Mouna Pillaiyar
By Savi
()
About this ebook
Read more from Savi
Character Rating: 0 out of 5 stars0 ratingsWashingtonil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsOoraar Rating: 0 out of 5 stars0 ratingsThailand Rating: 0 out of 5 stars0 ratingsVisiri Vaazhai Rating: 0 out of 5 stars0 ratingsPazhaya Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsVadam Pidikka Vaanga Jappanukku Rating: 0 out of 5 stars0 ratingsCollege Road Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Paalam Rating: 0 out of 5 stars0 ratingsNavakaali Yathirai Rating: 0 out of 5 stars0 ratingsApple Pasi Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Selvan Rating: 0 out of 5 stars0 ratingsKomaganin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsTheppo 76 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mouna Pillaiyar
Related ebooks
Maanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsNazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsChithrai Nilave! Senbaga Malare! Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsAthe Athe... Saba Pathe... Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsSriman Sudarsanam Rating: 1 out of 5 stars1/5Maha Periyavaa - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsTom Sawyer Rating: 5 out of 5 stars5/5Siddharthan Rating: 0 out of 5 stars0 ratingsEnbathu Naatkalil Ulagai Sutri Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsUyarntha Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMobydick Rating: 3 out of 5 stars3/5Sri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsAthisiya Ulagil Alice Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsPaartha Vizhi Paartha Padi… Rating: 0 out of 5 stars0 ratingsPaper Padikkum Erumbu Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Paalam Rating: 0 out of 5 stars0 ratingsSivamalar Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsSetril Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMathalangal Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Selvan Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mouna Pillaiyar
0 ratings0 reviews
Book preview
Mouna Pillaiyar - Savi
http://www.pustaka.co.in
மௌனப் பிள்ளையார்
Mouna Pillaiyar
Author:
சாவி
Savi
For more books
http://www.pustaka.co.in/home/author/savi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
காணிக்கை
என் குலதெய்வமான
மௌனப் பிள்ளையாருக்கு
வாசகர்களுக்கு
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதை திரு. கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளார்கள்.
இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒருமுறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் 'இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே?' என்றும், சில இடங்களில் ‘இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்' என்றும் தோன்றியது.
இப்புத்தகம் முதன்முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி.கே.சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர்காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னை வாழ்த்தியிருந்தார்கள்.
இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.
சாவி
மயிலாப்பூர்
12.4.1964
அப்பா
ஜயந்தி விசுவநாதன் (மூத்த மகள்)
அப்பா என்று நினைக்கும்பொழுதே, கம்பீரமான, உற்சாகமான, சுறுசுறுப்பான அந்த இளைஞனைத்தான் எனக்குத் தெரிகிறது. அவர் அருகில் இல்லையே என்ற ஏக்கம் கண்ணில் திரையிடுகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ரசனையோடு அனுபவிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர். எங்களுடன் உட்கார்ந்து அரட்டை அடிக்க ரொம்பப் பிடிக்கும். அப்படி உட்கார்ந்து பேசி மகிழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை.
தான் பார்த்து பிடித்து ரசித்ததை, அது எதுவாக இருந்தாலும், சில சமயம் தான் சாப்பிட்ட சாப்பாட்டையும்கூட ரசித்து, வர்ணித்துப் பகிர்ந்து கொள்வார். அதனால் எங்களுக்கும் எதைப் பார்த்தாலும் அப்பாவிடம் சொல்ல வேண்டும். சொல்லி மகிழ வேண்டும். அவர் எங்கள் மதிப்புக்குரிய தந்தையாக ஒருபுறம் இருக்க, அவரை நாங்கள் ஒரு தோழனாகத்தான் பார்த்தோம்.
அவருடைய எழுத்துக்களை படித்துவிட்டு நாங்கள் விமர்சனம் செய்யும்பொழுது, நன்றாக இருக்கிறது என்றால் சந்தோஷப்படும் அவர், தப்பு ஏதேனும் சுட்டிக்காட்டினால் உடனே அதைத் திருத்தவும் தயங்கமாட்டார்.
அவர் வாழ்க்கையில் கடைப்பிடித்த இரண்டு விஷயங்கள், வாக்கு, நேரம் தவறாமை, இதைக் கடைப் பிடிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்பது அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.
எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், அதை நேர்த்தியாக, அழகாக, பட்டு கத்தரித்தாற்போல் செய்ய வேண்டும் என்று விரும்புவார். பத்திரிகையில் லே -அவுட்டும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏன் பஜ்ஜி போட்டால்கூட அதற்கு வால் வராமல் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடவே எங்களுக்கு கொஞ்சம் நடுக்கம்தான்.
நல்ல காபி, ருசியான சமையல், சுகமான சங்கீதம் இவை அவர் வாழ்க்கையில் மிக முக்கியமானவையாக இருந்தன. மற்ற எழுத்தாளர்களின் எழுத்தை, முக்கியமாக வைரமுத்து, சுஜாதாவின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, ஆஹா எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று அனுபவித்து, சந்தோஷமாக எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.
பிரயாணம் என்பது அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தான் போனால் மட்டும் போதாது. தன்னோடு நண்பர்களையோ, எங்களையோ, ஏன் பேரக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுற்றிக் காண்பிக்க ரொம்பப் பிடிக்கும். அந்த சந்தோஷமே தனி என்பார். பெங்களூரும், சிங்கப்பூரும், திருப்பதியும் மிகப் பிடித்தமான இடங்கள்.
சிறுவயதில் நாங்கள் அனுபவித்த சந்தோஷங்கள் ஏராளம். திடீரென்று எங்களைக் கூப்பிட்டு, இன்னும்
ஒரு மணிநேரத்தில் நாம் பெங்களூர் போகிறோம் என்று சொன்னவுடன் எங்களுக்கு ஏற்படும் அந்த ஆனந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது. இப்பொழுது கூட இந்த நூற்றாண்டு விழாவிற்கு அப்பா இருந்திருந்தால், வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து அமெரிக்கா போகலாம் என்று சொல்லியிருப்பார்.
அப்பா. நாம் உட்கார்ந்து பேசும்பொழுது, நீங்கள் சொன்ன ஜோக்குகளும், உங்கள் அனுபவங்களும் எங்கள் நினைவில் என்றும் இருக்கும்.
உங்கள் விடாமுயற்சியும், நகைச்சுவை உணர்ச்சியும், சுறுசுறுப்பும் எங்களுக்கும் வந்திட ஆசீர்வாதம் செய்யுங்கள்.
தினமணி கதிர் - சாவி 100 - 7.8.2016
மாலதி ராமமூர்த்தி (மகள்)
அப்பாவைபற்றி எழுதச்சொன்னவுடன் மலைப்பாக இருந்தது. அவரைப் பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? என்று.
அப்பா என்று சொன்ன உடனே அவருடைய கம்பீரமான தோற்றமும், மாஜிக் பொடியை போகும் இடமெல்லாம்