Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanal Manakkum Kanneer
Kanal Manakkum Kanneer
Kanal Manakkum Kanneer
Ebook138 pages44 minutes

Kanal Manakkum Kanneer

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466862
Kanal Manakkum Kanneer

Read more from Devibala

Related to Kanal Manakkum Kanneer

Related ebooks

Related categories

Reviews for Kanal Manakkum Kanneer

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanal Manakkum Kanneer - Devibala

    1

    அப்பா வந்தாச்சு! மூன்று வயது சுதா குரல் கொடுத்தபடியே ஓடி வந்தது.. படியேறி வந்தான், ராம்கி.

    அவன் மேல் தொற்றிக்கொண்டது.

    அதைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

    அப்பாவை விட்றி! இப்பத்தானே வந்திருக்காங்க. முகம் அலம்பிட்டு காபி குடிக்கட்டும்!

    குழந்தையை ஒண்ணும் சொல்லாதே பிரமீ

    அவன் உட்கார்ந்து கொண்டான்.

    எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கே?

    சும்மா சும்மா என்ன வாங்கிட்டு வருவாங்க?

    பிரமிளா காபியைக் கலந்துகொண்டே கேட்டாள்.

    இன்னிக்கு அப்பாவுக்கு சம்பள நாள்! தெரியாதா எனக்கு? அவன் சிரித்தபடி ஸ்வீட்ஸ் எடுத்துத் தந்தான்.

    அழகான ஒரு கவுனை வெளியே எடுத்தான்.

    அய்.... புதுஃபிராக்கு அப்பா இதுக்கு மேட்சா செருப்பும்; வளையலும் பொட்டும் வேணும்!

    மூணு வயசுகூட முடியலை. ஆசையைப் பாரு! போய் விளையாடுடா கண்ணா!

    அது ஓடிவிட்டது.

    மல்லிகைப் பூ பொட்டலத்தை எடுத்துத் தந்தான், பிரமிளாவிடம்.

    என்னா இன்னிக்கு அமர்க்களம்? அரியர்ஸ் ஏதாவது வந்ததா?

    அவன் ஒன்றும் பேசாமல் சம்பளக் கவரை எடுத்துத் தந்தான்.

    அதை எடுத்துக்கொண்டு சாமி படிக்குப் போனாள், பிரமிளா.

    வைத்துவிட்டு, மல்லிகைப் பூவைப் பிரித்து அவனிடம் தந்தாள்.

    வச்சு விடுங்க!

    வைத்துவிட்டான்.

    பூ, இனிப்பு, புதுத்துணி இதெல்லாம் தாங்குமா? இந்த மாசம் பண்டிகைகூட இல்லையே!

    காபியைக் கொண்டா!

    அவள் தர குடித்தான்.

    டிபன் பண்ணட்டுமா?

    வேண்டாம்.

    லோன் அப்ளை பண்ணியிருந்தீங்களே! கிடைச்சதா?

    அவன் பேசவில்லை.

    என்ன கேட்டாலும் இன்னிக்கு நீங்க பதிலே சொல்றதில்லை! என்னாச்சு உங்களுக்கு?

    சம்பளக் கவரை எடுத்து எண்ணிப் பாரு!

    ராத்திரி பார்த்துக்கலாம்!

    இல்லை! இப்ப எண்ணு!

    அவள் காரணம் புரியாமல் அதை எடுத்து வந்து எண்ணத் தொடங்கினாள்.

    ரெண்டாயிரம் ரூபா அதிகம் இருக்கு! லோன் கிடைச்சதானு நான் கேட்டப்ப இல்லைனீங்க!

    இது லோன் இல்லை!

    பின்ன போனஸா?

    அதுவும் இல்லை!

    சரி நீங்களே சொல்லுங்க!

    கணக்கு தீர்த்துட்டான்!

    புரியலை!

    வேலையை விட்டு எடுத்தாச்சு!

    எ.... என்னது? வே.... வேலை போயிடுச்சா உங்களுக்கு?

    தமிழ் யூனிட்டை மூடப் போறான். என்ன பொல்லாத யூனிட்? எட்டு பேர் உள்ள ஒரு கன்சல்டன்ஸி. எட்டு வருஷமா நடத்திட்டு வர்றான். தனி மனுஷன். திடீர்னு மூடப்போறான். அவனை எதிர்த்து லேபர் கோர்ட்டுக்கா போக முடியும்?

    அய்யோ....!

    நல்லவன். ஆளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் அதிகம் தந்து வீட்டுக்கு அனுப்பினானே! அந்த மட்டுல மனிதாபிமானம் இருக்குன்னு சந்தோஷப்படணும்!

    என்னங்க செய்வோம் இனி?

    தெரியலை. இன்னும் பத்து நிமிஷத்துல முடிவெடுக்கப் போறோமா? ஏன் பதட்டப்படறே? மனுஷ வாழ்க்கைனா எல்லாம்தான்!

    அப்பா!

    என்னடா ராஜா?

    வாசல்ல பலூன் வந்திருக்கு

    இல்லை போடி. எங்க வாழ்க்கையே பலூனைவிட மோசமா இருக்கு!

    ப்ச்! குழந்தைக்கு என்ன தெரியும்? இந்தாடா கண்ணு! நீ போய் வாங்கிக்க!

    சில்லறை எடுத்துத் தந்தான்.

    இரவு சாப்பாடு வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

    குழந்தையும் உறங்கிய பிறகு, விளக்கை அணைத்துவிட்டுக் கூடத்துக்கு வந்தார்கள்.

    என் மாசச் சம்பளம் ரெண்டாயிரம்தான், பிடித்தம்போக. அதை இந்த மாசச் செலவுக்கு வை. அந்த உபரி ரெண்டாயிரத்தை அடுத்த மாசத்துக்கு ஒதுக்கு. அப்புறம் யோசிக்கலாம்!

    அதுக்குள்ளே வேலை கிடைக்குமா உங்களுக்கு?

    எப்படி எனக்குத் தெரியும் பிரமீ! முயற்சி செய்யாமலா இருப்பேன் நான். நமக்கு நேரம் சரியா இருக்கணும்!

    நான் வேலை தேடட்டுமா?

    உனக்கு எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படிப்பு. டைப்பிங் இல்லை. ஷார்ட் ஹேண்ட் தெரியாது. என்ன வேலை கிடைக்கும்? எனக்கே எதுவும் தெரியாம இந்த முதலாளி தயவுல இத்தனை நாள் இருந்துட்டேன். எட்டு வருஷம். என்னோட இருபத்திரண்டாவது வயதுல கிடைச்ச வேலை. இப்ப முப்பது. யாரும்மா எனக்கு வேலை தருவாங்க? என் நிலைமையே இப்படி இருந்தா, உனக்கு எப்படி?

    ஏதாவது செஞ்சுதானே ஆகணும்?

    யோசிப்போம்!

    என்னங்க!

    சொல்லு

    உங்கப்பா, அம்மா, அண்ணன் வீட்டுலதானே இருக்காங்க!

    ஆமாம்!

    உங்கப்பாவுக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபாய் பென்ஷன் உண்டு இல்லையா?

    ம்....

    அதை இங்கே போட்டுட்டு கொஞ்ச நாளைக்கு நம்மோட இருந்தா நமக்கும் நிம்மதியா இருக்கும். அதுக்குள்ளே ஏதாவதொரு வழி பிறக்காதா நமக்கு?

    ராம்கி பேசவில்லை.

    ஏன் பேசலை?

    நாளைக்கு அப்பாவைப் போய்ப் பார்க்கறேன்!

    அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் சம்பாதிக்கறாங்க. பெரியவங்க உதவி அவங்களுக்கு அவசியமில்லையே

    இல்லைதான்!

    நீங்களும் ஒரு பிள்ளைதானே? சொல்லிப்பாருங்க

    சரி! நீ தூங்கு

    நான் சொன்னது உங்களுக்கு சரியா படலையா?

    சரிம்மா! மத்தவங்களைப் பற்றி - அது பெத்தவங்களாவே இருந்தாலும் - நாம முடிவெடுக்க முடியுமா?

    சற்று நேரத்தில் பிரமிளா உறங்கிவிட்டாள்.

    ஆனால் ராம்கிக்கு உறக்கம் வரவில்லை.

    ‘சொல்லலாமா அப்பாவிடம்?’

    ‘பெற்றோரிடம் சொல்ல என்ன கூச்சம்?’

    ‘அப்பாவுக்கு தன் பணத்தில் பத்து காசு தர மனம் வராது. அப்படியே அவர் தர முன்வந்தாலும் அம்மா தடுத்து விடுவாள்.’

    எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஆறு வருஷம் வீட்டில் இருந்தபோது பல விஷயங்களை அவன் கூர்ந்து கவனிக்கத்தான் செய்தான்.

    அண்ணணைவிட நாலு வயது இளையவன் ராம்கி.

    அண்ணன் குரு ஒரு வங்கியில் அதிகாரி. அதனால் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பெண்ணைத்தான் மனைவியாகத் தேர்ந்தெடுத்தான்.

    முதல் ஒரு வருடம் அம்மா மருமகளை நன்றாகவே ஆட்டம் காட்டினாள். புரிந்து கொண்டுவிட்ட நித்யா, கணவனை சுலபமாகத் தன் பக்கம் திருப்பிவிட்டாள். ஆறே மாதத்தில் வேலைக்குப் போகும் மனைவி. அவள் சம்பளமும் தேவையாக இருந்ததால் குருவால் பேச முடியவில்லை.

    இவனுக்கு வேலை கிடைத்து மூன்று வருடங்கள் சம்பளத்தை அப்பா கையில் தந்துவிட்டு டீ, காபிக்குக்கூட அவரிடம்தான் கேட்டு வாங்கினான்...

    இவனுக்கு வரும் ஆயிரத்து நானூறு ரூபாய் சம்பளத்தை பெரியவனிடம் செலவுக்குத் தந்துவிட்டு, பென்ஷன் பணத்தை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார், அப்பா.

    ராம்கியின் 26வது வயதில் கல்யாணப் பேச்சு.

    வெகு சுமாரான குடும்பத்திலிருந்துதான் பிரமிளா வந்தாள்.

    தாய் இல்லாப் பெண். வயதான நோயாளி அப்பா. இவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் போதும் என்ற அண்ணன், அண்ணி!

    அம்மா பிரமிளாவிடமும் ஒரு வருட காலம் தன் மாமியார்தனத்தை அதிகபட்சம் காட்டினாள்.

    சுதாவை பிரமிளா சுமக்கும் போது அம்மா அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்ட மாமியார்களை உலகத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது.

    ராம்கி, பிரமிளா இருவரும் மௌனமாகத்தான் இருந்தார்கள்.

    பிரசவம் பார்க்க

    Enjoying the preview?
    Page 1 of 1