இவன் பேயையே வென்றவன். இவனோடு வம்பு செய்தால் நமக்கு ஆபத்து’ என்று உணர்ந்து அன்றையிலிருந்து விக்ரமனிடம் அன்பாக நடந்து கொண்டாள். அதற்குப் பிறகு அந்தச் சிலம்புச் சப்தத்தைக் கேட்டு மக்கள் அஞ்சுவதை விட்டொழித்தனர்.

    ழூழூழூ

    2

    மரணக் கிடங்கு

    மங்கலபுரி என்றொரு நாடு இருந்தது. அந்த நாட்டை மகேந்திரவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.

    அந்த நாடு மிகவும் வறுமையில் வாடியது. மகேந்திரவர்மன் சதா தெய்வமே! ஏன் நாட்டை வளமாக்கி, மக்களை மகிழ்ச்சியடையச் செய்யமாட்டாயா? என்று உருக்கமாகப் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தான்.

    மங்கலபுரி இயற்கையிலேயே வறண்டு போன நாடல்ல. அந்த நாட்டில் ஏராளமான செல்வங்கள் இருந்த நாளும் உண்டு. மகேந்திரவர்மனின் மூதாதையர் காலத்தில் ஒரு பெரும் படையெடுப்பில் அந்த நாட்டுச் செல்வங்கள் அழிந்து போய்விட்டன. அண்டை அயல் நாட்டு அரசர்களும் அடிக்கடி மங்கலபுரியைச் சூறையாடி ஏழை நாடாக்கிவிட்டனர்.

    மகேந்திரவர்மன் வெறும் புத்திமான் மட்டுமல்ல; மாபெரும் வீரனும்கூட. அவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியவில்லை. எனவே அவன் காலத்தில் மங்கல புரிக்குள் எதிரிகள் நுழையவே அஞ்சினர். ஆனால் மகேந்திரவர்மனால் அந்த நாட்டின் வறுமையை மட்டும் எதிர்த்து வெல்ல முடியாமலே இருந்து வந்தது.

    மலைகளும், காடுகளும் மட்டுமே அதிகமாக நிறைந்திருந்த அந்த நாட்டில் வேறு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. வியாபாரமோ. விவசாயமோ அங்கே அதிகம் நடக்கவில்லை. மக்கள் ஏதோ தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக மலைத் தோட்டங்களில் சிறிது கம்பும், கேழ்வரகும், சோளமும் பயிரிட்டு வந்தனர். அவ்வளவுதான்.

    இந்த அவலமான நிலையில் அந்த நாட்டில் இன்னொரு பெரும் சோதனையும் ஏற்பட ஆரம்பித்தது.

    அந்த நாட்டுக் குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகத் தொடங்கின. இந்த நிலை நீடித்து மக்கள் பெரும் பீதி வசப்பட்டு, மன்னரிடம் முறையிட்டனர். ஆனால் இது பற்றி எவ்வளவோ பாதுகாவல் போடப்பட்டும் பிரச்சினை தீரவில்லை.

    மன்னனும் பெரும் மனக்கிலேசத்தில் மூழ்கிவிட்டனர். ஏதோ தன் நாட்டுக்குத் தெய்வ சாபம் ஏற்பட்டு வருகின்றது என்று எண்ணி மனம் கலங்கினான் அவன்.

    மங்கலபுரியில் முதலில் குழந்தைகள் காணாமல் போக ஆரம்பித்தன. பிறகு இரவு நேரங்களில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடுகள் காணாமல் போகத் தொடங்கின. பிறகு அடிக்கடி கொல்லைக் காடுகளுக்குச் சென்ற மனிதர்களும், காணாமல் போக ஆரம்பித்தனர். இது பெரும் அதிசயமாகவும் இருந்தது. மரணக் கிடங்கின் மர்மம் அப்போது யாருக்கும் தெரியும்?

    இந்த நிலையில் யாரோ சில பூசாரிகள் காளியம்மனுக்கு நரபலிகள் கொடுத்தால்தான் நாடு விமோசனமடையும் என்று கூறினர். அதை மன்னரும் ஏற்றுக் கொண்டு நூற்று எட்டு மனிதர்களை நரபலி கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார். அப்படி நரபலி கொடுக்க வேண்டுமானால் அதற்கு உடல் நலமில்லாத, காயங்கள் உள்ள, அழகில்லாத மனிதர்கள் கூடாதென்றும், கசல லட்சணங்களும் பொருந்திய நூற்று எட்டுப் பேரைத்தான் பலி கொடுக்க வேண்டுமென்றும் பூசாரிகள் கூறி விட்டனர்.

    எனவே மன்னர் தம் படை வீரர்களில் இளைஞர்களாகவும் அழகாகவும் இருக்கும் நூற்று எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்துப் பலி கொடுக்க ஏற்பாடு செய்து விட்டார்.

    அந்த நூற்று எட்டுப் பேரும் தங்கள் மரணத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தனர். இந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்புவது என்றும் அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களில் மிகமிக பெயர் பிரதாப சிம்மன். அவனை மன்னரின் மகள் பிரேமலதா மிகவும் அன்புடன் நேசித்து வந்தாள். இப்போத பிரேமலதா மனம் உடைந்து போய் ரகசியமாக ஓடிவந்து அவனைச் சந்தித்து அழுதாள்.

    பிரதாபசிம்னுடைய நெஞ்சிலே மறைந்து கிடந்த வீர உணர்வுகள் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்தன.

    ஓர் அழகிய இளம் பெண்ணின் தூய அன்பு கிடைக்கிறது என்றால் சாதாரண மனிதன் கூட மகா மனிதனாகி விடுவான். அப்படியிருக்கும்போது வீர இளைஞனான பிரதாபசிம்மன் மகா வீரனாகி விட்டதில் வியப்பதற்கு ஒன்றுமேயில்லை. அவன் நேரே அரசரிடம் சென்று, அரசர் பெருமானே! தாங்கள் என்னையும் மற்ற இளைஞர்களையும் காவு கொடுத்து விடுவதனால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. முன்பே இந்த நாட்டு மக்கள் பலர் பலியாகியிருக்கின்றனர். தாங்கள் மேலும் பலரைப் பலி கொடுப்பது அவசியமன்று. தாங்கள் எனக்கு மட்டும் பத்துநாள் தவணை கொடுங்கள். நான் மனிதர்கள் மாயமாய் மறையும் மர்மத்தைக் கண்டுபிடித்து இந்த நாட்டை வறுமையிலிருந்து மீட்கிறேன் என்று கூறினான்.

    அரசரும் யோசித்துப் பார்த்துவிட்டு இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார். பிரதாபசிம்மன் அன்றிலிருந்து இரவு பகல் என்று பாராமல் காடுகளிலும் மலைகளிலும் சுற்றத் தொடங்கினான். நாலைந்து நாட்கள் வீணாகவே கழிந்துவிட்டன.

    ஒரு நாள் பிரதாபசிம்மன் வானத்தில் மிகப் பெரிய கிரவுஞ்சப் பட்சியொன்று பறப்பதைப் பார்த்தான். சாதாரணமாக அவ்வளவு பெரிய பறவையை யாரும் எங்கேயும் பார்த்திருக்க முடியாது. ஒரு பெரிய எருமை மாடு இறக்கை கட்டிக் கொண்டு பறப்பது போல் அளவில் பெரியதாக இருந்தது அந்தப் பறவை. அதுமாதிரிப் பறவைகளைப் பற்றி பிரதாபசிம்மன் புராணங்களில் தான் படித்திருந்தான். பார்த்ததில்லை. ராமாயணத்தில் ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு வான வீதியில் பறக்கும்போது, அவனை எதிர்த்து ஜடாயு என்ற பறவை போரிடுகிறதே, அதுமாதிரி இந்தப் பறவையும் மிகப் பெரியதாக இருந்தது!

    பிரதாபசிம்மன் இதுபற்றி மிகவும் யோசிக்க ஆரம்பித்தான். வயதில் பெரியவர்களை அணுகி ஐயா! தாங்கள் எப்போதேனும் ஆள் உயரத்துக்கு மேலுள்ள பறவைகளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று விசாரித்துப் பார்த்ததில்லையென்றும், புராணங்களில் மட்டுமே படித்திருப்பதாகவும் கூறினர்.

    ஆனால் பிரதாபசிம்மன் தானே அப்படியொரு பறவையை பார்த்திருந்தும் அதுபற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்களே?

    அவன் இதில் ஏதோ மர்மமிருக்கிறது என்று எண்ணியபடியே காடுகளிலும் மலைகளிலும் வெகு கவனமுடன் சுற்றி வரலானான். இன்னொரு நாள் அவன் நெஞ்சைக் குலுக்கும் பயங்கரமான காட்சியொன்றைக் கண்டான்.

    அந்த ராட்சசப் பறவை வானில் வெகு உயரத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று அது அம்பு பாய்வது போல் கீழே இறங்கித் தொலைவில் தினைப்புன மொன்றில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்த பெண்ணொருத்தியைத் தன் கால்களால் பற்றிக் கொண்டு மலை உச்சியை நோக்கிப் பறக்க ஆரம்பித்து விட்டது.

    அந்த ராட்சசப் பறவையின் பிடியில் சிக்கிய அந்தப பெண் பயங்கரமாக வீறிட்டு அலறினாள். அந்தக் காட்டின் மரக்கூட்டங்களுக்கு மேலே வானில் ராட்சசப் பறவையின் பிடியில் சிக்கித் துடிக்கும் அவளுடைய மரணக்கூச்சல் ஊரார் காதிலும் விழவேயில்லை.

    பிரதாபசிம்மன் உடனே தன் வாளை உருவிக் கொண்டு மலையில் ஏறி ஓடினான். அந்தப் பறவையின் கால் நகங்களால் கிழிபட்டு அந்தப் பெண்ணின் இரத்தம் கீழே எங்கு பார்த்தாலும் சொட்டிக் கிடந்தது. அதையே அடையாளமாக வைத்து அவன் வெகு சீக்கரமே மலை உச்சியை அடைந்து விட்டான்.

    அங்கே ஒரு பெரிய பாறையின் மீது அந்த ராட்சசப் பறவை உட்கார்ந்து கொண்டிருந்தது. அது அந்தப் பெண்ணின் கழத்தைக் கிழித்து இரத்தம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டு உடம்பை ஒரு பள்ளத்தில் தூக்கி எறிந்தது.

    அங்கே நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் நொறுங்கிக் கிடந்தன. அந்த இடத்தைப் பார்த்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1