Vidiyalai Nokki...
By Vaasanthi
()
About this ebook
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு தானாகவே ஏற்பட்டுப் போகும். அதேபோல் கோபுவின் மாமா போடும் நாடகம் ஓரங்க நாடகம். ஒரே ஒரு பாத்திர நாடகம். ஹீரோ, ஹீரோயின், சக பாத்திரங்கள் எல்லாமே அவரே. காரணகாரியம் ஒரு சுழற்சி, அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அது புரிகிற வரைதான் இந்த ஆட்டமும் பாட்டமும், கோபமும் தாபமும். அந்த ஏழு வருட இடைவெளியில் நிகழ்ந்தது என்ன? இது தெய்வத்தின் செயல்தானா? இல்லை விதியின் செயலா? தன் மாமாவை பழிவாங்க நினைத்த கோபுவின் வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்படக் காரணம் என்ன? ஒருபக்கம் அஸ்தமனம்னா இன்னொரு பக்கம் விடியல் உண்டுன்னு கோபுவிற்கு புரிய வைத்தது யார்? நாமும் இவர்களுடன் விடியலை நோக்கி...
Read more from Vaasanthi
Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsSariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsNaan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Kizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Thunaivi Rating: 2 out of 5 stars2/5Puthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsKarai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsPathaiyorathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Suriyargal Rating: 0 out of 5 stars0 ratingsVeli Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vidiyalai Nokki...
Related ebooks
Andha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Vittal Rao Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukkenna Veli? Rating: 5 out of 5 stars5/5Ettavathu Swaram..! Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Oru Sivappu Patchaiyaakirathu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Mathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsVimochanam Rating: 4 out of 5 stars4/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solli Kondu... Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Ellai Kodu Rating: 3 out of 5 stars3/5Kai Kotti Siriyaaro! Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsPogappoga... Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vidiyalai Nokki...
0 ratings0 reviews
Book preview
Vidiyalai Nokki... - Vaasanthi
https://www.pustaka.co.in
விடியலை நோக்கி...
Vidiyalai Nokki...
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
மாமா கையை கையை அசைத்துப் பேசிக் கொண்டிருந்தார். கனமான சதைப்பிடிப்பிற்குள் இருக்கும் வஜ்ரம் போன்ற ஆக்ருதியில் குரல் எங்கோ அதலபாதாளத்திலிருந்து மேலே பெருமுயற்சியுடன் வருகிற மாதிரி அடிக்குரலாய் கம்மலாய் கரகரப்பாய் தொனித்தது. அந்த உடம்புக்கும் குரலுக்கும் எத்தனை வித்தியாசம் என்று கூடத்துத் தூண் மேல் சாய்ந்த படி அரைமணி நேரமாக இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கோபு நினைத்துக் கொண்டான். மாமா போடும் நாடகம் ஓரங்க நாடகம் மாதிரி. ஒரே ஒரு பாத்திர நாடகம். ஹீரோ, ஹீரோயின், சக பாத்திரங்கள் எல்லாமே அவரே. பின்புறத்திற்கு மாமி குழந்தைகள் டிட்டோ.
கையை அசைத்து அசைத்து மாமா அந்த அவரது பிரத்யேக அடிக்குரலில் பேசியபோது அவருடைய தொந்தி மடிப்புக்கள் அதிர்ந்து குலுங்கின. கணுக்காலுக்கு மேல் அலட்சியமாகக் கட்டிய வேஷ்டியும், வெற்று மார்பில் நீளமாகத் தொங்கிய துண்டும் கிரேக்கப் பேச்சாளனை அவனுக்கு ஞாபகப்படுத்திற்று. பத்து வருஷங்களுக்கு முன் இருந்த மாமாவுக்கும், இப்பொழுது எதிரில் நிற்கும் மாமாவுக்கும் நிறைய வித்தியாசம் என்று அவனுக்குத் தோன்றிற்று. அவனுக்கு புகை மூட்டமாக நினைவிருந்தது. மாமா அப்பொழுது நிச்சயம் இத்தனை பருமன் இல்லை. அதிகம் பேசாத வாய் மூடி மாமாவாக, அப்பாவின் எதிரில் உட்காரக் கூட தைரியமில்லாத மாமாவாகத்தான் நினைவிருக்கிறது.
ஓ, மனிதர்கள் எத்தனை சீக்கிரம் மாறிவிடுகிறார்கள்!
அவன் கால் கடுக்க, பாரத்தை இன்னொரு காலுக்கு மாற்றியபடி நின்றான். எதிர்த்த தூணில் அம்மா. அவள் பக்கத்தில் அவளுடைய புடவையைப் பிடித்தபடி ஒரு ராட்சஸனைப் பார்க்கிற பயத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டு அவன் தங்கை சச்சு.
அம்மா,
அவனுக்குக் குபீரென்று ஒரு ஜ்வாலை அடி வயிற்றிலிருந்து கிளம்பி கண்களில் பொங்கப் பார்த்தது.
இந்தப் பத்து வருஷங்களில் மாமாவைவிட அதிகமாய் மாறியிருப்பது அம்மாதான். ரவிவர்மாவின் லட்சுமி சரஸ்வதி உருவங்கள் மாதிரி அம்மாவுக்கு முன்பு தேகவாகு. உருட்டிவிட்ட மாதிரி வெள்ளை வெளேரென்ற அந்த உடம்பில் ஏக நகைகள் இருந்தது அவனுக்கு நினைவிருக்கிறது.
இப்பொழுது அந்த வெளுப்பெல்லாம் கருத்து உடம்பு வற்றிச் சுருங்கி ஒரு குன்று மணி தங்கம் இல்லாமல் சுட்ட கத்தரிக்காய் மாதிரி... தோலை உரித்தால் அங்கே ரத்தமும், சதையும் இருக்குமா என்று அவனுக்கு சந்தேகம் வந்தது.
மாமாவின் கை அசைவு சற்று நின்றது. குரல் ஓய்வெடுக்கிற மாதிரி அடங்கிற்று.
இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றே அண்ணா?
அம்மாவின் குரல் தீனமாகக் கேட்டது.
‘எத்தனை தரம் சொல்லணும்?’ என்கிற அலுப்பு மாமாவின் பார்வையில் தெரிந்தது.
இத பார் காமு. நா திருப்பித் திருப்பி சொல்றேன். என்னாலே செய்ய முடிஞ்சதையெல்லாம் நா செஞ்சாச்சு. பத்து வருஷமா உக்காத்தி சாப்பாடு போட்டு, கோபுவை எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைச்சு, பூணூல் போட்டு ட்ரஸ் தைச்சுங்கற மாதிரி சகலமும் பண்ணியாச்சு. நானும் சம்சாரி. நீயே பார்க்கறியே கழுத்து வரைக்கும் நா சாகற வரைக்கும் எனக்குப் பொறுப்பிருக்கு. ஆறு பெண்களுக்கு சீர்செனத்தியோட கல்யாணம் பண்ணி அனுப்பணும். உன்னோட குடும்பத்தையும் வெச்சுண்டு காப்பாத்த எனக்கு சத்தியில்லே.
அம்மாவின் கண்களிலிருந்து கரகரவென்று நீர் வழிந்தது.
நா இப்ப திடீர்னு எங்கேண்ணா போவேன்? எனக்கு ஒண்ணுமே வேண்டாம்ணா. கோபுவை மட்டும் கொஞ்சம் காலேஜ் படிப்பு படிக்க வெச்சுடு. அவன் படிப்பு முடியற வரைக்கும் எங்களுக்கு சாப்பாடு போட்டுடு, இந்த வீட்டு வேலை அத்தனையும் நா செய்யறேன். சச்சுகூட செய்வா. வேலைக்காரி மாதிரி நீ எங்களை வெச்சா போரும். காசுக்கு பதில் சாப்பாடு.
மாமாவின் முகத்தில் சுருசுருவென்று கோபம் ஏறிற்று.
ஏன்? ஊரெல்லாம் என்னைத் தூத்தணும்னு பாக்கறியா? கோபுவை மேலே படிக்க வெக்கறதுன்னா ஏகப்பட்ட செலவாகும். எனக்கு அதுக்கெல்லாம் சக்தியில்லே. என்னாலே முடிஞ்சது பத்தாவது வரைக்கும் படிக்க வெச்சாச்சு. அதுக்குக் கிடைக்கற வேலையை வெச்சுண்டு திருப்தி படணும். அவ்வளவுதான். விரலுக்குத் தகுந்த மாதிரிதான் வீக்கம் இருக்கணும். அத்திம்பேர் என்ன ஏக சொத்து வெச்சுட்டு போனார்னு நினைக்கறியா? பத்து வருஷமா உங்களுக்காக நா செலவழிச்சதெல்லாம் ரூபா பைசா விடாம எழுதி வெச்சிருக்கேன். நீயே பாத்துக்கோ என் கையை விட்டு நா எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன்னு.
நீ செஞ்சிருக்கறதைப் பத்தி எனக்கு சந்தேகமில்லேண்ணா. நா கேட்கறதெல்லாம் இன்னும் நாலைஞ்சு வருஷப்பிச்சை, இல்லை கடன் - கோபு படிச்சு முடிக்கிற வரை.
இத பாரு காமு, இந்த மேல்படிப்பு ஆசையெல்லாம் விடு. அதுக்கெல்லாம் லிமிட் கிடையாது. நாலைஞ்சு வருஷம் கழிச்சு சச்சு கல்யாணத்துக்கு நிக்கறா, கல்யாணத்தைப் பண்ணிடும்பே.
திடீரென்று கோபுக்கு மகா ஆத்திரம் வந்தது. இந்த மனிதரிடம் அம்மா கெஞ்சிக்கொண்டு நிற்பது மகாக் கேவலம் என்று பட்டது. அவன் கிடுகிடுவென்று அம்மாவின் அருகில் சென்றான்.
நீ விடும்மா கெஞ்சறதை!. நாம கிளம்பிப் போகலாம்! எப்படியோ பிழைச்சுக்கலாம்.
‘நீ குழந்தை’ என்கிற பார்வை அம்மா பார்த்தாள்.
உலகத்தைப் பத்தி உனக்கொண்ணும் தெரியாதுடா கோபு!
உலகத்தைப் பத்தித் தெரியறதோ இல்லையோ இந்த மாதிரி பிச்சை கேட்கக் கூடாதுன்னு நன்னாத் தெரியும்.
மாமா கடகடவென்று எகத்தாளமாகச் சிரித்தார்.
காமு, பாத்தியா? நீ எதுக்குக் கவலைப்படறே? உனக்கென்ன குறைச்சல்? எப்படிப்பட்ட சூரப்புலியைப் பெத்திருக்கே! ரயில் சார்ஜ் வாங்கித் தந்துடறேன் பட்டணத்துக்கு. அங்கே போயிட்டா எத்தனையோ வழிகள் இருக்கும் பொழச்சுக்க.
அம்மா மறுபடியும் ஏதோ தீனமாகச்