Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tolkappiyar Muthal Bharathi Varai
Tolkappiyar Muthal Bharathi Varai
Tolkappiyar Muthal Bharathi Varai
Ebook162 pages55 minutes

Tolkappiyar Muthal Bharathi Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரியோர்களின் பொன்மொழிகளை மட்டும் கொடுத்தால் அதிகம்பேர் படிப்பதில்லை. பாடப் புத்தகத்தில் இருப்பது போல பெரியோர்களின் வாழ்க்கை பற்றி எழுதினாலும் நிறைய பேர் படிப்பதில்லை. நீண்ட பேட்டிகள் என்றாலும் படிக்க மாட்டார்கள். ஆனால் சுவையான, சர்ச்சைக்குரிய தலைப்பு கொடுத்தால், பலர் கவனத்தை ஈர்க்க முடிகிறது. இதை மனதிற் கொண்டு 29 பெரியோர்களை சுருக்கமாக ஒரே நிமிடத்தில் பேட்டி காண்பது போல சிந்தித்து, அவரவர்கள் சொன்ன முக்கிய கருத்துக்களை கற்பனைக் கேள்விகள் மூலம் வெளிக் கொணர்ந்ததே இந்நூல்...

Languageதமிழ்
Release dateMay 31, 2022
ISBN6580153508359
Tolkappiyar Muthal Bharathi Varai

Read more from London Swaminathan

Related to Tolkappiyar Muthal Bharathi Varai

Related ebooks

Reviews for Tolkappiyar Muthal Bharathi Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tolkappiyar Muthal Bharathi Varai - London Swaminathan

    http://www.pustaka.co.in

    தொல்காப்பியர் முதல் பாரதி வரை

    Tolkappiyar Muthal Bharathi Varai

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. அப்பருடன் 60 வினாடி பேட்டி

    2. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

    3. ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி

    4. இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி

    5. கண்ணதாசனுடன் 60 வினாடி பேட்டி

    6. கம்பனுடன் 60 வினாடிப் பேட்டி

    7. காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி

    8. சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

    9. சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி

    10. சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி

    11. சுந்தரருடன் 60 வினாடி பேட்டி

    12. தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி

    13. தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

    14. திரிகூடப்ப ராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி

    15. திருஞான சம்பந்தருடன் 60 வினாடி பேட்டி

    16. திருமூலருடன் 60 வினாடி பேட்டி

    17. தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி

    18. பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி

    19. பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி

    20. பாரதியுடன் 60 வினாடிப் பேட்டி

    21. மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி

    22. வள்ளலாருடன் 60 வினாடி பேட்டி

    23. வள்ளுவருடன் 60 வினாடிப் பேட்டி

    24. ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி

    25. 60 SECOND INTERVIEW WITH ADI SHANKARA

    26. 60 SECOND INTERVIEW WITH SWAMI VIVEKANANDA

    27. 60 SECOND INTERVIEW WITH SATHYA SAI BABA

    28. 60 SECOND INTERVIEW WITH THE BUDDHA

    29. 60. SECOND INTERVIEW WITH SOCRATES

    முன்னுரை

    பெரியோர்களின் பொன்மொழிகளை மட்டும் கொடுத்தால் அதிகம்பேர் படிப்பதில்லை. பாடப் புத்தகத்தில் இருப்பது போல பெரியோர்களின் வாழ்க்கை பற்றி எழுதினாலும் நிறைய பேர் படிப்பதில்லை. நீண்ட பேட்டிகள் என்றாலும் படிக்க மாட்டார்கள். ஆனால் சுவையான, சர்ச்சைக்குரிய தலைப்பு கொடுத்தால், பலர் கவனத்தை ஈர்க்க முடிகிறது. இதை மனதிற்கொண்டு 29 பெரியோர்களை சுருக்கமாக ஒரே நிமிடத்தில் பேட்டி காண்பது போல சிந்தித்து, அவரவர்கள் சொன்ன முக்கிய கருத்துக்களை கற்பனைக் கேள்விகள் மூலம் வெளிக் கொணர்ந்தேன்.

    இந்தச் சிறிய நூலில், பெரும்பாலும் 2011ல் துவக்கப்பட்ட எனது ‘பிளாக்’கில் வெளியான கட்டுரைகளே அடக்கம். ஆயினும் ஒன்றிரண்டு கற்பனைப் பேட்டிகள் ‘நிலாச்சாரல்’ பிளாக்கிற்கு அனுப்பப்பட்டு அவர்களால் வெளியிடப்பட்டன. அவர்களுக்கும் நன்றி.

    6000 கட்டுரைகள்: நான் 2011ல் விளையாட்டாகத் துவக்கிய ‘பிளாக்’ (BLOGS)களில் இதுவரை 6000க்கும் அதிகமான கட்டுரைகள் வெளியாகிவிட்டன. தினமும் 7000 பேர் வரை படிக்கிறார்கள். இந்திய கலாசாரம், வரலாறு, தமிழ், ஸம்ஸ்க்ருத நூல்களில் உள்ள அரிய, பெரிய விஷயங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்படுகின்றன. எனது சகோதரர் நாகராஜனும் தினமும் இதில் எழுதி வருகிறார். இதை வரவேற்று பலர் கருத்து தெரிவிப்பதும், விமர்சனங்களை எழுதுவதும் எங்களை ஊக்குவிக்கிறது. வாசகர் அனைவருக்கும் நன்றி.

    தொடர்ந்து இது போல புஸ்தகங்களைக் கொண்டுவர ஆசை. வாசகர்களின் கருத்துக்களையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். கீழ்கண்ட ஈ மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

    swami-48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    நாலாவது புஸ்தகம்:

    இது எனது நாலாவது தமிழ் புஸ்தகம். ஆரத்தி இதழியல் கழகம் சார்பில் ‘இதழியல்’ என்ற ஜர்னலிஸம் நூலும், எனது கேள்வி - பதில் தொகுப்பும் – ‘வினவுங்கள் விடை தருவோம்’ என்ற புஸ்தகமும், ‘தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்’ என்ற புஸ்தகமும் வெளியாகின.

    இந்த சிறிய புஸ்தகத்தை காலஞ் சென்ற எங்கள் தாய் தந்தையர் வெ.சந்தானம், திருமதி ராஜலெட்சுமி சந்தானம் நினைவாக வெளியிட்டு அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஓய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 5 தமிழ் புஸ்தகங்களையும், 6000 கட்டுரைகளையும் எழுதியள்ளார். 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    Dedicated to late V. Santanam & Mrs. Rajalakshmi Santanam

    By

    S. Srinivasan, S. Nagarajan, S. Swaminathan,

    S. Suryanarayanan, S. Minatchi Sundar & Mrs Lalitha Natarajan

    1

    அப்பருடன் 60 வினாடி பேட்டி

    (கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்: அப்பர் தேவாரத்திலிருந்து)

    கேள்வி: வாகீசரே, கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற வரியுடன் பதிகம் பாடியவுடம் உமது தீராத சூலை நோய் திர்ந்தது. உமது பணிதான் என்ன?

    பதில்: நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

    தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்

    தன் கடன் அடியேனையும் தாங்குதல்

    என்கடன் பணி செய்து கிடப்பதே

    கேள்வி: ‘கொலவெறி’ யானையை உங்கள் மீது பல்லவ மன்னன் ஏவிவிட்டானே, எப்படி சமாளித்தீர்கள்?

    பதில்: சுண்ணவெண் சந்தனச்சாந்தும் சுடர் திங்கட் சூளாமணியும்

    அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை.

    கேள்வி: இதைப் பாடியவுடம் மத யானை உங்களை வலம் வந்து வணங்கியதை உலகமே அறியும். மனிதகுலத்துக்கு ஒரு அறைகூவல் விடுத்தீர்களோ?

    பதில்: மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்

    கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே

    புனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி

    இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே

    கேள்வி: பெற்றோர்கள் மருள்நீக்கியார் என்றும், சம்பந்தர் அப்பரே என்றும், சிவ பெருமான் நாவுக்கரசு என்றும் அழைத்தனர். கடும் விதியையும் தூக்கி எறியலாம் என்று பாடினீரா?

    பதில்: தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்திசங்கு கன்னன்

    பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் பல்லாண்டிசைப்ப

    திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் சில பாடச் செங்கன் விடை ஒன்றூர்வான்

    கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வினையைக் கழற்றலாமே.

    கேள்வி: சமணர்களின் சொற்கேட்டு மகேந்திர பல்லவ மன்னன் உம்மை சுண்ணாம்புக் காளவாயில் போட்டபோது என்ன பாடினீர்?

    பதில்: மாசில் வீணையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கிளவேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே

    Enjoying the preview?
    Page 1 of 1