Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anaivarukkum Arockkiyam - Part 4
Anaivarukkum Arockkiyam - Part 4
Anaivarukkum Arockkiyam - Part 4
Ebook131 pages45 minutes

Anaivarukkum Arockkiyam - Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ விரும்பாதோர் யாருமில்லை ஆனால் அன்றாட வாழ்விலோ பல நோய்நொடிகள் நம்மைப் பீடிக்க நாம் நொந்து போகிறோம். ஆகவே இந்த நிலையில் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது. நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. புதிய மருந்துகள், புதிய சிகிச்சை முறைகள் பெருகி வருகின்றன. இவை பற்றியும் அறிந்து கொண்டால் தான் நமது ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ நூல் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

தோல் ஆரோக்கியத்திற்கு சோயா பால், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இயற்கையான எளிய வழிகள், ஆரோக்கிய வாழ்வுக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை நெல்லிக்காய், விந்தணு எண்ணிக்கை குறைபாடு பற்றிய கேள்வி-பதில்கள், நரைமுடியைக் கறுப்பாக்கும் இரசாயன டையின் அபாயம், பளபளப்பான கேசம் பெற எளிய குறிப்புகள், என்றும் இளமையோடு இருக்க வழிகள், டயாபடீஸ் பற்றிய அடிப்படை உண்மைகள் ஆகியவை பற்றிப் பல்வேறு அரிய செய்திகளை இந்த இரண்டாம் பாகத்தில் படித்து மகிழலாம்; அவற்றில் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கலாம். அனைவருக்குமான நூல் இது. பரிசாக அளிக்கவும் உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580151010873
Anaivarukkum Arockkiyam - Part 4

Read more from S. Nagarajan

Related to Anaivarukkum Arockkiyam - Part 4

Related ebooks

Reviews for Anaivarukkum Arockkiyam - Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anaivarukkum Arockkiyam - Part 4 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அனைவருக்கும் ஆரோக்கியம் - பாகம் 4

    Anaivarukkum Arockkiyam - Part 4

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! - 1

    2. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2

    3. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 3

    4. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 4

    5. மக்னீஷியத்தின் மஹிமை - 1

    6. மக்னீஷியத்தின் மஹிமை - 2

    7. மார்பக கான்ஸர் அபாயத்தைத் தவிர்க்கச் சில வழிகள்!

    8. அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்!

    9. சதகங்கள் கூறும் நோயில்லா நெறி!

    10. டயாபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன! - 1

    11. டயாபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன! - 2

    12. நடைப் பயிற்சியினால் அதிக நன்மை பெறுவது எப்படி?

    13. நீடித்த ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர் வேதம் தரும் அன்புரை!

    14. 72000 நாடிகளும் ஆரோக்கியம் தரும் ஆசனங்களும்!

    15. மாறி வரும் சிகிச்சை முறைகள்!

    16. ஆயுர்வேதம் : வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அறிவு!

    17. நோய், சிகிச்சை, வைத்தியர், நோயாளி பற்றி ஆயுர்வேதம் தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்!

    18. 17 வருடங்களில் 17 அறிவுரைகள்!

    19. ‘பை’ – விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!

    20. நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை!

    21. உடல் ஆரோக்கியம் பற்றித் தெரிந்து கொள்ள மேற்கொள்ள வேண்டிய பத்து சோதனைகள்!

    முன்னுரை

    நோயில்லாமல் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது அற நூல்கள் கூறும் அருளுரை.

    நோயற்ற வாழ்க்கைக்கான அடிப்படை உண்மைகளை ஆயுர் வேதம் விளக்க, நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் சோதனைச்சாலை வழியாக நிரூபிக்கப்பட்ட பல பொருள் பொதிந்த உண்மைகளை அவ்வப்பொழுது தெரிவித்து வருகின்றன. ஆயுர்வேதம், அல்லோபதி, ஹோமியோபதி, மலர் மருத்துவம் ஆகிய அனைத்துமே நோயில்லாமல் வாழும் வழிமுறைகளை விவரிக்கின்றன.

    இவற்றையெல்லாம் நமது அறநூல்களிலும், மேலை நாட்டு பத்திரிகைகளிலும் இணையதள வாயிலாகவும் படித்து அவ்வப்பொழுது ஹெல்த்கேர் மாத இதழில் 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக எழுதி வந்தேன்.

    ஹெல்த்கேர் பத்திரிகை ஆசிரியரான திரு R.C. ராஜா அவர்கள் ஆர்வத்துடன் ஏராளமான கட்டுரைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை மொழி பெயர்த்துத் தருமாறு கூறிய போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்று அவருக்கு அனுப்பி வந்தேன். அவை அனைத்தும் ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகின.

    அவற்றின் தொகுப்பே அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக வெளி வந்தது. அத்துடன் நோயில்லா வாழ்வு பெற சில ரகசியங்கள், உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது ஆகிய புத்தகங்களகவும் மலர்ந்துள்ளன. திரு R.C. ராஜா அவர்களுக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    அனைத்து புத்தகங்களும் புஸ்தகா நிறுவனத்தின் சார்பில் டிஜிடல் பதிப்பாகவும் அச்சுப் பதிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆரோக்கியத்தை விரும்பும் தமிழ் உலகம் இதை வரவேற்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

    இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் வெளியிட்டுள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆரோக்கியம் சம்பந்தமான, நுட்பமான அனைத்துக் கருத்துக்களையும் தெரிந்து கொண்டு அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தி நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ்வோம்; அதற்கு இறைவன் அருள் பாலிப்பானாக!

    நன்றி.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    29-2 -2024

    பொறுப்புத் துறப்பு

    DISCLAIMER

    இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் அனைவரும் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளது.

    ஆயின் ஒவ்வொருவரின் உடலும் தனிப்பட்ட தன்மை வாய்ந்தது என்பதால் இதில் தரப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும் முன்பு, உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்து ஆலோசித்து அவர் சொல்படி நடப்பதே சாலச் சிறந்தது. குடும்ப வைத்தியரின் அறிவுரையும் பரிந்துரையுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    இந்த நூலாசிரியரோ அல்லது இந்த நூலை வெளியிட்டவரோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

    ச.நாகராஜன்

    1.100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! - 1

    (1 முதல் 25 முடிய)

    இந்த வேக யுகத்தில் மூளை ஆற்றலை மிக அதிகமாகப் பயன்படுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நவீன் சாதனங்கள் ஒரு புறம், அன்றாடம் வளர்ந்து வரும் பல அறிவியல் கலைகள் என்று மறு புறம், குழந்தைகளானாலும் சரி, முதியோர்களானாலும் சரி மூளை ஆற்றலைப் பயன்படுத்தாமல் வாழவே முடியாத சூழ்நிலை.

    ஆனால் பயப்படத் தேவை இல்லை. மூளை ஆற்றலைப் பயன்படுத்த நூறு வழிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்கு உகந்த நேரத்தில் பயன்படுத்தி மூளை ஆற்றலை முழுதுமாகப் பெற்று உலகில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம்.

    இதோ நூறு வழிகள் :-

    1) உலகில் உள்ள தலையாய ஆய்வு நிறுவனங்கள் இந்திய யோகாவின் பயனைக் கண்டு பிரமிக்கின்றன. ஹார்வர்டு, யேல், மசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் தியானத்தினால் மூளையின் அளவு பெரிதாகிறது என்று கண்டு பிடித்துள்ளன. கவனத்தையும் புலன்களின் உணர்வைச் செயல்படுத்தும் மூளைப் பகுதிகளின் கனம் தியானம் செய்வோர்களிடம் கூடுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உங்களின் மன அழுத்தத்தைப் போக்கி உங்களை நிதானமாக எப்போதும் வைக்க வல்லதும் தியானமே. ஆகவே தியானத்தை மேற்கொள்ளுங்கள்!

    2) ஒரு சுலபமான வழி படிப்பது. ஆனால் யாரும் இதை அவ்வளவாகச் செயல்படுத்துவதில்லை. நீங்கள் படிக்கும் போது மூளையானது தகவலை ஆய்ந்து நடைமுறைப்படுத்தி ஒரு புதிய நியூரான் வழியை உண்டாக்குகிறது. தகவலைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. இதனால் அறிவு கூடுகிறது. புதிய தகவல்களைப் பெற முனைப்புடன் ஈடுபடுங்கள்; அறிவை அதிகமதிகம் பெறுங்கள். இதற்கு சுலபமான எளிய வழி படிப்பது தான்! ஆகவே படியுங்கள்!!

    3) கேள்வி கேளுங்கள்: எந்த மேதையை எடுத்துக் கொண்டாலும் அவர் கேள்வி கேட்டுக் கேட்டு அறிவைக் கூர்மைப் படுத்திக் கொண்டதைக் காணலாம். தனக்குப் புரியாத எதையும் நன்கு அறிந்து கொள்ள அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. நீங்கள் கேள்வி கேட்கும் போது ஒரு பிரச்சினைக்கான விடையைக் காணத் துடிக்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். சிந்திப்பது என்பது மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான சிறந்த பயிற்சி! ஆகவே கேள்விகளைக் கேளுங்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1