Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aranmanai Kiliyum Hollywood Directorum!!
Aranmanai Kiliyum Hollywood Directorum!!
Aranmanai Kiliyum Hollywood Directorum!!
Ebook118 pages42 minutes

Aranmanai Kiliyum Hollywood Directorum!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதென்ன சரித்திரக்கதையா?

இல்லைங்க… இல்ல இல்ல... ஐயோ ஆமாங்க... ஆமாம்... சரித்திர நாவல்தான். ராஜா ராணி பல்லக்கெல்லாம் இடம்பெறுகின்றனரே... சமூகக் கதையா?

கட்டாயமா யெஸ்ஸூங்க. கதாநாயகி ஸ்டைலாய் ஆடி காரில் போனா அதை என்னன்னு சொல்லுவீங்களாம்

கிரைம் கதையா?

அதுவும் உண்டுங்க. அடி.... தடி.... பிளட்.... பேண்டேஜ்… கிளாஸ்களின் சிதறல்!

நகைச்சுவைக் கதையா?

நகைச்சுவைன்னு நினைச்சு நான் எழுதியதற்கெல்லாம் நீங்க நகைச்சு வைக்கணும்னு நான் என்ன கண்டிஷனா போட முடியும்? ஆனாலும் சிரிச்சுட்டீங்கன்னா… ஆமாங்க. நகைச்சுவைக் கதைதான்

ஆராய்ச்சிக் கதையா?

கண்டிப்பா யெஸ்ஸுங்க. இதில் கதை எங்கே இருக்கு என்று பூதக்கண்ணாடி வைச்சு ஆராய்ச்சி பண்றதால சொல்லலீங்க… சயன்டிஸ்டெல்லாம் வராருங்களே அதனால சொன்னேனுங்க.

ஆன்மிகக் கதையா?

பின்ன? அந்த ஆர்வம் உள்ளவங்களை ஏமாத்தலாமாங்க? அதனால கோயில்… ஓலைச்சுவடி எல்லாமும் வருங்க

அய்யய்ய... இப்ப எந்த வகைக்கதைன்னு சொல்ல வர்றீங்க?

உங்களுக்கு எந்த ஜானர் பிடிக்கும்? அந்த வகைக் கதைங்க. வர்ட்டடடா.

நீங்க வாங்க கதைக்குள்ளாற. இதோ கதவைத் திறந்துட்டோம்ல

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128504701
Aranmanai Kiliyum Hollywood Directorum!!

Read more from Bhama Gopalan

Related to Aranmanai Kiliyum Hollywood Directorum!!

Related ebooks

Related categories

Reviews for Aranmanai Kiliyum Hollywood Directorum!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aranmanai Kiliyum Hollywood Directorum!! - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    அரண்மனைக் கிளியும் கோலிவுட் டைரக்டரும்!!

    Aranmanai Kiliyum Hollywood Directorum!!

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை

    இதென்ன சரித்திரக்கதையா?

    இல்லைங்க… இல்ல இல்ல... ஐயோ ஆமாங்க... ஆமாம்... சரித்திர நாவல்தான். ராஜா ராணி பல்லக்கெல்லாம் இடம்பெறுகின்றனரே...

    சமூகக் கதையா?

    கட்டாயமா யெஸ்ஸூங்க. கதாநாயகி ஸ்டைலாய் ஆடி காரில் போனா அதை என்னன்னு சொல்லுவீங்களாம்

    கிரைம் கதையா?

    அதுவும் உண்டுங்க. அடி.... தடி.... பிளட்.... பேண்டேஜ்… கிளாஸ்களின் சிதறல்!

    நகைச்சுவைக் கதையா?

    நகைச்சுவைன்னு நினைச்சு நான் எழுதியதற்கெல்லாம் நீங்க நகைச்சு வைக்கணும்னு நான் என்ன கண்டிஷனா போட முடியும்? ஆனாலும் சிரிச்சுட்டீங்கன்னா… ஆமாங்க. நகைச்சுவைக் கதைதான்

    ஆராய்ச்சிக் கதையா?

    கண்டிப்பா யெஸ்ஸுங்க. இதில் கதை எங்கே இருக்கு என்று பூதக்கண்ணாடி வைச்சு ஆராய்ச்சி பண்றதால சொல்லலீங்க… சயன்டிஸ்டெல்லாம் வராருங்களே அதனால சொன்னேனுங்க.

    ஆன்மிகக் கதையா?

    பின்ன? அந்த ஆர்வம் உள்ளவங்களை ஏமாத்தலாமாங்க? அதனால கோயில்… ஓலைச்சுவடி எல்லாமும் வருங்க

    அய்யய்ய... இப்ப எந்த வகைக்கதைன்னு சொல்ல வர்றீங்க?

    உங்களுக்கு எந்த ஜானர் பிடிக்கும்? அந்த வகைக் கதைங்க. வர்ட்டடடா.

    நீங்க வாங்க கதைக்குள்ளாற. இதோ கதவைத் திறந்துட்டோம்ல

    1

    அன்று

    காலம் இரண்டாம் நூற்றாண்டோ பன்னிரண்டாம் நூற்றாண்டோ

    தேசம் : சேர சோழ தேசம் மூன்றும் இல்லை வேறு ஏதோ

    மன்னர்கள்: இரண்டாம் எலிகேசிக்குப்பின் வந்தவர்கள்

    அரண்மனையின் மெயின் என்ட்ரன்ஸில் கோலம் பிளஸ் கோலாகலம். இன்னும் கோகோ கோலா அறிமுகமாகாத நூற்றாண்டு என்பதால் கோகோ கோலாகலம் மட்டும் மிஸ்ஸிங்.

    எங்கே பார்த்தாலும் மரங்களும் பசுமையும் இருந்தாலும் யாரும் பச்சையாய்ப் பேசவில்லை. சூரியன் தகதகவென்றெல்லாம் மின்னவில்லை. சுள்ளென்று சுட்டது. வீடுகளையெல்லாம் விவரிக்க வேண்டுமானால் கூகிள் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். சரித்திர கால வீடுகளிள் புரியும்.

    அரண்மனையின் உள்ளே...

    ரொம்ப விவரிச்சா உங்களுக்கெல்லாம் கடுப்படிக்கும் என்பதால் நேராக அரச சபைக்குப் போய்விடுவோம். பார்வையாளர்களின் கிரிக்கெட் ஸ்டேடியம் மாதிரிக் கூட்டம். வண்ண வண்ணத் தோரணங்கள் அசைந்தாடின.

    சிம்மாசனம் (இவர் எலிகேசி என்பதால் எலியாசன டிசைன்) நான்கு எலிகள் தாங்கிப்பிடித்த டிசைனில் கம்பீரமாக ஜொலித்துக்கொண்டிருந்தது, அவற்றின் செழுமையைப் பார்த்து எலிகளா பெருச்சாளியா என்று கன்னியர் பேசிக்கொண்டனர்.

    அருகில் சாமரம் வீசுகிறேன் பேர்வழி என்று நின்றிருந்த சேடிப்பெண்கள் இளைஞர்களிடம் காதல் மொழி பேசிக்கொண்டிருந்தார்கள்.

    ராஜகுரு விராட கோலி சாமியார் தன் தாடியைப் பல முறை நீவிவிட்டுக்கொண்டிருந்தார். சில சமயம் அவருக்கே அது போரடித்தது. வேண்டுமென்றே தலைப்பாகையை அட்ஜஸ்ட் செய்து கொண்டார். அதைக் கழற்றி உச்சந்தலையைச் சொறிந்து கொள்ள வேண்டும்போல் வந்த அர்ஜென்ட் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டார். காலையில்தான் வீட்டில் பரணிலிருந்து எடுத்த புதுத் தலைப்பாகை. சிற்றெரும்போ கட்டெறும்போ இருக்குமோ என்று எடுத்து உதறியபோது அதன் சுருள் கலைந்துவிட்டது. ஒரு வழியாக மீண்டும் சரி செய்ததில் கடிகை மிகவும் துரித கடிகையாகிவிட்டது.

    கிளம்புமுன் பத்தினி (சரியாப்படிச்சீங்கதானே? பத்மினின்னு படித்துவிடவில்லையே?) யிடம் கேட்ட பாதாம்பருப்புக் கஞ்சி வருவதற்குள் கோபம் வந்துவிட்டது. ஜரிகைப்புடவை கலலகக்க அவள் உருண்டு வந்து, ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப்போன்று நீண்ட டம்ளரில் அதைக் கொண்டு வந்து இவர் வாங்கிய வேகத்தில் சிதறிவிட்டது... ஆடையின் மேல்.

    சட். கஞ்சி தருவதில் இவ்வளவு நேரமா? என்று கூறவும் புருவங்கள் நெளிந்து உயர, நம்பியார் பாவையை அவள் மீது வீசவும் நினைத்தவர் ஏற்கனவே சகிக்காத மதியச் சாப்பாட்டில் மேலும் ஏதாவது கோளாறு செய்துவிடுவாளோ என்று அஞ்சி ஓர் அசட்டுச் சிரிப்பை விசிறினார்.

    பாரவாயில்லை. ஆடைகளுக்கு இன்று கஞ்சி போடவில்லையே. மிடுக்குக் குறையுமே என்று அஞ்சிய எனக்கு நான் கெஞ்சாமலேயே மிதமிஞ்சிய கஞ்சியை அளித்தாய் அஞ்சுகம் போன்ற வஞ்சியே. என்று இளிப்பாகச் சொல்லி, தன் கவிதைத் திறமையை மிஞ்ச யாருமில்லை என்று மனசுக்குள் முதுகில் ஷொட்டு கொடுத்துக்கொண்டார். ஏனெனில் மெச்சவும் யாருமில்லையே.

    தன் மேலங்கியில் ஒட்டியிருந்த பாதாம் துண்டு ஒன்றை ஒற்றைவிரலால் தொட்டு வாயில் போடுவதற்குள் அதனுடன் இருந்த முந்திரி முந்திக்கொண்டு அவரின் தாடிக்குள் அவசரமாய் மறைந்துவிட்டது. என்ன ஏமாற்றம்! ஆடைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதற்குள் இத்தனை ஸ்பீட் பிரேக்கர்களா என்ற விசனத்துக்கு விடை கொடுத்து (அதென்ன கொஸ்டின் பேப்பரா?) எங்கே என் செல்லக் கண்மணி ஏழிசை வல்லபி? என்று கேட்டார்.

    இதோ வந்தேன் தந்தையே என்றவளை ஏற இறங்கப் பார்த்தார், பிரமாத அலங்காரம். நானும் இன்றைக்கு அரச சபைக்கு வருவேன் என்று செல்லமாகச் சிணுங்கிய போது நேற்று சாப்பிட்ட கீரை அவள் பல்லில் ஒட்டியிருந்தது தெரிந்தது.

    வல்லபி உண்மையில் அழகி. (உடனே வர்ணிக்க வேண்டுமா என்ன? வேறு ஒரு அத்தியாயத்தில் வர்ணிக்க வாய்ப்பு வரும். அப்போ பார்த்துக்கலாம்)

    எல்லாக் கலைகளிலும் எக்ஸ்பர்ட். அரசாங்கப்பள்ளியில் பயிலாமல் வீட்டுக்கு வந்த சிறப்பு ஆசிரியரிடம் பாடம் கற்றவள். சுருங்கச் சொன்னால் எல்லாம் தெரிந்த ஏழிசை வல்லபி. தந்தைக்கு ஏகப்பெருமிதம்.

    ஏழு-- இன்றைக்கு அரசவையில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும் அம்மா. இன்னொரு நாள் அழைத்துப் போகிறேனே... நாளைக்கு அரச நர்த்தகி நாக மோகினியின் நாட்டியக் கச்சேரி இருக்கிறது. அதற்கு வாயேன் என்றார். நர்த்தகி பேரைச் சொல்லும்போது கண்களில் ஜொள்ளுக் கடல்.

    Enjoying the preview?
    Page 1 of 1