Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sindhisai Padalgal
Sindhisai Padalgal
Sindhisai Padalgal
Ebook102 pages23 minutes

Sindhisai Padalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித வாழ்க்கையில் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளமாய் அமைவது கல்வி. அறியா மை நோய் தீர்க்கும் அருமருந்தாம் கல்வியின் அருமை பெருமைகளை கவிஞர். பொன். கருப்பையா இந்நூலில் நிறையவே பாடல் பொருளாக்கித் தந்துள்ளார்.

மனிதகுலம் பெருமை கொள்ள மடமை நீங்கியாகணும்.

மண்ணில் மைந்தர் அனைவருக்கும் எழுத்தறிவு சேரணும் என்ற பாடல்வரிகள் அனைவரும் கல்விபெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

கல்வியின் சிறப்பு, பெண் கல்வியின் மேன்மை என்பதோடு, வயதுவந்தோர் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேமிப்பின் அவசியம், ஒருமைப்பாட்டு உணர்வு, மனித நேயம் என்ற பல்வேறு கருத்துப் பொதிகள் இப்பாடல் நூலில் பொதிந்துகிடக்கின்றன.

படிக்கும் போதே பரவசப்படுத்தும் இப்பாடல்கள் இசைகூட்டிப் பாடப்படும் போது பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்தனைக்குரிய பாடல்களை இயற்றுவதோடு செவிக்கு இனிமையாகப்பாடும் ஆற்றல் மிக்க இந்நூலாசிரியரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

வாழ்த்துகளுடன், வீ. ராஜேஸ்வரி

முதன்மைக்கல்வி அலுவலர்
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116702005
Sindhisai Padalgal

Read more from Pulavar Pon. Karuppiah

Related to Sindhisai Padalgal

Related ebooks

Reviews for Sindhisai Padalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sindhisai Padalgal - Pulavar Pon. Karuppiah

    http://www.pustaka.co.in

    சிந்திசைப் பாடல்கள்

    Sindhisai Padalgal

    Author:

    புலவர் பொன்.கருப்பையா

    Pulavar Pon. Karuppiah

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pon-karuppiah

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிந்திசைப் பாடல்கள்

    கவிஞர் பொன். கருப்பையா, க.நி., இ.கல்.,

    அணிந்துரை

    திருமதி. வீ. ராஜராஜேஸ்வரி

    எம்.எஸ்.ஸி., பி.எட்., எம்.பில்., பி.ஜி.டி., சி.ஏ.,

    முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும்

    மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர்

    அனைவருக்கும் கல்வி இயக்கம், புதுக்கோட்டை.

    மனித வாழ்க்கையில் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளமாய் அமைவது கல்வி. அறியா மை நோய் தீர்க்கும் அருமருந்தாம் கல்வியின் அருமை பெருமைகளை கவிஞர். பொன். கருப்பையா இந்நூலில் நிறையவே பாடல் பொருளாக்கித் தந்துள்ளார்.

    மனிதகுலம் பெருமை கொள்ள மடமை நீங்கியாகணும்.

    மண்ணில் மைந்தர் அனைவருக்கும் எழுத்தறிவு சேரணும் என்ற பாடல்வரிகள் அனைவரும் கல்விபெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

    ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை

    "ஊரின் வளர்ச்சி பள்ளியில் இருக்கு பள்ளி மட்டும் தனி இல்லை

    கல்வியின் வளர்ச்சி சமூக மாற்றம் தந்திடும் சந்தேகம் இல்லை"

    என்ற முத்துச்சரம் பாடல் வரிகளில் அழகாகச் சொல்லிஇருக்கிறார்.

    கிராமக் கல்விக்குழு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை கல்வித்துறையோடு இணைந்து செயலாற்றினால் தொடக்கக்கல்வியில் தொய்வே இல்லை என்பதை கவிஞரின் பாடல்வரிகள் அழுத்தமாக்கியிருக்கிறது.

    "இழப்பதற்கு எதுவுமில்லை எழுத்தறிவுத் தொண்டிலே

    இருக்கும்வரைத் தொண்டு செய்ய எழுந்து வாரீர் நண்பரே"

    எனத் தொண்டு நிறுவனங்களைக் கல்விப்பணிக்கு அழைக்கிறார்.

    குடும்ப வறுமை, நெருக்கடிகள் காரணமாக தொடக்கக் கல்வியை இடைநிறுத்தும் குழந்தைத்தொழிலாளர்களை ‘கண்விற்றுச் சித்திரம் வாங்கும் கதை’யாகச் சித்தரிக்கும் கவிஞர் அவர்களை

    "சிறகடித்துக் களிப்புடன் படிப்பைத்

    தொடர்ந்திடவா தொலைந்திடும் தொல்லை"

    என நம்பிக்கையூட்டி படிக்க அழைப்பது நயமானது. படிப்பைப்பாதியில் விட்டதன் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் தடை விடைகளாக 'தில்லாலே லேலோ’ பாடலில் அருமையாக விவரித்திருக்கிறார் கவிஞர்.

    "கால், கைகள் இழந்தால் என்ன தொலைவா பயணம்?

    கல்வி என்னும் சிறகை விரிப்பாய் வசப்படும் வானம்"

    என்ற வரிகள் இயலாக்குழந்தைகள் கல்விகற்க ஊக்க மூட்டுவதாக உள்ளது.

    "புதுப்புது செயல்களைப் புரிகுவாய் பெண்ணே

    புத்தகச்சோலையில் புகுந்திட்ட பின்னே"

    என்பது பெண் கல்வியின் மேன்மையை விளக்கும் பொன்னான வரிகள். கற்ற பெண்கள் புவியின் கண்கள் என்னும் உருவகம் நடைமுறை உண்மை.

    கல்வியின் சிறப்பு, பெண் கல்வியின் மேன்மை என்பதோடு, வயதுவந்தோர் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேமிப்பின் அவசியம், ஒருமைப்பாட்டு உணர்வு, மனித நேயம் என்ற பல்வேறு கருத்துப் பொதிகள் இப்பாடல் நூலில் பொதிந்துகிடக்கின்றன.

    படிக்கும் போதே பரவசப்படுத்தும் இப்பாடல்கள் இசைகூட்டிப் பாடப்படும் போது பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்தனைக்குரிய பாடல்களை இயற்றுவதோடு செவிக்கு இனிமையாகப்பாடும் ஆற்றல் மிக்க இந்நூலாசிரியரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    சமூக முன்னேற்றத்திற்கான இவருடைய கவித்துவ முயற்சியைப் பெரிதும் பாராட்டுவதோடு,

    Enjoying the preview?
    Page 1 of 1