Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!!
()
About this ebook
கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், மேற்கத்திய சங்கீதம் தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளில் நான் எழுதிய முப்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது. சங்கீதமே பிடிக்காத அவுரங்க சீப்பிடம் கூட சுவையான இசை சம்பவங்களைச் சொன்னால் கட்டாயம் காது கொடுத்துக் கேட்பார். வேத காலத்திலும், காரைக்கால் அம்மையார் காலத்திலும், கம்பன் காலத்திலும் இருந்த இசைக்க கருவிகளின் பட்டியல் அவரவர் பாடிய பாடல்களில் உள்ளன. அவற்றைப் பார்க்கையில் எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் இசை இடம்பிடித்தது என்பது விளங்கும்.
கிளி ஓட்டிய தினைப் புன காவல் பெண்டின் பாடலைக் கேட்டு, யானையும் கூட தானியத்தைச் சாப்பிடவில்லை என்ற சங்கப்பாடல் அ னைவரும் அறிந்ததே. புல்லாங்குழல் ஊதி சொர்கத்துக்குச் சென்ற ஆனாய நாயனார் சரிதமும், தீபக் ராகம் பாடி உயிர் நீத்த தான்ஸேனின் தியாகமும், மழை வரவேண்டி அமிர்தவர்ஷனி ராகம் பாடிய முத்து சுவாமி தீட்சிதரின் மந்திர சக்தியும் இசையின் மகத்துவத்தை விளக்குகின்றன.
Read more from London Swaminathan
Manaivi Oru Marunthu Rating: 0 out of 5 stars0 ratingsRigvedhathil Mel Nattinarai Thigaikka Vaikkum Kavithaigal! Rating: 0 out of 5 stars0 ratingsTamil - English Bilingual Hindu 'Quiz' Rating: 0 out of 5 stars0 ratingsDravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa? Rating: 5 out of 5 stars5/5Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!! Rating: 0 out of 5 stars0 ratingsTheninum Iniya Kamba Ramayana Paadalgal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyorai Azhikka Kalki Varugiraar! Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!!
Related ebooks
Ulagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsAkanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsMaamannan Rajarajan Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasaga Thean! Thirumanthira Juice!! Rating: 0 out of 5 stars0 ratingsHindustani Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Ilakkiyathil Pengal Rating: 0 out of 5 stars0 ratingsIsaiyin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsUpanidatha Thendralum Vedha Mazhaiyum Rating: 0 out of 5 stars0 ratingsTamil Kanda Puratchi Thuravi Ramanusa Maamuni Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Vainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsAzhwargal Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal! Rating: 0 out of 5 stars0 ratingsCarnataka Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsManuneethi Noolil Athisaya Seithigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Isai Marabu Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanathil Naam Ethir Parkkatha Athisaya Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Selvam Rating: 0 out of 5 stars0 ratingsTolkappiya Athisayangal Rating: 0 out of 5 stars0 ratingsSollil Uyarvu Tamil Solley Rating: 0 out of 5 stars0 ratingsTheninum Iniya Kamba Ramayana Paadalgal Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Tamil Ennum Vinthaiyil (Vi)chithira Kavi Vilakkam Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratings12288 Kaadhal Vakaigalil Ilakkiyam Tharum Sila Kaatchigal! Rating: 0 out of 5 stars0 ratingsBharatanatyam Rating: 0 out of 5 stars0 ratingsRig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum Rating: 5 out of 5 stars5/5
Reviews for Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!!
0 ratings0 reviews
Book preview
Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! - London Swaminathan
http://www.pustaka.co.in
சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!!
Author :
லண்டன் சுவாமிநாதன்
London Swaminathan
For more books
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஆசிரியரைப் பற்றி
முன்னுரை
1. இந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்
2. பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்
3. ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை!
4. இசைத் தமிழ் அதிசயங்கள்
5. ஜப்பானில் சாம வேதம்; வேத கால இசைக் கருவிகள்
6. மகுடி இசை மகத்துவம் - மூளை வளர்ச்சிக்கு உதவும்
7. தீக்குளித்த 2 பெண்களின் பெயரில் புதிய ராகம்
8. தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி
9. தமிழ் முரசு பற்றிய அதிசயச் செய்திகள்
10. லண்டனில் பாபநாசம் சிவன் விழா!
11. பாபநாசம் சிவனுக்கு எப்படி அப்பெயர் வந்தது? மதுரையில் கூட்டம் கலைந்தது ஏன்?
12. நந்தனார் சரித்திரம் உருவான கதை!
13. தமிழ் இசையில் எண் ஏழு!
14. வேத காலத்தில் ஆடல் பாடல்
15. ஆடலும் பாடலும் நிறைந்த ஆனந்த வேத காலம்
16. கச்சேரியில் ‘டிங்கிள், டிங்கிள் லிட்டில் ஸ்டார்!’ ஆங்கிலேயர் வேதனை
17. ராகங்கள் - தமிழ், வடமொழிப் பெயர்கள்
18. பாரதிதாசன் பாடலுக்கு இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு!
19. ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது!
20. சங்கீத மூட நம்பிக்கைகள்
21. புகழ்பெற்ற வயலின் ‘திருடன்!’
22. தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி
23. வலியைப் போக்க சங்கீதம் உதவும்!
24. சங்கீதம் தோன்றிய கதை: ஒரு புராண வரலாறு
25. முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்
26. கர்நாடக இசையில் கங்கை நதியும் கூவம் நதியும்!
27. புரந்தரதாசருக்கு சவுக்கடி!
28. கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன புனிதர்!!!
29. சப்தம் கேட்டால் இறந்துவிடும் அதிசய மிருகம் ‘அசுணமா!!’
30. மான் வேட்டை பற்றி ஆதிசங்கரர்
ஆசிரியரைப் பற்றி
லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.
தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி. அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஓய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 20 தமிழ் புஸ்தகங்களையும், 6000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.
லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின்வருமாறு:
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
LONDON MOBILE NUMBER – 07951 370697
முன்னுரை
கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், மேற்கத்திய சங்கீதம் தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளில் நான் எழுதிய முப்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது. சங்கீதமே பிடிக்காத அவுரங்கசீப்பிடம் கூட சுவையான இசை சம்பவங்களைச் சொன்னால் கட்டாயம் காது கொடுத்துக் கேட்பார். வேத காலத்திலும், காரைக்கால் அம்மையார் காலத்திலும், கம்பன் காலத்திலும் இருந்த இசைக் கருவிகளின் பட்டியல் அவரவர் பாடிய பாடல்களில் உள்ளன. அவற்றைப் பார்க்கையில் எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் இசை இடம்பிடித்தது என்பது விளங்கும்.
கிளி ஓட்டிய தினைப் புன காவல் பெண்டின் பாடலைக் கேட்டு, யானையும் கூட தானியத்தைச் சாப்பிடவில்லை என்ற சங்கப்பாடல் அனைவரும் அறிந்ததே. புல்லாங்குழல் ஊதி சொர்கத்துக்குச் சென்ற ஆனாய நாயனார் சரிதமும், தீபக் ராகம் பாடி உயிர் நீத்த தான்ஸேனின் தியாகமும், மழை வரவேண்டி அமிர்தவர்ஷனி ராகம் பாடிய முத்துசுவாமி தீட்சிதரின் மந்திர சக்தியும் இசையின் மகத்துவத்தை விளக்குகின்றன.
மேலை நாட்டு சங்கீத மேதைகளின் வாழ்வில் நடந்த சம்பவங்களும், அவர்களுடய வாழ்க்கைக் குறிப்புகளும் என்னுடைய ‘பிளாக்’குகளில் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றைத் தனியே காண்போம்.
ஏனைய நூல்களில் இல்லாத ஏராளமான விஷயங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அவை வெளியான தேதிகளும், பிளாக்கில் உள்ள கட்டுரை எண்களும் ஒவ்வொரு கட்டுரையிலும் இருக்கும்.
உங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக எனது ஈ-மெயில் முகவரிகளையும் கொடுத்து இருக்கிறேன். அச்சடித்த புஸ்தகம் வேண்டுமாயின் எழுதவும்.
அன்புள்ள
லண்டன் சுவாமிநாதன்
ஜூலை 2022, லண்டன்
1. இந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்
யாழ் என்ற இசைக்கருவியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு மனிதரின் பெயர் நினைவுக்கு வரும் என்றால் அவர் சுவாமி விபுலாநந்த அடிகள்தான்.
சுவாமி விபுலாநந்தர் பற்றியும், யாழ் பற்றியும் ‘விக்கிபீடியா’விலும், ஏனைய பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் ஏராளமான செய்திகள் உள. அவர் இலங்கையின் கிழக்குப் பகுதியில் 1892-ஆம் ஆண்டு பிறந்து, 1947-ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். அதுவும் கரந்தைத் தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்கொள்ளம்புதூர் கோவிலில் அவரது யாழ் நூலை 5-6-1947-ல் அரங்கேற்றிவிட்டு ஆறே வாரங்களில் உயிர் நீத்தார்; இப்படி இறந்தது, இந்த ஆய்வு நூலுக்காகவே இறைவன் அவரை பூவுலகிற்கு அனுப்பி வைத்தாரோ என்று எண்ணச் செய்கிறது.
திருக்குறளில் யாழ்தான் வருகிறது; வீணை இல்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டு நூல் என்று பல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிலப்பதிகாரத்தில் முதல்முதலாக வீணையைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் தேவார காலத்திலும் கூட யாழ் பற்றி பாடப்பட்டுள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணரை நாம் அறிவோம்.
‘யாழ்’தான் வீணையா? அல்லது யாழின் உருவம் மாறி வீணையானதா? இந்துக் கடவுளரின் கைகளில் எல்லாம் வீணை மட்டுமே உளதே!
இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. உலகில் எதுவுமே மாறாமல் இருக்காது. பழைய கால பழக்கவழக்கமானாலும், பொருள்களானாலும் மாறிக்கொண்டேதான் வரும் (Change is inevitable). அப்படிப் பார்க்கையில் யாழ் போய் வீணை வந்தது என்றும் சொல்லலாம். அல்லது இந்தியா போன்ற பரந்த ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இசைக்