Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madhavan Innum Varavillai...
Madhavan Innum Varavillai...
Madhavan Innum Varavillai...
Ebook84 pages25 minutes

Madhavan Innum Varavillai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.

பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம் ஐடியில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.

1963 ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்‘ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580128505192
Madhavan Innum Varavillai...

Read more from Bhama Gopalan

Related to Madhavan Innum Varavillai...

Related ebooks

Reviews for Madhavan Innum Varavillai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madhavan Innum Varavillai... - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    மாதவன் இன்னும் வரவில்லை...

    Madhavan Innum Varavillai…

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உயிலிலே ஓர் இடிபாடு

    என்ன கேட்டீர்களா?

    சனிக்கிழமை மத்தியான வேளையில்!

    ஆறுதல் கூறுவது நளினா

    கசப்பிலே இனிப்பு

    மாதவன் இன்னும் வரவில்லை...

    காதலுக்கு ஒரு டெபாஸிட்!

    குரல் இனிது

    அப்பா வரக் கூடாது!

    கட்டில் பிரச்னை

    இரண்டு பதில்கள்

    வீண்

    தொண தொண

    மனதில் தங்க வேண்டிய கதை

    அசத்தல்

    கல்யாணத்துக்கு முன்னாடியே...

    நிறுத்து, கல்யாணத்தை!

    பாம்புக்கு பால்!

    சிரிக்க வேண்டும்

    ஆபாச சுவரொட்டிகள்

    கொண்டு வா அப்பா

    என்னவோ நடக்கப் போகிறது

    உருப்படியான காரியம்

    ஒற்றைச் செருப்பு

    சலனம்

    பொய்! பொய்!

    பஸ் ஏறிவந்த வட்ட நிலா!

    என்ன கண்ணாடி இது!

    சிபாரிசு

    முன்னுரை

    பல வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடனில் 'சசி' என்ற பெயரில் ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாகி வந்தன. பிறகு காலப் போக்கில் வாரப் பத்திரிகைகளில் அவ்வப்போது ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாயின. அவற்றைப் படிக்கும்போது மனதில் 'நாமும் எழுதிப் பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது.

    பல பத்திரிகைகளில் படித்துப் பார்த்து, தனித்தாளில் அந்தக் கதைகளில் உள்ள சிறப்பு அம்சங்களைக் குறித்துக் கொண்டேன்.

    குறைவான, செறிவான வர்ணனை, சொற் சிக்கனம், ஆரம்ப வரியிலேயே வாசகரை ஈர்க்கும் தன்மை, முடிவை நோக்கி வேகமாக ஓடும் கதைப்போக்கு, வாசகர் எதிர்பார்க்கும் முடிவுக்கு மாறாக ஒரு முடிவுடன் கதை இருக்க வேண்டும் என்ற உறுதி, ஆரம்ப காலத்தில் இரண்டு பக்கங்களுக்குக் கதை ஓடிவிடும்; மறுபடியும் ஒரு வாசகனாகப் படித்து, அனாவசிய வாக்கியங்களை, சொற்களை நீக்கிவிட்டு, மறுபடியும் செப்பனிட்டுத் திருத்தி, எழுதி, திருப்தியுடன் தபாலில் சேர்க்கும் பொறுமை தேவையாயிருந்தது!

    ஆனால், கதை பிரசுரமான பிறகு, கிடைக்கும் விமர்சனங்கள் நச் என்றிருக்கும்! அமரர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள் ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசும் போது சொன்னார்:

    நாவல் எழுதுவது ஒரு பெரிய வீட்டில் உலவுவது போன்றது; சிறுகதை என்பது ஓர் அறையில் நடப்பது போன்றது

    ஒரு பக்கத்தில் எழுதுவது என்பது ஓர் அறையின் ஒரு மூலையில் குழந்தை இருப்பது போன்றது என்று சொல்லலாமா?

    இரண்டு, மூன்று பக்கங்களில் கதைகள் எழுதும்போது கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றி எழுத முடியும்; தேவையும்கூட

    ஆனால் ஒரு பக்கக் கதைகளில், வர்ணனைகள் வாக்கியங்களில் இருக்க முடியாது; வார்த்தைகளில் இருந்தால் நல்லது.

    திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்கள் ஒரு பேட்டியின் போது சொன்னது முக்கியமானது.

    நான், காருக்காக சபா வாசலிலோ, அகாடெமி வாசலிலோ, ஏன் வெளியூர் பயணங்கள் போது சில சமயங்களில் பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது பெரிய கதைகளைப் படிக்க முடிவதில்லை. ஒரு பக்க கதைகளை சட்சட் என்று படிக்க முடிகிறது! சினிமா தயாரிப்பாளர்களுக்கு, சினிமா கதை எழுதுபவர்களுக்கு குட்டி குட்டி ஐடியாக்கள் கிடைப்பது ஒரு பக்கக் கதைகள் மூலம்தான். பிறகு அதை டெவலப் செய்வது அவர்கள் சாமர்த்தியம்!

    எனது முதல் கதை 1963ல்

    Enjoying the preview?
    Page 1 of 1