Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mouna Pillaiyar
Mouna Pillaiyar
Mouna Pillaiyar
Ebook106 pages55 minutes

Mouna Pillaiyar

By Savi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'சாவி' சிரிக்கத் தெரியாதவனையும் தனது எதார்த்தமான எழுத்துக்களால் சிரிக்க வைக்கக் கூடியவர். ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தும் கூட அதிகம் பெருமை பாராட்டவர். தனது முத்தான எழுத்துக்களால் வாசகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவரது கதைகள் அனைத்தும், மக்களை கவரும் படியாக அமைந்து உள்ளதால் தான் எக்காலத்திலும் மக்களால் விரும்பப் படுகிறது.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110902421
Mouna Pillaiyar

Read more from Savi

Related to Mouna Pillaiyar

Related ebooks

Reviews for Mouna Pillaiyar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mouna Pillaiyar - Savi

    http://www.pustaka.co.in

    மௌனப் பிள்ளையார்

    Mouna Pillaiyar

    Author:

    சாவி

    Savi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/savi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    என் குலதெய்வமான

    மௌனப் பிள்ளையாருக்கு

    வாசகர்களுக்கு

    இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதை திரு. கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளார்கள்.

    இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒருமுறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் 'இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே?' என்றும், சில இடங்களில் ‘இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்' என்றும் தோன்றியது.

    இப்புத்தகம் முதன்முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி.கே.சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர்காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னை வாழ்த்தியிருந்தார்கள்.

    இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

    சாவி

    மயிலாப்பூர்

    12.4.1964

    அப்பா

    ஜயந்தி விசுவநாதன் (மூத்த மகள்)

    அப்பா என்று நினைக்கும்பொழுதே, கம்பீரமான, உற்சாகமான, சுறுசுறுப்பான அந்த இளைஞனைத்தான் எனக்குத் தெரிகிறது. அவர் அருகில் இல்லையே என்ற ஏக்கம் கண்ணில் திரையிடுகிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ரசனையோடு அனுபவிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர். எங்களுடன் உட்கார்ந்து அரட்டை அடிக்க ரொம்பப் பிடிக்கும். அப்படி உட்கார்ந்து பேசி மகிழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை.

    தான் பார்த்து பிடித்து ரசித்ததை, அது எதுவாக இருந்தாலும், சில சமயம் தான் சாப்பிட்ட சாப்பாட்டையும்கூட ரசித்து, வர்ணித்துப் பகிர்ந்து கொள்வார். அதனால் எங்களுக்கும் எதைப் பார்த்தாலும் அப்பாவிடம் சொல்ல வேண்டும். சொல்லி மகிழ வேண்டும். அவர் எங்கள் மதிப்புக்குரிய தந்தையாக ஒருபுறம் இருக்க, அவரை நாங்கள் ஒரு தோழனாகத்தான் பார்த்தோம்.

    அவருடைய எழுத்துக்களை படித்துவிட்டு நாங்கள் விமர்சனம் செய்யும்பொழுது, நன்றாக இருக்கிறது என்றால் சந்தோஷப்படும் அவர், தப்பு ஏதேனும் சுட்டிக்காட்டினால் உடனே அதைத் திருத்தவும் தயங்கமாட்டார்.

    அவர் வாழ்க்கையில் கடைப்பிடித்த இரண்டு விஷயங்கள், வாக்கு, நேரம் தவறாமை, இதைக் கடைப் பிடிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்பது அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.

    எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், அதை நேர்த்தியாக, அழகாக, பட்டு கத்தரித்தாற்போல் செய்ய வேண்டும் என்று விரும்புவார். பத்திரிகையில் லே -அவுட்டும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏன் பஜ்ஜி போட்டால்கூட அதற்கு வால் வராமல் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடவே எங்களுக்கு கொஞ்சம் நடுக்கம்தான்.

    நல்ல காபி, ருசியான சமையல், சுகமான சங்கீதம் இவை அவர் வாழ்க்கையில் மிக முக்கியமானவையாக இருந்தன. மற்ற எழுத்தாளர்களின் எழுத்தை, முக்கியமாக வைரமுத்து, சுஜாதாவின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, ஆஹா எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று அனுபவித்து, சந்தோஷமாக எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

    பிரயாணம் என்பது அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தான் போனால் மட்டும் போதாது. தன்னோடு நண்பர்களையோ, எங்களையோ, ஏன் பேரக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுற்றிக் காண்பிக்க ரொம்பப் பிடிக்கும். அந்த சந்தோஷமே தனி என்பார். பெங்களூரும், சிங்கப்பூரும், திருப்பதியும் மிகப் பிடித்தமான இடங்கள்.

    சிறுவயதில் நாங்கள் அனுபவித்த சந்தோஷங்கள் ஏராளம். திடீரென்று எங்களைக் கூப்பிட்டு, இன்னும்

    ஒரு மணிநேரத்தில் நாம் பெங்களூர் போகிறோம் என்று சொன்னவுடன் எங்களுக்கு ஏற்படும் அந்த ஆனந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது. இப்பொழுது கூட இந்த நூற்றாண்டு விழாவிற்கு அப்பா இருந்திருந்தால், வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து அமெரிக்கா போகலாம் என்று சொல்லியிருப்பார்.

    அப்பா. நாம் உட்கார்ந்து பேசும்பொழுது, நீங்கள் சொன்ன ஜோக்குகளும், உங்கள் அனுபவங்களும் எங்கள் நினைவில் என்றும் இருக்கும்.

    உங்கள் விடாமுயற்சியும், நகைச்சுவை உணர்ச்சியும், சுறுசுறுப்பும் எங்களுக்கும் வந்திட ஆசீர்வாதம் செய்யுங்கள்.

    தினமணி கதிர் - சாவி 100 - 7.8.2016

    மாலதி ராமமூர்த்தி (மகள்)

    அப்பாவைபற்றி எழுதச்சொன்னவுடன் மலைப்பாக இருந்தது. அவரைப் பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? என்று.

    அப்பா என்று சொன்ன உடனே அவருடைய கம்பீரமான தோற்றமும், மாஜிக் பொடியை போகும் இடமெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1