Meendum Kaadhali
()
About this ebook
1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.
கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.
சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.
அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.
தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.
கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.
சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.
Read more from Vedha Gopalan
Uyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Yenadi! Rating: 0 out of 5 stars0 ratingsKaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Kaadhal Puyal Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Pon Sangili Rating: 5 out of 5 stars5/5Manathil Amarntha Mayile... Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Siruthuligal Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Pesum Mozhi Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire… Rating: 0 out of 5 stars0 ratingsAyyayiram Plus Ainooru Rating: 0 out of 5 stars0 ratingsWhatsapp Ennum Vallal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsIni Ithu Vasanthakaalam Rating: 0 out of 5 stars0 ratingsNee Verum Pennthan! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhali Kaadhalikavillai Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean - part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVarugirean Veena! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkagava Babu? Rating: 0 out of 5 stars0 ratingsEngey Antha Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaalathukkum Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kavya! Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kolvenadi Rating: 0 out of 5 stars0 ratingsWhatsappil Vanthavai Rating: 0 out of 5 stars0 ratingsAzhagana Aaviye! Rating: 0 out of 5 stars0 ratingsNaanarintha Aanmeegam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vendam Kanmani Rating: 0 out of 5 stars0 ratings
Related to Meendum Kaadhali
Related ebooks
Maariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kannaththil Muththamittaal Rating: 0 out of 5 stars0 ratingsKooramal Sanyasam Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsதென்றல் வந்து என்னை தொடும் Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Thodum Rating: 5 out of 5 stars5/5Avalukku Amutherdru Per Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Corona Kalathu Kurunovelgal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Alamarathu Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsAtho! Avan Thaan! Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Chinnanchiru Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsதிசை மாறாத பறவை... Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5
Reviews for Meendum Kaadhali
0 ratings0 reviews
Book preview
Meendum Kaadhali - Vedha Gopalan
http://www.pustaka.co.in
மீண்டும் காதலி
Meendum Kaadhali
Author:
வேதா கோபாலன்
Vedha Gopalan
For more books
http://pustaka.co.in/home/author/vedha-gopalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
தலை குனிந்து நின்றிருந்தாள் சந்திரா. அவளுக்குத் தேகமெல்லாம் கூசியது. சந்திரா... உன் குடும்பம் எத்தனையோ உசத்தியாய் இந்தக் கிராமத்திலே வாழுது... உங்க குடும்பத்தின் மேல ஒருத்தரும் ஒரு குத்தமும் சொல்ல முடியாதபடி இருந்தீங்க. ஆனா.... இன்னிக்கு உன் மேல் குற்றம் சாட்டி நிறுத்தறதுக்கு எங்களுக்கெல்லாம் கஷ்டமாய்த்தான் இருக்கு. இருந்தும் பஞ்சாயத்து தன் கடமையைச் செய்யணுமில்லையா?
கனைத்துக்கொண்ட பஞ்சாயத்துத் தலைவர் வீரேசலிங்கம் தனது கம்பீரம் கொஞ்சம் குறையுமளவுக்குத் தலை குனிந்து விநயமாய்ச் சொன்னார்.
கிராமம் மொத்தமுமே வியப்புடன் பார்த்தது. சந்திராவா? பஞ்சாயத்தின் முன்? என்ன அநியாயமாயிருக்கிறது?
உக்கும்... ஆரம்பிக்கலாமா...
யாரோ ஓர் ஊர்ப் பிரமுகர் கேட்க, மற்றவர்கள் நிமிர்ந்து அமர்ந்தனர்.
வழக்கமாய்ப் பஞ்சாயத்துக் கூடும் போதெல்லாம் இப்படிப் கேட்பது சந்திராவின் அப்பா ராமலிங்கமாய்த்தான் இருக்கும். இப்போது அவர் பேசவே அருகதையில்லாதவராய் சிலைபோல் நின்றிருந்தார். உண்மையைச் சொல்லப்போனால், சந்திராவின் மேல் குற்றம் குற்றம் என்கிறார்களே தவிர அது என்ன குற்றம் என்று அவருக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியக் கூடத் தெரியாது!
கொஞ்சம் பொறுங்க.... சம்பந்தப்பட்டவங்க வந்துடட்டும்.... அப்புறம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.
பண்ணையார் வளைந்த மீசை முறுக்கிச் சொன்னார். வாயில் வெற்றிலைச் சிவப்பு பளீரென்றிருந்தது.
சம்பந்தப்பட்டவங்களா? ராமலிங்கம் புரியாமல் மகளைப் பார்த்தார். அவள் வேண்டுமென்றே தெரியாதவள் போல் வேறு புறம் பார்த்தாள்.
வாய்யா... வா...
யாரை அத்தனை ஏளனமாய் ஊர்ப்பெரியவர்கள் போலி மரியாதை போட்டு அழைக்கிறார்கள் என்று எல்லோருமே வியந்து பார்த்தனர்.
விஜயன்! அழகாய் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அந்தக் கிராமத்து நாகரிகத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாதவனாய் ஃபங்க் கட் செய்து கொண்டிருந்தவன், எம்பிராய்டரி செய்த ஷர்ட் போட்டிருந்தான்.
ஆங்... சம்பந்தப்பட்டவங்க வந்தாச்சு. துவங்கலாமே...
எ... என்னை இங்கே எதுக்கு வரச்சொல்லியிருந்தீங்க?
பட்டணத்து ஆங்கிலக்குரலில் கலவரத்துடன் கேட்டான்.
ரோஸ் நிறக் கன்னங்கள் குழப்பத்தில் சிவந்தன.
என்ன அத்தை.... என்ன இதெல்லாம்?
ஸ்டைலாக கிராப்பைப் பின்னுக்குத் தள்ளியவாறு பக்கத்தில் வாய்பொத்தி நின்றிருந்த அத்தையைப் பார்த்துக் கேட்டான்.
அத்தைன்னு என்னைக் கூப்பிடாதேடா மானம் போறது.... ஐயோ.... இது நாள் வரைக்கும் நானோ உன் மாமாவோ பஞ்சாயத்துக்கு முன்னால் இப்படி நின்னிருப்போமா? எங்கேயிருந்தோ லீவுக்கு ஒரே ஒரு மாசம் வந்து தங்கறேன் பேர்வழின்னு நீ வந்து இப்படி...
அதுக்குமேல் பேச முடியாதவளாய்த் தலைகுனிந்து கண்ணீர் விட்டாள், காமாட்சி.
வந்து.... ராமலிங்கய்யா... ஒங்க மக.... இப்போ குத்தம் சாட்டப்பட்டிருக்கா...
எ... என்னன்னு...
ராமலிங்கத்துக்குக் குரல் நடுங்கியது.
சொல்றேன். அந்த குற்றத்துல சம பங்கு இந்த விஜயன்ங்கற பட்டணத்துப் பையனுக்கும் சேரும்...
ஆங்!
உரக்க அதிசயித்தவர் ராமலிங்கம் என்றாலும் அந்த ஊரே அந்த ஒலியை எழுப்பியது.
ஏம்மா... உனக்கு இந்தப் பையனைத் தெரியுமா?
சந்திராவைப் பார்த்து வெற்றிலைக்காவிப் பண்ணையார் கேட்டார்.
ஊம்.
அதற்குமேல் அரை வார்த்தைகூட விரயம் பண்ணாமல் சொன்னாள் சந்திரா.
எத்தனை நாளாய்த் தெரியும்?
அவர் இந்த ஊருக்கு வந்த நாள்லேந்து...
அதாவது... ஒரு மாசமாய்.
இல்லை..... முப்பத்தேழு நாளாய்.
சடக்கென்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள். சே. அவசரப்பட்டுவிட்டோமே.
சரி... தம்பி உனக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமா?
நல்லாவே...
நீ இந்தப் பெண்கிட்டே எப்படி நடந்துக்குவே...?
அன்பாய்.
சட்டென்று ஒளிவு மறைவின்றிச் சொன்னான்.
கேட்டுக்கொண்டிருந்த ராமலிங்கத்துக்கு எல்லாமே விநோதமாய் இருந்தது.
சரி. இப்போ குற்றசாட்டு என்னங்கறதைச் சொல்லிப் போடறேன். நேத்தைக்கு பம்பு செட்டு பக்கத்தில் கருவலஞ்செடிக்கும் வாழைத்தோட்டத்துக்கும் நடுவில் நீங்க ரெண்டு பேரும் ரகசியமாய்ச் சந்திச்சுது நிஜமா?
சந்திரா அவமானத்தில் தலைகுனிந்தாள். எத்தனை அந்தரங்கமான கேள்வி? எவ்வளவு பகிரங்கப்படுத்துகிறார்கள்? ஐயோ.
விஜயனுக்குக்கூட மகா ஆச்சர்யமாய்த்தான் போய் விட்டது. மை காட்.
இந்த ஊரில் மூச்சு விட்டால் கூட அதைக் கண்டுபிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்களா என்ன?
சொல்லுங்க தம்பி.... அவங்களை அங்கே வெச்சு சந்திச்சீகளா?
ஆமா. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம். நாங்க கல்யாணம் செய்துக்கப் போறோம்.
தயங்காமல் சொன்னவனைப் பதற்றத்துடன் பார்த்தாள் அவன் அத்தை. பாவிப் பயல்! எந்த நிமிஷம் இந்த ஊரில் காலடி எடுத்து வைத்தானோ... லீவுக்கு வந்துட்டு இப்படியா செய்வான்? இந்த ஊரில் இது மாதிரி ஆண் பெண் சந்திப்பெல்லாம் மகா பாவமாய்க் கருதப்படும் செயல். சந்திராவின் அப்பா ஏற்கெனவே கோபக்காரர்.