Sinthanai Sigarangal
()
About this ebook
"சிந்தனைச் சிகரங்கள்" பதிவுகளை எழுதும்போது 108 பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம் என என் மனம் சொல்லியது. அது 108 எண்ணுக்குரிய சிறப்பு காரணமாக இருக்கலாம்.
உடல், மனம், மதம், மனிதம் அடிப்படையில் 108 எண் சிறப்படைவதாலும், உயிர் காக்கும் வாகனமாக 108 நான்கு சக்கர வாகனம் சிறப்பாக பயன்பாட்டில் உள்ளதாலும், பிறருக்கு பயன்படும் எனும் நம்பிக்கையில், 108 பதிவுகளுடன் "சிந்தனைச் சிகரங்கள்" நூலை கொண்டு வந்துள்ளேன்.
Read more from Edappadi A. Alagesan
Kalloori Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thisaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Rosavey Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Mulaiththathadi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sinthanai Sigarangal
Related ebooks
Ariviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsThiran Koottum Dhyanam Rating: 0 out of 5 stars0 ratingsThirukkuralum Vettriyalarkalum Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Katturai Kanigal! Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Anaivarukkum Arockkiyam - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAzhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsSindhisai Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsNavagiragangal - Kalai Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsUnakkul Pudhayal Rating: 0 out of 5 stars0 ratingsManida Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2018 Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Nagal Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Thathu Arinthathum Ariyathathum Rating: 0 out of 5 stars0 ratingsAthvaidham Rating: 0 out of 5 stars0 ratingsMeesai Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sinthanai Sigarangal
0 ratings0 reviews
Book preview
Sinthanai Sigarangal - Edappadi A. Alagesan
https://www.pustaka.co.in
சிந்தனைச் சிகரங்கள்
Sinthanai Sigarangal
Author:
எடப்பாடி ஆ. அழகேசன்
Edappadi A. Alagesan
For more books
https://www.pustaka.co.in/home/author/edappadi-a-alagesan
பொருளடக்கம்
1. இந்த உலகம் இனிமையானது
2. மகிழ்ச்சியாய் இருங்கள்
3. தெளிந்து செயல்படல்
4. ஒப்பீடு
5. அம்மா
6. மனிதருக்குள்
7. சாதனையாளர்கள்
8. உழைப்பும் வெற்றியும்
9. உலகம் நமக்காக
10. தலைவன்
11. மனிதர்கள் இரண்டு வகை
12. வாக்குறுதி
13. உறங்கும் பணம்
14. இறைவன் இருக்கின்றானா?
15. மனிதன்
16. தந்தையும் வாழ்க்கையும்
17. ஆஞ்சநேயர்
18. திறமை
19. மது
20. தேவர்களும் அப்படித்தான்
21. பெற்றோரைப் போற்றுவோம்
22. தலைமைப் பொறுப்பு
23. ஒரே மாதிரியாகப் பழகுவோம்
24. முயற்சி செய்வோம்
25. சேருமிடம்
26. கவனமுடன் இருப்போம்
27. நாலும் கலந்ததுதான் வாழ்க்கை
28. முயற்சியும் பயிற்சியும்
29. தேடிக்கொண்டே இருப்போம்
30. முன்னோர்கள் வழியில் பயணிப்போம்
31. எதிர்பார்ப்போடு வாழ்வோம்
32. அவரவர் காரியம்
33. அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும்
34. சேர்த்து வைத்த சொத்து
35. இயற்கையும் பெண்களும்
36. எதிர்பார்ப்பு
37. திட்டமிடுங்கள்; செயல்படுங்கள்
38. யாரைத்தான் நம்புவது?
39. பேசுங்கள்
40. அவமானம்
41. உயிரற்ற உடல்
42. புரிதல்
43. உடல்நிலை
44. பணம், பதவி, பவிசு
45. சுயமரியாதை
46. அவரவரால் முடிந்தது
47. பார்த்துக் கொண்டே இருப்பார்கள்
48. எழுத்தாளர்களை மதியுங்கள்
49. புரிந்து கொள்ளாமை
50. நம்புங்கள்
51. உண்மையும் உதவுதலும்
52. நாமும் நம் முடிவும்
53. தாழ்தலால் உயர்தல்
54. நூலகங்களும் பள்ளியும்
55. அகமும் புறமும்
56. பேச்சும் செயலும்
57. பயப்படாதீர்கள்
58. உதவுதல்
59. அமைதியாக இருங்கள்
60. கவலை கொள்ளாதீர்கள்
61. உலகம்
62. பற்றற்ற வாழ்வு
63. நதி ஓரம்
64. இன்பம்
65. எண்ணங்களும் மாற்றங்களும்
66. முயற்சியும் உழைப்பும்
67. தேடுதல்
68. நண்பர்கள்
69. வாழ்க்கை
70. திடமனம்
71. நம்பிக்கையைத் தகர்க்காதீர்கள்
72. தேடுவோம்
73. முயன்று கொண்டே இருப்போம்
74. நினைப்பதும் மறப்பதும்
75. பணிவும் உயர்வும்
76. நமக்கான உலகம்
77. வாழ வையுங்கள்
78. யாரும் இல்லை
79. வலிகளும் வெற்றியும்
80. வெற்றிகளும் மறைவுப் பொருட்களும்
81. அமரர் ஊர்தி
82. அனுபவம் இறுதிவரை
83. நாக்கு ஒரு தீ
84. உழைப்பும் மகிழ்வும்
85. இறைவன் இருக்கின்றாரா
86. எதிர்பார்ப்பும் செயல்பாடும்
87. முயற்சியும் பயிற்சியும்
88. கடவுள் காத்திருக்கிறார்
89. எழுகின்ற சூரியன்
90. வெற்றி
91. மனைவி
92. இருப்பும் இயக்கமும்
93. மனமும் பணமும்
94. இருளும் ஒளியும்
95. காதல்
96. தவறும் மனமும்
97. பணம்
98. தனிப்பட்ட விருப்பங்கள்
99. மனமும் திருப்தியும்
100. வாழ்தல்
101. திறமைகள் மாறுபடும்
102. உடல் நலம்
103. அப்பாவும் மகளும்
104. வாழ்வது ஒருமுறைதான்
105. இந்தியா ஒரு சனநாயக நாடு
106. கேள்வியும் பதிலும்
107. செயல்கள்
108. காலம்
அனைவருக்கும் எடப்பாடி ஆ.அழகேசனின் அன்பு வணக்கம். இது எனது 24 ஆவது நூல். கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் என பயணித்து தற்போது என்னுடைய எண்ணங்கள் சிந்தனைச் சிகரங்கள்
என மலர்ந்திருக்கின்றன. நாம் பார்க்கிறோம்; பழகுகிறோம்; நினைக்கிறோம்; பின் மறக்கிறோம்; இறுதியில், மரணிக்கிறோம். பார்க்கும் எல்லாம் நம் நினைவுகளை, நம்மைப் பாதிப்பதில்லை பாதிக்கும் சிலவற்றை நாம் மறப்பதில்லை. சிந்தித்து... சிந்தித்து... ஒரு புள்ளியில் இருந்து அடுத்த புள்ளிக்கும் என சிந்தனைகள் விரிவடைகின்றன. என்னைப் பாதித்த எண்ணங்களே இந்நூல் வெளியாவதற்கான முக்கிய காரணம் ஆகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த, உலகப் புகழ் அடைவதற்கானத் தாளினைத் தகர்த்தெ றிய இயலாமல் தடுக்கப்பட்ட, தன்மானத் தமிழர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
நினைவுகளை நெஞ்சில் நிறுத்தியவாறே என் எண்ணங்களைப் பதிவிட ஆரம்பித்தேன்.
இந்த நூலிற்கு முதலில் சிகரம் தொடும் சிந்தனைகள்
என தலைப்பிட்டேன். ஒரு நாள், ஒரு பதிவில் அத்தலைப்பில் ஒரு நூல் வெளியானதைக் கண்ணுற்றேன். பின் சிந்தனைச் சுடர்கள்
என தலைப்பிட்டேன். அத்தலைப்பிலும் பின்னர் ஒரு நாள் நூல் வெளியானது. எனவே சிந்தனைச் சிகரங்கள்
எனும் தலைப்பினை இந்நூலிற்கு தெரிவு செய்தேன். அதுவே இன்று உங்கள் கைகளில், இணையத்தில் சிந்தனையில் தவழ்கிறது.
வாழ்ந்து காட்டுவோம் வா
எனும் தலைப்பில் என் முதல் நூலாக கவிதைத் தொகுப்பு வெளியானது.வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்
எனும் தலைப்பில் இந்நூலில் வந்துள்ள பதிவுகளைப் பேசியிருக்கிறேன். அப்பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவைகள் எழுத்து வடிவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
சிந்தனைச் சிகரங்கள்
பதிவுகளை எழுதும்போது 108 பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம் என என் மனம் சொல்லியது. அது 108 எண்ணுக்குரிய சிறப்பு காரணமாக இருக்கலாம்.
ஆன்மீகச் சிந்தனைகளில் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், வைனவர்களின் மூல திருத்தலங்கள் 108 என்றும், இறை வழிபாடு பாடல்களில் 108 பாடல்கள் அமைத்தனர் என்றும், பிரபஞ்ச அமைப்பில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்றும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்றும், நடராஜரின் கர்ணங்கள் 108 என்றும், தாளங்கள் 108 என்றும், அர்ச்சனையும் 108 முறைகள் என்றும், அரச மரம் பல தெய்வங்களை வலம் வருவது 108 முறை என்றும், 108 தெய்வீக நட்சத்திரங்கள் 108 என்றும், புத்தமதம் மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளது என்றும் முக்திநாத்தில் 108 நீரூற்றுக்கள் உள்ளன என்றும், உத்தரகாண்டில் யோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவன் சன்னிதிகள் உள்ளன என்றும், உடலில் 108 மர்மம் முடிச்சுக்கள் உள்ளன என்றும், சீக்கிய மத குருமார்கள் பயன்படுத்தும் கம்பளி ஜெபமாலையில் 108 முடிச்சுகள் உள்ளன என்றும் நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இன்று நாடு முழுவதும் உயிருக்குப் போராடும் ஒரு நபரை, உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கையாக இலவசமாக அழைத்துச் செல்லப்படும் வாகனம் 108 அவசர சிகிச்சை ஊர்தி