Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathaigalum Thiraippadangalum
Kathaigalum Thiraippadangalum
Kathaigalum Thiraippadangalum
Ebook89 pages31 minutes

Kathaigalum Thiraippadangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வதோ, இகழ்வதோ மனித மனத்தின் இயற்கை.சில கதைகளைப் படிக்கும் போது, இதைப் படமாக எடுத்தால் நன்றாக இருக்குமேயென நினைப்போம். அவ்வாறு எடுக்கப்பட்ட சில படங்களைப் பார்க்கும் போது, இந்தக் கதை எப்படி எழுதப் பட்டிருக்கும்? எழுதிய மாதிரியே எடுக்கப்பட்டிருக்கிறதா? என்று நினைக்கத் தோன்றும்.

அப்படி ஒரு முயற்சியில், நான் படித்த சில கதைகளையும், பார்த்த திரைப்படங்களையும் பற்றி எழுதப்பட்டதே இந்தத் தொகுப்பு.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580153208375
Kathaigalum Thiraippadangalum

Read more from R. Subashini Ramanan

Related to Kathaigalum Thiraippadangalum

Related ebooks

Reviews for Kathaigalum Thiraippadangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathaigalum Thiraippadangalum - R. Subashini Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கதைகளும் திரைப்படங்களும்

    Kathaigalum Thiraippadangalum

    Author:

    சுபாஷிணி ரமணன்

    R. Subashini Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    இது ஒரு டாக்டரேட் டாபிக்.

    வேதா கோபாலன்

    சுபாஷிணி ரமணன்.

    இவருடன் எனக்கு ஆரம்ப காலத்தில் அதிகப் பரிச்சயம் இல்லை. முகநூலில் என் நட்புப் பட்டியலை நீளம் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் பலருடைய வேண்டுகோளைப் பெண்டிங்கில் வைத்துக் குற்ற உணர்வுக்கு ஆளாகும் நான், சுபாவின் ரெக்வெஸ்ட்டைப் பார்த்து, அவருடைய பதிவுகளை அகஸ்மாத்தாக கவனிக்க ஆரம்பித்தேன். மிகுந்த பிரமிப்பு ஏற்பட்டது.

    இவர் மற்றவர்களைப் போன்ற சாதாரண ரசனையோ, சராசரித் திறமையோ கொண்டிருக்காமல் அபாரத் திறமைசாலி என்பது சில நாட்களிலேயே புரிந்ததால் ஒரு உந்துதலில் இவருடைய ரெக்வஸ்ட்டை ஏற்றேன்.

    இத்தனைக்கும் நான் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இவர் கேட்கவில்லை. அதனாலும் என் மதிப்பில் மேலும் உயர்ந்தார்.

    பதிவுகளைப் படிக்கப் படிக்க வியப்பு கூடிக்கொண்டே போனது. பதிவுக்கான யுக்திகளையும் அருமையாகத் தேர்ந்தெடுத்தார். இவருடைய இலக்கணப் பதிவுகள் பலருக்கும் பயன்பட்டன. அதைவிடவும்…

    ‘கதைகளும் திரைப்படங்களும்’ பற்றி இவர் எழுதிய பதிவுகள், என்னை மட்டுமின்றிப் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கவும் வியந்து பாராட்டவும் செய்யக் காரணங்கள் பல இருந்தன.

    ஜாலியான ஜனரஞ்சகமான டாபிக்.

    கதைகளையும் விழுந்து விழுந்து படித்து சினிமாக்களையும் வியந்து வியந்து பார்க்கும் என் ரசனையும் இந்தப் பதிவுகளும் ஒரே புள்ளியில் இணைந்ததால் என்னால் இதில் ஆழ்ந்து அமிழ முடிந்தது.

    இதில் இவர் குறிப்பிட்டிருக்கும் கதைகளையும் சினிமாக்களையும் நான் பார்த்தும் படித்தும் இருக்கிறேன். சில படங்களைப் பார்க்காவிட்டாலும் கதையை நிச்சயம் படித்திருக்கிறேன். இவருடைய பதிவுகளில் இடம் பெற்ற சிலரின் பார்வைக்குக் கொண்டு செல்வதில் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

    இவர் எழுதும் பாணியில் அலட்டல் அற்ற தன்மையும் ‘நான் எவ்ளோ பெரிய ஆள் பாரு’ என்று பல முக நூல் மேதைகள் செய்வதுபோல் தன்னைப் பற்றி மிகையாகப் புகழ்ந்து இமேஜ் ஏற்படுத்தும் அபத்தம் ஏதும் இல்லாமல் இயல்பாக எழுதும் தன்மையும் என்னைக் கவர்ந்தன.

    சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களோ, டைரக்டர்களோ, நடிகர்களோ இதைப் படித்தால் சிலிர்த்துப்போவார்கள்.

    முன்னுரைக்காக வேண்டி, அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து அனுப்பியிருந்தார் சுபாஷிணி. இவற்றில் பலவற்றை நான் படித்ததோடு, கமென்ட் போட்டுப் பாராட்டியதும் நினைவுக்கு வந்தது.

    இப்போது மொத்தமாய்ப் படிக்கும்போது ‘சுசபா-ஷ்’ என்று புருவம் உயர்த்தாமல் இருக்க முடியவில்லை.

    கதை விமர்சனங்களையும் பட விமர்சனங்களையும் ஒரு பெரிய டாஸ்க்-காகவே எடுத்துச் செய்திருக்கிறார். இதை இன்னும் விஸ்தாரமாகச் செய்தால் டாக்டரேட்டுக்கான தீஸிஸ் உருவாகும். அந்த அளவு உழைப்பும், மெனக்கெடலும், ஈடுபாடும் இதில் தெரிகின்றன.

    ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் எழுதியிருக்கும் குறிப்பை ஏனோதானோ என்று எழுதவில்லை. முனைப்புடன் தேடித்தேடிப் பிடித்திருக்கிறார். மற்ற சில எழுத்தாளர்களுக்கே இவை புதிய செய்தியாக இருக்கலாம். (எனக்கு ஒன்றிரண்டு அப்படி இருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!)

    ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றிய விவரக் குறிப்பையும் தவறின்றிக் குறிப்பிட்டிருக்கும் விதமும் பாராட்ட வைக்கின்றன. தயாரிப்பு டைரக்ஷன், பாடலாசிரியர், நடிகர்கள், பாடல்களைப் பாடியவர்களின் பட்டியல் என சகல விவரங்களையும் கொடுத்ததோடு மொத்தம் எத்தனை பாடல்கள் என்று குறிப்பிடும் அளவுக்குத் துல்லியம்.

    கதையை சினிமாவுக்காக எந்த அளவு மாற்றியிருக்கிறார்கள் அல்லது மாற்றவில்லை என்பதையும் நுணுக்கமாக விமர்சித்திருக்கிறார்.

    கதை, படம் இரண்டையும் இணைக்கும் யுக்தியில் பாடல்களையும் விட்டுவைக்காமல் சேர்த்திருப்பது.. இவர் மெனக்கெட்டிருக்கும் விதத்தைக் காட்டுகிறது.

    நாவல்களின் சுருக்கங்களை இவரளவு நேர்த்தியாக எழுதுவது சிரமம். கதையின் சுவை கெடாமலும் சுருக்கம் என்பது பெருக்கமாகாமலும் எழுதத் தனித் திறமை வேண்டும்.

    மகரிஷியின் பத்ரகாளி பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு காட்சியில் அரக்குப் புடவையைக் கட்டிக் கொண்டு. கண்களில் எப்போதையும் விட அதிகமாக மைதீட்டிக்கொண்டு. தலைப்பின்லை அவிழ்த்து நுனி முடிச்சிட்டுக் கொண்டு புறப்பட்டாள் என்று மகரிஷி எழுதியிருப்பார். அதைக் கூட காட்சிப்படுத்தித் தாய் மகளைக் கேட்பதாக படத்தில் எடுத்திருந்தார்கள். என்பதில் உள்ள நுணுக்கம் வியக்க வைத்தது.

    கதைச்சுருக்கம், சினிமாக்

    Enjoying the preview?
    Page 1 of 1