Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kudai Raatinam
Kudai Raatinam
Kudai Raatinam
Ebook83 pages31 minutes

Kudai Raatinam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொறாமை கொண்ட உள்ளம் உண்மையை உணராது. வாழ்க்கை என்பது எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. ஏற்றமும் தாழ்வும் எல்லோருக்கும் உண்டு. இது புரியாது அன்பான தோழியை பொறாமையால் தவறாக நினைக்கிறாள் ஒருத்தி. அவள் புரிந்து கொண்டாளா? இல்லை, தான் நினைப்பது தான் சரி என்கிறாளா? விடுகதையின் விடை கதையில்….

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580153210598
Kudai Raatinam

Read more from R. Subashini Ramanan

Related to Kudai Raatinam

Related ebooks

Reviews for Kudai Raatinam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kudai Raatinam - R. Subashini Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குடைராட்டினம்

    Kudai Raatinam

    Author:

    சுபாஷிணி ரமணன்

    R. Subashini Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 1

    ஷர்மி, ஊருக்குப் போனதும் என்னடி பண்ணப்போறே?

    ம், நல்லா மூக்குப் பிடிக்க சாப்ட்டு, நல்லா தூங்கப் போறேன்

    சீ, அதைக் கேக்கலடி. படிச்சு முடிச்சு கிழிச்சாச்சு. அடுத்து எதாவது வேலைக்கு கீலைக்கு போற ஐடியா உண்டா? இல்லேன்னா அப்பா, அம்மா பாக்கற மாப்பிள்ளையைக்... வார்த்தைகளை முடிக்காமல் கையால் கழுத்தில் தாலி கட்டுவது போல் அபிநயத்து விட்டு செட்டில் ஆகப் போறியா? ன்னு கேக்கறேன்.

    என்று முடித்தாள் அபிநயா.

    ஏண்டி. லூசு! அவளுக்கு அம்மா இல்லைன்னு உனக்குத் தெரியாதா?

    பல்லைக் கடித்தபடி அபிநயாவின் காதில் மெதுவாகக் கடுகடுத்தாள் நர்மதா.

    சாரிடி! வேணுன்னு சொல்லல நர்மதாவிடம் அபிநயா மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த போது இதையொன்றையும் கவனிக்காதவளாய் ஷர்மிளா, சிரித்தவாறு அபிநயாவிடம் பேச ஆரம்பித்தாள்.

    ஏண்டி அபி, அபிநயான்னு பேர் வச்சதுக்கு, எல்லாத்துக்கும் நல்லா அபிநயம் பிடிக்கறே! பம்மல் கே. சம்மந்தம் கமல் மாதிரி கல்யாணம்னு வாயில கூடசொல்ல மாட்டியா? அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளைக் கேலி செய்ய ஆரம்பித்தாள் ஷர்மிளா.

    இப்போது மாலதியின் முறை.

    ஷர்மி, ஏன் அவள் கல்யாணம் னு கூட சொல்ல மாட்டேங்கறான்னு உனக்குத் தெரியாதா? மாலதி நீட்டி முழக்கியதும், அபிநயாவின் பக்கத்தில் உட்கார்ந்து பெட்டிக்குள் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த நர்மதா அதை அப்படியே போட்டு விட்டு,முறைத்துக் கொண்டிருந்த அபிநயாவை மறந்து விட்டு சொல்லு, சொல்லு எனக்கும் கூட தெரியாது என்று ஆர்வமாய் கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

    வம்புன்னா, வாயப் பொளந்திட்டு வந்துடுவீங்களே! மாலதி நொடித்தாள்.

    சும்மா இருந்தவள நீதாண்டி வம்பு பேச வெக்கறே! இப்ப சொல்ல மாட்டேன்னா எப்படி? எப்படியோ போங்க! நான் போய் எடுத்து வெக்கறேன்கோபத்துடன் எழுந்திருப்பது போல் பாவனை செய்தாள் நர்மதா.

    அவள் எதிர்பார்த்த மாதிரியே,

    போதும், போதும் ரொம்ப பண்ணாதே! உக்காரு! என்று கையைப் பிடித்து நர்மதாவை அமர்த்திய மாலதி, இதைக் கேளு ஷர்மிஎன்று மறுபடி ஆரம்பித்தாள்.

    அபிநயா எழுந்து ‘பட்டென்று’ மாலதியின் முதுகில் ஒன்று போட்டு விட்டு, என்னைக் கிண்டல் பண்ணலேன்னா உங்களுக்குப் பொழுது போகாதேஎன்று முகத்தைச் சுழித்தாள்.

    வென்று கத்தி மிகவும் வலிப்பது போல் பாவனை செய்து முதுகில் தடவிக் கொண்ட மாலதியை, அவ கிடக்கா! நீ சொல்லுடா என்று தன் பக்கம் இழுத்தாள் ஷர்மிளா.

    அபிக்கு ஒரு மாமா பையன் இருக்கான். அவங்க பாட்டிக்கு அபியைத் தான் அவனுக்கு கட்டி வைக்கணும்னு ஆசையாம். மாலதி சொல்லி முடிப்பதற்குள்,

    அப்புறம் என்ன! ஜம்னு கட்டிட்டு செட்டில் ஆக வேண்டியது தானே! நல்லா படிச்சிருக்காரு தானே! என்றாள் ஷர்மி.

    ஓ, படிச்சிருக்காரே! என்ன, கோவலன்னு எழுதச் சொன்னா, கேவலன்னு எழுதுவார். அவ்வளவுதான். அப்படித் தானே அபி? இது மாலதி.

    பாக்கறதுக்கு ஆள் எப்படி? என்ன வேலை செய்யறார்? நிறம் என்ன? ஒவ்வொண்ணா கேக்கறதுக்கு முன்னால நீயா சீக்கிரம் சொல்லுடி அவசரப் படுத்தினாள் ஷர்மிளா.

    பாக்கறதுக்கு அப்படியே ‘மாட்டுக்கார வேலன்’ படத்துல வர்ற எம். ஜி. ஆர் மாதிரியே இருப்பாரு. இரண்டு காளை மாட்டுக்கு நடுவுல கட்டிளங்காளையா இவர் நிக்கற ஸ்டைலே தனி! என்ன, நிறம் மட்டும் வேற லெவல். கல்யாணம் ஆகி, குழந்தை பொறந்தா, திருஷ்டி பொட்டு வைக்க மை ஏதும் அபி தேட வேண்டாம்.

    இதெல்லாம் உனக்கு எப்டிடீ தெரியும்? ஒரே நேரத்தில் ஷர்மியும், நர்மதாவும் கத்த,

    தெரியுமே, சாட்சி கேப்பீங்கன்னுஎன்று கூறியவாறே சென்று அலமாரியில் இருந்து எதையோ மறைத்து எடுத்துக் கொண்டு வந்தாள் மாலதி.

    இவகிட்ட நாம எதும் சொன்னதில்லையே! ஒரே ஒரு வாட்டி, எதோ பேச்சு வந்தப்போ அவன் தமிழைப் பற்றி கிண்டல் செய்து சொல்லியிருக்கேன். ஆனா, ஆளைப் பத்தி சொன்னதில்லையே! இவளா கத அளக்கறாளா? சரி, எதும் வரைக்கு தான் போறா, பாப்போம். நடுவுல எதாவது சொன்னா, அதுலேர்ந்து எதாவது கிண்டலுக்கு பிடிச்சிப்பா! தனக்குள் யோசித்தவாறு அமர்ந்திருந்த அபிநயா, சாட்சி காட்டுவதாய் மாலதி

    Enjoying the preview?
    Page 1 of 1