Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abusi - Thobasi Part 1
Abusi - Thobasi Part 1
Abusi - Thobasi Part 1
Ebook220 pages1 hour

Abusi - Thobasi Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580120902545
Abusi - Thobasi Part 1

Read more from Raya Chellappa

Related authors

Related to Abusi - Thobasi Part 1

Related ebooks

Related categories

Reviews for Abusi - Thobasi Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abusi - Thobasi Part 1 - Raya Chellappa

    http://www.pustaka.co.in

    அபுசி - தொபசி தொகுதி 1

    Abusi - Thobasi Part 1

    Author

    இராய செல்லப்பா

    Raya Chellappa

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/raya-chellappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1 டி.எம்.சௌந்தரராஜனின் காதல் தோல்வி

    2 மந்தாகினிக்குப் பிடிக்காத அகராதி

    3 பாட்டி, நீ இறந்துபோய் விடுவாயா?

    4 வி ஆர் எஸ் வாங்கினார் வேங்கடசாமி

    5 வள்ளலார் உறங்கிய திண்ணை

    6 அனுஷ்காவுக்கு வயது 31 தான்

    7 ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

    8 ‘மந்திரிகுமாரி’ பாடலுக்கு வெட்டு

    9 விசிறி சாமியார் கேட்ட கேள்வி

    10 பிரபஞ்சனின் முக்கியச் சிறுகதை

    11 ஹேப்பி பர்த்டே டு யூ!

    12 ஆர்த்திக்கு என்ன ஆயிற்று?

    13 சிவகுமாரின் எழுத்தும் கஸ்தூரியின் பேச்சும்

    14 இளையராஜாவின் மூன்றாம் அறிவுரை

    15 மலையாள எழுத்தாளரின் மனைவி எழுதுகிறார்

    16 தோழர் நல்லக்கண்ணுவும் டாலர் தேசமும்

    17 பெரியார், ராஜாஜியின் நேர்மை நெஞ்சம்

    18 நா முத்துக்குமாருக்கு வெளிச்சம் தராத பத்திரிகைகள்

    19 இலஞ்சத்தை பாடும் கவிஞர்

    20 எப்போதும் போடுகிற மூதேவி

    21 கண்ணகியின் வயது முப்பதுக்கும் மேல்

    22 பாரதியாரின் கனகலிங்கம்

    23 க நா சு போற்றிய சிந்தனையாளர்கள்

    24 சிறைச்சாலையில் எம் ஆர் ராதா

    இராய செல்லப்பா - ஓர் அறிமுகம்

    தமிழிலும் கணினித்துறையிலும் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர், இராய செல்லப்பா. பாரதியாரைப் பற்றிய இவரது கவியரங்கக் கவிதைகள் ‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. தில்லிக் கவிஞர்களின் கவிதைகளைத் ‘தலைநகரில் தமிழ்க் குயில்கள்’ என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள் ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளன, ‘அகநாழிகை’ மூலம்.

    பன்மொழி அறிந்தவர். அமெரிக்கா, கனடா, மத்தியக் கிழக்கு நாடுகளில் பயணித்தவர். பல்துறை சார்ந்த கட்டுரைகள்/தகவல்களைத் தனது வலைப்பதிவுகள் மூலம் தருவதில் வாசகர்களிடையே கவனம் பெற்றவர்.

    ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்து வளப்படுத்திய வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட திரு செல்லப்பா, இராணிப்பேட்டையிலும், தேன்கனிக்கோட்டையிலும் தன் பள்ளிப் படிப்பை முடித்தவர். (கணிதத்தில்) பட்டப்படிப்பை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியிலும், பட்டமேற்படிப்பை சேலம் அரசு கலைக்கல்லூரியிலும் பயின்றவர். இடையில் சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் இருந்தவர். (கும்பகோணம்) சிட்டி யூனியன் வங்கியில் அதிகாரியாகச் சேர்ந்து, வங்கிப்பணியைத் தொடங்கியவர், பின்னர் விலகி, அரசுடைமை வங்கியான கார்ப்பொரேஷன் வங்கியில் சேர்ந்து பணியாற்றி, துணைப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர்.

    என்னுரை

    அபுசி-தொபசி என்ற பெயரில், எனது வலைத்தளமான செல்லப்பா தமிழ் டயரி யில் 2013 செப்டம்பர் முதல் 2014 செப்டம்பர் வரையான ஓராண்டில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் இரண்டு தொகுதிகளாக வெளியாகின்றன. இது முதல் தொகுதி.

    ஆரம்பித்த புதிதில், ‘அபுசி -தொபசி என்ற இப்புதிய பகுதி வாரம் ஒருமுறை வெளியாகும் என்றும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்’ என்றும் அறிவித்திருந்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, வாரம் இருமுறையாக ஆக்கினேன். ஆனால், எல்லா வாரங்களும் எழுதினேன் என்று சொல்ல முடியாது. 52 வாரங்களில் 46 பதிவுகள் மட்டுமே எழுத முடிந்தது. குடும்பக் கடமைகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டி வந்த போதெல்லாம் அபுசி-தொபசி தன்னைத் தாமதப்படுத்திக்கொண்டது. ஒரு நிலையில், கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று கவனம் மாறிவிட்டதால், அபுசி-தொபசி நின்றே போய்விட்டது.

    குமுதத்தில் அ-ர-சு கேள்வி பதில்கள் வருமே, அதுவும், தினமணியில் ஞாயிறுதோறும் கலாரசிகன் எழுதும் கட்டுரையுமே இத்தொடர் பதிவுகளுக்கான உந்துசக்தியாக இருந்தவை.

    அபுசி-தொபசி என்றால் சீன வார்த்தையோ என்று கருதியவர்கள் கூட, அடுத்த வாரமே புரிந்துகொண்டு விட்டார்கள்:

    என்றால் அரசியல் (அல்லது அனுபவம்);

    பு என்றால் புத்தகம்;

    சி என்றால் சினிமா;

    தொ என்றால் தொலைக்காட்சி;

    என்றால் பத்திரிகை;

    சி என்றால் சிரிப்பு (அல்லது சிந்தனை).

    அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது, மேற்சொன்ன பதிவுகளை மறு வாசிப்பு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சில நண்பர்களிடமும் தொகுப்பைப் படித்துப் பார்த்து கருத்து சொல்லுமாறு கேட்டேன். பயனுள்ள விஷயங்கள் இதில் உள்ளன என்றும் இணைய எழுத்தாளரின் பார்வையில் 2013-2014 க்கான இலக்கிய, வரலாற்று, தொலைக்காட்சிக்கான மினி-ஆவணமாக இதை எதிர்காலத்தில் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    காலம் சென்ற முரசொலி மாறன் அவர்கள் உருவாக்கிய சொல்தொடர் ‘இன்றைய செய்தி, நாளைய வரலாறு’ என்பது. இன்றைய செய்தி நாளைய வரலாறாகும்போது, நேற்றைய செய்தி, இன்றைய வரலாறு ஆகும்தானே!

    தமிழில் மின்-நூல்கள் குறைவு. புதிய படைப்புகளை மின்-நூல்களாக வெளியிடும் முயற்சிகள் இப்போது தொடங்கியுள்ளன. அச்சுப் புத்தகத்தை விட மின்புத்தகங்கள் விலை குறைவு என்பதாலும், இன்றைய இளைஞர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு இணையம் பழகிவிட்டதாலும், தமிழ்நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர்கள் மின்புத்தகங்களையே விரும்பிப் படிக்கிறார்கள் என்பதாலும், இவ்விரு தொகுதிகளையும் மின்-நூலாக வெளியிடுவதே ஏற்புடையது என்று நண்பர்கள் கருதினார்கள்.

    மேலும், உலகின் பல நாடுகளில் இருந்தும் நேரத்தையும் உழைப்பையும் நல்கி, இணையத்தில் வலைப்பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் இன்னும் பலருக்கும் இது ஓர் உற்சாகமூட்டும் வழிகாட்டியாக அமையும் என்றும் அதன்மூலம், தமிழில் மின்-நூல்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

    அவர்கள் தந்த ஊக்கத்தின் விளைவே இந்நூல்.

    கூகுள் ப்ளாக்ஸ்பாட்டில் வெளியாகும் செல்லப்பா தமிழ் டயரி என்னும் எனது வலைப்பதிவிற்கு இது (2017) ஐந்தாவது ஆண்டாகும். கதை, கட்டுரை, குறுநாவல், நாட்டு நடப்பு என்று பல்வேறு செய்திகளை அவ்வப்பொழுது எழுதுகிறேன். சுமார் ஆயிரம் வாசகர்கள் உலகின் பல நாடுகளில் இருந்தும் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள் என்பது எனக்கு நிறைவைத் தருகிறது. இணையத்தைப் பொறுத்தவரையில், இன்று வாசிப்பவர்கள் நாளையும் வந்து வாசிப்பார்கள் என்று கூறமுடியாது. ஆனால் யாராவது வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது மேலும் எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கிறது. நீங்களும் வாருங்களேன்! (http://ChellappaTamilDiary.blogspot.com)

    வாசகர்களின் விமர்சனங்களை வரவேற்கிறேன். எனது மின்னஞ்சல்:

    அன்புடன்,

    இராய செல்லப்பா

    chellappay@gmail.com

    சென்னை மே 2017

    1 டி.எம்.சௌந்தரராஜனின் காதல் தோல்வி

    அபுசி-தொபசி 01 (09-9-2013)

    அரசியல்

    திரு ரொமேஷ் பண்டாரி சனிக்கிழமையன்று (7-9-2013) காலமானார் என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

    இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாகப் பணியில் சேர்ந்து, அதன் செயலாளராக உயர்ந்தவர், பண்டாரி. (1985-86). ராஜீவ் காந்தியின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக இருந்தவர். அரசு அதிகாரிகள் மத்தியில் இவரது பிம்பம் இதோ:

    ராஜீவ் காந்திக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித்தர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து வந்து, பல்வேறு சங்கடங்களை அவருக்கு உண்டாக்கியவர். விடுதலைப் புலிகளை ‘திசை தெரியாது அலையும் மதியிலிகள்’ என்று குறிப்பிட்டதால் பிரபாகரனின் தனிப்பட்ட வெறுப்புக்கு ஆளானவர். இலங்கைத் தமிழர்களை எப்படியும் அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ராஜீவ் காந்திக்கு ஊட்டியவர். இவர் மட்டும் இல்லையென்றால் விடுதலிப்புலிகளின் சரித்திரமே மாறியிருப்பதோடு, ஐ.பி.கே.எஃப். என்ற இந்தியப்படை இலங்கைக்குச் சென்று, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனேயின் அரசியல் சூழ்ச்சியால் தமிழர்களைக் கொன்று குவித்த பெரும்பாவமும் அதன் பின்னூட்டமாக நடந்த ராஜீவ் காந்தியின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

    எஜமான விசுவாசத்தின் காரணமாக இவருக்கு கவர்னர் பதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன - டில்லி, கோவா, திரிபுரா, மற்றும் உத்தரப் பிரதேசம். அவரது ஆத்மா சாந்தி அடைவதாக. ஆனால் அவரது பக்குவமற்ற அரசியல் செயல்பாடுகளால் போராலும் பட்டினியாலும் உயிரிழந்த லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் ஆத்மா சந்தியடையுமா?

    புத்தகம்

    வாமனன் எழுதி மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட (திருத்திய பதிப்பு மார்ச் 2008) டி.எம்.எஸ். - ஒரு பண்பாட்டுச் சரித்திரம் என்ற அருமையான வாழ்க்கை வரலாற்று நூல் படிக்கக் கிடைத்தது. 500 பக்க நூல். பல்லாயிரம் பாடல்களைப் பாடி நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளைகொண்ட பாடகர் டி.எம். சௌந்திரராஜன் உயிரோடு இருந்தபொழுதே, அதுவும் அவர், தமிழ்நாடு இயல் இசை மன்றத் தலைவர் என்ற உச்ச நிலையில் இருந்தபொழுதில் வந்த நூல் இது.

    டி.எம்.எஸ். தன் இளம்வயதில் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். அவளை மணம்புரிய வேண்டிப் பெண் கேட்டபொழுது, பெண்ணின் தாயார் அலட்சியமாக: ‘என்ன, அங்க இங்க பாடிக்கிட்டிருக்காரு.. அவ்வளவு தானே! நிலையான வருமானம் இல்லையே’ என்றாராம்.

    எதிர்காலத்தில் நல்லா வருவான் என்றிருக்கிறார் தூது போனவர்.

    ‘அப்படியானால் வைரத்தோடு, வைர மூக்குத்தி, இருபது பவுன் நகை போட்டா சம்மதிக்கிறேன்’ என்றாராம் அவர்! அத்துடன் போயிற்று காதல்.

    அப்போதெல்லாம் ஃபோட்டோக்கடைகளில் ரூபாய்க்கு எட்டுப் படம் எடுத்துத்தரும் முறை இருந்ததாம். நீண்ட குடுமியுடன் படம் எடுத்துக் கொண்ட பின், நேரே நாவிதரிடம் சென்று கிராப் தலையாக மாற்றிக்கொண்டாராம் டி.எம்.எஸ். (சினிமா உலகத்திற்குச் செல்லும் முன் அந்த மாற்றம் தேவைப்பட்டதாகத் தோன்றியது.) அவரது பின் குடுமி, அவரது அக்காவிற்கு ஒரு சவுரியாகவும் மனைவிக்கு ஒரு சவுரியாகவும் பின்னாளில் பயன்பட்டதாம்!

    பி.யூ.சின்னப்பாவின் எடுபிடியாகச் சிலகாலம் பணியாற்றிக் கொண்டிருந்தார் டி.எம்.எஸ். ஒரு நாள் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது இவர் கையில் ஓரணாவைக் கொடுத்து ஜாடி பீடி ஒரு கட்டு வாங்கிவரச் சொன்னாராம் சின்னப்பா. அத்துடன் அவரை விட்டு விலக ஆரம்பித்தார் இவர்.

    ‘பாலும் பழமும்’ படத்தின் ஒரு பாடல் ஒலிப்பதிவானபோது சௌந்தரராஜனுக்குக் கடுமையான ஜலதோஷம். உடல்நிலை சரியானதும் பாடுகிறேனே என்றாராம். ‘கதாநாயகன் ஊட்டியில் பாடுவது தான்.....நீங்கள் ஜலதோஷத்துடன் பாடினால் பொருத்தமாக இருக்கும்’ என்றார்களாம் தயாரிப்பு நிர்வாகிகள். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது உண்மையாயிற்று!

    ‘வானம்பாடி’ படத்தில் வரும் ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ என்ற பாடலில் ஒரு வரி: ‘அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்’ என்று எழுதியிருந்தாராம் கண்ணதாசன். அவரது சொந்தப்படம். சாக வேண்டும் என்று பாட மறுத்து விட்டாராம் சௌந்தரராஜன். வேறு வழியின்றி "அவன் -காதலித்து வேதனையில் வாட வேண்டும்" என்று மாற்றிக்கொடுத்தாராம் கண்ணதாசன்.

    சாதனைகளை யாரும் கடையில் விற்பதில்லை. உரிய வேர்வையை விலையாகக் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் காட்டும் இந்நூல், முன்னுக்கு வர நினைக்கும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. தமிழ் சினிமாவின் வரலாறு

    Enjoying the preview?
    Page 1 of 1