Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulage Poochendu
Ulage Poochendu
Ulage Poochendu
Ebook65 pages15 minutes

Ulage Poochendu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையெழுத்திப் பிரதியில் எழுதத் தொடங்கிய இவர், பூங்குயில் இதழைப் படிக்கும் காலத்திலேயே ஆசிரியராகப் பணியேற்றுள்ளார். கவியரசி, ஜுனியர் சிட்டிசன், கவியருவி, கவித்தென்றல், மங்கையர் செம்மல் போன்ற 24 விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற துறைகளில் புலமை பெற்ற இவர், சுமார் 30 நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகள், பொது மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116601964
Ulage Poochendu

Read more from S. Swathi

Related to Ulage Poochendu

Related ebooks

Reviews for Ulage Poochendu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulage Poochendu - S. Swathi

    http://www.pustaka.co.in

    உலகே பூச்செண்டு

    Ulage Pochendu

    Author:

    எஸ். சுவாதி

    S. Swathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-swathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வெப்பம் சொட்டும் பூக்கள்

    எனது பூச்செண்டு

    நன்றி பூச்செண்டு

    தமிழ் வாழ்க

    தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டபோது

    உலகே பூச்செண்டு

    நானும் தமிழும்

    தமிழ்வழிக் கல்வி

    பராசக்தி

    நில அபகரிப்பு

    எனது இந்தியா

    மரம்

    உலகே பூச்செண்டு

    மரபுக் கவிதைகள்

    கவிஞர் சுவாதி

    காணிக்கை

    ஈழம் பற்றி இரக்கம் கொள்ளும்

    எல்லோருக்கும்...

    வெப்பம் சொட்டும் பூக்கள்

    அதிகாலைக் காட்டின் ர்ர்ர்ங்ங்ங்... நிலம் தெளிந்த ர்ர்ர்ங்ங்ங்... கருக்கலில் ர்ர்ர்ங்ங்ங்... காயாம் பூக்களின் கிறங்கடிக்கும் நறுமணத்தின் ர்ர்ர்ங்ங் ஊடாக காதுகளில் சில்லிப்பாய் பாயும் வண்டுகளின் ரீங்காரம்...

    பரந்து கிடக்கும் கண்மாயில் சலுக்...சலுக்.. கணுக்காலளவு சலுக்சலுக்.. வெள்ளி நீரில் தூக்கி அடிவைத்துசலுக்சலுக் நடக்கும் சிலிர்ப்பு.

    திருவிழாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே புதுத்தெப்பம் கட்டுவதற்காக குளத்தில் ஊறப்போட்ட நீண்ட மரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு கைகளால் துடுப்பு போட்டு அக்கரை சென்று மீளும் பிள்ளைப்பிராயம்…

    பெருங்காற்றுக்கு எதிராய் முகங்கொடுத்து முடிக்கற்றை பின்னோக்கி விரைய எல்லைப் பொட்டலில் எடுப்புக் குதிரைகளை பார்க்கச் சென்ற திருநாள் நாட்கள்…

    அருகாமை நகரத்தில் சினிமா பார்த்துவிட்டு பேருந்து ல்லாமல், நடுநிசியில், குறுக்குப் பாதைகளின் வரப்புகளில் சைக்கிள் டயரைக் கொளுத்திக் கொண்டு நடக்கையில், அந்த நெருப்பு கண்டு தூரத்தில் ஊளையிட்டவாறே ஓடித்திரியும் நரிக்கூட்டத்துக்குப் பயந்து தொண்டைக் குழியில் எச்சில் தொட்டு வைத்தவாறு பாட்டுப்பாடி வீரம் காட்டிய பருவ நாட்கள்...

    மார்கழியின் தாமரைக்குளத்தில் மொட்டுகளின் கீழே இலைகளில் வெள்ளி முத்துக்களாய் ததும்பி நிற்கும் இசைப்பாடல்களோடு இணைந்து பாடிய தருணங்கள்…

    கிடாய்வெட்டு நாட்களின் நள்ளிரவில் கருப்புவெளிச்சத்தில் ஊரெல்லாம் மணக்கும் கறிக்குழம்பும் சாம்பிராணியும் கலந்த வாசம்...

    இப்படியான தருணங்கள் எல்லாம் எப்போதோ தொலைந்துபோய் இந்த நகரத்தின் மின்சார அந்தியின் சோடியம் வேபர்வலைக்குள், வாகனத்தில் சிக்னலில் நிற்கிற இந்தநேரத்திலும் நினைவுகளின் ஈர அலைக்கரை அடிமனதை நனைத்துக் கொண்டேதான் இருக்கிறது.

    அந்த நனைவுதான் கவிதை மனங்களை - காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நனைவுகளின் ஈரத்தோடு மனதின் ஈரத்தையும் சேர்த்து இந்த சமூகமாற்றத்திற்கான தனது பங்களிப்பை, 'உலகே பூச்செண்டு’ என்ற குளிர்ந்த பெயரோடு, வெப்பமாக தந்திருக்கிறார்

    Enjoying the preview?
    Page 1 of 1