Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!
Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!
Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!
Ebook268 pages1 hour

Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரிக்வேதம் பற்றிய எனது இரண்டாவது நூல் இது. முதல் நூல் 'ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்' என்ற தலைப்பில் முப்பது ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் வெளியிடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளாக ஐரோப்பியர்களின் பூதக் கண்ணாடிகளால் பார்க்கப்பட்டது இந்த ரிக்வேத நூல். எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இதுதான் இப்போது புழக்கத்திலுள்ள நூல்களில் பழமையானது என்பதாகும். இதிலுள்ள புருஷ சூக்த மந்திரம், கல்யாண மந்திரங்கள், இறுதிச் சடங்கு மந்திரங்களை இப்போதும் பயன்படுத்துகின்றனர். பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்திலும் சில ரிக்வேத மந்திரங்கள் இருக்கின்றன.

இதிலுள்ள உரையாடல் கவிதைகள், அந்தக் காலத்தில் நாட்டிய நாடகங்களாக நடிக்கப்பட்டன என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. மேல்நாட்டினரைத் திகைக்கவைத்த பல மந்திரங்களுக்கு நானும் வியாக்கியானம் செய்துள்ளேன். எனது முடிவுகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580153509043
Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!

Read more from London Swaminathan

Related to Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!

Related ebooks

Related categories

Reviews for Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை திகைக்க வைக்கும் கவிதைகள்!

    Rigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. அகஸ்தியர் – லோபாமுத்ரா Sexy செக்சி உரையாடல் -1

    2. அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2

    3. அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் -3

    4. ரிக் வேதத்தில் யமா – யமி SEXY செக்சி உரையாடல் -1

    5. யமா-யமி SEXY செக்சி உரையாடல் பகுதி -2

    6. ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள்

    7. ஆறாயிரம்ஆண்டுக்கு முன் M.B.B.S. LESSON! ஆறே வரிகளில் மருத்துவப் பாடம்!

    8. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- ரிக்வேதம், பாரதி,வள்ளுவர் ஒற்றுமை -1

    9. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை- 2; ரிக் வேதத்தில் தாவரவியல் செய்திகள்

    10. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை- 3

    11. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை- 4; விவசாய சொற்கள் பட்டியல்

    12. சரஸ்வதி நதி பற்றிய சுவையான விஷயங்கள்!

    13. மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்!

    14. ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு

    15. ரிக் வேதத்தில் தமிழ் வேதம் திருக்குறள்

    16. ரிக் வேதத்தில் தமிழ் வேதம் திருக்குறள் -2

    17. ரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன!

    18. ரிக் வேதத்தில் பழமையான மண்டலம் எது?

    19. ரிக்வேதத்தில் புனர் ஜன்மம், மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!

    20. ரிக்வேதத்தில் புனர் ஜன்மம், மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2

    21. ரிக்வேதத்தில் புனர் ஜன்மம், மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3

    22. உலக மஹா கீதம்; வேதத்தில் மேலும் ஒரு தேசீய கீதம்!

    23. எகிப்து, கிரீஸ், ரிக் வேதத்தில் கண் பற்றியஅதிசயச் செய்திகள்

    24. இந்து விரோத கும்பல் மீது யமுனை நதி கொடுத்த செமை அடி! – 1

    25. இந்து விரோத கும்பல் மீது யமுனை நதி கொடுத்த செமை அடி! –2

    26. ‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு!

    27. ஆற்றலின் மகனே!கட்டிளங் காளையே! அக்கினி தேவனே!

    28. விநாயக கவசமும் ரிக் வேதமும்

    29. ரிக் வேதத்தில் நகைச்சுவை நடிகன்

    30. கி.மு.1700-இல் ஒரு பெண் எம்.பி.! இந்திய அதிசயம்!!

    31. வேதத்தில் கடலும் கப்பலும்!!

    32. நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை

    33. ரிக் வேத ரிஷிகள் பட்டியல் – பகுதி 1

    34. ரிக் வேத ரிஷிகள் பட்டியல்-2

    35. ரிக்வேத புலவர்கள் பட்டியல்- 3

    36. ரிக் வேத ரிஷிகள், புலவர்கள் பட்டியல் - 4

    37. ரிஷிகள் புலவர்கள் பட்டியல் – 5

    38. ரிக்வேத கால புலவர்கள் பட்டியல் - 6

    39. ரிக்வேத ரிஷிகள் பட்டியல் – 7

    40. ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல் – 8

    41. ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

    முன்னுரை

    ரிக்வேதம் பற்றிய எனது இரண்டாவது நூல் இது முதல் நூல் 'ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்' என்ற தலைப்பில் முப்பது ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் வெளியிடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளாக ஐரோப்பியர்களின் பூதக்கண்ணாடிகளால் பார்க்கப்பட்டது இந்த ரிக்வேத நூல். எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இதுதான் இப்போது புழக்கத்திலுள்ள நூல்களில் பழமையானது என்பதாகும். இதிலுள்ள புருஷ சூக்த மந்திரம், கல்யாண மந்திரங்கள், இறுதிச் சடங்கு மந்திரங்களை இப்போதும் பயன்படுத்துகின்றனர். பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்திலும் சில ரிக் வேத மந்திரங்கள் இருக்கின்றன.

    இதிலுள்ள உரையாடல் கவிதைகள், அந்தக் காலத்தில் நாட்டிய நாடகங்களாக நடிக்கப்பட்டன என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. மேல்நாட்டினரைத் திகைக்கவைத்த பல மந்திரங்களுக்கு நானும் வியாக்கியானம் செய்துள்ளேன். எனது முடிவுகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. பெரிய மடங்களின் அதிபதிகளாக உள்ள பெரியோர்கள், வேதங்களுக்கு அர்த்தம் பார்க்காமல் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும் என்கின்றனர். ஏனெனில் அவர்கள் கண்ட முடிவு வேத அந்தத்தின் வேதாந்தத்தின் முடிவாகும். அவற்றை உபநிஷத்துக்களில் காணலாம். ஆயினும் மேல்நாட்டினரும், வேற்று மதத்தைப் பரப்ப வந்தோரும், மார்க்சீயவாதிகளும் தாறுமாறாக அர்த்தம் கற்பிப்பதால் நானும் ஆராய்ச்சியில் புகுந்தேன். வேதங்களைப் பொறுத்தவரைக்கும், அதை நம்பிக்கையுடன் பின்பற்றுவோரின் விளக்க உரைகளையே ஏற்கவேண்டும். அதைப் பின்பற்றாத, இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாதோரின் உரைகளை நம்பக்கூடாது. மேல்நாட்டினர் உண்டாக்கிய ஆர்ய- திராவிட வாதத்தை மஹாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கார், சுவாமி விவேகாநந்தர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் அவர்களது உரைகளில் கண்டித்திருப்பது ஒன்றே போதும். நாம் அந்தத் தலைவர்களைப் பின்பற்றுவோமாக. வேதத்தின் காலம் பற்றியும் இந்துக்கள் சொல்லுவதை, புராண, இதிகாசங்கள் சொல்லுவதையே நம்பவேண்டும். இந்தக் கருத்துக்களை வலியுறுத்துவதே என் கட்டுரைகளின் ஒட்டுமொத்தக் கருத்து. புஸ்தகத்தின் இறுதியில் சுமார் 400 வேத கால புலவர்களின் பெயர்களையும் தந்துள்ளேன். இந்த வரிசையில் இன்னும் இரண்டு தமிழ் நூல்களும் சில ஆங்கில நூல்களும் வெளிவரும். சுமார் 11 ஆண்டுகளில் தனித்ததனியேஎழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் கூறியனகூறுதல் என்ற குற்றமும் சம்ஸ்க்ருதம் போன்ற சொற்களுக்கு இரண்டு வித உச்சரிப்புகளும் (spellings) இருக்கும். அவைகளைப் பொறுத்தருள்க.

    பத்தாண்டுகளுக்கும் மேலாக எனது ‘பிளாக்’ (Blogs)குகளில்இந்தக் கட்டுரைகள் வெளியான தேதியும், கட்டுரை எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலில் உள்ள தகவல் பற்றி உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன். தொடர்பு முகவரிகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. படியுங்கள்! மகிழுங்கள்!!

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2022

    1. அகஸ்தியர் – லோபாமுத்ரா Sexy செக்சி உரையாடல் -1

    Post No. 10,902

    Date–28 APRIL2022

    ரிக் வேதத்தில் எட்டே இடங்களில் மட்டும் ‘அகஸ்த்ய’ என்ற பெயர் வருகிறது. அவர் இயற்றிய அல்லது அவரால் காணப்பட்ட துதிகள் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் உள்ளன. அங்கு அவருடைய துதிகள் என்ற கணக்கில் 27 துதிகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளன. ( 1-165 முதல் 191 வரை).

    அகஸ்தியரின் மனைவி பெயர் லோபாமுத்ரா; பேரழகி; பெரிய பணக்காரி; விதர்ப்ப நாட்டு ராஜகுமாரி. அகஸ்தியரோ உலக மஹா குள்ளன்; உலகிலேயே குட்டையான ஆள் என்ற பெயரில் ‘கின்னஸ் சாதனை’ புஸ்தகத்தில் பெயர் ஏற்றிவிடலாம் அவ்வளவு குள்ளம். அவர் ஆணழகனும் இல்லை.இந்த சூழ்நிலையில் அவருடைய துதிகளில் ஒன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது அது ரிக்வேதத்தின் 1-179 ஆகும். அதில் ஆறு மந்திரங்கள் தான் உள்ளன. அதில் என்ன பெரிய SEX/ செக்ஸ் இருக்கப்போகிறது என்று நினைக்காதீர்கள். அது பற்றி மஹாபாரதம் பெரிதாக பிரஸ்தாபிக்கிறது.

    வேதங்களின் தாத்பர்யத்தை- உட்கருத்தை விளக்க வந்தவைதான் புராணங்கள் மற்றும் இதிஹாஸங்கள். ஏனெனில் வேதத்தின் பிற்பகுதியான பிராஹ்மண நூல்களிலும் மறைமுக மொழியில்தான் விளக்குவார்கள். புராண, இதிஹசங்கள்தான் நமக்குத் புரியும்படி பேசும்..

    இதுபற்றி எல்லோரும் அறிந்த ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் உண்டு:-

    இதிஹாச புராணாப்யாம் வீதம் ஸமுபவ்ர்ம்ஹயேத்

    விபேப் யல்பஸ்ருதாத்வேதோ மாமயம் ப்ரஹரிஸ் யதி

    இதன் பொருள்-

    வேதத்தைக் கற்போர் இதிஹாச புராணம் மூலம் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்; ஏனென்றால் கொஞ்சம் படித்தவர்களால் தனக்கு ஆபத்து வரும் என்று வேதம் அஞ்சுகிறது

    (எவ்வளவு உண்மை பாருங்கள்! வெளிநாடுகளைச் சேர்ந்த 60 அரைவேக்காடுகள் வேதங்களை மொழிபெயர்த்தோவிமர்சித்தோ கட்டுரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்த கதைதான்!)

    இதனால் SEXY DIALOGUE ‘செக்சி’ உரையாடலின் முழு விவரத்தை அறிய மஹாபாரதத்துக்குச் செல்ல வேண்டும்.

    அகஸ்தியர் துதிகளில் போற்றப்படும் கடவுளர்: இந்திரன், மருத்துகள், அஸ்வினி தேவர்கள், வானமும் பூமியும் (த்யவ்ஸ்/DYAUS – பிருத்வி), விச்வே தேவர்கள், அன்னம் / உணவு; ஆப/தண்ணீர், அக்கினி, ஆப்ரி, பிருஹஸ்பதி

    அகஸ்தியரின் மற்ற பெயர்கள் – மான, மாந்தார்ய, மான்ய என்பனவாகும்; ரிக் வேத 7-33 ல் அகஸ்தியர் பிறப்பு பற்றிய விஷயம் உள்ளது அதன்படி அவர் மித்ர – வருணன் ஆகியோரின் விந்துவிலிருந்து உருவானவர். வசிஷ்டரும், அகஸ்தியரும் ஊர்வசி என்னும் அப்ஸரஸ் மூலம்பிறந்தனர் என்றும் அறிகிறோம்.

    பிற்கால இலக்கியங்களில் அகஸ்தியரின் சாதனைகள் பற்றி நிறைய உள்ளன வாதாபி என்ற அரக்கனைக்கொன்றது, நஹுஷனை மட்டந்தட்டியது,விந்திய மலையின் மேல், ரோடு ROAD ROUTE போட்டுஅந்தப் பாதை மூலம் தென்னாட்டுக்கு வந்தது, கடல் நீரைக் குடித்தது (அதாவது கடல் வழிப்பாதை மூலம் தென் கிழக்காசியாவில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டியது ), காவிரி நதியைத் திசை மாற்றி ஓடுவதற்கு அணை கட்டியது, தமிழ் மொழிக்கு இலக்கணம் வரைந்தது என்று பெரிய பட்டியல்!!

    தமிழுக்கு அவர் இலக்கணம் இயற்றியதை பாரதி, கம்பன், பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் முதலியோர் பாடியுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கவி காளிதாசன், பாண்டிய மன்னனையும் அகத்தியனையும் இணைத்து ரகு வம்ச காவியத்தில் பாடியதுதான் 2100 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் குறிப்பு!!!

    முதலில் உரையாடலைக் காண்போம்; பின்னர் மஹாபாரதத்தைக் காண்போம்; பின்னர் அறிஞர் கருத்துக்களைக் காண்போம் :-

    அகஸ்தியர் துதிகள் பற்றி சாயனர், வேங்கட மாதவா ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

    ***

    இதோ 1-179- 1/2 துதி

    லோபா முத்ரா

    நான் பல்லாண்டுக் காலமாக அல்லும் பகலும் அனவரதமும் உமக்கு பணிவிடை செய்தேன்; களைத்தும் போனேன்; முதுமை என்னுடைய மேனி அழகைப் பாதிக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

    (இந்து மதத்தில் பெண்கள் பகிரங்கமாக ‘செக்ஸ்’ sex பற்றிப் பேச மாட்டார்கள்; ஆனால் குறிப்பால் உணர்த்துவார்கள்; அதே போல லோபாமுத்ராவும் எல்லோரும் கணவனுடன் கூடிக் குலவட்டும் என்று பொதுப்படையாகப் பேசுகிறார்)

    ரிஷிகளும்தேவர்களும் சத்தியத்தைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் காலத்தால் அழியாத சட்ட திட்டங்களை வகுத்தார்கள்; அவர்கள் சொன்னார்கள்; செய்யவில்லை.கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

    அகஸ்தியர் பதில்

    (அகத்தியர் பதிலை கிரிப்பித்R T GRIFFITHமொழி பெயர்க்க மறுத்துவிட்டார். ரொம்ப ‘செக்சி’ என்று கருதினார் போலும். இரண்டு மந்திரங்களை லத்தீன் மொழியில் கொடுத்துள்ளனர்.அதை ஜம்புநாத அய்யர்மேம்போக்காக மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளின் காமத்துப் பாலையும்மொழிபெயர்க்க பறங்கித் தலை பாதிரிமார்கள் அஞ்சினர்; திருக்குறளை முழுக்க மொழிபெயர்த்தால்தமிழன் பெயர் ‘ரிப்பேர்’ ஆகி விடும்; மானம் ‘விமான’த்தில் ஏறிவிடும்; தமிழன் கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்தோர் அஞ்சினர். ரெவரென்ட் ஜி.யூ போப் மட்டும்அதைத் தைரியமாகப் படித்துவிட்டு இதில் என்ன தவறு இருக்கிறது?என்றார்.)

    ***

    அகஸ்தியர் (RV 1-179-3)

    நான் தவத்தை இயற்றுவதில் காலத்தைச் செலவிட்டேன். நாம் நம்முடைய விருப்பங்களை இப்போது அனுபவிப்போம். இருவரும்சேர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

    (குழந்தை பெறுவதற்கு இணையலாம் என்பதை பகிரங்கமாகக் கூறுகிறார். இதன் விளக்கம் விரசம் இல்லாமல் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது அதையும் காண்போம்.)

    RV 1-179-4

    அகத்தியர் தொடர்ந்து பேசுகையில் ஜெபத்திலும் இந்திரியக் கட்டுப்பாட்டி லும் இருந்தபோதும் காம எண்ணம் வந்தது ஆகையால் லோபாமுத்ரா கணவனுடன் சேருவாளாகுக.

    RV 1-179- 5/6

    கடைசி இரண்டு மந்திரங்கள் இருவரின்உரையாடலைக்கேட்டு யாரோ (சீடன்??) எழுதியது போல அமைந்துள்ளது

    அந்த சீடன் சொல்கிறான்:

    மனிதர்கள் எல்லோரும் காமத்தின் வசப்பட்டவர்கள். இதோ என் அருகிலுள்ள சோம லதை செடியிடம் சொல்கிறேன். நான் செய்த பாவங்களை எல்லாம் அகற்றி விடுங்கள்

    கடைசி மந்திரத்தில் அகஸ்தியர் தீவிரமாக குழந்தை பெறும் பணியில் இறங்கினார். என்று வருகிறது

    இது பற்றி மகாபாரதம் மேல் விவரம் தருகிறது. அதையும் வெளி நாட்டார் கருத்தையும் பார்ப்போம்.

    இந்த துதி வரிசைக் கிரமப்படி இல்லாமல் கடைசியில், ரதி என்ற தலைப்பில், பிற்சேர்க்கைப் பகுதியில் வைக்கப்பட்டது. லத்தீன் மொழியில் உள்ள இரண்டு மந்திரங்களை ஆங்கிலத்தில் பின்னர் கொடுத்துள்ளேன். தமிழ் சினிமா பாடல்கள் போல இரண்டு அர்த்தத்தில் இவை எழுதப்பட்டுள்ளன. லோபாமுத்ரையும் அகஸ்தியரும் குழந்தை பெறும் முயற்சியில் இறங்கினார்கள் என்பதே பொருள்.

    The labour which the gods favour is not unprofitable: we conquer all our rivals and rivals.

    We must overcome in this battle of a hundred trades, in which we move our two sides together, on both sides.

    4 Cupid took me by that bull [the man] who despises me, whether he was born on either side, or on the other, on any side.

    Lopamudra denies the bull [her husband] to him: that fool swallows the wise man gasping for breath.

    செல்க்ஸ் பற்றிய கவிதை என்பதால் வெள்ளைக்காரர்கள் ஆயிரக்கணக்கில் இது பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளனர்ஆனால் மஹாபாரதத்தில் முழுக்கதை உள்ளது; இதை ஸ்லோகம் வாரியாக தானேஸ்வர்சர்மா என்பவர் கொடுத்துள்ளார். இதோ அந்த ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பு.

    2. அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2

    Post No. 10,907

    Date uploaded in London – –29 APRIL2022

    அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2

    இது இரண்டாம் பகுதி;முதல் பகுதியில்,ரிக் வேதத்தின் முதல் மண்டலத்திலுள்ள ஆறு மந்திரங்களைக் கண்டோம். அதில் அகஸ்தியர் பேச்சில் பட்டவர்த்தனமாக SEX

    Enjoying the preview?
    Page 1 of 1