Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Isai Marabu
Tamil Isai Marabu
Tamil Isai Marabu
Ebook102 pages33 minutes

Tamil Isai Marabu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழின் முதல் இலக்கண நூலாக இன்றும் நமக்குக் கிடைக்கும் 'தொல்காப்பியம்' இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளக்கூடியது.
மொழி இலக்கணத்துடன் ஏராளமான இசை இலக்கண விதிகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளது தொல்காப்பியம்!
அந்த இலக்கணங்களை விளக்கும் வகையில் ஒவ்வொரு விதியின் இறுதியிலும் 'என்மர்', 'என்பர் அறிஞர்'... என்றுதான் தொல்காப்பியர் கூறுகிறார். இதிலிருந்து அவருக்கும் முன்பாகவே ஒரு செழுமையான இசைப் பாரம்பரியமும், இசை இலக்கண நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
துரதிர்ஷ்டவசமாக, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இசை இலக்கண நூல்கள் நமக்குக் காணக் கிடைக்கவில்லை.
தொல்காப்பியம் தொடங்கி, அதன்பின்னர் எழுதப்பட்டதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், கூத்த நூல், கம்ப இராமாயணம், பக்தி இலக்கியங்கள் உள்பட ஏராளமான நூல்களில் தமிழிசை இலக்கணம், பண்களின் வகைகள், பண்களின் பெயர்கள், அவற்றைப் பாடும் முறை, பாடல் வகைகள், இசைக் கருவிகளின் வகை, அவற்றின் பெயர்கள், அவற்றை இசைக்கும் முறை ஆகியவை விரிவாக, விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஐந்திணைகளாகப் பிரிக்கப்பட்ட தமிழ் நிலம், ஒவ்வொரு திணைக்கும் உரித்தான பாடல் வகைகளையும், இசைக் கருவிகளையும் கொண்டிருந்த செய்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அவர்கள் மனங்களில் எழக்கூடிய வினாக்களும் அதற்கான விடைகளும்கூட, 'வினா - விடை' வடிவத்தில் பல அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
மிக நீண்ட இசை வரலாறு, தமிழிசைக்கு உண்டு என்பதை தமிழ்ச் சமுதாயத்திற்கு மீண்டும் நினைவு படுத்தும் நோக்கத்துடனேயே 'தொல்காப்பியம் முதல் திருப்புகழ் வரை யிலான தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் இலக்கணம், வரலாறு மற்றும் சுவாரஸ்யமான செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
அந்த விவரங்களையெல்லாம் அடுத்தடுத்து நூல்களாகப் படைக்கும் ஆர்வம் உள்ளது.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136806092
Tamil Isai Marabu

Read more from Aranthai Manian

Related to Tamil Isai Marabu

Related ebooks

Reviews for Tamil Isai Marabu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Isai Marabu - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    தமிழ் இசை மரபு

    Tamil Isai Marabu

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இனிய தமிழிசை

    2. தொல்காப்பியத்தில்...

    3. சங்க நூல்களில்...

    4. சங்க இலக்கியங்களுக்குப் பின்...

    5. சிலப்பதிகாரத்தில்...

    6. சிலப்பதிகாரத்துக்குப் பின் வந்த இலக்கியங்களில்...

    7. கூத்த நூலில்...

    8. பிற காப்பியங்களில்...

    9. பாடும் முறை குறித்து காப்பிய கால இலக்கியங்களில்...

    10. கம்பராமாயணத்தில்...

    11. பக்தி இலக்கியங்களில்...

    12. ஆழ்வார் பாசுரங்களில்...

    13. திருவாசகத்தில் ...

    14. திருப்புகழில்...

    முன்னுரை

    நுண்கலைகளுள் முதன்மையானது இசைக்கலை. இது மற்றெல்லாக் கலைகளையும்விட உயர்ந்தது.

    கலைகளில் பழமையானதும் இசைக் கலையாகத்தான் இருக்க முடியும். பேசும் திறன் பெற்ற உடனேயே மனிதன் பாடும் திறனும் பெற்றிருப்பான். பேசும் திறன் வளரும் முன்பே, பிறந்த உடனேயே, கேட்கும் திறன் இருக்கிறது. தாயின் தாலாட்டைக் கேட்பதற்காகவே கேட்கும் திறன் பிறவியிலேயே இருக்கிறது.

    அந்த வகையில் மனிதன் இரசிகனாகவேதான் பிறக்கிறான்.

    'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றியவன் தமிழன்' எனும்போது 'தமிழிசையும் காலத்தால் மிகவும் பழமையானதாகத்தான் இருக்க வேண்டும்.

    இன்று கர்நாடக இசை என்றழைக்கப்படும் தென்னிந்திய பாரம்பரிய இசை வகை ஏறத்தாழ 250 ஆண்டுகள் மட்டுமே பழமையானது.

    'சங்கீத மும்மூர்த்திகள்’ என்றழைக்கப்படும் தியாகையர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் மூவருமே பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழியிலும்,சமஸ்கிருத மொழியிலுமே பாடல்களை எழுதிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மூவருமே அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த இசையாசிரியர்களிடமிருந்துதான் இசை இலக்கணங்களைக் கற்றுக் கொண்டு பாரம்பரிய இசை ராகங்களின் அடிப்படையில் தங்கள் பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்

    ஆதலின் அவர்களது காலத்திலும், அவர்களது காலத்திற்கும் முன்பும் செழுமையான ஓர் இசைப் பாரம்பரியமும், இசை வரலாறும் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

    அவர்களுக்கும் முன்பே நூற்றுக்கணக்கான தமிழ்ப் பாடலாசிரியர்கள் ஏராளமான பாடல்களை தமிழில் எழுதி விட்டு மறைந்திருக்கிறார்கள்.

    ஆக, இந்த 'சங்கீத மும்மூர்த்திகளுடன்' இசை மரபு தொடங்கவில்லை என்பதும் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழிசை மரபு' தோன்றி வளர்ந்திருக்கிறது என்பதும்தான் நமது தமிழ் இலக்கியங்கள் தெளிவாக்கும் உண்மையாகும்.

    தமிழின் முதல் இலக்கண நூலாக இன்றும் நமக்குக் கிடைக்கும் 'தொல்காப்பியம்' இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளக்கூடியது.

    மொழி இலக்கணத்துடன் ஏராளமான இசை இலக்கண விதிகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளது தொல்காப்பியம்!

    அந்த இலக்கணங்களை விளக்கும் வகையில் ஒவ்வொரு விதியின் இறுதியிலும் 'என்மர்', 'என்பர் அறிஞர்'... என்றுதான் தொல்காப்பியர் கூறுகிறார். இதிலிருந்து அவருக்கும் முன்பாகவே ஒரு செழுமையான இசைப் பாரம்பரியமும், இசை இலக்கண நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

    துரதிர்ஷ்டவசமாக, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இசை இலக்கண நூல்கள் நமக்குக் காணக் கிடைக்கவில்லை.

    தொல்காப்பியம் தொடங்கி, அதன்பின்னர் எழுதப்பட்டதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், கூத்த நூல், கம்ப இராமாயணம், பக்தி இலக்கியங்கள் உள்பட ஏராளமான நூல்களில் தமிழிசை இலக்கணம், பண்களின் வகைகள், பண்களின் பெயர்கள், அவற்றைப் பாடும் முறை, பாடல் வகைகள், இசைக் கருவிகளின் வகை, அவற்றின் பெயர்கள், அவற்றை இசைக்கும் முறை ஆகியவை விரிவாக, விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஐந்திணைகளாகப் பிரிக்கப்பட்ட தமிழ் நிலம், ஒவ்வொரு திணைக்கும் உரித்தான பாடல் வகைகளையும், இசைக் கருவிகளையும் கொண்டிருந்த செய்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

    படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அவர்கள் மனங்களில் எழக்கூடிய வினாக்களும் அதற்கான விடைகளும்கூட, 'வினா - விடை' வடிவத்தில் பல அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

    மிக நீண்ட இசை வரலாறு, தமிழிசைக்கு உண்டு என்பதை தமிழ்ச் சமுதாயத்திற்கு மீண்டும் நினைவு படுத்தும் நோக்கத்துடனேயே 'தொல்காப்பியம் முதல் திருப்புகழ் வரை யிலான தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் இலக்கணம், வரலாறு மற்றும் சுவாரஸ்யமான செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

    அந்த விவரங்களையெல்லாம் அடுத்தடுத்து நூல்களாகப் படைக்கும் ஆர்வம் உள்ளது.

    அன்பன்

    அறந்தை மணியன்

    தமிழ் இசை மரபு

    தொல்காப்பியம் முதல் திருப்புகழ் வரை

    1. இனிய தமிழிசை

    உலகின் முதல் தோற்றம் ஒலியே என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை ! ஆதி இசையாக ஆதிபகவனை ஆன்மீகவாதிகள் கருதுகின்றனர். இவ்வுலகமே ஓங்கார ஒலியின் திரட்சியே! ஒலி வேறு; ஓசை வேறு. ஓசை - இசை ஆகாது. ஒலியிலிருந்துதான் இசை பிறக்கிறது.

    'ஓசை ஒலியெலாம்

    Enjoying the preview?
    Page 1 of 1