Siragukal Mulaiththathadi
()
About this ebook
தாமரை எனும் இந்நாவலின் நாயகி புதுமைப் பெண்ணாக துவக்கத்திலேயே சித்தரிக்கப்படுகிறாள். பின்னர் படிப்படியாக உயர்ந்து இச்சமுதாயத்தை சீர்திருத்தும் புரட்சிப் பெண்ணாக உருவகப்படுத்தப்படுகிறாள். பிறந்தவர்கள் யாரும் பிறக்கும்போதே நல்லவர்களும் அல்ல; கெட்டவர்களும் அல்ல; சூழ்நிலையே ஒருவரை உருவாக்குகிறது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
"தாயின் பாசம் பெண்களின் இழிநிலை, ஆண்களின் சபலம், ஆணாதிக்க வெறி, குடி குடியைக் கெடுக்கும் என்ற வாதம். பெண்களின் சாதுரியம், பெண்கள் அமைப்பாக ஒன்றுபட வேண்டியதன் அவசியம், ஆண் பெண் சமத்துவம்" என வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளையும்; முக்காலப் பரிமாணங்களையும் ஒட்டுமொத்தமாக இந்நாவலில் கொண்டு வந்திருப்பது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய காலக்கண்ணாடியே.
Read more from Edappadi A. Alagesan
Sinthanai Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Rosavey Rating: 0 out of 5 stars0 ratingsKalloori Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thisaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Siragukal Mulaiththathadi
Related ebooks
Neram Nam Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsVanamalli Rating: 0 out of 5 stars0 ratingsVeenaikku Vekkam... Rating: 0 out of 5 stars0 ratingsJathigal Illaiyadi Papa Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Poove Rating: 0 out of 5 stars0 ratingsPen Ennum Mahasakthi Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Manangal Rating: 0 out of 5 stars0 ratingsManam Maratha Kathamba Malargal Rating: 0 out of 5 stars0 ratingsBodhi Maram Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsSindhisai Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsUlage Poochendu Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pootha Veli Rating: 0 out of 5 stars0 ratingsAan Alumaiyil Pen Karppu Rating: 0 out of 5 stars0 ratingsIlanthamizharukkul Pavendar Rating: 0 out of 5 stars0 ratingsThoorikaikku Thookkamillai Rating: 0 out of 5 stars0 ratingsUravusangili Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsUravai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasagathil Magalir Aadal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsTamizhan Thalaivanaga Vendum Rating: 0 out of 5 stars0 ratingsC. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Viduthalaiku Mundhaiya Pengalin Novel Rating: 0 out of 5 stars0 ratingsVaanampadi Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Siragukal Mulaiththathadi
0 ratings0 reviews
Book preview
Siragukal Mulaiththathadi - Edappadi A. Alagesan
https://www.pustaka.co.in
சிறகுகள் முளைத்ததடி
(நெடுங்கதை)
Siragukal Mulaiththathadi
(Nedungkadhai)
Author:
எடப்பாடி ஆ. அழகேசன்
Edappadi A. Alagesan
For more books
https://www.pustaka.co.in/home/author/edappadi-a-alagesan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
சுகமான சுமைகள்
வாழ்த்துரை
அணிந்துரை
அணிந்துரை
மதிப்புரை
1. செவ்வந்தி எனும் சிட்டு
2. தாமரை எனும் பட்டு
3. வேலையைப் பெற்றாள்.
4. வேலையை விட்டாள்
5. தாமரை திட்டமிட்டாள்
6. தாமரைக்கும் தண்ணீருக்கும் திருமணம்
7. கூடிக் கலைந்தார்கள்
8. அவள் வளர்ந்தாள்
9. அவள் சரிந்தாள்
10. எல்லோரும் சரி சமம்தான்
11. முகிலன்
12. அவள்தான் இவள்
13. தலைவி ஆர்.பி.எஸ்.
14. மனக் குழப்பம்
15. விசாரணை
16. அக்காவும் தம்பியும்
17. மனம் மாறுமா?
18. இனியவன் இறந்தான்
19. வழி தெரிந்தது
20. முதல் முடிச்சு அவிழ்ந்தது
21. இன்பம் துன்பம் இரண்டும் ஒன்றுதான்
22. இரண்டாம் முடிச்சும் அவிழ்ந்தது
23. மேடம் ஆர்.பி.எஸ்.
சுகமான சுமைகள்
எனது முதல் நூலான ‘வாழ்ந்து காட்டுவோம் வா’ கவிதைத் தொகுப்பு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் தமிழுக்கு என்னை வளர்த்து ஆளாக்கிய தாய்த் தமிழுக்கு ஏதேனும் செய்யவேண்டும் எனும் மன உந்துதலே இந்த ‘சிறகுகள் முளைத்ததடி’ நெடுங்கதை நூல் வெளியீட்டிற்கு தலையாய காரணம் இது எனது மூன்றாவது நூல் ஆகும்.
முதல் நூலான கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரையான என்னுரையை, ‘முடிவல்ல ஆரம்பம்’ என ஆரம்பித்திருந்தேன். அதன்படியே இரண்டாவது நூலான ‘மெல்லப் புரியும் உண்மை’ சிறுகதைத் தொகுப்பை வெளிக்கொணர்ந்தேன். இரு நூல்களுமே அடுத்தடுத்து 1998-ல் வெளியானவை.
சிறுகதைத் தொகுப்பில் என் முன்னுரையை ‘கற்பனை அல்ல’ எனும் தலைப்பில் அளித்துள்ளேன். அதில் அந்தச் சிறுகதைகள் முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல; முழுக்க முழுக்க உண்மையும் அல்ல; உண்மையைச் சுமந்த கற்பனை கலந்த கதைகள் அவை எனக் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த நெடுங்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனை கலந்தவை என் அவாவின் வெளிப்பாடுகள்!
‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்கிறார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை உண்மை நிலை, நடைமுறை நிலை அந்நிலை அல்ல என்பது என் கருத்து.
உண்மையில் ஒரு சிலரைத் தவிர்த்து பெரும்பாலான பெண்கள் சமூகம், கல்வி, பொருளாதாரம் என அனைத்து சூழ்நிலைகளுக்கும் அடிமைப்பட்டே கிடக்கிறார்கள். முழுமையான சுதந்திரம் அவன் அடைந்தபாடில்லை. அந்த இலக்கு நோக்கி அவள் போராடிக்கொண்டிருக்கிறாள். அது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டு நிற்கும் ஒரு பெண்ணானவள் பெரும்பாலான ஆண்களால் மதிக்கப்படுகிறாள்; போற்றப்படுகிறாள்; துதிக்கப்படுகிறாள்! இதற்கு முக்கிய ஆதாரம் அந்தப் பெண்ணானவள் முழுமையாய் கல்வியறிவு பெற்றிருத்தலே.
ஒரு ஆணைவிடப் பெண்ணிற்கு, பெண்ணடிமையிலிருந்து விடுபட, கல்வியறிவு என்பது அடிப்படைத் தேவையாகிறது. இந்த பெண்ணிற்கான அடிப்படைத் தேவையை அவள் அடைந்து விட்டாலோ வானில் சிறகடித்துப் பறக்கிறாள். வானை வில்லாய் வளைக்கிறாள். வில்லை சொல்லாக்குகிறாள். சொல்லை செயலாக்குகிறாள் அவளின் கல்வி அந்தக் குடும்பத்திற்கும், அந்தக் குடும்பத்தின் கல்வி அறிவு என்பது நாட்டிற்கும் பயன்படுகிறது.
பெண் ஆனவள் கல்வியில் மேம்பட்டு இருக்கவேண்டும். பெண் ஆனவள் ஒரு பேதையாய் போதைப் பொருளாய் ஆணிற்கு அடிமைப்பட்டு இருக்கக்கூடாது என்பதும் என் அவா. அந்த அவாவினையே இந்த நெடுங்கதை முழுமையிலும் நடமாடவிட்டு, ஒரு பெண் என்பவள் சமூகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வாறு இருக்கக்கூடாது என படம்பிடித்துக் காட்டியுள்ளேன். என் கருத்து அனைத்துப் பெண்களுக்கும் ஏற்புடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.
வருவாய்த்துறைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் நான் என் பணிக்கு என் முனையளவும் இடையூறில்லாமல் இலக்கியப் பணி ஆற்றுவதில் இன்பம் காண்கிறேன். என் எழுத்துப் பணியை, அலுவல் பணி முடிந்து இரவு, என் உறக்கத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, செய்து வருகிறேன்.
பிறப்பது - இருப்பது - இறப்பது ஒரு முறை அதற்குள் நான் ஏதாவது சாதித்தாக வேண்டும் எனும் வெறி என்னுள் தோன்றியுள்ளது. இருந்தார், இறந்தார் என இரு சொற்களுக்குள் என்னை இட்டுக் கொள்ள(ல்ல) விருப்பமில்லை. என் இறப்பிற்குப் பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும் என விரும்புகிறேன். எனவே படைப்புகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்க உறுதி பூண்டுள்ளேன்.
என் பெயருக்குப் பின்னால் எம்.ஏ என்று இருப்பதால் நான் எம்.ஏ தமிழ் இலக்கணம் படித்தவன் என பலர் எண்ணலாம். நான் பி.ஏ. (கார்பரேட் செகரட்டரிசிப்) படித்து பின்னர் எம்.ஏ. (பொது ஆட்சியியல்) படித்து முடித்தேன். ஆங்கில வழிப் பாடம் மூலமே பயின்று முடித்தேன். தமிழ் இலக்கணத்துக்கும் எனக்கும் இமயமலை இடைவெளி, ஆனால் தமிழுக்கும் எனக்கும் இடைவெளி இல்லை.
அவரவர் தாய் மொழிக்கு ஒருவர் செய்யும் தொண்டானது அவர் தம் தாய் தந்தையருக்கு செய்யும் தொண்டைப் போன்றது. உண்மையான உள்ளம் உள்ளவர்களுக்கு அதில், கிடைக்கும் மன நிறைவு என்பது வேறு எதிலும் கிட்டாது எனக்கும் அப்படித்தான்.
இலக்கியப் பணி என்பது எனக்குக் கிடைத்துள்ள சுகமான சுமை ஆகும். அது எத்தனை அளவானாலும் அதை நான் இன்பமுடன் ஏற்றுக்கொள்வேன். என் பணி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இப்போது இந்த ‘சிறகுகள் முளைத்ததடி’ எனும் நெடுங்கதையையும் வெளியிட்டு என்னை பெருமைப்படுத்துபவர்கள். நன்றிகள் ஆயிரம். மிக்க நன்றி.
இந்நூலுக்கு பல்வேறு பணிகளுக்கும் இடையிலும் இதற்கும் நேரம் ஒதுக்கி, வாழ்த்துரை வழங்கியுள்ள இலக்கிய இதயம் மருத்துவ அறிஞர் டாக்டர் திரு. ப.ச. பன்னீர்செல்வம், எம்.பி.பி.எஸ், எம்.எஸ், எம்.என்.ஏ.எம்.எஸ், எப்.ஐ.சி.எஸ், எப்.ஏ ஐ.எஸ், ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை அவர்களுக்கும், என் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அணிந்துரை வழங்கியுள்ள ஆசான், அறிஞர், கவியரங்கக் காவலர், புலவர் திரு ஆ. சொக்கர், எடப்பாடி அவர்களுக்கும், என் அன்பு வேண்டுகோளை ஏற்று அணிந்துரை வழங்கியுள்ள பெருந்தமிழ்ப் பேராசிரியர் கலைமாமணி டாக்டர் இளங்கம்பன், டி.லிட், பழனி அவர்களுக்கும், நான் பணிபுரியும் துறையிலேயே பணிபுரிந்து வட்டாட்சியர் நிலையில் பணி ஓய்வு பெற்று இலக்கியப் பணியாற்றும், மதிப்புரை வழங்கியுள்ள வழிகாட்டிக் கவிஞர் பாவலர் எழுஞாயிறு, சேலம் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நெடுங்கதையை, பள்ளிப் படிப்புக்கும் இடையில் என் அன்புக் கட்டளையை ஏற்று தனித்தனி தாள்களில் எழுதி உதவிய என் மூத்த மகன் செல்வன் அ.ரா. அருண் அவர்களுக்கும், நான் இலக்கியப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம் தந்தைக்கு இடையூறு ஏதும் செய்தல் ஆகாது என பிஞ்சு வயதில் பக்குவத்துடன் நடந்துதவும் என் அன்புக் குழந்தைகள் செல்வி அ.ரா. மணிமொழி, செல்வன் அ.ரா. தியாகு ஆகியோர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இரண்டாவது நூலான ‘மெல்லப் புரியும் உண்மை’ சிறுகதைத் தொகுப்பில் அட்டைப்பட ஓவியம் அழகுற அமைத்து குழந்தைகளின் அறிவும் ஆற்றலும் வளர ‘தாய் மொழிக் கல்வி’ என்பது அவசியம் என்னும் உண்மையை மெல்லப் புரிய வைப்பார் ஓவியக் கவிஞர் திரு. ராமு அவர்கள். அவரது ஓவியங்கள் பேசாமல் பேசுபவை. சொல்லாமல் சொல்லுபவை. துள்ளாமல் துள்ளுபவை. அவரே இந்நாவலுக்கும் அட்டைப்படம் அழகுற அமைத்து நாவலுக்கு உயிரூட்டுகிறார். நன்றிகள் ஆயிரம். மிக்க நன்றி.
இந்நூலை வெளிக்கொணர்வதில் உற்சாகப்படுத்தி, உறுதுணையாய் இருந்து உதவிய இலக்கிய இதயங்கள் தொழிலதிபர் திரு ஏ. திருச்செல்வம், 56-சி. சங்கர் நகர், சேலம்-7 அவர்களுக்கும், தொழிலதிபர் திரு. எம். சந்திரசேகரன், 34. சங்கர் நகர், சேலம்-7 அவர்களுக்கும், தொழிலதிபர் திரு. ஆ. சிங்காரவேலு, ஸ்ரீ திருமகள் எலகட்ரானிக்ஸ், 48, கவுண்டம்பட்டி ரோடு, எடப்பாடி அவர்களுக்கும், தொழிலதிபர் திரு. எம்.எஸ் நாகராசன், பி.காம்., ராஜம் பேப்ரிக்ஸ், 124 டி-1, வடக்குத் தெரு, கவுண்டம்பட்டி, எடப்பாடி அவர்களுக்கும், திருமதி ராஜாம்பாள் சந்திரப்பன், பி.எஸ்.ஸி., கிராம நிர்வாக அலுவலர், கெடிக்காவல் கிராமம் அவர்களுக்கும், திரு. வி. வாசுதேவன், பி.ஏ. கிராம நிர்வாக அலுவலர், வடுகப்பட்டி அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றிகள் ஆயிரம். மிக்க நன்றி.
எனது முந்தைய இரண்டு நூல்களின் உரிமைகளை எனது துணைவியாருக்கு வழங்கியது போலவே, இந்நூல் உரிமையையும், இல்லறத்திற்கும், இலக்கியத்திற்கும் இனிதே துணை நிற்கும்.
இந்நூலை உலகப் பெண்களுக்கு காணிக்கையாக்குவதில் பெருமை கொள்கிறேன்.
இந்நூல் ஆண், பெண் இரு பாலருக்கும் ஒரு வழிகாட்டுதலாய் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்நூலைப் படிக்கும் அன்பு உள்ளங்கள் இந்நூலின் மீதான கருத்தினைத் தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1-தெற்குத் தெரு
கவுண்டம்பட்டி,
எடப்பாடி-637 101
சேலம் மாவட்டம்-தமிழ்நாடு,
தொலைபேசி: 9944625777
அன்புடன்,
எடப்பாடி ஆ. அழகேசன்.
வாழ்த்துரை
டாக்டர் ப.ச. பன்னீர்செல்வம், எம்.பி.பி.எஸ், எம்.எஸ், எம்.என்.ஏ.எம்.எஸ், எப்.ஐசி.எஸ்., எப்.ஏ.ஐ.எஸ்.
ஆட்சிக்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவப்பல்கலைக்கழகம்,
சென்னை.
கவிஞர் எழுதும் கவிதை அக்காலத்தின் கண்ணாடி என்பது அனைவரும் அறிந்ததே. இன்று ‘சிறகுகள் முளைத்ததடி’ என்ற நெடுங்கதை கவிஞர் ஆ. அழகேசன்,