Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhaiveli Thanile
Mazhaiveli Thanile
Mazhaiveli Thanile
Ebook96 pages15 minutes

Mazhaiveli Thanile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையெழுத்திப் பிரதியில் எழுதத் தொடங்கிய இவர், பூங்குயில் இதழைப் படிக்கும் காலத்திலேயே ஆசிரியராகப் பணியேற்றுள்ளார். கவியரசி, ஜுனியர் சிட்டிசன், கவியருவி, கவித்தென்றல், மங்கையர் செம்மல் போன்ற 24 விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற துறைகளில் புலமை பெற்ற இவர், சுமார் 30 நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகள், பொது மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116602004
Mazhaiveli Thanile

Read more from S. Swathi

Related to Mazhaiveli Thanile

Related ebooks

Reviews for Mazhaiveli Thanile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhaiveli Thanile - S. Swathi

    http://www.pustaka.co.in

    மழைவெளி தனிலே...

    Mazhaiveli Thanile…

    Author:

    எஸ்.சுவாதி

    S. Swathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/s-swathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மழைவெளி தனிலே...

    கவிதைகள்
    எஸ்.சுவாதி
    காணிக்கை

    பட்டாசுகளால்

    குருவிகளும் மற்ற

    சிறு உயிரினங்களும் அழிகின்றன

    என்று தெரிந்து கொண்டதும்

    மத்தாப்புகளில் மலர்ந்தவள்

    இனி

    பட்டாசுகளே வேண்டாமென்று

    இரு வருடமாய் பட்டாசுகளின்றி

    தீபாவளி கொண்டாடும் எ

    ன் சின்னஞ்சிறிய மகள்

    ராகசூர்யா என்ற தேவதைக்கு...

    வாழ்த்துப்பூ

    உணவுகள் சமைப்பதை

    சில வேளை தள்ளிப்போடுவாள்

    அது

    கவிதைகள் சமைப்பதற்காக

    இருக்கும்.

    கவிதைகளுக்கான

    களங்கள்

    இவள் கரங்களை

    பிடித்துக்கொண்டே

    இருக்கிறது

    என்னிலும்

    அதிகமாய்,

    ஆனாலும்,

    இதயம் தொடங்கி

    கண்களில்

    விரியும்

    இவள் கவிதைகளை

    முதலில் சுவைப்பவன் நான்.

    விடியும் முன்

    தொடங்கும்

    இவள் நாட்கள்...

    கவிதைகளினூடே

    வளர்ந்து

    மலர்ந்து

    முடிகிறது

    கவிதைகளாகவே.

    ஆயிரமாயிரம்

    அனுபவங்கள்

    சில கசக்கும்

    சில துவக்கும்

    சில கரிக்கும்

    இத்தனை

    நாட்களின்

    பயணங்களில்

    இவளின் கவிதைகள்

    மட்டும்

    எப்போதும் இனிக்கிறது.

    புத்தகங்கள்

    மட்டும்

    பரிசாய் கேட்பவள்

    என் வாழ்க்கை

    புத்தகத்தின்

    மொத்தமாய்

    போனவள்.

    குறையொன்றும் இல்லை

    என்ற

    குறையின்றி

    வேறில்லை...

    வாழ்த்துக்களுடன்...

    மீரா.செல்வக்குமார்

    .என்னுரை

    எப்போதும் வாழ்க்கை சீராகப் போகவேயில்லை. போனால் அது வாழ்க்கையாகுமா?. அதில் சுவாரஸ்யம் இருக்குமா தெரியவில்லை. எல்லோரையும் போலவேதான் எனக்கும். வாழ்வின் படிநிலைகள் மாறுவதற்கேற்பவே எல்லாம் மாறிவிட்டன. ஒவ்வொறு சரியான நிகழ்வும் எனக்கு திருப்தியையும் எதிர்மறையான நிகழ்வுகள் அல்லது எதிர்மறை என்று நான் சந்தேகம் கொண்ட நிகழ்வுகள் எனக்குப் படிப்பினையும் தந்தன. இப்போதெல்லாம் எவற்றையும் எனக்கு வெறுக்கத் தோன்றவில்லை.

    இது எனது 22வது நூல்.

    Enjoying the preview?
    Page 1 of 1