Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

College Road Kaadhali
College Road Kaadhali
College Road Kaadhali
Ebook98 pages35 minutes

College Road Kaadhali

By Savi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'சாவி' சிரிக்கத் தெரியாதவனையும் தனது எதார்த்தமான எழுத்துக்களால் சிரிக்க வைக்கக் கூடியவர். ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தும் கூட அதிகம் பெருமை பாராட்டவர். தனது முத்தான எழுத்துக்களால் வாசகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவரது கதைகள் அனைத்தும், மக்களை கவரும் படியாக அமைந்து உள்ளதால் தான் எக்காலத்திலும் மக்களால் விரும்பப் படுகிறது.
Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580110904649
College Road Kaadhali

Read more from Savi

Related to College Road Kaadhali

Related ebooks

Reviews for College Road Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    College Road Kaadhali - Savi

    http://www.pustaka.co.in

    காலேஜ் ரோட் காதலி

    College Road Kaadhali

    Author:

    சாவி

    Savi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/savi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    சாவி

    சா விஸ்வநாதன் என்ற 'சாவி' (10.08.1916 - 09.02.2001) தமிழகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். வேலூர் மாவட்டத்திலுள்ள மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் சாமா சுப்ரமண்ய சாஸ்திரிக்கும், மங்களாவுக்கும் பிறந்தவர். கல்கி, ஆனந்த விகடன், தினமணிக் கதிர், குங்குமம் போன்ற இதழ்களில் பணி ஆற்றியுள்ளார். பின்னர், 'சாவி' என்ற வார இதழையும் தொடங்கினார்.

    'சாவி'யைத் தவிர, வெள்ளி மணி, மோனா, சுஜாதா, திசைகள், பூவாளி, விசிட்டர் லென்ஸ் போன்ற பத்திரிகைகளையும் சொந்தமாக நடத்தியுள்ளார். இவற்றில் 'திசைகள்' பத்திரிகை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல 'பூவாளி' ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையாக விளங்கியது என்று சொல்லலாம். 'விசிட்டர் லென்ஸ்' தான் இன்றைய இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது. இதில் ஆசிரியராகப் பணி புரிந்தவர் ‘விசிட்டர் அனந்த்' என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்.

    ஒரு பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும், எப்படி நடத்தக் கூடாது என்பதை சாவி சொல்லும் விதமே அழகு! 'பத்திரிகையை சிரார்த்தம் மாதிரி நடத்தக் கூடாது. அரிசியும், வாழைக்காயும் கொடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நினைக்கக் கூடாது. ஒவ்வொரு இதழைக் கொண்டு வருவதையும் ஒரு கல்யாணம் மாதிரி பண்ணதும். பாத்திரம், துணிமணி, நகைகள் எனப் பார்த்துப் பார்த்து வாங்குகிற மாதிரி, விஷயங்களைத் தேடித் தேடிச் சேகரிக்கணும். மேள தாளத்துக்கு, மண்டபத்துக்கு ஏற்பாடு பண்ற மாதிரி பத்திரிகையில் லே - அவுட் ஒவ்வொண்ணையும் ரஸிச்சி ரஸிச்சிப் பண்ணணும்' என்பார். சாவியின் இந்த வாக்கு இன்றைக்கும் ஒரு வேத வாக்கு.

    ஆனந்த விகடன், குமுதம், கல்கி என மூன்றே மூன்று பத்திரிகைகள் மட்டுமே வாசகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்த அந்தக் காலத்தில், வெறும் பத்தாயிரம் பிரதிகள் மட்டுமே விற்றுக் கொண்டிருந்த 'தினமணிக் கதிர்' பத்திரிகைக்குப் பொறுப்பேற்று, அதில் பல புரட்சிகள் செய்து, அதன் விற்பனையை கிடுகிடுவென இரண்டரை லட்சம் வரை உயர்த்தியவர் சாவி.

    ஒரு பத்திரிகையில் சிறுகதை ஒன்றை நான்கரை பக்கங்களுக்கு லே - அவுட் செய்திருந்தார்கள். மீதி அரை பக்கத்துக்கு ஒரே ஒரு ஜோக்கை மட்டும் வைத்து லே - அவுட் செய்தார்கள். அந்த இடத்தில் தாராளமாக இரண்டு ஜோக்குகளை வைத்து அமைக்க முடியும். ஆனால், கைவசம் வேறு ஜோக் இல்லையோ என்னவோ! இடம் காலியாகத் தெரியக் கூடாது என்பதற்காக ஜோக்கையும் படத்தையும் சாய்த்து வைத்து, மேலும் கீழும் கோடு போட்டு, அந்த அரைப் பக்கத்தை நிரப்பியிருந்தார்கள்.

    அதைக் காண்பித்து சாவி சொன்னார்: 'இதப் பார்த்தியா? இது எப்படி இருக்குன்னா... எப்பவாவது நீ காலியான ரயில்ல பிரயாணம் செய்திருக்கியா? அப்ப ஒரு வேளை நீ கவனிச்சிருக்கலாம். எதிர் எதிர் சீட்டுகள் காலியாக இருக்கும். அப்போ சில பேர் என்ன பண்ணுவாங்க தெரியுமா? அவங்க உட்கார ஜன்னல் ஓரமா ஒரு சின்ன இடம் போதும். ஆனா, அவ்ளோ இடம் காலியா இருக்கே, அனுபவிக்கணும்னு அவங் களுக்குள்ளே ஒரு எண்ணம் வரும். அதனால், சரிஞ்சு உட்கார்ந்து, கால்களை எதிர் சீட்டுலே நீட்டிக்கிட்டு, எல்லா இடத்தையும் ஆக்ரமிச்சிக்கிட்டு கோணல் மாணலா உட்கார்ந்திருப்பாங்க. பார்க்கவே 'ஆக்வேர்டா' இருக்கும். அப்படி இருக்கு இந்த லே-அவுட். இதைக் கேட்ட பிறகும் ஒருவரால் அப்படியொரு லே-அவுட் டைச் செய்ய முடியுமா என்ன?

    தாம் ஒரு எழுத்தாளர் என்று கூறப்படுவதை விட, ஒரு பத்திரிகையாளர் என்று நினைவு கூறப்படுவதையே சாவி பெரிதும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்.

    தாம் எழுதுவது மட்டுமல்ல; மற்ற எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, அவர்களிடமிருந்து சிறந்த படைப்புக்களைப் பெற்று வெளியிட்டு, அவர்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் சாவிக்கு அலாதி ஆனந்தம்.

    கவியரசு கண்ணதாசனை - அர்த்தமுள்ள இந்து மதம் எழுத வைத்ததும், கலைஞர் மு. கருணாநிதியை - குறளோவியம் எழுத வைத்ததும், கவிப் பேரரசு வைரமுத்துவை - கவிராஜன் கதை எழுத வைத்ததும் சாவிதான்!

    Enjoying the preview?
    Page 1 of 1