Kaattrukkenna Veli?
By GA Prabha
5/5
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Aasai Veedu Rating: 5 out of 5 stars5/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaattrukkenna Veli?
Related ebooks
Nilavai Thazhuvatha Mehangal! Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Vinveli Odangal Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsEllai Kodu Rating: 3 out of 5 stars3/5Poochudum Naal Paarkkava Rating: 0 out of 5 stars0 ratingsமனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthey Unnai Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsNinaipathu Niraiverum Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Nesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsKannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Oru Kurangu Ammavagirathu Rating: 0 out of 5 stars0 ratingsYaarodu Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Bungalow! Rating: 0 out of 5 stars0 ratingsUllamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsNizhalattam Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Vanna Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsUnnudane Naan Rating: 4 out of 5 stars4/5Aval Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaattrukkenna Veli?
1 rating0 reviews
Book preview
Kaattrukkenna Veli? - GA Prabha
http://www.pustaka.co.in
காற்றுக்கென்ன வேலி
Kaatrukkenna Veli
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
வாழ்க்கையின் குறிக்கோள் வாழ்வுதான்.
சுவாசிப்பது மட்டும் வாழ்க்கை இல்லை.
"சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
இடரைக் களையும் எந்நாய் போற்றி
ஈசா போற்றி இறைவா போற்றி!"
உதடுகள் உச்சரிக்க கண்மூடி அமர்ந்திருந்தார் மாணிக்கம்.
காற்று மழைச்சாரல் கலந்து வீசியது. மேலே படர்ந்து சென்ற காற்றில் ஈரம், குளுமை தெரிந்தது. போற்றித் திருஅகவலில் மலர்ந்த மனது. குளுமையில் இன்னும் அதிகமாகக் குளிர்ந்தது.
தூரத்தில் சன்னமாக ஒளி எழும்பியது. தங்கத் தகடாய் எழும்பும் சூரியனின் பொன் ஒளிப் பிரகாசம் பரவியது. வார்த்தைக்குள் சிக்காத பரவசம் உடலெங்கும் பரவ, தன்னை மறந்திருந்தார்.
கோவையின் சற்று உள்ளடங்கிய பகுதி என்பதால் சந்தடியும், பரபரப்பும் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தெருக்கோடி அம்மன் அபிராமி அந்தாதி ஆரம்பித்திருந்தது. பக்கத்து வீட்டு மரங்களில், பறவைகளின் கீச்சொலி, சடசடவென்று சிறகடிக்கும் ஒலி. எங்கோ கோழி கூவியது. ‘படக்’கென்று கொல்லைக் கதவு திறக்கும் ஒலி.
டர்டர் என்று மொபட்டைக் கிளப்பும் ஓசை.
காலை வேளை உயிரோட்டத்துடன் இருக்கிறது நேரம் நகர நகர ஒரு சலிப்பு. அலுப்பு. மனித வாழ்க்கை போலத்தான் ஒவ்வொரு நாளும் குழந்தையாய் பிறக்கிறது, எந்த கள்ளங்கபடமும் இல்லாமல். வளர்ந்து, வாலிபம் எய்தி, பின் தளர்ந்து, முதுமை அடைந்து ஓய்ந்து விடுகிறது. இரவின் அமைதியும், உறக்கமும் போல்.
ஒரு நாளைக்கு எத்தனை ஆட்டம்?
கருணையும், அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் மாலை நேரத்தில்தான் வருகிறது. செய்ததை நினைத்து கழிவிரக்கமும், செய்யாததை நினைத்து வருத்தமும் மனதில் நிற்கிறது.
தனக்குள்ளும் உறுத்துகிறதே!
நீங்காத தழும்பாய்.
மாணிக்கம் நினைவை விரட்டினாலும், மறக்க முடியாத விஷயமாய் இருபத்தைந்து வருஷமாய் உறுத்தலோடு தங்கி விட்டது. நீக்க முடியுமா? உடலை விட்டு உயிர் பிரிந்தாலும், பின் தொடரும் கர்மவினை.
அலைந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தினார்.
"போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சயசய போற்றி"
கை கூப்பி எதிரே தெரிந்த குன்றினை வணங்கினார். மருதமலை அருகில். வீட்டுத் திண்ணையிலிருந்து எதிரே சிறு சிறு குன்றுகளும் மருதமலையும் தெரிந்தது. அப்பாவுக்கு இந்த இயற்கைச் சூழல் பிடிக்கும் என்பதால், வாசு இங்கு இடம் வாங்கி வீடு கட்டினான்.
இதெல்லாம் டெவலப்பிங் ஏரியா. சீக்கிரம் நிறைய வீடு வந்துரும்
என்றுதான் வீடு வாங்கும் போது சொன்னார்கள்.
ஆறு வருஷம் ஆகிறது. நிறைய வீடுகள் அங்கங்கு முளைத்து விட்டது. நிலத்தின் விலையும் ஏறிவிட்டது.
சென்னையை விட்டுக் கிளம்புவது என்று முடிவு செய்ததும் கோவைதான் நினைவுக்கு வந்தது. வாசுவுக்கு பேங்க் வேலை. கோவை அல்லது மதுரை என்றார். வாசுவின் மனைவி கவுரியும் கோவை என்றாள். பேத்தி நிரஞ்சன்னா கோவைதான் படிக்க ஏற்ற இடம் என்றாள்.
எல்லாவற்றையும் விட கவுரியின் அம்மா இரு கண்களும் தெரியாதவள், கோவையில்தான் இருந்தாள். தம்பி ரமணி பி.ஈ. படித்துக் கொண்டிருந்தான். எனவே கோவை முடிவாயிற்று.
சேமிப்புக்களை வைத்து வாசு நிலம் வாங்கினான். ரமணிக்கு பி.ஈ.யில் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி ஐ.டி. பார்க்கில் வேலை ஆனது. நிரஞ்சனா பிளஸ் டூ முடித்ததும் பி.காம். சேர்ந்தாள். அவளை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு, சென்னை வீட்டை விற்றார். இங்கு வீடு கட்ட ஆரம்பித்தார்கள். கட்டி மூன்று வருஷம் வாடகைக்கு விட்டிருந்தார்கள். வாசுவுக்கு கோவையில் இடம் கிடைத்தது. வந்து விட்டார்கள். இருபது நாள் ஆகிறது. வீட்டுக்கு பெயிண்ட் அடித்து, உடைந்தது, கழன்றது, ஒட்ட வைப்பது என்று சின்னச் சின்ன வேலைகள் நடக்கிறது.
ரமணி வந்து பார்க்கிறான்.
இன்று போய் ரமணியின் அம்மாவை பார்த்துவிட்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
மாணிக்கம் எழுந்தார். நன்றாக விடிந்தது. தெருவில் நடமாட்டம் ஆரம்பித்து விட்டது. வாசல் கேட்டில் பேப்பர் சொருகி இருந்தது. தலைப்புச் செய்திகளை படித்தபடி வராண்டாவில் அமர்ந்தார்.
வாசல் தெளிக்க கவுரி வந்தாள்.
ஏம்மா? இன்னுமா வேலைக்காரி கிடைக்கலை?
இல்ல மாமா. நாமளே தெளிச்சு, கோலம் போட்டாத்தான் லஷ்மிகரம்
சின்னக் குட்டி என்ன பண்றா?
தூங்கறா?
எழுப்பு அவளை
மாணக்கம் எழுந்து உள்ளே போனார்.
குட்மார்னிங்பா
வாசு காபியோடு எதிரில் வந்தான். இந்தாங்க
காபியை நீட்டினான்.
அந்த வீட்டில் எல்லோரும் ஒவ்வொரு வேலையை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
நிரஞ்சனா எழுந்துட்டாளா?
எழுந்துட்டேன் தாத்தா
குரல் வந்தது. எழுந்து, குளித்து புது மலராக நின்றாள். கண்ணைக் கட்டும் நிறமோ, அழகோ இல்லை நிரஞ்சனா. ஆனால் களை இருந்தது. முகம் முழுவதும் படர்ந்திருந்த வண்டுக் கண்கள். எல்லோரையும் இழுத்தது. உதட்டுச் சிரிப்பு, கருமேகமாய் அடர்ந்த கூந்தல். அவளின் துள்ளலும், சிரிப்பும் வீட்டை நிறைத்தாலும், யாரை மறக்க நினைத்தார்களோ அவளையே ஞாபகப்படுத்தியது.
மாநிறம் என்றாலும் பளிச் என்று திரும்பி உற்றுப் பார்க்கும் உருவம். உயரம், பருமன், வயதுக்கு உரிய இளமை என்று பாந்தமாக இருந்தாள் நிரஞ்சனா.
ஏம்மா, நீ இங்க வந்தது யாருக்கும் தெரியாதா?
மாணிக்கம் கேட்டார்.
ஏன் தாத்தா?
நம்ம தெருவுல பசங்க நடமாட்டமே காணோமே
ப்சு… போர் தாத்தா. முந்தா நேத்து பின்னாடியே ஒரு பையன் வந்தான். என்ன படிக்கிறான்னு கேட்டா பிளஸ்டூ பெயில்
யாரானும் லவ் லட்டர் தந்தா கொண்டு வந்து என்கிட்ட கொடு. ஸ்பெல்லிங் மிஸ்டேக், கரெக்ஷன் பண்ணித் தரேன்
இப்படி மிஸ்டேக் பார்த்தா எவனும் லவ் பண்ண மாட்டான்
– வாசு.
நல்லாயிருக்கு. பொண்ணுக்கு லவ் பண்ண கத்துத் தரீங்களாக்கும்
– கவுரி.
"நல்லவனா இருந்தா நல்லதுன்னு. இன்ஸ்டன்ட் காதல் வேண்டாம்மா. என்னைப் பாரு, பத்த மணிக்கு உங்க பாட்டியை பார்த்தேன். ஒரு மணிக்கு லவ் யூ சொல்லிட்டேன்.
ஏன் தாத்தா அவ்வளவு சீக்கிரம்
கல்யாணத்தன்னைக்கு காலைலதான் பத்து மணி தாலி கட்றப்போ உங்க பாட்டி முகத்தைப் பார்த்தேன். மத்தியானம் பிரண்ட்ஸ் எல்லாம் பாட்டியை பார்த்து ஐ லவ் யூ சொன்னாத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்டாங்க
அடப்பாவமே
பாவம்தான். உங்க பாட்டி இருபத்தஞ்சு வருஷம் என்னை சகிச்சுகிட்டாளே! எங்க அப்பாவோட நண்பரோட பெண். இவளைத்தான் கட்டணும். கிளம்பி வான்னார். சரின்னு போனேன். அவர் முன்னாடி வாய்மூடி நின்னவன்தான். பேச்சே இல்லை.
இப்ப ரொம்ப பேசறீங்க தாத்தா
–நிரஞ்சனா.
"ஸ்கூல்ல நல்ல சமத்துப் பையன்மா நான். வாத்தியார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லமாட்டேனே! ம்… அப்படியே இருந்திருக்லாம்.