Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagana Aaviye!
Azhagana Aaviye!
Azhagana Aaviye!
Ebook92 pages41 minutes

Azhagana Aaviye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128404591
Azhagana Aaviye!

Read more from Vedha Gopalan

Related to Azhagana Aaviye!

Related ebooks

Reviews for Azhagana Aaviye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagana Aaviye! - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    அழகான ஆவியே!

    Azhagana Aaviye!

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னோட்டம் – 1

    முன்னோட்டம் – 2

    முன்னோட்டம் – 3

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னோட்டம் – 1

    இடுகாடுகளுக்கே உரிய அமானுஷ்யத் தன்மை அங்கு நிலவியது. அவளைக் கிடத்தி, அவன் கையில் பந்தத்தைக் கொடுத்தார்கள். அவன் மயங்கிச் சாய்ந்தான்.

    செத்துப்போனவள் இன்னும் நூறு வயசு வாழ ஆசைப்பட்டவள். அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.

    எங்களையெல்லாம் விட்டுப்போக உனக்கு எப்பிடி மனசு வந்தது? அழுகை விண்ணைப் பிளந்தது.

    அப்போதுதான் அந்தக் குரல் அவர்களின் காதுகளில் கிசுகிசுப்பாய் ஒலித்தது. இல்லை... நான் போகலை. இப்போ போறதா உத்தேசமும் இல்லை.

    முதலில் பிரமை என்றுதான் நினைத்தார்கள். பிறகு ஒவ்வொரு நிகழ்ச்சியாய் அரங்கேற ஆரம்பிக்க... அவள் செத்துப்போயும் அவர்களை விட்டுவிலகாதிருந்தது புரிந்தது. அவள் ஏதோ நோக்கத்துடன்தான் இன்னும் உலகத்தை விட்டுக்கிளம்பாமல் இருந்தாள்.

    முன்னோட்டம் – 2

    நள்ளிரவில் சுடுகாட்டில் நடந்தது அந்தப் பூஜை. சூழ்நிலையின் பயங்கரத்தை அது பல மடங்கு அதிகரித்துக்காட்டியது. ரத்தமும் மண்டை ஓடுகளுமாய், ‘வசிய வசிய' என்று அந்த மாந்தர்கள் மீண்டும் ஜபம் செய்வதை அவன் பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அந்த ஆவியை மெல்ல அடக்கி அந்தப் பானையில் அடைத்தார்கள்.

    முன்னோட்டம் - 3

    அது வெளிப்பட்டுத் தன் எதிரியை நோக்கிப்போக ஆரம்பித்தது.

    1

    அந்தப் பிராந்தியம் முழுக்க திடீரென்று வித்யாசமான முறையில் காற்று சுழன்றடிக்க ஆரம்பித்தது. திடுதிப்பென்று ஒரு சில்லிப்புப் பரவ ஆரம்பித்தது. ராத்திரி நேரம். சூழ்ந்திருந்த இருட்டுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஆந்தைகூட எதையோ பார்த்து... அல்லது எதிர்பார்த்து தனது பயங்கரம் கலந்த குரலை எழுப்பியது.

    நாய்களுக்கு எதுவோ புரிந்தது. ஒன்று ஆரம்பிக்க, அனைத்தும் கூட்டமாக அழத்துவங்கின. ஒரு நாய் அழுதாலே சகிப்பது சிரமம்! மொத்தமும் அழுதால்?

    அந்தப் பகுதி, தென் சென்னையை விட்டு விலகி சற்று ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்தது. ரயிலும் பஸ்ஸும் கிடைத்தாலும் அந்தப் பகுதியை அடைவதற்குச் சில மணி நேரங்கள் ஆகும்.

    கூப்பிடு தொலைவில் பஸ் ஸ்டாண்டும் ரயில் நிலையமும் இருப்பதாக ரியல் எஸ்டேட்காரர்கள் கூவிக் கூவி விற்றாலும் அத்தனை சுலபத்தில் நிலம் விற்பதில்லை.

    நல்லதற்குத்தான்!

    'அன்னை நகர்' என்று போர்டு மட்டும் இருந்தாலும் மருந்துக்குக்கூட ஒருவரும் வீடு கட்டாமல் இருப்பது நல்லதற்குத்தான்.

    சென்னையை அடுத்த பகுதி என்பதால் மெல்ல மெல்ல நகரம் விரிவடைந்து இந்தப் பகுதிக்கும் நல்ல டிமாண்ட் அதிகரிக்கும் என்று நப்பாசைப்பட்டு ஒரு தொழிலதிபர் அத்தனை நிலத்தையும் வளைத்து சல்லிசான விலைக்கு வாங்கிப் போட்டிருந்தார். ரத்தினகிரி என்றால் குழந்தைக்கும் தெரியும். குழந்தை குட்டி என்றாவது பிறக்கும் என்ற நம்பிக்கையில் சொத்து சேர்த்துக் கொண்டிருக்கிறார் ரத்தினகிரி. ஆஸ்தி இருக்கிறது! ஆஸ்திக்கு ஒன்று இன்னும் ஜனிக்கவில்லை. அதனால் பரவாயில்லை. அவருக்கு நம்பிக்கை அதிகம் உண்டு. தன்னம்பிக்கை மட்டுமல்லாமல் ஜோதிட நம்பிக்கையில் தனது மற்றும் மனைவி மங்களத்தம்மாள் ஜாதகதைக் கொண்டு போய் ஜோதிடரிடம் காட்டினார்.

    சாமி எனக்கு வயசு அப்பத்தஞ்சு பொண்டாட்டிக்கு அம்பது. நல்ல வேளையா இன்னும் மாசா மாசம் முழுகிக்கிட்டிருக்கா. அது ஒரேயடியா நிக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவை நிக்கணும். என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.

    ஜோதிடர் ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்தில் சொல்லிவிட்டார்.

    உமக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. உங்க ரெண்டு பேர் ஜாதகத்திலும் புத்திர தோஷம் இருக்கறது நிஜம்தான். ஆனால் நீங்க நிறையப் பரிகாரம் செய்து குழந்தை பிறக்கணும்னு விதி இருக்கு. குரு பகவான் நல்ல நிலையில் இருக்கார். கை விட மாட்டார். அஞ்சாமிடம் பூர்வ புண்ணியஸ்தானம் மட்டுமில்லை. புத்திர ஸ்தானமும் கூட. அது நன்னாயிருக்கு. பூர்வபுண்ணியமும் இருக்கும் புத்திர பாக்கியமும் இருக்கு. என்றார் ஜோதிடர். மூன்று முறை சத்தியம் சொன்னார்.

    Enjoying the preview?
    Page 1 of 1