Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaarai... Nee Vaarai
Vaarai... Nee Vaarai
Vaarai... Nee Vaarai
Ebook112 pages41 minutes

Vaarai... Nee Vaarai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604306
Vaarai... Nee Vaarai

Read more from Devibala

Related to Vaarai... Nee Vaarai

Related ebooks

Reviews for Vaarai... Nee Vaarai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaarai... Nee Vaarai - Devibala

    http://www.pustaka.co.in

    வாராய்… நீ வாராய்

    Vaarai… Nee Vaarai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அந்தச் செய்தி வந்து சேர்ந்ததும் மாலதி துள்ளிக் குதித்து விட்டாள்.

    முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை திரு கிருஷ்ணமுரளி பெறுகிறார். 'ராஜயோகம்' படத்தில் அவர் பாடிய பாடல்களுக்கான விருது இது! அவர் திரைப்படத்துக்காக பாடிய முதல் பாட்டுக்கே தேசிய விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

    மாலதிக்கு உற்சாகத்தில் நிற்க முடியவில்லை!

    அந்த சந்தோஷம் கண்களை இருளச் செய்தது.

    அப்படியே உட்கார்ந்துவிட்டாள். உடனே தொலைபேசி சிணுங்கியது. ஓடிப்போய் எடுத்தாள்.

    மாலதி நான்தான் கிருஷ்ணா!

    கேட்டீங்களா செய்தியை? இப்பத்தான் சொன்னான்!

    ம்! கேட்டேன். வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கேன்!

    வெளியே போயிருந்த கிருஷ்ணா பதினைந்து நிமிடங்களில் வீடு திரும்பிவிட்டான்.

    மாலதி! இதை நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை!

    ஆனா நான் எதிர்பார்த்தேன்!

    இது உன்னால் வந்த பரிசு மாலதி!

    பேசாதீங்க அப்படி! உங்க தேன் குரல் உலகம் முழுக்க ஒலிக்கப் போற நாள் ரொம்ப தூரத்துல இல்லை பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை! வாசனை காட்டிக் 'குடுக்காதா?

    தொலைபேசி அழைத்தது. மாலதி ஓடிப்போய் எடுத்தாள்.

    சிவராஜ் பேசறேன்மா! வாழ்த்துக்கள்!

    அவர் வீட்லதான் இருக்கார். கூப்பிடறேன்!

    முதல்ல உனக்கு வாழ்த்துக்கள். அவனை இந்த உயரத்துக்கு கொண்டு வந்தது நீ! இந்த வெற்றி உன்னுது! கூப்பிடு அவனை.!

    கிருஷ்ணா ரிசீவரை வாங்கிக் கொண்டான்.

    மாலதி ஜெயிச்சிட்டாளா கிருஷ்ணா.?

    கிருஷ்ணா பதிலே பேசவில்லை!

    முதல் பாட்டுக்காக தேசிய விருது வாங்கற பாடகர் நீயாத்தான் இருப்பே? இனிமே படங்கள் வரும். கவலைப்படாதே! வாழ்த்துக்கள்! ரிசீவரை வைத்தான் கிருஷ்ணன்.

    அதன் பிறகு தொடர்ந்து தொலைபேசித் தொல்லைகள்! வாழ்த்துக்கள் என்று நள்ளிரவு வரை அவனைத் தூங்க விடவில்லை.

    மறுநாளே பிரபல வார இதழ் ஒன்று பேட்டிக்காக நேரம் குறித்து விட்டது. காலை ஒன்பது மணிக்கு பிரபல இசையமைப்பாளரிடமிருந்து ஆள் வந்துவிட்டது.

    அண்ணன் உடனடியா கையோட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்! வாசலில் கார் நின்றது.

    மாலதி நீ வா!

    அய்யோ! நான் எதுக்கு?

    நீ என்னோட வந்தாத்தான் எனக்கு வெற்றி கிடைக்கும்!

    ஷ்! வேண்டாங்க! உங்க குரலை ஒரு இடத்துல அமர்த்தணும்னு நான் பாடுபட்டது அப்ப! இப்ப நீங்க உட்கார்ந்தாச்சு! தைரியமா போயிட்டு வாங்க.

    இல்லை மாலதி! நீயும் வா!

    மாலதி சங்கடத்தில் நெளிந்தாள்.

    ப்ளீஸ் மாலதி!

    குழந்தையாட்டம் இருக்கீங்க! சரி வர்றேன்!

    இருவரும் பதினைந்து நிமிடங்களில் வண்டியில் ஏறினார்கள். கார் ஒடத் தொடங்கியது. மாலதி கண் மூடி அமர்ந்தாள்.

    கிருஷ்ணாவை முதன்முதலாக சந்தித்த அந்த நாள் நினைவில் மோதியது. அந்த நினைப்பு சுகமாக இருந்தது.

    அப்பாவுக்கு மாற்றலாகி அந்த ஊரில் அப்போதுதான் நுழைந்திருந்தார்கள். கம்பெனி வீடு தந்திருந்தது.

    டெம்போவில் வீட்டுப் பொருட்கள் வந்து இறங்கின.

    வீடு போட்டது போட்டபடி கிடந்தது.

    அம்மா பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.

    என்னங்க! என்னால சமைக்க முடியாது. ஏகப்பட்ட வேலைகள் கிடக்கு. நீங்க ஓட்டல்ல போய் சாப்பாடு எடுத்துட்டு வந்துடுங்க.

    மாலதி எங்கே?

    அழுக்குத் துணிகளை துவைச்சுகிட்டு இருக்கா!

    அப்பா போய்விட்டார்.

    மாலதி துணிகளைத் தோய்த்து ஒரு பக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு காயவைக்க மாடிப்படி ஏறினாள். மொட்டைமாடி விஸ்தாரமாக இருந்தது. கொடிகட்ட வேண்டும். கையோடு கொண்டு வந்திருந்த கயிறுகளை எடுத்துக் கொண்டு எங்கே கொடி கட்டலாம் என ஆராய,

    அந்தக் காலை பத்து மணி வேளையில் இனிமையான கானமொன்று தவழ்ந்து வந்து காதுக்குள் நுழைந்தது. வசீகரிக்கும் ஆண்குரல்!

    நிச்சயமாக ரேடியோ அல்ல! நடுவில் இசையில்லை! ஆனால் கட்டி நிறுத்தும் குரல்!

    குரல் வந்த திசையில் பார்வை ஓட, எதிர் வீட்டு மாடியில் கண் மூடி, லயித்தபடி அவன் பாடிக் கொண்டிருந்தான்.

    மாலதி அப்படியே நின்றுவிட்டாள்.

    'இதுபோன்ற இனிய குரலை இதுவரை மாலதி கேட்டதில்லை!'

    காது வழியாக நுழைந்து நெஞ்சுக்குள் ஒரு மாதிரி பரவசத்தைத் தெளித்துக் கொண்டிருந்தது. அப்படியே நின்றுவிட்டாள்.

    அந்தப் பாடல் முடிந்ததும் தன்னை மறந்து கைகளைத் தட்டி விட்டாள். அவன் விசுக்கென எழுந்தான். அப்போதுதான் மாலதி தான் கை தட்டியதை உணர்ந்தாள்.

    பிரமாதம் ஸார் உங்க பாட்டு!

    வாய்விட்டு அவள் பாராட்ட, கூச்சம் கலந்த சந்தோஷத்துடன் அவளைப் பார்த்தவன் சடாரென காணாமல் போய்விட்டான்.

    மாலதி தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

    'ச்சே! முன்பின் தெரியாதவன்... அவசரப்பட்டு பாராட்டியிருக்க வேண்டாமோ? எப்படிப்பட்டவனோ?’

    அம்மா அழைக்கக் கீழே வந்தாள்.

    என்னால முடியலை மாலதி! இடுப்பு புடிச்சுக்கிட்டிருக்கு!

    ஏன் இப்பிடி ஒரேடியா இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யற? அப்புறம் மூச்சுத் திணறல் வந்தா நானும் அப்பாவும்தான் அவஸ்தைப் படணும்!

    அப்பா டிபனுடன் வந்துவிட்டார்.

    மறுநாள் அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1