Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ival Ippadithan
Ival Ippadithan
Ival Ippadithan
Ebook95 pages33 minutes

Ival Ippadithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஆபீஸ் சென்று சம்பாதித்து, குடும்பம் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெண்களும் நன்கு படித்து வேலைக்குச் செல்லும் அடுத்த கட்டம் வந்தது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், பெண்கள் சைக்கிள் ஓட்டுவதே பெரிய செய்தியாக இருந்தது. அதனாலேயே அவர்கள் புடவை கட்டிக் கொண்டு வசதியாக ஓட்டுவதற்கென்றே சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டன.

இப்படிப்பட்டச் சூழ்நிலைகளில் பெண்கள் ஸ்டெனோ வேலைக்கும், டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்கும், போய் வீட்டிற்குச் சம்பாதித்து வரும் நிலை வந்தது.

பிறகு படிப்பு விஷயத்தில் அபார முன்னேற்றம் வந்து, ஆண்களுக்கும் சரிசமமானவர்கள் - ஏன்? - அதற்கு மேலும் படிப்பும், பட்டங்களும், விருதுகளும் பெற்று வெவ்வேறு உயர்ந்த வேலைகளில் ஜொலிக்கத் தொடங்கினர். இப்போது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பதைக் கண்கூடாக் கண்டு வருகிறோம்.

வேலைக்குப் போகும் பெண்களின் திருமண விஷயங்களில் எப்படியெல்லாம் திண்டாடுகிறார்கள்; காதல் சமாசாரங்களுக்கு ஆபீஸ் செல்லும் பெண்களுக்கு எப்படியெல்லாம் வாய்ப்புகள் அமைகின்றன; அவசரப்பட்டு முடிவு எடுக்கும் பெண்கள் - காதல் விஷயங்களினால் தங்கள் திருமண விஷயங்களில் தானாகவே முடிவெடுக்கிறார்கள். பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்காமல் பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதித்துத் திண்டாடுகிறார்கள்

இது போன்ற சூழ்நிலைகளைப் பின்னணியாகக் கொண்டு அந்தக் கால கட்டத்திற்கு ஏற்றபடி எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

- பாமா கோபாலன்

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580128505159
Ival Ippadithan

Read more from Bhama Gopalan

Related to Ival Ippadithan

Related ebooks

Reviews for Ival Ippadithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ival Ippadithan - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    இவள் இப்படித்தான்!

    Ival Ippadithan!

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வெறும் கோடுகள்

    தேவை ஒரு வேஷம்

    சகிக்க முடியாத டை!

    புஷ்பா ஒரு தப்பிஸ்ட்

    கண்ணோடு கண்...

    உதவி

    வழி மறித்தவன்

    கெலித்தது அவள் தான்

    மங்களம் எப்போ...?

    ஆக மொத்தம்...

    டோக்கன்

    பேட்டிக்குப் போன இடத்தில்...

    இன்னொரு பத்மினி

    ஏமாற்றிவிட்டானே பாவி!

    ஆபீஸர்தான் என்றாலும்...

    ஜகதா! இவள் ஒரு மாதிரி

    இவள் இப்படித்தான்!

    மூன்று மணி

    இவளும் வேலைக்குப் போய்...

    முன்னுரை

    ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஆபீஸ் சென்று சம்பாதித்து, குடும்பம் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெண்களும் நன்கு படித்து வேலைக்குச் செல்லும் அடுத்த கட்டம் வந்தது.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், பெண்கள் சைக்கிள் ஓட்டுவதே பெரிய செய்தியாக இருந்தது. அதனாலேயே அவர்கள் புடவை கட்டிக் கொண்டு வசதியாக ஓட்டுவதற்கென்றே சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டன.

    இப்படிப்பட்டச் சூழ்நிலைகளில் பெண்கள் ஸ்டெனோ வேலைக்கும், டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்கும், போய் வீட்டிற்குச் சம்பாதித்து வரும் நிலை வந்தது.

    பிறகு படிப்பு விஷயத்தில் அபார முன்னேற்றம் வந்து, ஆண்களுக்கும் சரிசமமானவர்கள் - ஏன்? - அதற்கு மேலும் படிப்பும், பட்டங்களும், விருதுகளும் பெற்று வெவ்வேறு உயர்ந்த வேலைகளில் ஜொலிக்கத் தொடங்கினர். இப்போது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பதைக் கண்கூடாக் கண்டு வருகிறோம்.

    வேலைக்குப் போகும் பெண்களின் திருமண விஷயங்களில் எப்படியெல்லாம் திண்டாடுகிறார்கள்; காதல் சமாசாரங்களுக்கு ஆபீஸ் செல்லும் பெண்களுக்கு எப்படியெல்லாம் வாய்ப்புகள் அமைகின்றன; அவசரப்பட்டு முடிவு எடுக்கும் பெண்கள் - காதல் விஷயங்களினால் தங்கள் திருமண விஷயங்களில் தானாகவே முடிவெடுக்கிறார்கள். பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்காமல் பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதித்துத் திண்டாடுகிறார்கள்

    இது போன்ற சூழ்நிலைகளைப் பின்னணியாகக் கொண்டு அந்தக் கால கட்டத்திற்கு ஏற்றபடி எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

    என்ன ஒரு தமாஷ் என்றால்

    இத்தொகுப்பில் வாசகர்கள், 'அட! நம்ம ஆபீஸில் கூட இதுமாதிரி நடந்திருக்கிறதே' என்று வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும், மனதில் எண்ணங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்!

    ஆபீஸ் வேலை நேரத்தில் படிக்காமல், மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சினேகிதர்கள், சினேகிதிகளுடன் படித்துப் பகிர்ந்து கொள்ளலாமே?

    Food for thought

    பிரியமுடன்

    பாமா கோபாலன்

    *****

    வாழ்த்துரை

    பொதுவாக ஓர் ஆண் மட்டும் எழுத்தாளராக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அல்லது ஒரு பெண் எழுத்தாளராக இருப்பார். அப்படிப்பட்ட நிலையில் என் மனைவிதான் என் முதல் வாசகி என்று அந்தக் கணவரோ, என் கணவர்தான் என் முதல் வாசகர் என்று அந்த மனைவியோ, சொல்வதைக் கேட்டிருக்கிறோம். படித்துவிட்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள்.

    அப்படிப்பட்டவர்களுக்கு முதலில் தலைதூக்குவதே ஈகோ தான். இந்தக் கணவர் அல்லது மனைவிக்கு ‘தான்தான் உசத்தி' என்ற எண்ணம் இயல்பாக வந்துவிடும்.

    ஆனால் திரு. (பாமா) கோபாலனும் திருமதி வேதா கோபாலனும் ஒரே துறையில் இருப்பது, அவர்களின் ஈகோவை வளர்க்காமல், புரிதலை அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்தான். ஒரே துறையில் இருப்பது மட்டுமின்றி ஒரே பத்திரிகைக்காகவும் இருவரும் பணியாற்றினார்கள்.

    இவர்களிடம் பேசும்போதும் இருவரிடமுமே ஈகோ என்பது கடுகு சைஸில் கூட இல்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். இருவருமே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சிலாகிப்பதைக் கேட்டிருக்கிறேன். இருவருக்குள்ளும் மாற்றுக் கருத்தே (difference of opinion) வந்ததில்லை.

    இதையெல்லாம் விட இருவரின் எழுத்தையுமே வாசகர்கள் சரிசமமாக மதிப்பதையும் கவனிக்கிறேன். இவருடைய எழுத்துக்களை எந்த அளவு வரவேற்கிறார்களோ அதே அளவு அவருடைய எழுத்துக்களையும் வரவேற்கிறார்கள். அவ்வளவு ஏன்! நானே அப்படித்தான்.

    இவர்களுடைய எழுத்துக்களில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத fantasyயெல்லாம் இருக்காது. இருவரின் எழுத்திலுமே யதார்த்தத் தன்மையைப் பார்த்திருக்கிறேன். அன்னியத்தன்மை இருக்காது. தினசரி நிகழ்வுபோல் இருக்கும். இதைப் படிப்பவர்கள் 'அட எங்க வீட்லயும் இது மாதிரி நடந்திருக்கே' என்று யோசிப்பார்கள்.

    இதற்கு முக்கியக் காரணம் என்று எனக்கு என்ன தெரியுமா தோன்றியது? வேதா கோபாலன் ஓர் அனுபவமிக்க ஜோதிடர். அந்த வகையில் தினசரி பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பவர். அவர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளவும் நடை உடை பாவனைகளைக் கூர்ந்து கவனிக்கவும் முடியும்.

    எனினும் கேட்டவற்றையும்,

    Enjoying the preview?
    Page 1 of 1