Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vakkirkku Arunagiri! - Part 1
Vakkirkku Arunagiri! - Part 1
Vakkirkku Arunagiri! - Part 1
Ebook134 pages45 minutes

Vakkirkku Arunagiri! - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெய்வ மொழியான தமிழின் தெய்வீக ஆற்றலைப் புலப்படுத்த அவதரித்த அருளாளர் அருணகிரிநாதர். தமிழின் மூலம் எளிதாக முருகனை அடைய வழி வகுத்தவர் அவர். தமிழுக்குப் புதிய சந்த வகையைக் காட்ட முருகனே அருள் புரிய அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை உலகிற்குத் தந்தார். எந்தத் திருப்புகழை ஓதினால் என்ன பலன் கிடைக்கும் என்பதற்கு ஒரு வழிகாட்டி, மந்திரத் திருப்புகழ், வீர ஜெயத்திருப்புகழ், ஒரு திருப்புகழில் மறைந்திருக்கும் இன்னொரு திருப்புகழ், முருகனே திருஞானசம்பந்தர், கலாப மயில் பெருமை ஆகிய சுவையான விவரங்களோடு அருணகிரிநாதர் தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்திய பாடல்களின் தொகுப்பும் இந்த நூலில் உள்ளது. அனைத்து வேதம், இதிஹாஸம், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் சாரமாகத் திகழ்வது தமிழில் அமைந்துள்ள திருப்புகழ். அதன் பெருமையையும் மகிமையையும் அறிய இந்த நூல் அன்பர்களுக்கு ஒரு சிறந்த வரபிரசாதம்.

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580151009207
Vakkirkku Arunagiri! - Part 1

Read more from S. Nagarajan

Related to Vakkirkku Arunagiri! - Part 1

Related ebooks

Related categories

Reviews for Vakkirkku Arunagiri! - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vakkirkku Arunagiri! - Part 1 - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    வாக்கிற்கு அருணகிரி! - பாகம் 1

    Vakkirkku Arunagiri! - Part 1

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி!

    2. மந்திரத் திருப்புகழ்!

    3. 100 திருப்புகழ் பாடல் பட்டியல்

    4. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! - 1

    5. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 2

    6. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 3

    7. 1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்!

    8. சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு!

    9. முருகனே திருஞானசம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை!

    10. கலாப மயில் பெருமை!

    11. அனைத்துப் பதமும் அருளும் மயில் விருத்தம்!

    12. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1

    13. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 2

    14. தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்!

    15. அருணகிரிநாதரும் தமிழும்! - 1

    16. அருணகிரிநாதரும் தமிழும்! - 2

    17. அருணகிரிநாதரும் தமிழும்! - 3

    18. அருணகிரிநாதரும் தமிழும்! - 4

    19. அருணகிரிநாதரும் தமிழும்! - 5

    20. அருணகிரிநாதரும் தமிழும்! - 6

    21. அருணகிரிநாதரும் தமிழும்! - 7

    22. அருணகிரிநாதரும் தமிழும்! - 8

    23. அருணகிரிநாதரும் தமிழும்! - 9

    24. உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே கோயில் - அப்பரின் சிந்தனை!!

    25. அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்!

    26. மதுரகவி திருப்புகழ்!

    என்னுரை

    தெய்வ மொழியான தமிழின் தெய்வீக ஆற்றலைப் புலப்படுத்த அவதரித்த அருளாளர் அருணகிரிநாதர்.

    தமிழின் மூலம் எளிதாக முருகனை அடைய வழி வகுத்தவர் அவர்.

    தமிழுக்குப் புதிய சந்த வகையைக் காட்ட முருகனே அருள் புரிய அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை உலகிற்குத் தந்தார்.

    வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

    தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

    நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

    சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

    என்ற பாடல் மூலம் ‘வாக்கிற்கு அருணகிரி’ எனப் புலவோர் உச்சி மேல் வைத்துக் கொண்டாடிய அருளாளர் அருணகிரிநாதர் என்பது தெளிவாகிறது.

    ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என்ற அவரது வாக்கு திருப்புகழை மெய்யாக இயற்றியது யார் என்பதைத் தெரிவிக்கிறது.

    அனைத்து வேதம், இதிஹாஸம், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் சாரமாகத் திகழ்வது திருப்புகழ்.

    தமிழின் பெருமையை அருணகிரிநாதர் ஆங்காங்கே சொல்லிக் கொண்டே போவது தமிழர்கள் செய்த பெரும் பாக்கியமே.

    ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்/ என்று தமிழ் முருகனின் ரகசியத்தை அவர் உரைக்கக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.

    திருப்புகழ் அமிர்தத்தின் பெருமையை திருமுருக கிருபானந்த வாரியார், தணிகைமணி திரு வ. சு. செங்கல்வராய பிள்ளை, கௌமாரம் ஶ்ரீ கோபாலசுந்தரம் உள்ளிட்டோர் மிக அழகுற விளக்கி வந்துள்ளனர்.

    இந்த நூல் நான் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

    திருப்புகழின் பெருமையை உரைக்கும் இன்னும் பல கட்டுரைகள் அடுத்த பாகமாக மலரும்.

    இதை அவ்வப்பொழுது www.tamilandvedas.com இல் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    கட்டுரைகளைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி ஊக்கமூட்டிய அனைத்து மெய்யன்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    இதை நூல் வடிவில் அழகுற வெளியிட முன் வந்த pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    திருப்புகழை தினமும் ஓதுவோம். முருகனின் திருவருளைப் பெறுவோம்.

    நன்றி.

    சான்பிரான்ஸிஸ்கோ

    24-10-2022

    தீபாவளித் திருநாள்

    ச.நாகராஜன்

    1. திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி!

    (திருப்புகழ் GUIDE)

    1

    அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.

    திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் வீ ர ஜெயத் திருப்புகழ் என்று கொண்டாடப்படுகிறது.

    அந்தப் பாடல் வருமாறு:

    சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

    செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்

    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

    திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்

    நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

    நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

    நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்

    தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

    தகுத்தகு தகுத்தந் தனபேரி

    தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

    தளத்துட னடக்குங் கொடுசூரர்

    சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

    சிரித்தெரி கொளுத்துங்

    தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

    திருத்தணி யிருக்கும் பெருமாளே

    பொருள் : முருகனை வழிபடுவோர்களைக் கோபிப்பவர்கள் தலைக்கும், அவர்களைப் பகைத்து இருக்கும் குடும்பத்திற்கும், அவர்களைச் செகுக்கத் துணிபவர் உயிருக்கும், முருகன் அடியாரைக் கண்டு சினத்துடன் சிரிப்பவர்க்கும், பழிப்பவர்க்கும் திருப்புகழே நெருப்பாய் அமைந்து அவர்களை அடியோடு அழித்து விடும். இதை நன்கு அறிவோம் நாம்.

    முருகனை வழிபடும் அடியவர் என்ன நினைத்து வேண்டுகிறார்களோ அதை அளிக்க வல்லது, மனத்தை உருக்குவது, மீண்டும் மீண்டும் பிறப்பு என்ற நிலையை இல்லாமல் செய்து இருள் நிறைந்த கருப்பையில் வராமல் செய்வது, நெருப்பையே எரிக்க வல்லது, மலைகளையே இடிக்க வல்லது, அனைத்துப் பொருள்களையும் தம்முள் உள்ளடக்கியது ஆகிய திருப்புகழை பாடுகின்ற நல்ல செயலை அருள்வாயாக.

    தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்த் தகுத்தகு தகுத்தந்தன என்ற ஒலியுடன் பேரிகைகள் முழங்க, தடுட்டுடு டுடுட்டுண் டென ஒலியுடன் உடுக்கை முழங்க, சேனைகளுடன் போருக்கு அணி வகுத்து வந்த கொடு சூரர் சினத்தையும் அவர்கள் தம் உடலைச் சங்கரித்த (அழித்த) பிண மலைகள் யாவையும் புன்னகை ஒன்றினாலேயே அதில் தோன்றிய அனல் பொறியால் சாம்பலாக்கிய கதிர் வேலா, தினைப்பயிரை விளைவிக்கும் மலைக் குற வள்ளியை

    Enjoying the preview?
    Page 1 of 1