Ival Devathai
()
About this ebook
Read more from Gauthama Neelambaran
Suthanthira Vengai Rating: 5 out of 5 stars5/5Sethupandhanam Rating: 5 out of 5 stars5/5Macedonia Maaveeran Rating: 0 out of 5 stars0 ratingsEezhavendhan Sangili Rating: 0 out of 5 stars0 ratingsRajapudhana Ilavarasi Rating: 3 out of 5 stars3/5Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1 Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Yutham Rating: 0 out of 5 stars0 ratingsChola Venghai Rating: 0 out of 5 stars0 ratingsVeera Thalapathy Rating: 0 out of 5 stars0 ratingsMannan Maadathu Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Rating: 0 out of 5 stars0 ratingsBuddhar Piran Rating: 0 out of 5 stars0 ratingsSarithiram Pottrum Sambavangal Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Nathi Rating: 0 out of 5 stars0 ratingsPonni Punal Poombavai Rating: 0 out of 5 stars0 ratingsMohini Kottai Rating: 0 out of 5 stars0 ratingsMaayak Kottai Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyamaai Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Harry Potter Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Sivaneri Seelargal Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Alaivarisai Rating: 0 out of 5 stars0 ratingsKalinga Mohini Rating: 0 out of 5 stars0 ratingsVettri Thilagam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ival Devathai
Related ebooks
Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Vaira Bommai Rating: 0 out of 5 stars0 ratingsBest Of Yandamoori Veerendranath Rating: 5 out of 5 stars5/5கால் கிலோ காதல் அரை கிலோ கனவு Rating: 5 out of 5 stars5/5Aasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Vilai 10 Kodi Rating: 0 out of 5 stars0 ratingsKanavup Pudhaiyal Rating: 5 out of 5 stars5/5Yezham Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Rating: 0 out of 5 stars0 ratingsVidave Vidathu! Rating: 5 out of 5 stars5/5Kaathirukka Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Malai Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Yutham Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsOru Mul Oru Malar Rating: 1 out of 5 stars1/5Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsInnum Oru Pennin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Kaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Suya Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsMuthu Pandhal Rating: 5 out of 5 stars5/5Thik... Thik... Thik... Rating: 0 out of 5 stars0 ratingsKovur Koonan Rating: 5 out of 5 stars5/5Jenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsThanga Trisoolam Rating: 0 out of 5 stars0 ratingsThamaraikulam Rating: 0 out of 5 stars0 ratingsAntha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Kaala Vettai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ival Devathai
0 ratings0 reviews
Book preview
Ival Devathai - Gauthama Neelambaran
http://www.pustaka.co.in
இவள் தேவதை…
Ival Devathai…
Author:
கெளதம நீலாம்பரன்
Gauthama Neelambaran
For more books
http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
காதல் என்பது மின்னலா, மலரா?
மின்னல் - மின்னி மறைந்துவிடுகிறது. மலர் - மணம் வீசி மண்ணில் உதிர்ந்துவிடுகிறது.
ஒன்று நொடிப் பொழுது ஆயுள். மற்றொன்று ஒருநாள் ஆயுள். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டுமே நிலையற்றவை. ஆனால், காதல்…?
இப்படி ஒருநாள் கேட்டான் சுந்தர். விஜயகுமாரின் பள்ளித் தோழன். அப்போது அதற்கு விஜய் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான். காதல் கனவுகள் எதுவும் மனதில் மையம் கொள்ளாத நாட்கள் அவை. சுந்தரே பதிலையும் சொன்னான்.
டேய், இதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கணும்டா.
காதல் மின்னல் இருக்கே. அது ஒரு தடவை நம்ப மனசில் மின்னினா அப்புறம் அதோட வெளிச்சம் மறையவே மறையாது. காதலை ஒரு மலரோட ஒப்பிட்டா, அது நம்ப மனசுல பூத்த பிறகு காலம் பூரா வாடாமலரா இருந்து வாசம் வீசும். மருக்கொழுந்து, மகிழம்பூ, வெட்டிவேர், சந்தனம் இதெல்லாம் காயக்காய மணம் வீசும்னு சொல்லுவாங்கல்ல, அது மாதிரி தான் காதலும், நெஞ்சுக்குள்ள எப்பவும் நினைவு பூரா மணம் வீசிக்கிட்டே இருக்கும்."
அந்த வயசில் விஜய் இது பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. ஆனால், சுந்தர் சொன்னதெல்லாம் நிஜமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவனுக்கு அது புரிந்தது.
மாலதி அவன் மனதுள் மருக்கொழுந்தாய் மணக்கிறாள். வெட்டிவேர் வாசம் வீசுகிறது. சந்தனம்… ஓ! அது அவள் மேனி வண்ணம். மின்னல்- அவள் இதழில் மின்னும் புன்னகை!
ஆனால், ஒன்றே ஒன்றுதான் அவனுக்குப் புரியவில்லை. மாலதி அவனைக் காதலிக்கிறாளா இல்லையா?
உண்டு என்றால், அதை எப்படி அறிந்து கொள்வது? இல்லையென்றால், அதை அடைய வழி என்ன?
காதலிப்பது ரொம்ப சுலபமான காரியமா? அல்லது மிகவும் சிரமமான கரியமா?
விஜய்க்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. என்ன இது ஏதோ பட்டிமண்டபத் தலைப்பு –போல…!
பட்டிமண்டபம் நடத்துபவர்கள் கையில் இந்த விஷயம் கிடைத்தால், பிய்த்து உதறிவிடுவார்கள்.
'ரொம்ப சுலபம்' என்று ஒரு கட்சி ஆரம்பித்து, "இப்போது வருகிற தமிழ் சினிமாக்களை எதிர்க்கட்சியினர் பார்ப்பதில்லை போலிருக்கிறது… இது காதல் யுகம். வெள்ளிக் கிழமை வரத் தவறினாலும் தவறும், தமிழ் சினிமா ரிலீசாவது தவறாது சார். வாரத்துக்கு நாலைந்து படங்கள் ரிலீசாகி, தினத்துக்கு நாலைந்து காட்சிகள் நடக்கிற காலத்தில் காதலுக்கா பஞ்சம்?
கதை, கவிதை, பத்திரிகை, சினிமா, பீச், பார்க் எதிலும் காதல்! இருபதிலும் காதல் - அறுபதிலும் காதல்… காதலோ காதல்!
காதலிப்பது சிரமம் என்பவன் சோம்பேறி…எதிர்க்கட்சியில் வாதிட வந்திருக்கும் நண்பர் காதல் திருமணம் செய்தவர் என்ற ரகசியம் அறிந்தவன் நான். நண்பரே, பொய்வாதம் செய்யாதீர்கள். பிறகு பட்டி மண்டபம் முடிந்து வீட்டுக்குப் போனதும் காதல் மனைவியாரின் முன் தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கும்…" என்று முழக்கமிடுவார் ஒருவர். அரங்கம் 'கொல்' லென ஆரவாரித்துச் சிரிப்பலைகளால் அதிரும்.
உடனே அடுத்த அணிக்காரர் எழுந்து, நண்பர் தலைப்பையே சரியாகக் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறேன். காதல் இல்லையென்று யார் சொன்னது? காதலிப்பது மிகவும் சிரமமா இல்லையா என்பதுதானே. காதல் என்றதுமே இங்கி பிரச்சினை வந்துவிட்டது பார்த்தீர்களா?
(மறுபடியும் அரங்கம் கைதட்டலால் அதிரும்).
நான் காதல் மணம் புரிதவன். அதனால்தான் காதலில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்று பேச வந்திருக்கிறேன். நண்பர் பாவம், இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையென்று எண்ணுகிறேன். அதனால்தான் அவருக்கு அதிலுள்ள கஷ்டங்கள் எதுவுமே தெரியவில்லை,
என்ற ரீதியில் - இரண்டு கட்சிக்காரர்களும் அரங்கு அதிரச் சுவையான விவாதம் நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள்.
எப்போதோ டி.வி.யில் பார்த்த பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நினைவில் வர, விஜய் தன் மனசிலிருந்த அப்போதைய பிரச்சினையை ஒரு பட்டிமண்டப் பாணியில் சிந்தித்துப் பார்த்தான்.
காதல் பட்டிமண்டபம்! ஆனால், அது தொடர்ந்து சிந்திக்க ஒத்துவரவில்லை.
'காதல் நல்லதா, கெட்டதா?'
'தனக்குக் காதலிக்க வருமா, வராதா?'
'காதல் தேவைதானா அல்லவா?' என்று தொடர்ந்து பல பட்டிமன்றம் நடத்தத் தேவையான தலைப்புகளாகத் தோன்றிக் கொண்டிருந்தனவே தவிர, உருப்படியாக ஒரு சிந்தனையும் வரவில்லை. மாலதி மட்டும் சகல விஷயங்களையும் ஒதுக்கித் தள்ளியபடி நினைவுகளை ஆக்கிரமித்திருந்தாள்.
எதிரே அவள் நிற்பது போலவே இருந்தது.
கண்களை மூடித்தான் அவள் தோற்றத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்ற நிலை அவனுக்கு இல்லை. விழித்தவாறே கனவுகளை ரீ-ப்ளே செய்து ஓடவிட்டுப் பார்க்கிற பழக்கம் அவனுக்கு ஏற்கெனவே கைவரப் பெற்றிருந்தது.
பார்வை லயித்திருக்கும் இடத்தையும் பொருள்களையும் பனித்திரைச் சித்திரங்களாக்கிவிட்டு, அதன் பின்னே புலப்படும் நினைவுகளையும் துழாவி நிஜ தரிசனமாக அப்போது மாலதியைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் மாலதி! உன்னைக் காதலித்தே தீருவது என்று முடிவு செய்து விட்டேன்
என்று வாய்விட்டே சொல்லிக் கொண்டான்.
நல்லவேளை, அம்மா காதில் விழுந்திருக்காது.
சார் எங்க, சொப்பன லோகத்துல சஞ்சாரமா?
'சொத்' தென்று அவன் மடியில் செய்தித் தாளைக் கொத்தாக வீசிவிட்டு எதிரே நின்றாள் சந்திரா.
ஈஸிசேரில் சாய்ந்திருந்த விஜய் இப்போதுதான் அவளைப் பார்த்தான். சுரீலென்று ஒரு கணம் கோபம் எழுந்து, கண்ணிமைகள் விறைப்பாகக் குத்திட்டு நின்றன. நினைவுப் பனித் திரையைக் கிழித்துக் கொண்டு அவள் வந்து குதித்து விட்டதால் ஏற்பட்ட சினம்
பேப்பரைக் கையில் கொடுத்திருக்கலாமே… மடியில்தான் வீசணுமா?
- குரலில் அமைதி இருந்தது. ஆனால், அதில் இழைந்த சீற்றத்தை சந்திரா உணர்ந்தாள்.
இல்லை விஜய். நான் அங்கிருந்தே நீ என்னைத்தான் பார்க்கறேன்னு நினைச்சுகிட்டு பேப்பரை நீட்டிக்கிட்டே வந்தேன். நீ வாங்கலே. அதான் மடியில போட்டேன். அது எப்படி உன்னால கண்ணு முழிச்சுக்கிட்டிருக்கும்போதே எதிரே வர்ற மனுஷாளைப் பார்க்காம இருக்க முடியுது…?
அவனால்எதுவும்பதில் சொல்ல முடியவில்லை. பார்வையில் லேசான கதிர்களாய் பொங்கிய கடுப்பை ஒருநொடி இன்னும் சற்று அழுத்தமாக வீசிவிட்டு, பார்வையைப் பேப்பரில் திருப்பினான். கைகள் பேப்பரை எடுத்துப் பிரித்தன. ஏற்கெனவே படித்து முடித்த பேப்பர்தான். இருந்தால் என்ன, அவளிடம் பேச்சைத் தவிர்க்க இது உதவும்.
'வேணும்னா பிறகு நானே கேட்டு வாங்கிக்க மாட்டேனா- இது எதுக்கு தூக்கிகிட்டு வர்றா? முதல்ல பேப்பர் வாங்கற பழக்கத்தை நிறுத்தணும். ஓசிப் பேப்பர் வாங்கன்னு ஒரு தடவை, திருப்பிக் கொடுக்கன்னு ஒரு தடவை வந்துடறா… இதெல்லாம் ஒரு சாக்கு. எதுக்குன்னாவது அடிக்கொரு தடவை வந்துடுவா. இந்த அம்மா வேற நொடிக்கு நூறு