Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mafiavum Maaya Ulagamum
Mafiavum Maaya Ulagamum
Mafiavum Maaya Ulagamum
Ebook157 pages58 minutes

Mafiavum Maaya Ulagamum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாபியாவும் மாய உலகமும் புத்தகம் பலநேரங்களில் பலவித மனநிலைகளில் எழுதிய பல கதைகளின் தொகுப்பு. இந்தப்புத்தகத்தில் ஒவ்வொரு கதைக்கும் கீழே இந்தக்கதையின் பிறப்பு பற்றிய குறிப்புகளை எழுதி இருக்கிறேன். அதுவே இந்தப்புத்தகத்தின் சிறப்பாக கருதுகிறேன். இந்தப்புத்தகத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.

அநேக பிரியங்களுடன்,

லலிதா சங்கர்.

Languageதமிழ்
Release dateJun 3, 2023
ISBN6580142209903
Mafiavum Maaya Ulagamum

Read more from Lalitha Shankar

Related to Mafiavum Maaya Ulagamum

Related ebooks

Reviews for Mafiavum Maaya Ulagamum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mafiavum Maaya Ulagamum - Lalitha Shankar

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மாபியாவும் மாய உலகமும்

    சிறுகதைகள்

    Mafiavum Maaya Ulagamum

    Sirukathaigal

    Author:

    லலிதா சங்கர்

    Lalitha Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    விட்டுப்பிடி

    பார்வை மட்டும்

    வலி

    முரட்டு சிங்கிள்

    முத்துக்கிருஷ்ணன்

    நுணலும் கெடும் (எதனால்?)

    மாபியாவும் மாய உலகமும்

    நாட்டியத்தாரகை

    தொடுகை

    தாயா? தாய்நாடா?

    கல்யாணமும் கருமாதியும் நடுவுல இந்த இதுவும்

    தலைநகரம் வருடம் 1997 - 2004

    சரக் சரக் சரக் பீதி!

    கண்ணுக்குள் ஒரு கவிதை

    எங்கே அவள்?

    இளிச்சவாயள்

    ஆங்காரத் தீ!

    என்னை விட்டுடுங்கோளேன்!

    அன்பே! அன்பே! கொல்லாதே!

    அம்மா எனும் குழந்தை

    அழகும் அழுக்கும்

    அந்தப்பார்வையில் இருந்தது...

    விட்டுப்பிடி

    அம்மா! நானும் உன்கூட கடைக்கு வருவேன்.

    நீ எதுக்கு இப்போ? அம்மா நிறைய சாமான் வாங்கணும் வேற வேற கடைக்குப் போகணும். உனக்கு என்ன வேணும்னு சொல்லு, நானே வாங்கிட்டு வந்துருவேன்.

    ம்ஹூம், நானும் வருவேன்.

    ரேவதி! பையன் வர்றேன்னு சொல்றான்ல? கூட்டிட்டுத்தான் போயேன்?

    இல்லேங்க, இவன் ஒண்ணு வாங்கறேன்னு ஒம்போது வாங்குவான். அஞ்சு ரூபாய்க்கும் இருக்கும், அம்பது ரூபாய்க்கும் இருக்கற சாமான்னா, இவன் அம்பது ரூபா உள்ளதுதான் எடுப்பான். இவனை சமாளிக்கறது ரொம்ப கஷ்டங்க.

    தம்பி! உனக்கு என்ன வேணுமோ சொல்லு. அம்மா வாங்கிட்டு வருவாங்கடா.

    இல்ல, நான் போகணும். நானும் வருவேன்.

    இப்படிப் பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது? வந்து தொலை.

    (நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சிவாவின் அடமும் பிடிவாதமும் வளர்ந்தது.)

    அம்மா! எனக்கு ஜியாமென்ட்ரி பாக்ஸ் வேணும்.

    சரி நான் வாங்கித்தர்றேன்.

    நானும் வருவேன்.

    சரி வா. வரவேணாம்னா நீ கேக்கவா போற?

    கடையில்,

    அம்மா! எனக்கு இந்த ஜெயாமென்ட்ரி பாக்ஸ் வேணாம். வயலேட்டும், பர்ப்பிலும் கலந்த கலர்ல சூரஜ் வெச்சுருந்தான் அந்த மாதிரி ஒரு பாக்ஸ்தான் வேணும்.

    அந்த மாதிரி இங்க இருக்கான்னு தெரியலையே!

    இருக்கும். இரு நான் பாக்கறேன்.

    அம்மா! இங்க இருக்கு பாரு!

    டேய்! இது ஐநூறு ரூபான்னு போட்டிருக்கான்டா! அம்மாகிட்ட அவ்வளவு காசு இல்லையே!

    இந்த ஆரஞ்சு கலர் பாக்ஸ் பாரு! சூப்பரா இருக்கும். அந்தக் காலத்துலயே இது விலை ஜாஸ்தி. எங்க அப்பாவால் வாங்கித்தர முடியாதுன்னு நான் கேட்டதில்லை, விலை மலிவான வேற ஒண்ணுதான் நான் அப்போ வாங்கினேன். இன்னிக்கும் இதுதான் நல்ல ஜியாமெட்ரி பாக்ஸ். இதுவே நூத்தம்பது ரூவா. இத வாங்கிக்கோ.

    ம்ஹூம், எனக்கு அந்த பாக்ஸ்தான் வேணும்.

    கண்ணு! என்கிட்டே காசு இல்லடா. இருநூத்து அம்பது ரூவாதான் இருக்கு.

    சரி போ. என்னவோ பண்ணு.

    அதை வாங்கிக் குடுக்கும் வரை அவளுக்குத் தெரியாது இனிமேல்தான் தலைவலி ஆரம்பம் என்று. அன்றிலிருந்து தினம் தினம் ஒரு புகாரும் புலம்பலுமாக அவன் அவளைச் சித்திரவதை செய்தான்.

    முதல்முறை அவன் கேட்டு அந்த சாமானை வாங்கிக் குடுக்காதது இந்த அளவுக்கு மன உளைச்சலைத் தரும் என்று அவள் சற்றும் நினைக்கவில்லை. எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்னதான் தீர்வு?

    அம்மா! பாரு! அந்த காம்பஸ் சரியாவே இல்லை. கரெக்ட்டா நான் வட்டம் வரையும்போது விரிஞ்சிடுச்சு. அதுக்குத்தான் இது வேணாம்னு நான் சொன்னேன்.

    எங்க? கொண்டு வா பாப்போம்?

    ஏன்டா! நல்லா டைட்டாதானே இருக்கு?

    உனக்குத்தான் இருக்கு. எனக்கு இல்லை. எனக்கு இந்த ஜாமென்ட்ரி பாக்ஸ் பிடிக்கவே இல்லை. கடைசில பாரு! கணக்குல நான் கம்மியா மார்க் வாங்கப்போறேன். ஆனால் அதுக்கு நான் காரணம் இல்லைப்பா.

    சிவா! என்ன நினச்சுக்கிட்டிருக்க மனசுல? வரவர உன் அராஜகம் அதிகமாகிட்டே போகுது. அத்தனை பிடிவாதமா உனக்கு? உன் முதுகுல ரெண்டு போட்டாத்தான் சரியா வரும்போல. நானும் போனாப்போகுது போனாப்போகுதுன்னு எத்தனை நாள்தான் விட்டுக்குடுத்துட்டே போறது? உன்னை இத்தனை நாள் அடிக்காம வளர்த்தது என் தப்புதான். ரெண்டு சாத்து சாத்தினாள்.

    (அந்த இரண்டு அடிகள் அவளின் தலைவலியை இன்னும் அதிகமாக்கியது. அவனின் கோபம் பல்கிப்பெருகி, சிவா தன் எதிர்ப்பை இன்னும் பலமாக காண்பிக்கவும், செய்வதறியாமல் யோசித்து யோசித்து அவளுக்கு மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது.

    நம்ம அம்மா ஆறு குழந்தைகளை அசால்ட்டா வளர்த்துட்டாங்க. ஆனா நாம ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு படும்பாடு இருக்கே! இந்தப் பிள்ளையை எப்படி உருப்படியா வளர்க்கப்போறேனோ தெரியலையே! ம்ம்ம்!)

    அன்று,

    சிவா! வா! கடைக்குப் போகலாம்.

    அம்மா! எந்தக் கடைக்குப் போறோம்?

    அவனிடம் பதில் எதுவும் சொல்லாமல் கூட்டிக்கொண்டு போகிறாள்.

    இந்தா! இந்த பாக்ஸ்தானே நீ கேட்டது?

    ம்ம்ம்! ஆனால் அது விலை ஜாஸ்தியாச்சே!

    ஆமாம். ஆனால் அன்னிக்கே உனக்கு வாங்கிக் குடுக்காம நான் தப்பு பண்ணிட்டேன் அதான். இந்தா!

    அம்மா! பரவால்ல, எனக்கு வேணாம்.

    இல்ல, இல்ல. நீ வாங்கிக்கோ.

    திரும்பி வரும் வழியில்,

    அம்மா! சாரிம்மா!

    சிவா! எனக்கு சாரில்லாம் சொல்ல வேண்டாம். ஆனால் அம்மா நான் வளர்ந்த மாதிரிதான் உன்னை வளர்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதுல நான் எங்கயோ தப்புபண்ணிட்டேனோன்னு எனக்குத் தோணுது. அதுதான் எனக்கு வருத்தமா இருக்கு.

    இல்லம்மா, நீ என்னை நல்லாத்தான் வளர்க்கற.

    இல்லடா கண்ணு. நான் சின்ன வயசுல எங்க அம்மா, அப்பாகிட்ட எதுவும் கேட்டது இல்லை. சின்ன வயசுல நான் ஒருநாள்கூட பிடிவாதம் பிடிச்சதா எனக்கு ஞாபகம் இல்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம்கூட வாய்ச்சதில்லை. அப்போ எங்கயோ, எதுலயோ நாம தப்பா இருக்கோம். இல்ல கண்ணு?

    அம்மா!

    இப்போ நம்ம அப்பா வேலைக்குப்போய் சம்பாதிக்கறார். அம்மா உன்னைப் பாத்துக்கறதுக்கு வீட்டுலதான் இருக்கேன். நானும் அப்பாவும் நீ கேக்கறதெல்லாம் வாங்கிக் குடுக்கணும்னுதான் நினைக்கறோம். எங்க குழந்தை என்னைக்கும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னுதான் எங்களுக்கு ஆசை. ஆனால் நாம சூரஜ் அளவுக்கு பணக்காரங்க இல்லை. அதுக்காக ரொம்ப ஏழையும் இல்லை. ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வெச்சுக்கோ சிவா! நீ எந்த சாமான் கேட்டாலும் கேக்கறதுக்கு முன்னாடி இதை அம்மாவால வாங்கித்தர முடியுமான்னு ஒரு தடவை யோசிச்சுட்டு அப்புறமா கேளு. அப்படி மட்டும் நீ கேட்டேன்னா நான் என்னைக்கும் உனக்கு இல்லைங்கற பதிலே சொல்லமாட்டேன். எங்க அம்மா அப்பா எனக்கு சொல்லாமல் கத்துக்குடுத்த இந்த விஷயம், உனக்கும் சொல்லாமலே புரியணும்னு நான் எதிர்பார்த்தது என் தப்புதான்.

    இன்னிக்கு இதோ இந்த ஐநூறு ரூபாய்ல நான் நம்ம வீட்டுக்கு சமையலுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான எண்ணையை வாங்கிடுவேன். அதுக்காக வெச்சிருந்த பணம்தான் அது.

    அம்மா! நான் உன்கிட்ட இப்போ வாங்கித்தரச் சொல்லலையே! வா! இதை திருப்பிக் கொடுத்திடலாம்.

    ம்ஹூம். இது இப்படியே இருக்கட்டும். உன்னோட பிடிவாதம் எப்பப்போ தலைதூக்குதோ அப்ப இன்னிக்கு நடந்த இந்த சம்பவம் உனக்கு ஞாபகம் வந்து, உன் பிடிவாதத்தை குறைச்சதுன்னா அதுவே எனக்குப் போதும்.

    அம்மா உனக்கு என்மேல கோபம் இல்லையே?

    சே! சே! இல்லவே இல்லை கண்ணு.

    அம்மா! நிஜம்மாவே எனக்கு பிடிவாதம் பிடிக்கறது பிடிக்கலைதான் ஆனா...!

    ஆனா என்ன?

    எனக்கு எதையாவது பார்த்து பிடிச்சிடுச்சுன்னா உடனே அதை வாங்கணும்னு தோணுது. அது கிடைக்கலேன்னா கோபம் கோபமா வருது. ஆனால் நான் வேணும்னே அப்படிப் பண்ணல. அதுவா வருது.

    சரி, பரவால்ல விடு. நாம இந்தப் பிடிவாதத்தை ஒழிச்சுக்கட்டிடலாம்.

    எப்படிம்மா?

    யோசிப்போம். அதுக்கு முன்னாடி பாப்பாக்கு இன்னிக்கு நைட் என்ன வேணும்?

    கீ ரோஸ்ட்.

    ஓகே, டன். இன்னிக்கு நிம்மதியா சாப்டுட்டு தூங்குவயாம். மத்ததெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்.

    சிவா! இங்க வா!

    என்னம்மா?

    இந்தா.

    என்னம்மா இது?

    முன்னூறு ரூபாய்.

    எதுக்கு?

    இந்த மாசம் உன்னோட செலவுக்கு.

    ஐ! நிஜம்மாவா?

    ஆமாம். இந்த முன்னூறு ரூபாயை இந்த மாசம் பூரா நீ செலவு பண்ணிக்கலாம் உன் இஷ்டம்போல. ஆனால் என்கிட்ட இதைத்தவிர

    Enjoying the preview?
    Page 1 of 1