Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hindustani Isaiyai Therinthu Kollungal
Hindustani Isaiyai Therinthu Kollungal
Hindustani Isaiyai Therinthu Kollungal
Ebook52 pages16 minutes

Hindustani Isaiyai Therinthu Kollungal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லாக் கலைகளையும் விட உயர்ந்தது இசைக்கலை. கலைகளில் பழமையானதும் இசைக்கலையாகத் தான் இருக்க முடியும். பேசும் திறன் பெற்ற உடனேயே, மனிதன் பாடும் திறனையும் பெற்றிருப்பான். பிறகுதான் மற்ற கலைகள் படிப்படையாக வளர்ந்திருக்க வேண்டும்.

மனித இனத்திற்குப் பேசும் திறன் வளரும் முன்பேகூட கேட்கும் திறன் இருக்கிறது. தாயின் தாலாட்டைக் கேட்பதற்காகவே, கேட்கும் திறன் பிறவியிலேயே இருக்கிறது.

மனிதன் ரசிகனாகவேதான் பிறக்கிறான்.

இசைக்கலை, உணர்வுகளின் மொழியாகும். செவிக்கு இனிமையைக் கொடுக்கும் ஓசையே நாதமாகும். ஒழுங்கற்ற முறையில் ஒலிக்கப்படுவது இரைச்சல். ஒழுங்கான முறையில் இசைக்கப்படும் போது அந்த 'நாதம்' செவிக்கு மட்டுமல்ல, நமது கருத்துக்கும் இனிமை கூட்டுகிறது.

நாதத்தை அடிப்படையாகக் கொண்டே இசையென்னும் அறியதோர் 'தெய்வீகக்கலை' உண்டாக்கப்பட்டுள்ளது. இது 'நாதப்பிரம்மம்' என்று வணங்கப்படுகிறது.

இசையே ஒரு தனி மொழி. நாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. சொற்களே இல்லாமல் தனித்தியங்கக் கூடிய வல்லமையும் இசைக்கு உண்டு. அதிலும் குறிப்பாக இந்துஸ்தானி இசை மரபில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவமே கிடையாது. சொற்களாகிய பாடல்கள் இணையும்போது பாலில் தேன் கலந்தது போல் இனிமை கூடுகிறது.

இசை, தேவர்களின் மொழியாக மதிக்கப்படுகிறது. சிவபெருமான் கையில் 'டமருகம்' என்னும் உடுக்கை போன்ற கருவி காணப்படுகிறது. நந்திகேசுவரர் மிருதங்கம் வாசிப்பதில் இணையற்றவர். கிருஷ்ண பரமாத்மா ஒரு குழலூதும் கலைஞர். வீணையோ சரசுவதியின் கைக்கருவி. நாரதரும், தும்புருவும் இசைக் கருவிகளுடன் அடையாளம் காணப்படுகின்றனர். ஆஞ்சநேயர் இசைக் கலையில் மிகத்தேர்ந்தவர் என்று சொல்வர். 'ஹனுமான் கடகம்' என்ற இசை நூலையே அவர் யாத்திருக்கிறார் என்று தெரிகிறது. 'ஆஞ்சநேய சம்ஹிதை' என்று மற்றொரு நூலும் இருந்ததாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால் வட இந்திய இசைக்கு 'மூலப்புருஷன்' என்று ஆஞ்சநேயரையும், தென்னிந்திய இசைக்கு நாரதர் 'மூலப்புருஷன்' என்றும் சொல்வதுண்டு.

இவ்வாறெல்லாம் சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படும் இசை என்னும் கலையை, அதன் நுணுக்கங்களையெல்லாம் தெரியாமலேயே ரசிக்க முடியும். ஆயினும் அதன் வரலாற்றையும், வளர்ச்சியையும், சிறப்பியல்புகளையும் ஓரளவு தெரிந்து கொண்டு ரசித்தால், மேலும் நன்கு ரசிக்க முடியுமே என்பதால் அதற்கு வழிகாட்டியாக அமையும்படி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580136806097
Hindustani Isaiyai Therinthu Kollungal

Read more from Aranthai Manian

Related to Hindustani Isaiyai Therinthu Kollungal

Related ebooks

Reviews for Hindustani Isaiyai Therinthu Kollungal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hindustani Isaiyai Therinthu Kollungal - Aranthai Manian

    https://www.pustaka.co.in

    இந்துஸ்தானி இசையை தெரிந்து கொள்ளுங்கள்

    Hindustani Isaiyai Therinthu Kollungal

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    எல்லாக் கலைகளையும் விட உயர்ந்தது இசைக்கலை. கலைகளில் பழமையானதும் இசைக்கலையாகத் தான் இருக்க முடியும். பேசும் திறன் பெற்ற உடனேயே, மனிதன் பாடும் திறனையும் பெற்றிருப்பான். பிறகுதான் மற்ற கலைகள் படிப்படையாக வளர்ந்திருக்க வேண்டும்.

    மனித இனத்திற்குப் பேசும் திறன் வளரும் முன்பேகூட கேட்கும் திறன் இருக்கிறது. தாயின் தாலாட்டைக் கேட்பதற்காகவே, கேட்கும் திறன் பிறவியிலேயே இருக்கிறது.

    மனிதன் ரசிகனாகவேதான் பிறக்கிறான்.

    இசைக்கலை, உணர்வுகளின் மொழியாகும். செவிக்கு இனிமையைக் கொடுக்கும் ஓசையே நாதமாகும். ஒழுங்கற்ற முறையில் ஒலிக்கப்படுவது இரைச்சல். ஒழுங்கான முறையில் இசைக்கப்படும் போது அந்த 'நாதம்' செவிக்கு மட்டுமல்ல, நமது கருத்துக்கும் இனிமை கூட்டுகிறது.

    நாதத்தை அடிப்படையாகக் கொண்டே இசையென்னும் அறியதோர் 'தெய்வீகக்கலை' உண்டாக்கப்பட்டுள்ளது. இது 'நாதப்பிரம்மம்' என்று வணங்கப்படுகிறது.

    இசையே ஒரு தனி மொழி. நாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. சொற்களே இல்லாமல் தனித்தியங்கக் கூடிய வல்லமையும் இசைக்கு உண்டு. அதிலும் குறிப்பாக இந்துஸ்தானி இசை மரபில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவமே கிடையாது. சொற்களாகிய பாடல்கள் இணையும்போது பாலில் தேன் கலந்தது போல் இனிமை கூடுகிறது.

    இசை, தேவர்களின் மொழியாக மதிக்கப்படுகிறது. சிவபெருமான் கையில் 'டமருகம்' என்னும் உடுக்கை போன்ற கருவி காணப்படுகிறது. நந்திகேசுவரர் மிருதங்கம் வாசிப்பதில் இணையற்றவர். கிருஷ்ண பரமாத்மா ஒரு குழலூதும் கலைஞர். வீணையோ சரசுவதியின் கைக்கருவி. நாரதரும், தும்புருவும் இசைக் கருவிகளுடன் அடையாளம் காணப்படுகின்றனர். ஆஞ்சநேயர் இசைக் கலையில் மிகத்தேர்ந்தவர் என்று சொல்வர். 'ஹனுமான் கடகம்' என்ற இசை நூலையே அவர் யாத்திருக்கிறார் என்று தெரிகிறது. 'ஆஞ்சநேய சம்ஹிதை' என்று மற்றொரு

    Enjoying the preview?
    Page 1 of 1