Mary Endra Maari
()
About this ebook
இந்தகதைத்தொகுப்பில் சற்றே பெரிய சிறுகதைகளும், சிறுகதைகளும் கலந்து இருக்கும். இதில் கற்பனைக்கதைகளுடன் நான் பார்த்து வியந்த நல்ல மனிதர்களும் வளைய வருவார்கள். அவர்களைப்பார்த்து நான் வியந்த வியப்பை உங்களுக்கும் சரியாக கடத்தி விடுவேன் என்று நம்புகிறேன். மிகச்சாதாரண மனிதர்கள் ஆனால் நல்லவர்கள் அவர்களைப்பற்றிய என் விவரிப்பு உங்கள் மனதின் ஏதாவது ஓர் இடத்தைத் தொட்டுவிடும் என்பது உறுதி. அதன் கூடவே என்னை, என் ஆழ்மனதை பாதித்த விஷயங்கள் அடங்கிய சில சிறுகதைகளையும் கலந்து இந்தத் தொகுதியைத் தொகுத்துள்ளேன்.
Read more from Lalitha Shankar
Ninaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsAllopathiyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsVinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsPallathin Manathu Rating: 5 out of 5 stars5/5Kannukutty Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAlamu Paattiyum Koushikum Rating: 0 out of 5 stars0 ratingsEliyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsMafiavum Maaya Ulagamum Rating: 0 out of 5 stars0 ratingsAmputtu Aasai Rating: 0 out of 5 stars0 ratingsIthuthan Kaadhala? Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsBindi Sabji Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Kottai Rating: 0 out of 5 stars0 ratingsMel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsKansuvin Andraada Akkap Porgal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mary Endra Maari
Related ebooks
Kaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Nee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Dheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsShruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsNandhi Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Ondragum Uravaley... Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thisaigal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsThaan Than Sugam Rating: 0 out of 5 stars0 ratingsதான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsKaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Ragasiyam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kandu Naanaada... Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5அழகான ஆபத்து Rating: 0 out of 5 stars0 ratingsAzhagana Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsதாழ் திறவாய்..! Rating: 0 out of 5 stars0 ratingsJeevanaadi Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Mary Endra Maari
0 ratings0 reviews
Book preview
Mary Endra Maari - Lalitha Shankar
https://www.pustaka.co.in
மேரி என்ற மாரி
Mary Endra Maari
Author:
லலிதா சங்கர்
Lalitha Shankar
For more books
https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஆசிரியர் குறிப்பு
என்னுரை
அன்னபூரணி
வெள்ளை மாமி
வடிகால்
மீனாவும் ராஜியும்
நாவல் மரம்
நானே வெச்சு செய்யணும்
அழகின் சிரிப்பு
எதிர்பாராதது
ஸ்ரார்த்தம்
விஜி! உன்னை மறக்க மனம் கூடுதில்லையே!
மேரி என்ற மாரி
மணித்தாத்தா
நெருங்கி வரவா?
சத்துணவு
ஆசிரியர் குறிப்பு
மேரி என்ற மாரி
என்ற இந்தக் கதைத் தொகுப்பின் ஆசிரியர் லலிதா சங்கர் அம்புட்டு ஆசை இவரின் முதல் தொகுப்பு, கதைகள் அனைத்தும் பொதுவாக எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும். அவர்களின் உணர்வுகளை அலசும். நுண்ணிய உணர்வுகளை அழகாக எடுத்துச்சொல்லுவது இவரது சிறப்புத்தன்மை இவர் அடிப்படையில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்க்ஷன் வேலை செய்கிறார்.
என்னுரை
வணக்கம். என் இரண்டாவது புத்தகம் மேரி என்ற மாரி.
இந்த கதைத்தொகுப்பில் சற்றே பெரிய சிறுகதைகளும், சிறுகதைகளும் கலந்து இருக்கும். இதில் கற்பனைக்கதைகளுடன் நான் பார்த்து வியந்த நல்ல மனிதர்களும் வளைய வருவார்கள். அவர்களைப்பார்த்து நான் வியந்த வியப்பை உங்களுக்கும் சரியாக கடத்தி விடுவேன் என்று நம்புகிறேன். மிகச்சாதாரண மனிதர்கள் ஆனால் நல்லவர்கள் அவர்களைப்பற்றிய என் விவரிப்பு உங்கள் மனதின் ஏதாவது ஓர் இடத்தைத் தொட்டுவிடும் என்பது உறுதி. அதன் கூடவே என்னை, என் ஆழ்மனதை பாதித்த விஷயங்கள் அடங்கிய சில சிறுகதைகளையும் கலந்து இந்தத் தொகுதியைத் தொகுத்துள்ளேன். இந்தக்கதைத் தொகுப்பைப் படிக்கப்போகும் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம்.
அநேகப்பிரியங்களுடன்,
லலிதா சங்கர்
அன்னபூரணி
ராதா! விஷயம் தெரியுமா? தங்கம் அக்கா செத்துப்போய்ட்டாளாம்.
என்ன? நிஜம்தானா நீ சொல்றது?
ஆமாண்டி நிஜம்தான்.
அப்படின்னா அந்த ரெண்டு ஜீவன்களின் கதி?
தெரியலயே?
நீ சேது அண்ணாகிட்ட பேசினயா?
பேசினேன். அவருக்குப்பேச வார்த்தைகளே வரல. குலுங்கிக்குலுங்கி அழறார்.
யார் இந்த தங்கம்? அவளின் சாவு ஏன் இப்படி ஒரு பிரளயம் மாதிரி தெரியறது? அதுக்கு நாம ஒரு நாப்பத்தஞ்சு, அம்பது வருஷம் முன்னாடி போகணும்.
அப்போ தங்கத்துக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டு எல்லோரும் சந்தோஷமா அந்தக்கல்யாணத்துக்கு கிளம்பிப்போனாங்க.
அதுக்கு முன்னாடி தங்கம். அவ எப்படி இருப்பான்னா! கருப்பா, கம்பீரமா, தீர்க்கமான பார்வையோடு, உலகத்தின் மேல் சொல்ல முடியாத ஆதங்கமும், ஒரு ஆணின் வீரமும் சேர்ந்த இதெல்லாம் ஒரு பெண்ணுக்கு அழகா இருக்குமா? ம்ம்ம்! அழகாகத்தான் இருக்கும். இருந்தது தங்கத்திடம்.
திருமணம், மாப்பிள்ளை அழைப்பு, அப்பொழுதுதான் சொந்தங்கள் அந்த மாப்பிள்ளையைப்பார்த்தது. அனைவருக்கும் அழைப்பு நேரடியாக திருமணத்தின்போதுதான். மாப்பிள்ளையைப் பார்த்து மொத்த சொந்தங்களும் அதிர்ச்சியில் வாயடைத்துப்போயினர்.
ஏன்? ஏன் இப்படி? நம்ம தங்கத்துக்கு என்ன குறை? வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா?
தாங்க முடியாத ஆதங்கத்துடன் அவளுடைய அத்தை நேராக தங்கத்திடம் வந்தாள்.
தங்கம்! ஏண்டி! ஏன் இந்தக்கல்யாணத்துக்கு சம்மதிச்ச? நான் உன் அம்மாவிடம் பேசறேன். முதல்ல இத நிறுத்தணும்.
இல்ல அத்தை. வேண்டாம். நான் முழு மனசோடத்தான் சம்மதிச்சேன். எனக்கு மாப்பிள்ளையைப்பிடிச்சிருக்கு. நீ வேற எதுவும் பேசாத.
அடி பைத்தியக்காரி! சரி விடு. நான் நேரா உங்க அம்மாகிட்டயே போறேன். உனக்கு புத்திகித்தி கெட்டுப்போச்சா?
இல்ல அத்தை. கண்ணு, மனசை விட வயிறு பிரதானம் அப்படிங்கற உண்மை தெரிஞ்சு புத்தி தெளிவா இருக்கறதுனால்தான் இந்த முடிவு.
இதைக்கேட்டு கன்னத்தில் சப்பென்று யாரோ அடித்ததுபோல இருந்தது அந்த அத்தைக்கு. இருந்தாலும் அவள் நேராக தன் அண்ணியிடம் போனாள்.
அண்ணி! இங்க பாருங்க! நம்ம தங்கத்துக்கு என்ன குறைச்சல்? அவளுக்கு இப்படித்தான் ஒரு மாப்பிள்ளை பார்க்கணும்னு என்ன தலையெழுத்து? முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்க.
இல்லடி! நாங்க தெளிவாத்தான் இருக்கோம். இப்போ என்ன மாப்பிள்ளைக்கு? கொஞ்சம் மூளை பிசகி இருக்கு. பரவால்ல.
பரவால்லையா? உங்க பொண்ணை பாழும் கிணத்துல தள்ளணும்னு முடிவெடுத்து அதை நடத்தறதை பார்த்துகிட்டு நாங்க எப்படி சும்மா இருக்கறது?
ஏன்? இதுக்கு முன்னாடி உன்னால என்ன பண்ண முடிஞ்சுது? சரி நீ அப்போ சின்னவ உன்னால எதுவும் முடியாதுதான் ஆனால் மத்த பெரியவங்கள்லாம் என்ன பண்ணினாங்க? இல்லை அவங்களாலதான் என்ன பண்ண முடியும்? அவங்க அவங்க வயிறை அவங்கவங்கதான் பார்க்கணும். அதுதான் நிஜம். அன்னிக்குத்தான் எனக்கு அந்த நிஜம் தெரிஞ்சுது. ஆனால் தங்கம் இன்னிக்கு அன்னபூரணியா தன்னோட வாழ்க்கையை எங்களுக்காக வாழப்போறா. அதுல அவ தெளிவா இருக்கா. நானும் யோசிச்சுதான் பார்த்தேன். எனக்கும் வேற வழியில்லை. தங்கம் சரியான முடிவுதான் எடுத்திருக்கா.
ஏன் அண்ணி! ஒரு படிச்ச, கொஞ்சம் அறிவோட, சாதாரண ஒரு மாப்பிள்ளையைப்பார்த்து கல்யாணம் பண்றது என்ன அத்தனை கஷ்டமா?
ஆமாம்! கஷ்டம்தான். என்னால ஒரு குந்துமணி தங்கம் கூட போடமுடியாது. நீயே சொல்லு! எனக்கு எங்க அப்பா நல்லா படிச்ச அறிவாளியைத்தான் கல்யாணம் பண்ணி வெச்சார். ஆனால் என்ன நடந்தது? ஒரு பொட்டுத்தங்கமோ பணமோ இல்லாம நாலு குழந்தைகளோட நடுத்தெருவுல என்னை உங்க அண்ணன் விட்டுட்டுப்போனபோது என்கூட யார் இருந்தா? யார் என் குழந்தைகளுக்குச் சோறு போட்டா?
என்னோட பைத்தியக்காரத்தம்பி, ஒண்ணும் தெரியாதவன் அவனோட அனுபவ பாத்யதையான சொத்துதான் அன்னிக்கு எனக்குச்சோறு போட்டது.