Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhuvana
Bhuvana
Bhuvana
Ebook94 pages42 minutes

Bhuvana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Gauthama Neelambaran was born on 14th-June 1948, and left this world on 14'th September 2015 is an Eminent Journalist & Novelist rendering unprecedented service for more than forty years in Tamil literary world. His contributions to Tamil Literature starts with his first work “Buddharin Punnagai” - a Tamil short story. This story was published in “Swadesamitran” – Tamil daily newspaper during the year 1970. He had penned over 200 short stories on history and social genre, poems, articles and 65 Historical Novels and Dramas. Many of his historical plays has been broadcasted in “All India Radio” and telecasted in Chennai Doordharsan TV Channel. He had also penned down over 10 Spiritual books on Hindu Religion & Philosophy. He had worked in various famous & Prestigious Tamil Journals like Deepam, Idhayam Pesugiradhu, Gnana Bhoomi, Mayan, Maniyan Matha Ithazh, Ananda Vikatan, Kungumam, Muththaram and Kunguma Chimizh for over 40 years and retired from his journalist job in October 2014. Some of his significant works in Historical Novels includes, Sethu Banthanam, Chozha Vengai, Raja Ganganam(Ezhavendhan Sangili), Mohini Kottai, Vijaya Nandhini, Masidoniya Maaveeran, Nila Mutram, Kalinga Mohini, Nayana Dheepangal, Maruthanayagam, Sanakiyarin Kadhal, Vetri Thilagam, Vengai Vijayam, Kochadayan, Suthanthira Vengai ( History of King Poolithevan, a foremost freedom fighter in South India). Driven by his interest toward “Gautama Buddha” he had penned down the detailed Life History of Buddha which was published in “Mutharam Tamil Weekly” as weekly episodes for nearly 3 ½ years. This work was later compiled & published as a book “BuddharPiran”. He was survived by his wife, K Akila and his son Vijaya Sankar.K who works in an IT organization.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580102002184
Bhuvana

Read more from Gauthama Neelambaran

Related to Bhuvana

Related ebooks

Reviews for Bhuvana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhuvana - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    புவனா

    Bhuvana

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    புவனா

    -கௌதம நீலாம்பரன்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ஆதித்தகுமாரிடமிருந்து வந்துள்ள அழைப்பு அதிர்ஷ்ட தேவதையிடமிருந்து வந்திருக்கும் அழைப்பு என்றே எண்ணினான், தமிழ்க்கண்ணன்.

    ஆதித்தகுமார், பிரபல நடிகர். ஆக்ஷன் ஹீரோ, பல வெற்றிப்படங்களை அளித்தவர். அவருடைய கால்ஷீட் கிடைப்பதே அரிது. அவரை வைத்துப் படமெடுக்க நான், நீ என தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர்.

    அறுபது, எழுபது, எண்பது என்ற ரீதியில் அவரது சம்பளம் பற்றிப் பேசப்படுகிறது- லகரங்கள்தான். ஒருகோடி ரூபாய் கொடுத்து, ஆதித்தகுமார் கால்ஷீட் பெற்றுவிடவும் சில தயாரிப்பாளர்கள் தயார்தான். ஆனால், ஆதித்தகுமார் கண்ணை மூடிக்கொண்டு எல்லாப் படங்களையும் ஒப்புக் கொண்டு விடுவதில்லை. அவரிடம் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குத் தேதியே இல்லை.

    ஒப்புக் கொண்ட படங்களை ஒவ்வொன்றாக முடித்து விட்டுத்தான் இனி புதிய படங்கள் ஒப்புக்கொள்வேன் என்று வேறு அவர் அறிவிப்பே வெளியிட்டிருக்கிறார்.

    இந்த நிலையில் ஆதித்தகுமார் தன்னை அழைக்கிறார் என்றதும் தமிழ்க்கண்ணன் கொஞ்சம் தடுமாறவே செய்தான். அவனுக்குச் சிறிது நெர்வஸாகவே இருந்தது. ஆனாலும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    ஆதித்தகுமாரை வைத்து ஒரு படம் பண்ணவேண்டுமென்று அவனுக்கு வெகுநாட்களாகவே ஓர் ஆசை உண்டு.

    அது மட்டும் நடந்துவிட்டால், அவனுக்கு ஒரு நல்ல பிரேக் கிடைத்துவிடும். ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் அவனும் அழுந்தக் கால் ஊன்றி நிற்கலாம். அதன்பிறகு ஒருபடம் இயக்க பத்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் தகுதி அவனுக்கு வந்து விடும்.

    ‘டி.எஃப்.டி. என்ற மூன்றெழுத்தை வைத்துக் கொண்டு அவனவன் சினிமா உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறான். நமக்குப் பின்னால் வந்தவன் திரைப்படக் கல்லூரியைச் சும்மா பேருக்கு மட்டும் எட்டிப் பார்த்துவிட்டு வந்தவனெல்லாம் நிறைய படம் பண்ணி, பேரும் புகழும் பணமும் சம்பாதித்து நிற்கிறான். நம்மால் முடியவில்லையே’ என்று அவன் தவித்த நாட்களும் உண்டு!

    ஒன்றிரண்டு படவாய்ப்புகள் அவனுக்குக் கிடைத்தன. உருப்படியான பெயரைத்தான் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால், எப்படியோ உதவி இயக்குநர் என்ற பெயரை நிலையைத் தாண்டி, இயக்குநர் தமிழ்க்கண்ணன் என்று அவன் பெற்று விட்டான். இரண்டு படங்கள் டைரக்ட் செய்தான். ஒன்று சுமாராகப் போயிற்று. மற்றொன்று ஓடவில்லை.

    ஆதித்தகுமாருக்கு எப்போதுமே புதியவர்களை ஊக்குவிப்பது பிடிக்கும். அதிலும் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் திரையுலகில் சக்கைப்போடு போடுவதால், தானும் சிலரைக் கைதூக்கி விட்ட பெருமையை அடைய வேண்டுமென்று அவருக்கு ரொம்ப நாளாகவே ஓர் ஆசை. அதை அவ்வப்போது அவர் செய்தே வருகிறார். தமிழ்க்கண்ணன் பற்றி அறிந்ததும் அவனுக்கும் அழைப்பு விடுத்தார்.

    ஆதித்தகுமாரின் செயலாளர் கதிரேசனே நேரில் வந்து தமிழ்க்கண்ணனைச் சந்தித்து, ஆதித்தகுமார் உன்னைச் சந்திக்கணும்னு சொன்னார். புறப்படுப்பா… என்றார்.

    தமிழ்கண்ணனுக்குத் தெரியும். கதிரேசன் எவ்வளவு முக்கியமானவர் என்று. அவர் ஆதித்தகுமாரின் செயலாளர் மட்டுமல்ல; நெருங்கி நண்பரும் கூட. சினிமா வட்டாரத்தில் அவர் நன்கு பிரபலமானவர். அவர் தயவிருந்தால்தான் ஆதித்தகுமாரின் கால்ஷீட்டே கிடைக்கும்.

    அவரே வந்து வாசலில் காரை நிறுத்தி வைத்துக்கொண்டு தன்னை அழைக்கும்போது, எப்படி மறுப்பதென்று அவனுக்குப் புரியவில்லை. ‘உடனே புறப்படு’ என்று அவசரப்படுத்துகிறாரே!

    அண்ணன் எதுக்குக் கூப்பிடறாருன்னு உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? சொல்லுங்க சார்… ஒரே டென்ஷனா இருக்கு… என்றான்.

    எதுக்குப்பா டென்ஷன்… நான் இருகேன்ல. சட்டுன்னு புறப்படு. எல்லாம் நல்லதுக்குத்தான்.

    கதிரேசன் கைப்பிடித்து இழுக்காத குறையாக வலியுறுத்தவே, தமிழ்க்கண்ணன் அவசரமாகத் தலைவாரி, சட்டை மாற்றிப் புறப்பட்டான். மனசில் மட்டும் லேசாக ஒரு ‘திக் திக்’ இருந்தது.

    ‘எவ்வளவு பெரிய நடிகர். அவருடைய அழைப்பு நிச்சயம் அதிர்ஷ்ட தேவதையின் அழைப்புதான். அவரிடம் நாம் என்ன பேசப்போகிறோம்? அவரை வைத்து இயக்குகிற வாய்ப்பு நமக்கு அளிக்கப்படுமோ… அப்படியானால் அதற்கு நல்ல சப்ஜெக்ட் வேண்டுமே! ஒருகதை தயார் பண்ணி சொல்லுப்பா என்றால், என்ன கதை சொல்லுவது? நல்லதாக அமைய வேண்டுமே…’ இதே எண்ணங்களுடன் பயணித்தான். கார் ஓடிக்கொண்டிருந்தது.

    கதிரேசன் எதுவும் பேசவில்லை. அவனுடைய டென்ஷன் அடங்கட்டும். யோசிக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

    கார் மாம்பலம் பாண்டி பஜார் வழியாக ஓடி, சவுத் உஸ்மான் சாலையில் பிரவேசித்தது. பனகல் பார்க் தாண்டி சிறிது தூரத்தில் இடப்புறம் ஒரு சந்தில் நுழைந்து, சற்று உள்ஒடுக்கமாக இருந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றின் முன் நின்றது.

    பார்த்தாலே பணக்காரத்தனம் நன்கு புலப்படும் கட்டடம்.

    வாகனங்கள் நிறுத்த வசதியான காம்பவுண்ட் இருந்தது. காவலாள் இருந்தான். கதிரேசனுக்கு சல்யூட் செய்தான்.

    இருவரும் இறங்கி, படிகளில் ஏறினர்.

    இரண்டாவது மாடியில் இருந்தது வைகறை அபார்ட்மெண்ட். அதுதான் ஆதித்தகுமாரின் இருப்பிடம், அலுவலகம்… எல்லாம்.

    முன்

    Enjoying the preview?
    Page 1 of 1