Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varugirean Veena!
Varugirean Veena!
Varugirean Veena!
Ebook108 pages42 minutes

Varugirean Veena!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128404594
Varugirean Veena!

Read more from Vedha Gopalan

Related to Varugirean Veena!

Related ebooks

Reviews for Varugirean Veena!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varugirean Veena! - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    வருகிறேன் வீணா!

    Varugirean Veena!

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan\

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அந்த அதிகாலை நேரத்தில் பூவாளித் தண்ணீரில் செடிகள் ஷவர்பாத் எடுத்துக் கொண்டிருந்தன. பூக்கள் மார்கழிக் குளிரில் நடுங்கின. 'லானி'ன் நடுவில் நான்கு பிரம்பு நாற்காலிகள் அழகாக உட்கார்ந்திருந்த காட்சி பனிப்போர்வையில் மங்கலடித்தது. தூரத்துக் கோவிலில் 'தூமணி மாடத்துச் சுற்றும்' விளக்கெரிந்து கொண்டிருந்தது.

    வேலைக்காரி வாசலைக் கழுவிவிட்டு, மார்கழி மாதத்துக்கு மரியாதை செய்து கொண்டிருந்தாள். பதினெட்டு புள்ளிகள் - பதினெட்டு வரிசைகள். இன்னும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அதனுடன் மல்யுத்தம் நடக்கும்.

    தோட்டத்துக்கு மத்தியில் பங்களா. அதாவது ஒரு மினி அரண்மனை. கிழக்குப் பார்த்த வீடு. வடக்குப் பக்கம் (மிக ) அழகான பெட்ரூம். அப்–டு-டேட் அலங்காரம்.

    என்னங்க இன்னிக்கு இத்தனை சீக்கிரம் எழுந்துட்டீங்க?

    குளித்துவிட்டுப் புத்தம் புதுசாய் எட்டிப்பார்த்த கமலத்தின் கேள்வி பெட்ரூமின் கதகதப்பை அதிகப்படுத்தியது.

    சட்டென்று விரைந்து ஒரு கையால் அவள் இடையை இழுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டபடி சிகரெட்டுக்கு ஒளி படைத்தான் ராஜசேகர்.

    ச்சூ... என்னங்க இது காலங்கார்த்தாலயே.... விடுங்க... வேலையிருக்கு.... தன்னை வழுக்கி விடுவித்துக் கொண்டு சமயலறையை நோக்கி நடந்த அப்ஸரஸை தூரத்திலிருந்து ரசித்தான். எத்தனை அழகாய் நடக்கிறாள் - இருக்கிறாள்!

    ஏய்...கமல். இங்கே வாயேன். எதற்குக் கூப்பிடுகிறான் என்று சர்வ நிச்சயமாய்த் தெரியும். இருந்தும் அவன் அத்தனை பரிவாய்க் கூப்பிடும்போது முரண்டு பிடிக்க மனது மறுத்தது.

    இதோ வர்றேங்க..., சமையல்காரிக்கு ஆணைகளைப் பிறப்பித்துவிட்டு விரைந்து வந்தாள்.

    கம் வித் மி... என்று அவன் வாசலை நோக்கி நடந்தபோது ஆச்சரியம்! அப்படியானால் அவன் கூப்பிட்டது வேறெதற்கோ வா!

    இரண்டடி தள்ளி அவனைத் தொடர்ந்து நடந்தாள். அப்பாடியோ! எத்தனை உயரம் இவர்! ஆறடிக்கும் மேலேயே. நைட் டிரஸ்சுடன் நிமிர்ந்து நிதானமாய் அவன் நடந்து சென்ற பாணி ஏதோ சினிமாக் காட்சி மாதிரித் தெரிந்தது. பின்னணியில் பனித்திரை வேறு! லேசாக இடதுபுறம் அவன் முகத்தில் விழுந்த வராந்தா லைட்டின் வெளிச்சமும் அதில் பளிச்சிட்ட அடர்ந்த மீசையின் எல்லைக் கோடுகளும் அவன் கவர்ச்சியை இரண்டால் பெருக்கின!

    இதோ, பார்த்தியா கமல். அவன் சுட்டிக்காட்டிய இடத்தை அவளும் பார்த்தாள்.

    'களுக்' - இதுக்குத்தான் என்னை இத்தனை அவசரமாய் அழைச்சுக்கிட்டு வந்தீங்களாக்கும்! வேலைக்காரி காலை வேளைல கோலம் போடறது என்ன அத்தனை அதிசயமான காட்சியா? குரலும் சிரிப்பும் கலந்து வீணை மீட்டின.

    இந்தக் கோலம் உனக்குத் தெரியுமா கம்லா?

    அந்த நிலையில் -- இன்னும் கால்வாசி போட்டால் முடிந்து விடுவேன் என்று அறிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பின்னல் வேலை.

    ஊஹூம்.... எனக்குக் கோலமெல்லாம் அத்தனை பழக்கமில்லையே... முகம் சிவக்க - வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டாள்.

    கோவிந்தம்மா. அந்தக் கோலத்தை எனக்குக் கத்துக் குடுக்கறியா? கேட்டது தன் எஜமானர் ராஜசேகர்தான் என்று புரிய முழுதாய் மூன்று நிமிடங்கள் பிடித்தது அந்த வேலைக்காரிக்கு!

    என்னங்கய்யா சொல்றீங்க! ஒங்களுக்கா கோலம் சொல்லிக் குடுக்கணும்!

    யெஸ்... எனக்கு தான்! ஏன் கோவிந்தம்மா! கூடாதா! இப்பவே கத்துக்குடுப்பியாம். அதைச் சீக்கிரமா முடிச்சுக்கிட்டு வா பார்க்கலாம்.--சொன்னவன் சும்மா நிற்காமல் கடகடவென்று உள்ளே போனான். திரும்பி வரும்போது கை நிறையக் கற்றை கற்றையாய்க் காகிதங்கள்.

    சாதாரண ஏனோதானோ காகிதங்கள் கூட இல்லை. தங்கம் மாதிரி சன்லிட் பாண்ட் பேப்பர்கள். இரட்டை நிறங்களில் ராஜசேகரின் பெயரைப் பதித்துக் கொண்டிருந்த லெட்டர் ஹெட் கற்றைகள்.

    நேராக லானில் இருந்த பிரம்பு நாற்காலியில் வந்து அமர்ந்தான் இங்கே வா. இப்பிடி உக்காரு. எனக்கு அந்தக் கோலம் கத்துக்குடு.... பக்கத்தில் இருந்த இன்னொரு நாற்காலியைத் தட்டிக் காட்டினான்.

    வெலவெலத்துப் போய் விட்டாள். பரவால்லே சாமி... நின்னுக்கிட்டே சொல்லித்தர்றேன் பயந்த குரல், நடுங்கிக் கொண்டு வந்தது.

    அட... இப்பிடி உட்காருன்னா. கம்பீரமாக எழுந்த அவன் குரல் எதிரில் இருந்தவளைப் பேச்சில்லாமல் பணிய வைத்துக் கொண்டிருந்தது!

    அரையே அரைமணி நேரம். அந்தக் கோலத்தை முழுவதுமாக கற்றுக் கொண்ட பிறகுதான் அந்த இடத்தைவிட்டு எழுந்தான். அந்த அதிசயத்தைப் பார்க்கச் சூரியன் கூட வெளியே தலையை நீட்டி விட்டான்.

    இங்க பார்த்தியா கமல்... கோலம் கத்துண்டாச்சு... போடறேன் பார்க்கறியா? சன்லிட்டின் மீது வெளிநாட்டு பால்பாயின்ட் பேனா நர்த்தனமாடியது.

    ராஜசேகர் இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லை. எல்லா விஷயங்களிலுமே இப்படித்தான்! வித்யாசமானவன். மிக வித்யாசமானவன். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அவன் ஒரு எக்ஸென்ட்ரிக். அசாதாரணமான --வித்யாசமான எக்ஸென்ட்ரிஸிடி ஒன்று அவனிடம் குடியிருந்தது. எதையும் வித்யாசமாகச் செய்ய வேண்டும். எல்லோரிலிருந்து எல்லா வகையிலும் மாறுபட்டிருக்க வேண்டும் என்ற துடிப்பு சிவப்பு அணுக்களுடன் சேர்ந்து அவன் ரத்தத்தில் குடியிருந்தது. சவால்கள் என்றால் அவனுக்குக் கொள்ளை குஷி. எதில் எப்படிப் புதுமைகள் செய்யலாம் என்று காலை எழுந்திருப்பதிலிருந்து இரவு படுக்கை அறையில் கமலாவைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது வரை வியாபித்திருந்தது.

    எப்போது என்ன செய்யப் போகிறான் - எதை எங்கே பேசப் போகிறான் என்று யாராலும் எப்போதும் ஊகிக்க முடியாது. கமலத்துக்கு அவர் புதிர்த்தனத்தின் மேல் ஒரு காதல்! அவளாலேயே அவனைப் புரிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1