Yaarodu Yaaro
By GA Prabha
()
About this ebook
நாம் இந்த உலகத்துக்கு வரும்போதே நம் வாழ்வின் சம்பவங்களையும் எழுதி வாங்கிக் கொண்டுதான் வருகிறோம். திருமணம் என்பது தெய்வம் நிச்சயிப்பது. நாம் அல்ல.
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்து விட்டான் இறைவன் அன்றே. இதைத்தான் இந்நாவல் விளக்குகிறது. உறவுகள் வேண்டும் என்பதற்காக தங்கை மகன் கௌதமை தன் மகளுக்கு மணமுடிக்க விரும்பும் அப்பா. சிவசுவை விரும்பும் சத்யா. இதில் யாருக்கு யார் என்பதே கதை.
Read more from Ga Prabha
Aasai Veedu Rating: 5 out of 5 stars5/5En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsVaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Yaarodu Yaaro
Related ebooks
Thagappan Sami Rating: 0 out of 5 stars0 ratingsOru Kurangu Ammavagirathu Rating: 0 out of 5 stars0 ratingsRatnavagiya Naan Rating: 0 out of 5 stars0 ratingsVanna Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsநான் இருந்தேன்... உன் ஞாபகமாய்... Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukkenna Veli? Rating: 5 out of 5 stars5/5Vazhithunai Rating: 0 out of 5 stars0 ratingsThavamirunthean! Varam Tharuvai… Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Nijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Ilavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsLinga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumanaval Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Sila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsசெவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsSevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsNee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Nesam Rating: 0 out of 5 stars0 ratingsVinnaivittu Vaa Kanne Rating: 0 out of 5 stars0 ratingsAnnachima Rating: 0 out of 5 stars0 ratingsவிண்ணைவிட்டு வா கண்ணே..! Rating: 0 out of 5 stars0 ratingsThodarum Iniya Uravu Rating: 0 out of 5 stars0 ratingskannak Kathuppil Oru Kavithai Rating: 5 out of 5 stars5/5Varum Kaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratings...Endral Aval Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Yaarodu Yaaro
0 ratings0 reviews
Book preview
Yaarodu Yaaro - GA Prabha
https://www.pustaka.co.in
யாரோடு யாரோ
Yaarodu Yaaro
Author:
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
என்னுரை
இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.
புஸ்தகா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாசிப்பதில் ஆர்வம் உடையவர்களுக்கு புஸ்தகா அளவற்ற பரிசுகளை அள்ளி வழங்குகிறது. காலத்தால் அழிக்க முடியாதபடி, அனைத்து நூல்களையும் டிஜிடல் செய்வதன் மூலம் எழுத்தாளர்களுக்கு இறவாத் தன்மையையும், புகழையும் தந்து விடுகிறது. டிஜிடல் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் எழுத்துக்கள்.
இதைத் திறம்பட, நேர்மையாகவும், சிரத்தையாகவும் செய்து வரும் திரு ராஜேஷ் அவர்களுக்கும், அவருடைய குழுவினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
யாரோடு யாரோ என்ற இந்த நாவல் பெண்மனியில் வெளியானது. நாம் இந்த உலகத்துக்கு வரும்போதே நம் வாழ்வின் சம்பவங்களையும் எழுதி வாங்கிக் கொண்டுதான் வருகிறோம். திருமணம் என்பது தெய்வம் நிச்சயிப்பது. நாம் அல்ல.
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்து விட்டான் இறைவன் அன்றே. இதைத்தான் இந்நாவல் விளக்குகிறது. உறவுகள் வேண்டும் என்பதற்காக தங்கை மகன் கௌதமை தன் மகளுக்கு மணமுடிக்க விரும்பும் அப்பா. சிவசுவை விரும்பும் சத்யா. இதில் யாருக்கு யார் என்பதே கதை.
நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் இந்தப் பிரபஞ்சம் நமக்கு நல்லதே செய்யும் என்பதே மாறாத உண்மை. அந்த நம்பிக்கையுடன் நடந்தவர்கள் ஜெயித்த கதை.
வழக்கம் போல் இந்நாவலையும், என்னை இப்பூமிக்குக் கொண்டு வந்த என் பெற்றோர்களுக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வை உணர்த்தி, வழிகாட்டிய என் குரு மகான்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.
தொடர்ந்து சிறப்பான நாவலை எழுத, எனக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கும் பெண்மணி நாவல் நிறுவனத்திற்கும், ஈ புத்தகமாக சிறப்பாக என் நாவல்களைப் பதிப்பிக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
படியுங்கள். படித்து உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் தர வேண்டுகிறேன்.
ஸ்ரீ மகாபெரியவா, சாய்ராம் கருணையால் அனைவரும் நலமோடு வளமோடு வாழ வேண்டுகிறேன்.
நன்றி,
அன்புடன்,
ஜி.ஏ. பிரபா.
Mobile: 9486572227
1
கோலம் அழகாய் இருந்தது...
சின்னச் சின்ன வண்ண மீன்கள் துள்ளிக் குதிக்க நடுவில் அழகான ஒரு அன்னப் பறவை, கம்பீரமாய் கழுத்தை திருப்பிப் பார்த்தது. சத்யா சின்ன சாணி உருண்டையில் பரங்கிப்பூ சொருகி அதன் கொண்டையில் வைத்து, தூர நின்று அழகு பார்த்தாள்.
பச்சை, சிவப்பு, வெள்ளை என்று அழகழகான வண்ணங்கள் கோலத்தை இன்னும் அழகாக்கிக் காட்டியது. விலகி தூர நின்று கோலத்தை ரசித்தாள். எதிர் வீடு, அவள் வீட்டு வராந்தாவில் எரிந்த விளக்குகள் கோலத்தின் மீது பட்டு வர்ண ஜாலம் காட்டியது.
மார்கழி காலை நேரக் குளிர் எலும்பை உருக்கியது. போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி குளிர் குத்தியது. என்றாலும் ரசித்து, ரசித்து கோலத்தை அழகு படுத்தினாள் சத்யா. அந்த நேரத்திலும் மாரியம்மன் கோவிலில் அதிகாலை பூஜை ஆரம்பித்து விட்டது. அந்தத் தெருவில் உள்ளவர்கள் சால்வை, ஸ்வெட்டர் என்று போர்த்திக் கொண்டு கோவிலை நோக்கி படை எடுத்தார்கள்.
சத்யா நீ வரலியா?
எதிர் வீட்டு பத்மா மாமி.
இன்னைக்கு என்ன பிரசாதம் மாமி?
அவல் உப்புமான்னு நேத்து சொர்ணா சொல்லிட்டிருந்தா. அவ கட்டளை இன்னைக்கு.
போங்க மாமி. எனக்கு அவல் உப்புமா பிடிக்காது.
நல்லாச் சொல்லு. யாருக்குத்தான் அவல் உப்புமா பிடிக்கும்?
மாமியின் கணவர் சபேசன் பின்னாடியே வந்தார்.
சகிக்கலை. கோவிலுக்கு வரது அம்மனைப் பாக்கவா? பிரசாதம் சாப்பிடவா?
பிரசாதம் சாப்டுண்டே அம்மனைத் தரிசனம் செய்ய.
இது நல்ல பதில்?
அம்மாடி சத்யா, நீ இந்தக் கோலங்களை சிஸ்டத்துல போட்டு இங்க காப்பி பேஸ்டா?
பேங்கர் ராமன் வந்தார்.
அதெப்படி? இதெல்லாம் கடைல விக்கிற புஸ்தகத்தைப் பார்த்து பழகறது.
அப்போ நீ வேலைக்குப் போற இடத்துல இந்தக் கோலம் போடறதைத்தான் செய்யறியா?
பாத்தீங்களா? உலை வைக்கறீங்களே?
சத்யா சிரித்தாள்.
எங்க? அரிசி வேக மாட்டேங்குதே.
சபேசன்.
இப்போ உனக்கு எந்த அரிசி வேணும்?
ராமன்.
சத்யா கல்யாண அரிசி.
அரிசிக் கடைல சொன்னா அவன் அந்த பிராண்டு தரான்
சத்யாவின் அப்பா வாசுதேவன் வெளியில் வந்தார்.
ஆச்சு, தத்துவமேதை வந்துட்டான். வாப்பா ஓஷியோகி
ராமன்.
அது யாரு ஓஷியோகி?
யாருக்குத் தெரியும். எதோ வாய்க்கு வந்த பெயர். ஜென் குரூ.
இப்ப நான் என்ன செய்யணும்? தரை குனிஞ்சு வணங்கனுமா?
வேண்டாம், வேண்டாம். உன் தொப்பைக்கு தொந்தரவு வேண்டாம்.
நானும் என்னென்னவோ செய்யறேன். இந்தத் தொந்தி மட்டும் குறையவில்லை.
அப்பா வருத்தத்துடன் பேசினார்.
தொந்தி குறையனும்னு நினைச்சா மட்டும் போதாது. எக்ஸசைஸ் செய்யணும், சாப்பாட்டுல அதிக எண்ணெய், கொழுப்பு கூடாது.
அதைச் சொல்லுங்க. சாயந்திரம் கடைக்கு எதிர்ல பஜ்ஜி, போண்டா வாங்கித் தின்னா? நைட் எப்பவும் தோசை, தேங்காய் சட்னிதான் வேணும்.
அம்மா தங்கம் வாசலுக்கு வந்தாள்.
இன்னைக்கு என்ன குறை தீர்க்கும் நாளா?
சத்யா குறுக்கே புகுந்தாள்.
அப்பாவை குறை சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கமே வராது.
உங்கப்பாவைச் சொன்னா உனக்கு ஆகாதே.
அப்பா சின்னச் சிரிப்புடன் அவள் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு படி இறங்கினார்.
கோவிலுக்கு போய்ட்டு அப்படியே வாக்கிங் முடிச்சுட்டு, காய்கறி வாங்கிட்டு வரேன்.
என்ன காய்னு சொல்லிட்டா, நான் ரெடி பண்ணுவேன்.
தங்கம்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட். உருளை, வெங்காயம் போட்டு சாம்பார். லெமன் ரசம்.
அப்பா நடந்தார்.
ஏற்கனவே உடம்புல கொழுப்பு அதிகம். இதுல சாப்பிடற எல்லாமே கொழுப்பு.
தங்கம் புலம்பினாலும், அப்பாவுக்கு பத்து மணிக்கு சுடச்சுட அவர் கேட்டது டைனிங் டேபிள் மேல் இருக்கும். அவரின் ருசி, பசி அறிந்து செயல்படும் அம்மாவின் பேச்சில் அப்பாவின் மீதான அக்கறைதான் இருக்கும். சாப்பிட்டதும் சுக்கு போட்டு வெந்நீர். இரவு படுக்கும்போது பூண்டு தட்டிப் போட்டு பால் சுடச்சுட.
நாள் பூரா சாப்பிடறது எண்ணெய் பலகாரங்கள்
என்பாள் அம்மா.
காலையில் அண்ணா சீக்கிரம் எழுந்து டவுன்ஹால் போய் கடை திறந்து விடுவான். ஒன்பதரை மணிக்கு அப்பா சாப்பிட்டு கடைக்குப் போனதும், அண்ணா வீட்டுக்கு வந்து குளித்து, அவனும் சாப்பிட்டு தன் ஆடிட்டர் அலுவலகம் இருக்கும் ஆர்.எஸ். புரம் போய் விடுவான். அதுவரை அவன் மனைவி மைதிலி அங்கு இருப்பாள்.
சத்யாவுக்கு ஐடி பார்க்கில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை. அவளும் ஒன்பது மணிக்குக் கிளம்பி விடுவாள்.
"நீங்க கிளம்பினாத்தான் எனக்கு