Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetrikku Thirukkural
Vetrikku Thirukkural
Vetrikku Thirukkural
Ebook175 pages1 hour

Vetrikku Thirukkural

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகத்தில் உள்ள ஒப்பற்ற நூல்களில் முதலிடத்தைப் பெறும் அதிசய நூல் திருக்குறள். இதில் உள்ள 4310 சொற்களை ‘திருக்குறள் சொல்லடைவு’ என்ற தனது நூலில் தமிழ் மணி சாமி.வேலாயுதம் பிள்ளை அவர்கள் விளக்கி அரும் பணி ஆற்றியுள்ளார். 1952இல் வெளிவந்த நூல் இது.

இந்தச் சொற்கள் மூலம் உலகம் முழுமைக்கும் பொதுவான, எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமான, ஒரு நூலை இயற்றியுள்ள வள்ளுவரின் மாண்பை எப்படிப்பட்ட சொற்களாலும் விளக்கி விட முடியாது. இப்படி ஒரு நூலை இயற்ற வழி வகுக்கும் தமிழ் மொழியின் பெருமையை முழுதுமாக உரைக்க வல்லார் எவரும் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அவற்றை இணைத்துப் பொருள் காண வழி வகுத்துள்ள வள்ளுவரே வள்ளுவர்.

அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது. மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக அமையும் நூல் இதுவே.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580151008027
Vetrikku Thirukkural

Read more from S. Nagarajan

Related to Vetrikku Thirukkural

Related ebooks

Reviews for Vetrikku Thirukkural

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetrikku Thirukkural - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    வெற்றிக்குத் திருக்குறள்

    Vetrikku Thirukkural

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் மொழி வாயிலாக இயல், இசை, நாடகம், அறிவியல் சார்ந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதோடு நல்ல ஆங்கில நூல்களையும் உலகத்தினருக்கு வழங்குவதே நமது நோக்கம்.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. எவை எவை வேண்டும்? - வள்ளுவரின் அறிவுரை!

    2. எவை எவை வேண்டாம்? - வள்ளுவரின் அறிவுரை!

    3. வள்ளுவரின் சுடும் குறள்கள்!

    4. பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

    5. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! - 1

    6. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! - 2

    7. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 3

    8. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 4

    9. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 5

    10. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 6

    11. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 7

    12. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 8

    13. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 9

    14. வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!

    15. மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

    16. வள்ளுவர் அறிவுறுத்தும் விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!

    17. வள்ளுவர் குறளில் கையாண்ட வடமொழிச் சொற்கள்

    18. வால்டேரும் வள்ளுவரின் திருக்குறளும்!

    19. பொய்யும் மெய்யும் - திருவள்ளுவர், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், மஹாத்மா காந்திஜி, துர்வாஸர்!

    20. திருக்குறளுக்குத் தற்காலத்தில் சிறந்த உரைநூல் இதோ!

    21. திருக்குறளில் தேவர் உலகம் வள்ளுவரும், வானவரும்!

    22. திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! – 1

    23. திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

    24.சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1

    25. சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! – 2

    26. அரவிந்தர் ஆக்கிய குறள் தமிழாக்கம்!

    27. முடிவுரை

    நூலாசிரியர் பற்றிய குறிப்பு

    என்னுரை

    உலகத்தில் உள்ள ஒப்பற்ற நூல்களில் முதலிடத்தைப் பெறும் அதிசய நூல் திருக்குறள்.

    இதில் உள்ள 4310 சொற்களை ‘திருக்குறள் சொல்லடைவு’ என்ற தனது நூலில் தமிழ் மணி சாமி.வேலாயுதம் பிள்ளை அவர்கள் விளக்கி அரும் பணி ஆற்றியுள்ளார். 1952இல் வெளிவந்த நூல் இது.

    இந்தச் சொற்கள் மூலம் உலகம் முழுமைக்கும் பொதுவான, எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமான, ஒரு நூலை இயற்றியுள்ள வள்ளுவரின் மாண்பை எப்படிப்பட்ட சொற்களாலும் விளக்கி விட முடியாது.

    இப்படி ஒரு நூலை இயற்ற வழி வகுக்கும் தமிழ் மொழியின் பெருமையை முழுதுமாக உரைக்க வல்லார் எவரும் இல்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அவற்றை இணைத்துப் பொருள் காண வழி வகுத்துள்ள வள்ளுவரே வள்ளுவர்.

    அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது.

    மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக அமையும் நூல் இதுவே.

    இதை இன்னொரு மொழியில் திருவள்ளுவரின் மனக் கருத்திற்கேற்ப மொழி பெயர்ப்பு செய்யவே இயலாது என்பது இதன் பல சிறப்புகளில் முக்கியமான ஒன்றாகும்.

    டபிள்யூ.ஹெச்.ட்ரூ (W.H. Drew) என்ற அறிஞன் அழகுறக் கூறினான் இப்படி

    மொழிபெயர்ப்பாளரின் புகழுக்குக் களங்கம் ஏற்படாத வகையில் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இதை மொழிபெயர்க்க இயலாது.

    (It could not be translated into any European language without exposing the translator to infamy – W.H. Drew)

    பலகாலும் இதைப் படித்து மகிழ்ந்து வருபவன் என்ற முறையில் இதை ஆராய்ந்து என்னிடம் வைத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு அவ்வப்பொழுது கட்டுரைகள் படைத்து வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.

    இதை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

    இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIA வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தொடராக வெளி வந்த போது என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

    வாருங்கள், வள்ளுவர் சொல்வதைக் கேட்போம், வெற்றி பெறுவோம் என அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். நன்றி

    பங்களூர்

    13-1-2022

    ச.நாகராஜன்

    1. எவை எவை வேண்டும்? - வள்ளுவரின் அறிவுரை!

    மனித வாழ்க்கையில் வேண்டுவன எவை? வழிகாட்டியாக நம் முன் நிற்பவர் வள்ளுவரே.

    அவர் வேண்டும் என்று சொல்பவை :

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (குறள் 362)

    எதையாவது வேண்டும் என்று நீ விரும்பினால் முதலில் பிறவாமை வேண்டும்.

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

    வேண்டாமை வேண்ட வரும்

    வள்ளுவர் ஜனனம், மரணம் என்ற சுழலிலிருந்து விடுபட வேண்டும் என்கிறார். புனர்ஜென்மம் என்ற கோட்பாட்டைக் கூறும் இந்தக் குறளே வள்ளுவரை ஒரு சிறந்த ஹிந்து என்று எடுத்துக் காட்டுகிறது.

    ஆதி சங்கரரும் புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்

    (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரினில் படுப்பு) என்று பாடியுள்ளார்.

    இதிலிருந்து மீள பஜகோவிந்தம் (கோவிந்தனைத் துதி) என்றார் அவர்.

    ***

    பிறன் கைப்பொருள் வெஃகாமை வேண்டும் (குறள் 178)

    உனது செல்வம் சுருங்காமல் இருக்க நீ நினைத்தால் அடுத்தவன் பொருளுக்கு நீ ஆசைப்படக் கூடாது.

    அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

    வேண்டும் பிறன் கை

    ***

    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

    புலால் உண்ணாமை வேண்டும்

    புண்ணது உணர்வார்ப் பெறின் (குறள் 257)

    மாமிசம் சாப்பிடாது இருத்தல் வேண்டும். ஏனெனில் அது பிறிதோர் உடலின் புண்.

    ***

    அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

    வேண்டிய எல்லாம் ஒருங்கு (குறள் 343)

    ஐம்புலன்கள் வழியாக வரும் ஆசையை விடல் வேண்டும். விரும்புகின்ற எல்லாப் பொருளின் மீதுள்ள ஆசையை ஒருசேர விட்டொழிக்க வேண்டும்.

    ***

    எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் (குறள் 470)

    உலகத்தாரால் இகழப்படாத ஒன்றையே எண்ணிச் செய்ய வேண்டும்.

    எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு

    கொள்ளாத கொள்ளாது உலகு

    ***

    புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

    இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (குறள் 538)

    பெரியோரால் போற்றிப் புகழ்ந்தவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

    அப்படி செய்யவில்லை எனில் ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாகாது. ஏழு பிறவி என்று கூறுவதால் மறுபிறவித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ள சிறந்த ஹிந்துவாகிறார் வள்ளுவர்.

    ***

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

    பெருமை முயற்சி தரும் (குறள் 611)

    ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது மிகக் கடினமானது என்று மனம் தளராமை வேண்டும். அதைச் செய்வதில் உள்ள முயற்சியே பெருமையைத் தரும்

    ***

    புகழொடு நன்றி பயவா வினை என்றும் ஒருவுதல் வேண்டும் (குறள் 652)

    புகழுடன் அறத்தைக் கொடுக்காத எந்தச் செயலையும் ஒருவன் என்றும் செய்யாது நீக்கி விட வேண்டும்.

    என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

    நன்றி பயவா வினை

    ***

    ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

    ஆஅதும் என்னு மவர் (குறள் 653)

    மென்மேலும் உயர வேண்டும் என்று விரும்புவர் தன் புகழுக்குக் கேடு வரும் என்னும் தூய்மையற்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

    ***

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

    அச்சாணி அன்னார் உடைத்து (குறள் 667)

    ஒருவரின் உருவத்தைக் கண்டு அவரை எடை போட்டு அவரை இகழாமல் இருக்க வேண்டும்.

    உருண்டு வரும் பெரிய தேருக்கு உதவுவது அச்சாணியே. ஆகவே உருவம் கண்டு எடை போடாதே.

    ***

    மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை கொடுத்தும் கொளல் வேண்டும். (குறள் 867)

    கூட இருந்தே குழி பறிக்கும் நம்பிக்கை துரோகியை எதையாவது கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

    ***

    குடிப்பிறந்து தன் கட் பழிநாணுவானைக்

    கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு (குறள் 794)

    நல்ல குடியில் பிறந்து தனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1