Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellai Kodu
Ellai Kodu
Ellai Kodu
Ebook82 pages1 hour

Ellai Kodu

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

ராமு என்பவன் தாயை இழந்து தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். அவன் தந்தையை வெறுத்து ராணுவ பயிற்சியில் சேர்ந்தான். தந்தையை வெறுக்க காரணம் என்ன? ராமுவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? ராமுவின் ஆத்திரம் எல்லைக் கோட்டையும் தாண்டி வெடிக்க யார் காரணம் என்ன? வாங்க வாசிக்கலாம்…

Languageதமிழ்
Release dateApr 11, 2022
ISBN6580125407767
Ellai Kodu

Read more from Vaasanthi

Related to Ellai Kodu

Related ebooks

Reviews for Ellai Kodu

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellai Kodu - Vaasanthi

    https://www.pustaka.co.in

    எல்லைக்கோடு

    Ellai Kodu

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கொக் கொக் கொக்...

    ஐந்தாறு கோழிக்குஞ்சுகள் அம்மாக் கோழியைப் பின்பற்றும் வேகத்துடன் பொடிநடை போட்டன. ஒன்றுக்கொன்று இடித்தபடி போட்டியிட்டன.

    ராமு சில விநாடிகள் அவற்றைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். எதிரே செங்குத்தாகத் தெரிந்த மீஜோ மலைகள் கனமான பனிப் போர்வையில் ஒரு விநாடி மறைந்து மறு விநாடி வெளிப்பட்டுக் கண்ணாமூச்சி ஆடின.

    அந்தச் சுற்றுப்புறத்துக்கு ஒட்டாத அன்னியனாய், எந்தப் பைத்தியக்காரத்தன வேகத்தில், எந்த மூடநம்பிக்கையில் இங்கு வந்து சேர்ந்தேன் என்கிற சோர்வும் சுய பச்சாதாபமும் அழுந்த உட்காருகையில் கண்களில் ஒரு பனிப் போர்வை வந்தமர்ந்தது.

    பைத்தியக்காரத்தனமான நம்பிக்கை...

    அம்மாவின் மூடநம்பிக்கை... தன்னுடைய நம்பிக்கையைத் தனக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அவனுடைய அப்பாவி மனசிலும் எப்படிப் படரவிட்டுவிட்டாள்!

    ஷூ!

    அவன் காரணம் புரியாத ஆத்திரத்துடன் தரையில் அகப்பட்ட ஒரு பொடிக் கல்லை எடுத்துக் கோழிக் குஞ்சுகளை நோக்கி வீசினான்.

    குஞ்சுகள் ஒரு கலவரப் பிரலாபத்துடன் அம்மாக்கோழியை ஒண்டிக்கொள்கையில் உணர்வலைகளின் ஆக்ரோஷம் மெல்ல வடிந்தது.

    ராமு!

    குரல் காதில் விழாதமாதிரி அவன் சில விநாடிகள் உட்கார்ந்திருந்தான்.

    பனிப் போர்வையிலிருந்து சற்றே விலகியிருந்த மலைச் சிகரங்கள் மறுபடி மறைந்துகொள்ள விரைந்தன. மலையாயிருப்பது எத்தனை சௌகர்யமானது என்கிற அசட்டுக் கற்பனை எழுந்தது,

    ராமு!

    அவன் சோர்வுடன் எழுந்தான். தரை ஜில்லென்றிருந்தது. ஸாக்ஸும் ஜோடும் போடாமல் பாதங்கள் வெடித்து விறைத்திருந்தன. அந்த மேட்டுப் பாதையைக் கடந்து வீட்டை அடைவதற்குள் பாரத்தை இழுத்தாற்போல் ஆயாச மேற்பட்டது.

    ராமூ!

    அவன் தலையைக் குனிந்தபடி கதவைத் திறந்தான்.

    தலை இன்னும் குனிந்தது.

    அப்பா அரை நிஜாருடன் கட்டிலில் படுத்திருந்தார். பக்கத்தில் அவள். கம்பளிப் போர்வைக்குள் உடம்பிருந்தது. சாய்வாக உட்கார்ந்த நிலையில் புகை பிடித்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்தவுடன் அலட்சியமாகப் புகையை வெளிப்படுத்தியபோது மங்கோலியக் கண்கள் அதிகமாக இடுங்கின. அவனது குனிந்த பார்வையில் அவளுடைய ‘போவான்’னும் (லுங்கி) சட்டையும் அலங்கோலமாகத் தரையில் கிடப்பது தெரிந்தன.

    காலங்கார்த்தாலே எங்கேடா போயிட்டே?

    பதில் சொல்ல சில விநாடிகள் பிடித்தன. அந்த முரட்டுக் குரல் இரத்த நாளங்களைத் துளைத்துச் சூடேற்றின.

    என்னடா பதிலைக் காணம்?

    அவன் மெல்ல நிமிர்ந்தான்.

    அப்பாவின் சாயம் பூசப்பட்ட தலைமயிரும் நிரந்தர சிவப்பேறிவிட்ட கண்களும் வழக்கமான அருவருப்பை ஏற்படுத்தின.

    வெளியிலே கொஞ்சம் வெயிலிருந்ததுன்னு உட்கார்ந்திருந்தேன்.

    ‘வெய்யில் காயற அளவுக்கு இங்கே வசதியில்லே! அரைமணியாக கத்தறேன்! துரை வெய்யில் காயறாராம்! போடா, அடுப்பைப் பத்தவெச்சு டீ போடு!"

    அவன் பதிலே சொல்லாமல், அவர் பக்கத்தில் சாய்ந்த நிலையில் படுத்திருந்த அவளுடைய பரிகாசப் பார்வையை உணர்ந்தும் தலையைத் திருப்பாமல் படுக்கை அறையை ஒட்டியிருந்த சமையலறைத் தடுப்புக்குள் நுழைந்தான். அவள் ஏதோ மீஜோ பாஷையில் சொல்லிச் சிரிப்பது காதில் விழு கையில் கன்னங்களில் சூடேறிற்று. தாடைகளின் நரம்புகள் புடைத்துக்கொள்ள ஆரம்பிக்க அவன் சட்டென்று தன்னைச் சமாளித்துக்கொண்டு, சுள்ளிகளை எடுத்து அடுப்பைப் பற்ற வைத்தான். மண் பானையிலிருந்த குளிர்ந்த ஜலத்தைக் கன்னங்கரேலென்றிருந்த கெட்டிலில் நிரப்பி அடுப்பின் மேல் வைக்கும்போது அம்மாவின் சத்தம் நினைவுக்கு வந்தது. இன்னும் என்னவெல்லாமோ நினைவுக்கு வந்தது.

    ராமூ!

    அவன் திடுக்கிட்டு உம் என்றான்.

    டீயோட சாப்பிட என்ன இருக்கு?

    அவன் அவசரமாக வலை அலமாரியை நோட்டம் விட்டான்.

    ஒண்ணுமில்லே!

    பின்னே ஏதாவது வாங்கிண்டு வா போ!

    Enjoying the preview?
    Page 1 of 1