Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Thisaigal
Kaadhal Thisaigal
Kaadhal Thisaigal
Ebook118 pages40 minutes

Kaadhal Thisaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்கள் பேசும்; வாய்கள் மெளனம் காக்கும்; இதயங்கள் இடம்மாறும்; கனநேரம் பற்றிக்கொள்ளும், அதுதான் காதல்! இந்த நாவலில் வரும் நாயகன் இரு பெண்களை விரும்புகிறான். காதல் வலை வீசுசிறான். அந்த நாயகிகள் அவனது வலையில் சிக்குகிறார்களா? இல்லையா? இந்த புத்தியால் நாயகனுக்கு கிடைத்தது என்ன? என்பதையும், காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580164110145
Kaadhal Thisaigal

Read more from Edappadi A. Alagesan

Related to Kaadhal Thisaigal

Related ebooks

Reviews for Kaadhal Thisaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Thisaigal - Edappadi A. Alagesan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் திசைகள்

    Kaadhal Thisaigal

    Author:

    எடப்பாடி ஆ. அழகேசன்

    Edappadi A. Alagesan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edappadi-a-alagesan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முன்னுரை

    அனைவருக்கும் எடப்பாடி ஆ. அழகேசனின் அன்பு வணக்கம்.

    கண்கள் பேசும்; வாய்கள் மெளனம் காக்கும்; இதயங்கள் இடம்மாறும்; கனநேரம் பற்றிக்கொள்ளும், அதுதான் காதல்! எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

    திசைகள் நான்கு. திக்குகள் எட்டு. காதல் திசைகள். அவை எங்குள்ளன? எத்தனை திசைகள் உள்ளன? எவரும் அறியார். எப்போது அவை உருவாகின... உலகம் தோன்றியவுடன்... கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை கொடுத்த கொடைதான் காதல். இந்தக் காதலால்தான் இந்த உலகம் உயிர்ப்புடன் உலா வருகின்றது.

    இந்த நாவலில் வரும் நாயகன் இரு பெண்களை விரும்புகிறான். காதல் வலை வீசுசிறான். அந்த நாயகிகள் அவனது வலையில் சிக்குகிறார்களா என்பதுதான் கதை. இரு நாயகிகளுமே இருவேறு திசைகளில் பயணித்து காதலுக்கு வழிகாட்டுகிறார்கள்.

    இந்தக் கதை சேலம் மாவட்டம் எடப்பாடி நகரத்தில் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் அமைக்கப் பெற்றுள்ளது.

    இந்தப் புதினத்தைக் காதல் தம்பதிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் காணிக்கையாக்குகிறேன். அதற்கான காரணம் முடிவில் புரியும்.

    இனி... காதல் பாடம் படியுங்கள்... கருத்துப் பரிமாற்றம் கொள்ளுங்கள்.

    நன்றி

    என்றும் அன்புடன்

    (எடப்பாடி ஆ. அழகேசன்)

    கைபேசி: 9944625777

    1

    குழந்தையை சுமப்பவள் தாய்;

    குடும்பத்தை சுமப்பவன் தந்தை;

    அவன் இருந்தும் காத்தான்;

    இறந்தும் காத்தான்!

    ஆறுமுகம், புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தார். பெரிய தலை, அகன்ற நெற்றி. நீள மூக்கு. ஆறடி உயரம். நெடிய கைகால்கள். வட்டமான நீண்டமுகம்.

    வாட்டசாட்டமான அந்த உருவம் நிமிர்ந்து நின்றால் ஒரு ஆப்பிரிக்க யானை நிற்பதுபோல் இருக்கும். அன்று ரோஜாப்பூ மாலை சுமந்திருந்தவர் உயிரோடு இருப்பது போலவே இருந்தது.

    வேலாயுதம் மகனான அவர்,இறந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தன. புகைப்படத்துக்கு சாம்பிராணி, தீபம் காட்டினாள் மனைவி பழனியம்மாள்.

    அவள் காட்டிய தீபத்தை தொட்டு வணங்கினர் மூத்த மகள் நளினி, தங்கைகள் சங்கீதா. விமலா.

    மகள்கள் மூவரும் தந்தையின் நினைவு நாளில் காலையில் உண்ணாவிரதம் இருந்து, தன்னைப் பெற்றவருக்கு படையல் முடித்து சாப்பிட்டார்கள்.

    பழனியம்மாள் வயது அறுபதைத் தாண்டி முதுமையைக் கைப்பிடித்திருந்தாள். அவளால் உண்ணாவிரதம் இருக்க இயலவில்லை. கணவனின் நினைவை நெஞ்சில் சுமந்தவாறு பணிகளில் ஈடுபட்டிருந்தாள்.

    ஆறுமுகம், ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் இறந்த பின்பு கிடைத்து வந்த குடும்ப ஓய்வூதியத்தை வைத்து மனைவி வாழ்ந்து வந்தாள்.

    மூன்று பெண்களும் கல்லூரி வரை படித்திருந்தனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தபோதுதான் திடீரென உடல்நிலை சரியில்லை, என இரு நாட்கள் படுத்தார். பிறகு எழுந்திருக்கவே இல்லை.

    ‘அவர் உயிரோடு இருக்கும்போதே பெண் கேட்டு வராதவர்கள். இனிமேலா வரப்போகிறார்கள்?’ ஒரு தாயாருக்குரிய கவலையோடு பழனியம்மாள் தன் கணவரின் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    நளினி, சங்கீதா, விமலா ஒருவரை ஒருவர் அழகில் அறிவில் முந்தி நின்றார்கள். அவை மட்டுமே பெண்களுக்குத் திருமணம் என்னும் தகுதியைத் தந்துவிடுகின்றனவா என்ன?

    பெண்ணுக்கு ஒரு கண்ணோ, காலோ இல்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை. பணம் இருந்தால் போதும். அவள் விலையாகிவிடுகிறாள்.

    திருமணச் சந்தையின் உள்ளேகூட நுழைய முடியாத தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள் இவர்கள் மூவரும்.

    ஓய்வூதியத் தொகையும், தையலில் கிடைத்த வருமானமும் அவர்களது தேவைக்குப் போதுமானதாக இருந்தது. கையில் சிறிதளவு காசும் வைத்திருந்தாள் பழனியம்மாள். நெருங்கிய சொந்தம், உறவு என சொல்லிக்கொள்ளும் அளவில் யாரும் இல்லை.

    அன்பு, பாசம், உறவு... இவை எல்லாம் பணம், பகட்டு, சொத்து என்பவைகளோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன. எனவே, சொந்தம் என்பது பழனியம்மாள் குடும்பத்தைப் பொறுத்தவரை எட்டியே இருந்தது.

    ‘மூன்று பெண்களையும் கரை சேர்த்துவிட்டு ஓய்வு எடுக்கக்கூடாதா?’ என்பதுபோல் அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

    அவர் இறந்த பின்பு, இரண்டு தையல் இயந்திரங்கள் வாங்கிப்போட்டு... ஒன்றில் சங்கீதா, மற்றொன்றில் விமலா அமர்ந்தனர்.

    இந்த இரு தையல் இயந்திரகளுக்கும் வேண்டிய துணிகள் ‘ஆர்டர்’ பெற்று, அவைகளைத் திரும்பக் கொடுத்துப் பணம் பெறுவது, மின்கட்டணம் செலுத்துவது, காய்கறி மளிகை ரேஷன் கடை என அனைத்து வேலைகளையும் நளினி கவனித்துக்கொள்கிறாள்.

    கணவன் ஆறுமுகத்திடம் மவுனமாய் பேசிக்கொண்டிருந்தாள் பழனியம்மாள். ‘எனக்கு வரவர பயமா இருக்குங்க. நம்ம பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்காமலே உங்ககிட்ட வந்துடுவனோன்னு ரொம்ப பயமா இருக்கு. திடீர்னு பசிக்குது; திடீர்னு மயக்கும் வருது. திடீர்னு கைகால் எல்லாம் நடுநடுங்குது.

    மரணத்தைக் கண்டு பயப்படலீங்க. நம்மப் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியலேன்னுதாங்க பயப்படுறேன். எனக்கு சர்க்கரை நோய் இருக்குதுன்னு டாக்டர் சொல்றார். நான் என்ன செய்ய?

    ‘பென்ஷன்’ பணத்தை வாங்கிட்டு வர்றதுக்குள்ளேயே ரொம்ப மூச்சு வாங்குதுங்க. துணைக்கு நளினிதான் வருவா. அவமட்டும் நமக்கு ஆண்

    Enjoying the preview?
    Page 1 of 1