Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachaikili
Pachaikili
Pachaikili
Ebook115 pages43 minutes

Pachaikili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.

பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம் ஐடியில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.

1963 ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்‘ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580128505383
Pachaikili

Read more from Bhama Gopalan

Related to Pachaikili

Related ebooks

Reviews for Pachaikili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachaikili - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    பச்சைக்கிளி

    Pachaikili

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    குப்பம் முழுக்க, கடை விரித்து, குடங்கள் குழுமியிருந்தன. அரிசிக்கும் பருப்புக்கும் ஆலாய்ப் பறப்பதிற்கிடையில் இன்றைய மார்க்கட் தண்ணீருக்கு. மற்ற பொருள்களெல்லாம் காசு கொடுத்தால் கிடைத்துவிடுவதிற்கு உத்திரவாதம் இருந்தது.

    ஏற்கனவே 'மணம்' - குணம் - காரம் நிறைந்த பெண்கள் பிசிறின முடியும், எண்ணெய் வழியும் முகமும் காவி பற்களுமாய் தண்ணி லாரிக்கு காத்திருக்கும் போது தூரத்தில் ஹாரன் ஒலிக்கவே வந்திருச்சு... வந்திருச்சு! என்று உஷாராயினர். அவரவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு குடங்களை எடுக்க, ஹாரனுக்கு சொந்தமான வாகனம் லாரியில்லை - வேன் என்பது புரியவே ஏமாற்றமாயிற்று.

    பாய்ந்து வந்த வேனிலிருந்து - கதர் - ப்ளஸ் - கதரும் கக்கத்தில் டைரியுமாய் இறங்கின தாமு எனும் தாமோதரன், டிரைவரிடம் ஒரு நிமிஷம் இப்படி ஓரங்கட்டும் என்று உத்திரவிட்டான். வேட்டி நுனியை டைரியோடு கக்கத்தில் செருகிக் கொண்டு பட்டையான அன்டர்வியர் தெரிய கூட்டத்தில் புகுந்து, இன்னும் வரலியா? என்று அதட்டினான்.

    இல்லே சாமி! நல்ல தண்ணி குடிச்சு நாலு நாள் ஆச்ச. நீங்களாவது மேலே சொல்லப்படாதா?

    மேலே சொல்லி பிரயோஜனமில்லை. மேலேயிருக்கற 'சாமி' மனசு வெச்சாதான் உண்டு. புரியலே? மழை! வருண பகவானை வேண்டிக்குங்க. வரவங்க போறவங்களை வேண்டியோ திட்டியோ பிரயோஜனமில்லை! அது போகட்டும்! எங்கே மாயாண்டி?

    கிழவி ஒருத்தி, ஃபுல்லா அடிச்சுட்டு குடிசையில் கிடக்கான்! என்றாள்.

    அந்த 'தண்ணி'க்கு பஞ்சமில்லை போல! கூப்பிடு அவனை! எனக்கு உடனே நூறு பேர் வேணும்!

    யார் ஆம்பளையா... பொம்பளையா...?

    ஆம்பளையா...? அவங்க எதுக்கு லாயக்கு? பொம்பளை தான். உடனே ரெடி பண்ணுங்க.

    எங்கே வரணும்?

    பாரீஸ்கார்னருக்கு வண்டி சொல்லியிருக்கேன். யார் யார் வரீங்கன்னு பேர் கொடுங்க!

    உடன் கும்பல், தண்ணீரை மறந்து நான் - நீ என்று முட்டி மோதிற்று. எவ்ளோ தருவீங்க?

    தலைக்கு நூறு!

    பத்தாது. மூணுவேளை சாப்பாடு. அப்புறம் ரெண்டு குடம் தண்ணியும் வேணும்!

    ஏய் யார்ரா அவன் அதிகபிரசங்கி! சாப்பாடு கேளு தரேன். தண்ணிக்கு எங்கே போறதாம்! தண்ணி வேணுமானா நிர்வாண நிகழ்ச்சி நடத்துங்க!

    என்ன விஷயங்க? மறியலா - கல்லெறியா... ஊர்வலமா?

    எல்லாமும் தான். போலீஸை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

    நேத்து - அவங்களுக்கு ஆதரவா ஊர்வலம் போனோமே!

    அது நேத்து. இது இன்னிக்கு! கேள்வி கேக்கக்கூடாது. வந்தோமா - சொன்னதை செஞ்சோமா காசு வாங்கினோமான்னு இருக்கணும்.

    கோச்சுக்காத சாமி! என்று கிழவி ஒருத்தி நாற்றத்துடன் அருகில் வந்து, வெறும் கோஷம் மட்டும் தானா இல்லை டான்ஸ் கூடவா...? என்றாள் - சேலையைச் சுருட்டினபடி.

    நல்லவேளை ஞாபகப்படுத்தினாய்! கொஞ்சம் 'அப்படியிப்படி' ஆடவேண்டியும் இருக்கும். அதுக்கு எக்ஸ்ட்ரா காசு வாங்கித் தரேன். இன்னும் அரை அவர்ல வண்டி வந்திரும்! என்று சொல்லிவிட்டு தாமு வேனிடம் வந்தான். கோஷம் போராட்டத்திற்கு ஆள் சப்ளை அவனது தொழில். அவனிடம் கட்சி - சாதிமத பேதமில்லை. எங்கும் எதிலும் இருப்பான். டைரியை கக்கத்தில் இறுக்கிக் கொண்டு வேட்டியை சரி பண்ணின போது அவனது செல்போன் அலறிற்று. ஹலோ! டைரி தாமு ஹியர்! என்றான் ராகத்துடன்.

    என்னது? எப்போ? கைதா? எத்தனை பேர் வேணும்? எங்கே? மணலியிலா... ஓ... யெஸ்! ஏற்பாடு பண்ணிடறேன்!

    போனை நிறுத்திவிட்டு திரும்ப மாயாண்டியிடம் ஓடிவந்து, இன்னிக்கு ஒங்களுக்கு செம யோகம்! இன்னும் முன்னூறு பேரை தயார் பண்ணு! மணலி தொழிற்சாலைல வேலை நிறுத்தமாம். அங்கே கைது நடக்கப் போகுதாம்! ஆம்பளைங்க போதும். வண்டில கல் பொறுக்கிப் போட்டுக்குங்க! ஜெயிலுக்குப் போகவேண்டி வந்தாலும் வரும்! என்று சொல்லிவிட்டு வண்டியில் தொற்றினான்.

    தொழிற்சாலையின் முகப்பில் கம்பெனி கொடிக்கு போட்டியாய் தொழிற்சங்க கொடிகள் நடப்பட்டிருந்தன. ரோடு முழுக்க காவலர்கள் இரும்பு தொப்பியும், லத்தியுமாய் காலை வெயிலுக்கு வியர்த்து விதியே என்று முணுமுணுப்பில்!

    ரோடின் மறுபுறத்தில் பந்தல் போடப்பட்டு தொழிலாளர்கள் டிபன் முடித்து வந்து தெம்பாய் கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு 'டீ காபி’யும் அத்துடன் வடையும் விநியோகமாகிக் கொண்டிருந்தது. ஸ்பீக்கரில் இடையிடையே அறைகூவல்கள். சினிமா பாடல்கள்!

    யூனியன் ஆட்கள் - காலில் சக்கரம் கட்டின மாதிரி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். காவலர் ஒருவரிடம் போய், உங்களை யார் அனுப்பிச்சது? என்றார் யூனியன் செயலாளர் முத்து.

    மேலதிகாரி.

    அது தெரியுது. அந்தாளுக்கு பேர் இல்லியா...?

    ஸாரி சார். எனக்கு எதுவும் தெரியாது. இங்கே கேரோ நடக்கப் போகுதுன்னும் – வரம்பு மீறினால் கைது பண்ணணும்னும் சொல்லி உத்திரவு.

    ஆவேச தொழிலாளி, எங்களை கைது பண்ணிருவியா... நீ? என்று சட்டையை சுருட்ட, முத்து ஏய்...! சும்மாயிரு! எய்தவர்களை விட்டுவிட்டு இவர்களை கோபித்து என்ன பண்றதாம்! என்று அடக்கினார்.

    போலீஸ்காரர்கள் விதியே என்று நின்றிருந்தனர். அவர்களை கவனிக்க ஆளில்லை. டீ - காபி வேணாம் - தண்ணீருக்குக்கூட அவர்களுக்கு வழியில்லை. அதிகாலையிலேயே அங்கு அனுப்பப்பட்டு வயிற்றில் கலவரத்தை அடக்கிக் கொண்டிருந்தனர்.

    காவலர் ஒருவர் முத்துவிடம் வந்து எத்தனை மணிக்கு ஆர்ப்பாட்டம்? என்று விசனப்பட்டார். "எதுக்காக வளர்த்தணும்? சட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1