Sindhisai Padalgal
()
About this ebook
மனித வாழ்க்கையில் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளமாய் அமைவது கல்வி. அறியா மை நோய் தீர்க்கும் அருமருந்தாம் கல்வியின் அருமை பெருமைகளை கவிஞர். பொன். கருப்பையா இந்நூலில் நிறையவே பாடல் பொருளாக்கித் தந்துள்ளார்.
மனிதகுலம் பெருமை கொள்ள மடமை நீங்கியாகணும்.
மண்ணில் மைந்தர் அனைவருக்கும் எழுத்தறிவு சேரணும் என்ற பாடல்வரிகள் அனைவரும் கல்விபெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
கல்வியின் சிறப்பு, பெண் கல்வியின் மேன்மை என்பதோடு, வயதுவந்தோர் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேமிப்பின் அவசியம், ஒருமைப்பாட்டு உணர்வு, மனித நேயம் என்ற பல்வேறு கருத்துப் பொதிகள் இப்பாடல் நூலில் பொதிந்துகிடக்கின்றன.
படிக்கும் போதே பரவசப்படுத்தும் இப்பாடல்கள் இசைகூட்டிப் பாடப்படும் போது பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்தனைக்குரிய பாடல்களை இயற்றுவதோடு செவிக்கு இனிமையாகப்பாடும் ஆற்றல் மிக்க இந்நூலாசிரியரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
வாழ்த்துகளுடன், வீ. ராஜேஸ்வரி
முதன்மைக்கல்வி அலுவலர்Read more from Pulavar Pon. Karuppiah
Thiruppuga Therai… Rating: 0 out of 5 stars0 ratingsMuthana Mudhaluthavigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sindhisai Padalgal
Related ebooks
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsPillaitamil - Panmugapaarvai Rating: 0 out of 5 stars0 ratingsArunthogaiyin Athirvalaigal Rating: 0 out of 5 stars0 ratingsMazhalaiyar Paadalgal - 50 Rating: 0 out of 5 stars0 ratingsVeenaikku Vekkam... Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri, Para! Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsThirukurugoor Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsManida Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsC. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Muthumozhi Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratingsVaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kanigal! Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Urangum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPuthaga Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsThiran Koottum Dhyanam Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyatha Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratingsPadaippu Thiranum Yerpu Kotpaadum Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPudhuneri Venpakkal Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Oru Payanam… Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sindhisai Padalgal
0 ratings0 reviews
Book preview
Sindhisai Padalgal - Pulavar Pon. Karuppiah
http://www.pustaka.co.in
சிந்திசைப் பாடல்கள்
Sindhisai Padalgal
Author:
புலவர் பொன்.கருப்பையா
Pulavar Pon. Karuppiah
For more books
http://www.pustaka.co.in/home/author/pon-karuppiah
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
சிந்திசைப் பாடல்கள்
கவிஞர் பொன். கருப்பையா, க.நி., இ.கல்.,
அணிந்துரை
திருமதி. வீ. ராஜராஜேஸ்வரி
எம்.எஸ்.ஸி., பி.எட்., எம்.பில்., பி.ஜி.டி., சி.ஏ.,
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும்
மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர்
அனைவருக்கும் கல்வி இயக்கம், புதுக்கோட்டை.
மனித வாழ்க்கையில் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளமாய் அமைவது கல்வி. அறியா மை நோய் தீர்க்கும் அருமருந்தாம் கல்வியின் அருமை பெருமைகளை கவிஞர். பொன். கருப்பையா இந்நூலில் நிறையவே பாடல் பொருளாக்கித் தந்துள்ளார்.
மனிதகுலம் பெருமை கொள்ள மடமை நீங்கியாகணும்.
மண்ணில் மைந்தர் அனைவருக்கும் எழுத்தறிவு சேரணும் என்ற பாடல்வரிகள் அனைவரும் கல்விபெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை
"ஊரின் வளர்ச்சி பள்ளியில் இருக்கு பள்ளி மட்டும் தனி இல்லை
கல்வியின் வளர்ச்சி சமூக மாற்றம் தந்திடும் சந்தேகம் இல்லை"
என்ற முத்துச்சரம் பாடல் வரிகளில் அழகாகச் சொல்லிஇருக்கிறார்.
கிராமக் கல்விக்குழு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை கல்வித்துறையோடு இணைந்து செயலாற்றினால் தொடக்கக்கல்வியில் தொய்வே இல்லை என்பதை கவிஞரின் பாடல்வரிகள் அழுத்தமாக்கியிருக்கிறது.
"இழப்பதற்கு எதுவுமில்லை எழுத்தறிவுத் தொண்டிலே
இருக்கும்வரைத் தொண்டு செய்ய எழுந்து வாரீர் நண்பரே"
எனத் தொண்டு நிறுவனங்களைக் கல்விப்பணிக்கு அழைக்கிறார்.
குடும்ப வறுமை, நெருக்கடிகள் காரணமாக தொடக்கக் கல்வியை இடைநிறுத்தும் குழந்தைத்தொழிலாளர்களை ‘கண்விற்றுச் சித்திரம் வாங்கும் கதை’யாகச் சித்தரிக்கும் கவிஞர் அவர்களை
"சிறகடித்துக் களிப்புடன் படிப்பைத்
தொடர்ந்திடவா தொலைந்திடும் தொல்லை"
என நம்பிக்கையூட்டி படிக்க அழைப்பது நயமானது. படிப்பைப்பாதியில் விட்டதன் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் தடை விடைகளாக 'தில்லாலே லேலோ’ பாடலில் அருமையாக விவரித்திருக்கிறார் கவிஞர்.
"கால், கைகள் இழந்தால் என்ன தொலைவா பயணம்?
கல்வி என்னும் சிறகை விரிப்பாய் வசப்படும் வானம்"
என்ற வரிகள் இயலாக்குழந்தைகள் கல்விகற்க ஊக்க மூட்டுவதாக உள்ளது.
"புதுப்புது செயல்களைப் புரிகுவாய் பெண்ணே
புத்தகச்சோலையில் புகுந்திட்ட பின்னே"
என்பது பெண் கல்வியின் மேன்மையை விளக்கும் பொன்னான வரிகள். கற்ற பெண்கள் புவியின் கண்கள் என்னும் உருவகம் நடைமுறை உண்மை.
கல்வியின் சிறப்பு, பெண் கல்வியின் மேன்மை என்பதோடு, வயதுவந்தோர் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேமிப்பின் அவசியம், ஒருமைப்பாட்டு உணர்வு, மனித நேயம் என்ற பல்வேறு கருத்துப் பொதிகள் இப்பாடல் நூலில் பொதிந்துகிடக்கின்றன.
படிக்கும் போதே பரவசப்படுத்தும் இப்பாடல்கள் இசைகூட்டிப் பாடப்படும் போது பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்தனைக்குரிய பாடல்களை இயற்றுவதோடு செவிக்கு இனிமையாகப்பாடும் ஆற்றல் மிக்க இந்நூலாசிரியரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
சமூக முன்னேற்றத்திற்கான இவருடைய கவித்துவ முயற்சியைப் பெரிதும் பாராட்டுவதோடு,