Theppo 76
By Savi
()
About this ebook
அமெரிக்கா போகாமலேயே, வாஷிங்டன் நகரைப் பார்க்காமலேயே, வாஷிங்டனில் திருமணம் எழுதினேன். ஆனால் தெப்போ -76-ஐ அப்படி எழுதவில்லை. ஜப்பான் நாட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த பிறகே எழுதியுள்ளேன். தேர் விடப்பட்ட கின்ஸா வீதிகள், தெப்பம் விடப்பட்ட ஹகோனே ஏரி, இம்பீரியல் பாலெஸ், கியோட்டோ, ஒஸாகா, நாரா ஆகிய எல்லா இடங்களும் எனக்கு நன்கு தெரியும். போதாக் குறைக்கு இந்த இடங்களைப் பற்றிய பல புத்தகங்களையும் வரைபடங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன்.
சென்னை நகரில் எனக்குப் பல இடங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஜப்பானில், அதுவும் டோக்கியோவில் உள்ள சந்து பொந்துகளெல்லாம் எனக்குத் தெரியும்.
தேர் விடுவது அத்தனை சுலபமல்ல. அதற்கு அனுபவமும் ஆற்றலும் வசதியும் இருக்க வேண்டும். அதற்குத் தகுதியானவர் யார் என்று யோசித்து, திருவாரூர் வி.எஸ்.டி. அவர்களைத் தேர்ந்தெடுத்து முக்கியப் பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்தேன். அவரும் மனப்பூர்வமாக அதற்கு ஒப்புக் கொண்டார். தெப்போ திருவிழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததோடு இந்தப் புத்தகத்திற்கு அருமையான முகவுரை ஒன்றும் எழுதித் தந்துள்ளார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்க விழாவுக்குக் கலைஞர் அவர்களை அழைத்துச் சென்றேன். மிகச் சிறப்பதானதொரு சொற்பொழிவு நிகழ்த்தி, இந்த நகைச்சுவை நவீனத்துக்கேற்ற வகையில் நகைச்சுவையான முறையில் பேசி விழாவைத் தொடங்கி வைத்தார். வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான அம்மாஞ்சி, சாம்பசிவ சாஸ்திரி, கோபால் ராவ், பஞ்சு இவர்கள் நால்வருடன், புதிய காரெக்டராக ஜப்பான் சாஸ்திரியையும் உருவாக்கினேன்.
இவர்களுடைய நகைச்சுவை உரையாடல்கள் தேரோட்டத்தின் சிரமம் தெரியாமல் பார்த்துக் கொண்டன.
- சாவி
Read more from Savi
Character Rating: 0 out of 5 stars0 ratingsMouna Pillaiyar Rating: 0 out of 5 stars0 ratingsWashingtonil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsOoraar Rating: 0 out of 5 stars0 ratingsThailand Rating: 0 out of 5 stars0 ratingsPazhaya Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsVadam Pidikka Vaanga Jappanukku Rating: 0 out of 5 stars0 ratingsCollege Road Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsApple Pasi Rating: 0 out of 5 stars0 ratingsKomaganin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Paalam Rating: 0 out of 5 stars0 ratingsNavakaali Yathirai Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Selvan Rating: 0 out of 5 stars0 ratingsVisiri Vaazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Theppo 76
Related ebooks
Satyajit Ray - Vaazhvum Vazhiyum Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Chozhan! Rating: 0 out of 5 stars0 ratingsVadam Pidikka Vaanga Jappanukku Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsAppachi Rating: 0 out of 5 stars0 ratingsAutograph Rating: 0 out of 5 stars0 ratingsCollege Road Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Marabukal Rating: 4 out of 5 stars4/5Sakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsOru Pattamilagaiyum Konjam Uppum Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsAbusi - Thobasi Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnicha Malar Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thediya Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsVaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Naadugalil Arubathu Naal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKann Simittalgal Rating: 0 out of 5 stars0 ratingsUnnaipol Oruvar Rating: 0 out of 5 stars0 ratingsRasavadhi Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsKavignargalin Kaalachuvadu! Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsPadikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Avvai Sol Virumbu Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kadithaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Kalai Uththigal! Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Theppo 76
0 ratings0 reviews
Book preview
Theppo 76 - Savi
http://www.pustaka.co.in
தெப்போ - 76
Theppo - 76
Author:
சாவி
Savi
For more books
http://www.pustaka.co.in/home/author/savi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
மறக்க முடியாத ஆசிரியர் சாவி
சாவி அவர்களைப் பற்றிய இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பு பொருந்தவே பொருந்தாது. ஏதோ நான் அவரை மறக்க முயற்சிப்பது போலவும், மறக்க முடியாது தவிப்பது போலவும் அர்த்தம் தொனிக்க வாய்ப்புண்டு. ஆகவே இதற்குச் சரியான தலைப்பு: என்றும் நினைவில் வாழும் ஆசிரியர் சாவி!
நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தச் சமயத்தில் அவரைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், நகைச்சுவை ரசிகர்கள் எல்லாரும் இதையேதான் கூறுவார்கள். அதுதான் சாவி அவர்களின் தனிச்சிறப்பு.
ஆசிரியர் சாவி என் மேல் அளவு கடந்த அபிமானம் கொண்டவர். 'நீங்கள் என் மனசாட்சியின் காவலர்' என்று எழுதியிருக்கிறார். எத்தனை எத்தனையோ விஷயங்களில் என் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார். மகிழ்ச்சிகரமான விஷயங்களை எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார். சோகம், ஏமாற்றம், கஷ்டம், நஷ்டம் போன்றவற்றையு என்னிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடைந்திருக்கிறார்.
சின்னக் குழந்தையைத் தலைமேல் வைத்து கொஞ்சுவது சகஜம். அந்தக் குழந்தை, கொஞ்சுபவரை விட உயர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளலாமா? கூடாது. சாவியும் பல எழுத்தாளர்களை அப்படித் தூக்கிப் பாராட்டி, ஊக்கமூட்டி, தட்டிக் கொடுத்து அவர்களுக்கே தெரியாத திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை உயரத் தூக்கி எழுத்துலகில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். காரணம், அவர் பத்திரிகை ஆசிரியர் என்பதைவிட, எழுத்தாளர் என்பதைவிட, சிறந்த ரசிகர் என்பதே! எந்தக் கட்டுரையானாலும், கதையானாலும், சின்னச் சின்ன நகாசு வேலைகளையும் கூர்ந்து கவனித்து, மனதாரப் பாராட்டியிருக்கிறார்.
பாருங்கள், என்னமா கலகலவென்று எழுதியிருக்கிறார்
என்று சொல்லுவார். ஆசிரியர் கடிதமோ, சினிமா விமர்சனமோ, தலையங்கமோ எல்லாவற்றிலும் ஏதாவது அழகை, வார்த்தை ஜாலத்தை, சாமர்த்தியமான வர்ணனையை ரசித்து, பொற்கொல்லர் வைர நகை செய்யும் போது வைரக்கல்லைச் சாவணத்தால் எடுத்து வைப்பதுபோல், தான் ரசித்த சின்னச் சின்ன விஷயங்களை தானும் ரசித்து மற்றவரையும் ரசிக்கச் செய்வார். அடடா, அவரிடம் நான் கற்ற பாடங்களுக்கு அளவில்லை.
சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மைல்கல். சிறிய மைல்கல் அல்ல. ஆளுயர மைல்கல்! அந்த நகைச்சுவையை யாராலும் இதுவரை மிஞ்ச முடியவில்லை.
அமெரிக்காவையோ, வாஷிங்டனையோ பார்த்திராத அவர் எழுதிய வர்ணனைகள் அபாரமானவை. அந்தத் தொடரைப் படித்தபோது தானும் அமெரிக்காவைப் பார்த்ததில்லை. ஆகவே வர்ணனைகள் என்னை அசத்திவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து வாஷிங்டனைச் சுற்றிப் பார்த்தபோதுதான் அவர் வர்ணனையின் திறமையை முழுதுமாக ரசித்து வியந்தேன். சமீபத்தில் ஒருவர் வாஷிங்டன் திருமணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருந்தார். அதை என் பார்வைக்கு அனுப்பி இருந்தார். சுமார் ஐம்பது வருட இடைவெளிக்குப் பிறகு படித்தபோது, அவருடைய கற்பனைகளும், சிலேடைகளும், உரையாடல்களும் என்னை அசத்திவிட்டன. (இத்தனைக்கும் மொழிபெயர்ப்பில் சில சிலேடைகளைக் கொண்டு வர முடியவில்லை) ஆனால், வாஷிங்டனில் நான் பார்த்த பல இடங்களைப் புகைப்படம் எடுத்த மாதிரி வர்ணித்து இருந்தார். அபாரம்!
சாவி அவர்களின் பெயர், நிச்சயம் இன்னும் ஒரு நூற்றாண்டு இருக்கும்.
சாவி அவர்கள் என் நெஞ்சில் நிறைந்தவர் மட்டுமல்ல; உறைந்து இருப்பவரும் கூட!
- கடுகு
*****
முன்னுரை
அமெரிக்கா போகாமலேயே, வாஷிங்டன் நகரைப் பார்க்காமலேயே, வாஷிங்டனில் திருமணம் எழுதினேன். ஆனால் தெப்போ -76-ஐ அப்படி எழுதவில்லை. ஜப்பான் நாட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த பிறகே எழுதியுள்ளேன். தேர் விடப்பட்ட கின்ஸா வீதிகள், தெப்பம் விடப்பட்ட ஹகோனே ஏரி, இம்பீரியல் பாலெஸ், கியோட்டோ, ஒஸாகா, நாரா ஆகிய எல்லா இடங்களும் எனக்கு நன்கு தெரியும். போதாக் குறைக்கு இந்த இடங்களைப் பற்றிய பல புத்தகங்களையும் வரைபடங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன்.
சென்னை நகரில் எனக்குப் பல இடங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஜப்பானில், அதுவும் டோக்கியோவில் உள்ள சந்து பொந்துகளெல்லாம் எனக்குத் தெரியும்.
தேர் விடுவது அத்தனை சுலபமல்ல. அதற்கு அனுபவமும் ஆற்றலும் வசதியும் இருக்க வேண்டும். அதற்குத் தகுதியானவர் யார் என்று யோசித்து, திருவாரூர் வி.எஸ்.டி. அவர்களைத் தேர்ந்தெடுத்து முக்கியப் பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்தேன். அவரும் மனப்பூர்வமாக அதற்கு ஒப்புக் கொண்டார். தெப்போ திருவிழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததோடு இந்தப் புத்தகத்திற்கு அருமையான முகவுரை ஒன்றும் எழுதித் தந்துள்ளார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்க விழாவுக்குக் கலைஞர் அவர்களை அழைத்துச் சென்றேன். மிகச் சிறப்பதானதொரு சொற்பொழிவு நிகழ்த்தி, இந்த நகைச்சுவை நவீனத்துக்கேற்ற வகையில் நகைச்சுவையான முறையில் பேசி விழாவைத் தொடங்கி வைத்தார்.
வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான அம்மாஞ்சி, சாம்பசிவ சாஸ்திரி, கோபால் ராவ், பஞ்சு இவர்கள் நால்வருடன், புதிய காரெக்டராக ஜப்பான் சாஸ்திரியையும் உருவாக்கினேன்.
இவர்களுடைய நகைச்சுவை உரையாடல்கள் தேரோட்டத்தின் சிரமம் தெரியாமல் பார்த்துக் கொண்டன.
சாவி
*****
முகவுரை
தெப்போ-76
என்ற கற்பனைச் சித்திரத்தை தினமணி கதிரில் படித்தவர்கள் அதன் அருமை பெருமைகளைப் பற்றி நன்கு அறிவார்கள். இந்த அருமையான கற்பனைச் சித்திரத்தைத் தமிழ் மக்களுக்குத் தீட்டித் தந்தவர் நம் பாரத நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரான திரு 'சாவி' அவர்கள் தமிழர்களின் அறிவை வளர்க்கும் வகையில் அவர் நகைச்சுவை ததும்பும் பல கட்டுரைகளை எழுதி, பெரும் சேவை செய்து வருவது பற்றியும் அவரது எழுத்துத் திறமை பற்றியும் அறியாத தமிழர் யாரும் இருக்க முடியாது. 'வாஷிங்டனில் திருமணம்' என்ற பிரமாதமான நகைச்சுவைத் தொடர் கதையை எழுதி எத்தனையோ லட்சம் தமிழர்களை அவர் மகிழ்வித்தார். அதே மாதிரி ‘தெப்போ-76' என்ற நகைச்சுவைத் தொடர்கதையை நம் மக்களுக்கு 'சாவி' அவர்கள் சமீபத்தில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மிகப் புராதனமான திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமியின் பெரிய தேர் உற்சவத்தையும், அங்கு கமலாலயத்தில் நடைபெறும் தெப்ப உற்சவத்தையும், அவைகளின் சிறப்புக்களையும், அவர் மனதில் கொண்டு, இந்த உற்சவங்களை ஜப்பானில் நடத்தினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன் இக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தக் கதையை எழுத எண்ணியவுடன், 'சாவி' அவர்கள் இவ்வாண்டு திருவாரூருக்கு வந்திருந்து, இந்த இரண்டு உற்சவங்களையும் நேரில் கண்டு களித்தார். முக்கியமாக, பெரிய தேர் ஓட்டத்தின் சிறந்த அம்சங்களையும், தேர் கோடி திரும்பும் காட்சியையும், பல்லாயிரக்கான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் விழாவில் கலந்து கொள்ளும் பாங்கினையும், தெப்போற்சவத்தின் சிறப்புக்களையும், அப்பொழுது தெப்பத்தில் நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளையும் நேரில் கண்டு வந்தார்.
இந்த மாபெரும் அழகிய நிகழ்ச்சிகளை அவர் தமது கற்பனைச் சித்திரத்தின் மூலம் ஜப்பானிலே நடத்திக் காட்டி விட்டார். இக்கதையில் எத்தனையோ நகைச்சுவை மிகுந்த விஷயங்களை ஜப்பான் சாஸ்திரிகள் மூலமாகவும், சாம்பசிவ சாஸ்திரிகள் மூலமாகவும் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார் சாவி. நமது தமிழகத்தின் நுண்கலைகள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள், கோவில் விழாக்களின் சிறப்புகள், பல்கலை விற்பன்னர்களின் பணிகள் முதலியவற்றை இக்கதையின் மூலம் எல்லோரும் அறிய ஒரு பெரும் வாய்ப்பை அளித்துள்ளார். இது போல ஜப்பான் நாட்டைப் பார்க்காதவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் அந்த நாட்டின் சிறப்புகளைப் பற்றியும், இயற்கை வளம், செயற்கை வளங்களைப் பற்றியும், அந்நாட்டுச் சக்கரவர்த்தி முதல் மற்ற எல்லா மக்களுடைய பண்பாடு, வாழ்க்கை முறைகள், அவர்களது புத்த கோவிலின் அமைப்பு ஆகியவை பற்றியும், அவர்களிடமிருந்து நம் நாட்டினர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியக் கருத்துக்கள் பற்றியும் வெகுவிரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
நான் பத்தாண்டுகளுக்கு முன் ஜப்பான் சென்ற பொழுது கண்ட இயற்கை வளங்களும், மக்களின் உழைப்பும் சுறுசுறுப்பும், அவர்களது பண்பாடுகளும், விவசாயத் தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், நகரத் தோற்றங்களும், தெப்போ 76ஐப் படித்தபோது மறுபடியும் ஜப்பானுக்கே சென்று அவற்றை நேரில் காண்பது போல் எனக்குத் தோன்றியது. அவ்வளவு அழகாகவும், தெளிவாகவும் சாவி அவர்கள் அந்நாட்டின் மேன்மையை நம் மக்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.
தேர் இழுக்க 'கின்சா' பகுதியையும் தெப்பத்திற்கு ஹகோனே ஏரியையும் அவர் தேர்ந்தெடுத்ததே மிகப் பொருத்தமானது. இம்மாதிரியான விழாக்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை வெளிநாட்டினருக்குத் தூண்டுகிற வகையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு திட்டம் வகுப்பதைப் போல் திரு சாவி அவர்கள் இக்கதையின் மூலம் வழிமுறைகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். நம் நாட்டிற்குத் தனிப் பெருமை அளிக்கும் திருவள்ளுவருக்கும், சென்னையில் அமைக்கப் பெற்றுள்ள வள்ளுவர் கோட்டத்திற்கும், கோவில் உற்சவங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த திருவாரூர் பெரிய தேர், தெப்பம் முதலியவைகளுக்கும் இந்தக் கதையில் முக்கிய இடங்களைக் கொடுத்து, தமிழ்நாட்டின் பெருமைகளைத் தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார். திருவாரூர் தேர் உற்சவத்தைப் பார்க்காதவர்கள் உடனே இந்த விழாவைக் காண வேண்டுமென்ற ஆவல் கொள்ளும் வகையில் அதை வர்ணித்துள்ளார்.
இந்தக் கற்பனைச் சித்திரத்தின் மூலம் ஜப்பானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களையும், நம் நாட்டில் தமிழகத்தில் நாம் பெருமைப்படக் கூடிய பல கலைகளைப் பற்றியும், திருக்கோவில் விழாக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பைத் தமிழ் மக்கள் பெற்றுள்ளனர். இந்தப் பெரும் வாய்ப்பை எல்லோரும் வாங்கிப் படித்துப் பயன் பெறும் முறையில் ‘தெப்போ -76' என்ற தொடர் கதையைப் புத்தக வடிவமாக வெளியிட முன் வந்த திரு சாவி அவர்களை நான் பாராட்டுகிறேன். தமிழ் மக்கள் படித்து மகிழ்வதற்கும் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் இப்புத்தகம்