Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amputtu Aasai
Amputtu Aasai
Amputtu Aasai
Ebook93 pages34 minutes

Amputtu Aasai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அம்புட்டு ஆசை என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு இலக்கியம் நிறைந்ததல்ல ஆனால் இயல்பும் யதார்த்தமும் நிறைந்தது. கொஞ்சம் கதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சிந்தனைத்துளிகள், கொஞ்சம் சோகம், கொஞ்சம் குறும்பு இவை அனைத்தையும் கலந்த கதைகளைத் தொகுத்துள்ளேன். படித்துப்பார்த்து தங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்லி நான் கேட்க விரும்புகிறேன். இந்தகதைத்தொகுப்பு வருவதற்கு காரண கர்த்தாவான திருமதி. உமா அபர்ணா அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம்.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580142209175
Amputtu Aasai

Read more from Lalitha Shankar

Related to Amputtu Aasai

Related ebooks

Reviews for Amputtu Aasai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amputtu Aasai - Lalitha Shankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்புட்டு ஆசை

    Amputtu Aasai

    Author:

    லலிதா சங்கர்

    Lalitha Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பரிதாபத்துடன் ஒரு பார்வை

    ஒரு வட்டம்

    ஒரு அனுபவம்

    அன்புப்பிச்சை

    அம்மா

    அம்புட்டு ஆசை

    அருணா

    சிந்திச்சு செயல்படு

    கொரோனாபோபியா

    இரண்டு பல்புகள்

    இணைந்து வாழ்தல்

    இடைவெளி

    அவன்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

    பரிதாபத்துடன் ஒரு பார்வை

    காலை நேரத்தில் பரபரப்பாக வேலைகளை முடித்துவிட்டு அலங்கார பூஷணியாக நிற்கும் தன் மனைவி ரேவதியை ஆச்சர்யமாக பார்த்தபடி பூமிநாதன், என்ன கலங்கார்த்தால இத்தனை அலங்காரம்?, எங்க கிளம்பிண்டிருக்க நீ? தெரியாதா உங்களுக்கு? நம்ம எதிர்த்த பிளாட்டுக்கு இன்னைக்கு புதுசா குடித்தனம் வரப்போறாளே! பால் காச்சும்போது கூப்பிட்டா போக வேண்டாமா? அதான் ரெடி ஆயிட்டேன். பூமிநாதன் அமைதியாக இருந்தார். அவருக்குத்தான் தன் மனைவியைப்பற்றி தெரியுமே. பெண்மணி அவள் கண்மணி படத்தில் வரும் விசு சார் கேரக்டரின் பெண் அவதாரம் தான் ரேவதி. அதில் வரும் பிரதாப் போத்தன் பூமிநாதன். இருவருக்கும் இருக்கும் பிரியம் சொல்ல முடியாது ஆதர்ச தம்பதிகள் தான். ரேவதியின் இந்த குணம் ஒன்றுதான் இருவருக்கும் அவ்வப்போது பிணக்கு வர காரணம். கடவுள் அவர்களுக்கு குழந்தை வரம் கொடுக்கவில்லை. அதனால் என்ன? ரேவதிதான் உலகத்தையே தன் குழந்தையாக நினைப்பவள் ஆயிற்றே! அடுத்தவர்களை பற்றி கவலைப்படும் அவளுக்கு அவளை பற்றி கவலைப்பட ஏது நேரம்?

    கதவு தட்டப்பட்டது, ஆவலுடன் ரேவதி கதவை திறக்க, அழகான 25 லிருந்து 30 வயதில் ஒரு இளைஞன் சிரித்த முகத்துடன் கையில் பால் டம்ளருடன் நின்றிருந்தான். எதிர் வீட்டுக்கு வந்திருக்கோம், பால் எடுத்துக்குங்க. என்று சொல்பவனை பார்த்து ரேவதிக்கு சப்பென்று ஆகிவிட்டது. வீட்டிற்கு கூப்பிடாமல் பால் டம்ளருடன் வந்துட்டானே. ஆனாலும் அவள் விடவில்லை. உள்ள வாப்பா! இல்லை ஆண்ட்டி சாமான் அடுக்கும் வேலை இருக்கு இன்னொருநாள் வருகிறேன் என்று கூறியபடி கையோடு பால் டம்ளரையும் வாங்கி சென்று விட்டான். ரேவதியின் இந்த பரிதவிப்பை பார்த்த பூமிநாதனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

    அவளுக்கு எதிர் வீட்டில் குடிவந்திருப்பது யார், எத்தனை பேர், அவர்கள் எப்படி என்று தெரிந்துகொள்ளாமல் மண்டை வெடிப்பது போல் இருந்தது. ஒரு மூன்று வயது குட்டி வாண்டு வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது, அவன் தந்தை பால் கொண்டுவந்த இளைஞன், அவன் மனைவி கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவள் குரலும் கேட்கவில்லை, ஆளையும் பார்க்க முடியவில்லை. எப்படி அவளை பார்ப்பது என்று யோசித்தே ஒருவாரம் ஓடிவிட்டது. காலையில் ரேவதி எழும் முன்பே எதிர் வீட்டு வாசலில் முத்து பதித்தது போல கோலம் ஜொலிக்கும். தினமும் விதம் விதமாக அசத்தலான கோலங்கள். அந்த தேவதை எப்படி இருப்பாளோ? நாகரிக காலத்தில் வலிய போய் பேசுவது கொலைக்குத்தமாக இருக்கே என்ன செய்ய? கொக்கு போல சரியான சமயத்திற்கு காத்திருந்தாள் ரேவதி.

    அந்த சமயமும் வந்தது குப்பை போடும் சாக்கில். வழக்கமாக அந்த இளைஞன் தான் குப்பையை போட வருவான். அன்று இளைஞன் அலுவலகம் சென்ற பிறகு குப்பைக்காரன் வந்துவிட்டான். இதுதான் சரியான சமயம் எதிர் வீட்டு பெண் வரும்போது கப்பென்று பிடித்து பேசவேண்டியதுதான். கதவு திறந்தது. மாநிறத்தில் ஒரு கிராமத்து தேவதை மின்னல் வேகத்தில் குப்பையை போட்டுவிட்டு கதவை அடைத்துவிட்டது. ஆனால் அந்த தேவதையின் பார்வையில் ஒரு சோகம் தெரிந்ததோ? பிரமையா அது? அவளை பார்த்துக்கொண்டு நிற்கும் ரேவதியையோ அல்லது யாரையுமே அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ம்ம்ம்ம்.

    அடுத்த வாரம் சனிக்கிழமை அந்த இளைஞன் தன் மகனுடன் வெளியே வந்தவன் கோபமாக தன் மனைவியை திட்டியபடி வெளியேறினான். அவனே கதவையும் அறைந்து சாத்தினான். வீட்டுக்கு வீடு வாசப்படி இது எல்லார் வீட்டிலும் நடப்பது தானே. ரேவதி இதை பெரிதுபடுத்தவில்லை அந்த ஒரு நிகழ்வு நடக்கும் வரை. ஒரு நாள் ரேவதி கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும்போது எதிர் வீட்டு குழந்தை தன் நண்பனிடம் எனக்கு புது அம்மா வரப்போறாங்களே என்று சத்தமாக சொல்லிக்கொண்டிருந்தான். இதைகேட்டவுடன் இவளுக்கு தூக்கிவாரி போட்டது. அவனை அருகில் அழைத்து கேட்க எனக்கு புது அம்மா வரப்போறா என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். வீட்டிற்கு வந்து தன் கணவனிடம் புலம்பி புலம்பி அவனும் ஒரு வழி

    Enjoying the preview?
    Page 1 of 1