Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irai Tamil Valartha Saandrorgal
Irai Tamil Valartha Saandrorgal
Irai Tamil Valartha Saandrorgal
Ebook59 pages22 minutes

Irai Tamil Valartha Saandrorgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்க காலத்தில் தமிழை சங்கம் வைத்து வளர்த்தனர் நம் முன்னோர்கள். உன் பாட்டில் பிழையுள்ளது என்று இறைவனிடமே வாதாடி, புகழ் பெற்றவர் நக்கீரர். அவரைப் போலவே சில புலவர்கள், கவிஞர்கள் தமிழை, தம் உயிரைவிடவும் மேலாக நினைத்தனர். அவ்வகையில் தமிழை வளர்த்த சான்றோர்களில் பலரில் சிலர் இங்கே…

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580115706396
Irai Tamil Valartha Saandrorgal

Read more from Lakshmi Rajarathnam

Related to Irai Tamil Valartha Saandrorgal

Related ebooks

Reviews for Irai Tamil Valartha Saandrorgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irai Tamil Valartha Saandrorgal - Lakshmi Rajarathnam

    https://www.pustaka.co.in

    இறைத் தமிழ் வளர்த்த சான்றோர்கள்

    Irai Tamil Valartha Saandrorgal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அருணகிரிநாதர்

    அந்தகக் கவி வீரராகவ முதலியார்

    திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

    அதி வீரராம பண்டியன்

    வர துங்க ராம பாண்டியன்

    பகழிக் கூத்தர்

    குமர குருபரர் (17ம் நூற்றாண்டு)

    அருணாசலக் கவிராயர்

    முத்துத் தாண்டவர்

    கோபால கிருஷ்ண பாரதியார்

    தாயுமானவர்

    அபிராமி பட்டர்

    ஆறுமுக நாவலர் (1822-1879)

    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

    சங்கீத தஞ்சை நால்வர்.

    அருணகிரிநாதர்

    தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் வேந்தர்களின் ஆட்சி கவிழ்ந்தமையால் பிற மொழியினரும், பிற சமயத்தினரும் தம் தம்மொழிகளை ஆட்சி மொழியாகக் கொண்டுவந்தனர் தமிழ் மொழியைப் புறக்கணிக்கப்பட்ட இப்பதினான்காம் நூற்றண்டில் திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாத பெருமான் ஊழ்வினைப் பயனாகப் பெரு நோய் வரப்பெற்று இப்பிறவி வேண்டாம் என்று அண்ணாமலை கோபுரத்திலிருந்து குதிக்கும் பொழுது முருகனால் ஆட்கொள்ளப்பட்டார்.

    சொல்லன சும்மாயிரு என்று முருகனால் பணிக்கப் பெற்ற பின் அவனருளால் நாக்கில் வேலினால் 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் எழுதப் பெற்று "முத்தைத் தரு பத்தித் திருநகை" எனும் பாடலை பாடலானார்.

    முருகனால் 'திருப்புகழ் பாடுக' என்று பணிக்கப்பட்டு சந்தத் தமிழால் பதினாயிரம் திருப்புகழ் பாக்களை பாடியருளியவர் அருணகிரி நாதர் பெருமான்.

    இவருடைய திருப்புகழ் பாக்கள் சந்தத் தமிழ் வகையைச் சார்ந்தவை.

    "முத்தமி ழடைவினை முன்படு கிரிதனில்

    முற்பட எழுதிய முதல்லோனே"

    கைத்தல நிறைகனி என்ற பாடலில் முத்தமிழை மேரு மலையில் முதன் முதலில் எழுதியவர் வினாயகப் பெருமான்தான் என்று கூறுகிறார்.

    தமிழ் அருகிய காலத்தில் இறையுணர்வு கூடிய பாக்களில் தமிழ் மொழியை ஆங்காங்கு முத்துக்களாகப் பதித்திருப்பதைக் காணலாம்.

    பழநி திருப்புகழில் அருண தள பாத பத்ம அனுதினமுமே துதிக்க - அரிய தமிழ் தானளித்த மயில் வீரா என்கிறார்.

    திருப்புகழின் சந்தம் அரிய தமிழ் அல்லவா?

    "முந்து தமிழ் மாலை கோடி கோடி

    சந்த மொடு நீடு பாடி பாடி

    முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி - உழலாதே

    என்று தமிழை முந்து தமிழ் என்று கூறுவதையும் பொருளுக்காக மனிதர்களை பாரி காரி என்று புகழ்ந்து பாடுவதை கண்டிக்கிறார்.

    மொழி புனிதமானது. கல் தோன்றி மண் தோன்றும் காலத்திற்கு முன்பு தோன்றிய மூத்த குடி தமிழ்குடி என்ற பெருமையும் உண்டு.

    தமிழுக்கும் - தமிழர்க்கும் சுய கௌரவம் ஒன்று உண்டு. அதை விட்டு பொருளுக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1