Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eppadi Kolvenadi
Eppadi Kolvenadi
Eppadi Kolvenadi
Ebook110 pages1 hour

Eppadi Kolvenadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580128404969
Eppadi Kolvenadi

Read more from Vedha Gopalan

Related to Eppadi Kolvenadi

Related ebooks

Related categories

Reviews for Eppadi Kolvenadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eppadi Kolvenadi - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    எப்படி கொல்வேனடி

    Eppadi Kolvenadi

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    முன்னுரை

    கல்லூரிக் காலத்தில் ‘ஆசிரியர் கடிதம்... அரசு பதில்களுக்கு’ என விளையாட்டாய் ஆரம்பித்தது. கல்லூரி லைப்ரெரியில் அமர்ந்து எழுதிய நாட்கள் பொன்னாட்கள்.

    முதல் கடிதம், கேள்வி பதில் பகுதியில் முதல் கேள்வி, முதல் சிறுகதை முதல் நாவல் எல்லாமே எனக்கு எஸ்.ஏ.பி. சார் காலத்துக் குமுதம் அலுவலகத்திலிருந்து வந்தவை.

    எழுதிய முதல் சிறுகதையையே அச்சில் பார்ப்பது பெரிய சந்தோஷம். இப்படி நேர்வதால் அதன் அருமை தெரியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். என்னைச் சுற்றி எல்லோரும் கதைகள் திரும்பி வருவது பற்றி வருந்துவதைப் பார்த்திருக்கிறேன். நான் எழுதியவற்றிலும் பல திரும்பியதுண்டு.

    நண்பராயிருந்த திரு. கோபாலன் கணவரானார். எழுத்தாளர்கள்... பத்திரிகை... கதைகள்... இலக்கியக் கூட்டங்கள்... இவையே எங்கள் உலகம்!

    திருமணமானவுடன் விகடன் பொன்விழா வந்ததனால் தேன்நிலவை ஒத்திப்போட்ட தம்பதி உலகிலேயே நாங்கதான்!! திரு. கோபாலன் குமுதத்தில் சேர்ந்த பிறகு எல்லோரும் என் கதைகள் வாரா வாரம் வரும் என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட்டார்கள். அதெல்லாம் இல்லை. பத்திரிகை நடத்துபவர்களுக்கு அதன் விற்பனை முக்கியம்! மற்றவர்களைப் போலவே நானும் நடத்தப்பட்டேன். மற்றவர்களுக்குத் தபாலில் கதை திரும்பி வரும். எனக்கு இவரின் கையிலேயே கொடுத்து விடுவார்கள்! அதுதான் அது அதிகப்படி சலுகை.

    இன்னும் கேட்டால் அப்போது குமுதம் போட்டியில் நான் கலந்து கொண்டு பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்குப் பரிசு தரக் கூடாது என்று திரு எஸ்.ஏ.பி. அவர்கள் சொல்லிவிட்டாராம்! அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு ஆயிரம் பரிசுகளுக்கு சமம்! அலுவலகத்திற்கு வரலையே தவிர அவங்களும் குமுதத்திற்காக வேலை பார்க்கறவங்கதானே! நம் ஸ்டாஃப் கலந்துக்கக் கூடாதுன்னு புதி விதிமுறை இருக்கே. என்றாராம்!

    மாலைமதியில் என் முதல் நாவல் 1980ல் வெளியானது! ஒரு சமயம் ஒரு திருமணத்தில் திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது அவர் சொன்னது, நாங்க ரொம்ப ஆச்சர்யப்பட்டோம். கிரைம் கதைகள், நகைச்சுவைக் கதைகள், த்ரில்லர், டிராமா, கடிதக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், குறிப்பாகக் கல்லூரிக் கதைகள் எல்லாமே நீங்க எழுதறதை கவனிச்சோம். பல ரகங்கள் எழுத முடிவதால் வயது இவ்ளோ குறைவா இருக்கும்னு நினைக்கலை. எழுத்தில் அனுபவ முதிர்ச்சி இருக்கு என்றார். ஆம்! நான் எழுத ஆரம்பித்தபோது வயது 23தான்! பிறகு விரிவாக்கிக் கொள்ள வைத்தான் இறைவன்.

    குமுதத்தில் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்று ரா.கி.ர. வாரா வாரம் அட்டகாசமான தொடர் எழுதினார். எடிட்டர் திரு. எஸ்.ஏ.பி. யின் ஆணைப்படி அதைப் படித்த பலரும் கதை எழுதுவது எப்படி என்று அவர் ஏன் ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கக் கூடாது என்று கேட்டார்கள்! ஆரம்பித்தார். (எ.க.எ.) அதில் முதல் மாணவியாகச் சேர இரு இருந்த என்னை நிராகரித்துவிட்டார்! "நீங்கதான் மேடம் என் பக்க அசிஸ்டென்ட்டா இருக்கப் போறீங்க’ என்றார்!

    பயிற்சிகளுக்காக மாணவர்கள் பல கதைகள் அனுப்புவார்கள்.

    பயிற்சிக் கதைகளை என் கணவரிடம் கொடுத்தனுப்பி விடுவார்! ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கத்துக்கு நான் மாணவருக்கு விளக்கம் டைப் செய்து தர வேண்டும்! அந்தக் கதையின் குறை நிறைகளையும் அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் சொல்ல வேண்டும்! அது மட்டுமல்ல! அந்தக் கதையின் சுருக்கத்தை 3... 4… வரிகளில் எழுதி ஆர்.கே. ஆர் சாருக்கு அனுப்ப வேண்டும். (கிட்டத்தட்ட கதையே புதிதாகிவிடும்!) இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால்... அந்த மாணவர்களில் பலர் நல்ல எழுத்தாளர்கள்! ஏற்கெனவே பிரபலங்கள்! இந்தப் பயிற்சி எனக்குத்தான் மிக உதவியது!

    திரு. எஸ்.ஏ.பி. திரு. ரா. கி ரங்கராஜன், திரு. ஜ.ரா. சுந்தரேசன், திரு. புனிதன் ஆகியோரின் பாசறையில் பயின்றதாலோ என்னவோ அடுத்து சாவி பத்திரிகையின் அன்புக்குப் பாத்திரமானேன்.

    வேதா கோபாலன்

    வாழ்த்துரை

    ஓரிலக்கியப் படைப்பாளிக்குப் படைப்பாற்றல், இயற்கையிலேயே அமைகிறது. பின்னர், கூர்ந்து கவனித்தல், சிந்தித்தல், கற்பனை வானில் சிறகு விரித்துப் பறத்தல் முதலிய சில குணைக் கருவிகளால் அவ்வாற்றல் மெருகேற்றப்படுகிறது. ஒரு பின்னணியை அடையாளங்கண்டபின், அதற்குத் தொடர்புள்ள (உண்மையான அல்லது கற்பனைப்) பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம், அப்பாத்திரங்களோடு தன்னையும், (படிப்பவர்களையும்) ஐக்கியப்படுத்தும் வகையில், அசாதாரணமான சில திருப்பங்களோடு, அக்கருவை வளர்த்து, நிகழ்வுக்கேற்ற சொற்கோர்வைகளால் இயல்பாக வெளிப்படுத்துவது ஆகிய திறமைகள் அவர்களோடு இரண்டற ஒன்றியவையே எனலாம்.

    இலக்கியங்கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்... என்று நன்னூலாசிரியர் ஒரு சூத்திரத்தில் கூறுவார். இலக்கியம் பயின்றவர்க்கு இலக்கணம் எளிதில் கைவரும். இலக்கணப் புலமை பெற்று இலக்கியத்தில் கைவைக்கும் பொழுது, அப்படைப்பின் உயிரோட்டம் பாதிக்கப்படலாம்!" (யாப்பருங்கலக்) காரிகை கற்றுக் கவிபாடுவது, கடினமான பாதை என்பது சான்றோரே வெளியிட்ட கருத்தாகும். ஒரு கவிதையின் வெளிப்பாடு உணர்வுகளின் உந்துதலால் இயல்பாகவே நிகழ வேண்டும்! இது சிறுகதை நவீனம் முதலிய துறைகட்கும் பொருந்தும். ஒருவித மனவெழுச்சியே ஒரு படைப்பாளியின் விளைபொருளாகப் பரிணமிக்கிறது. அத்தகைய படைப்புகளே சிறந்தவையாகவும், வாசகர்களால் கொண்டாடப் படுவனவாகவும் இருக்கும்!

    அவ்வகையில், திரு பாமாகோபாலன், திருமதி வேதா கோபாலன் ஆகிய ‘இல்வாழ்விலும், இலக்கியப் படைப்புப் பயணத்திலும் இணைந்த’ இவ்விரட்டை எழுத்தாளர்களின் சாதனைகள் பாராட்டுக்குரியவை.

    இனிய நண்பர் திரு. பாமாகோபாலன் அவர்கள் சென்னை அ.ம. சமணக்கல்லூரியில் இளநிலை அறிவியில் பயில, எனக்கு ஓராண்டுக்குப் பின் சேர்ந்தார்கள். அப்பொழுது (1960ல்) தான்

    Enjoying the preview?
    Page 1 of 1