Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naattiya Varalaru
Naattiya Varalaru
Naattiya Varalaru
Ebook80 pages23 minutes

Naattiya Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழமையான நுண்கலைகளுள் நாட்டியக் கலையும் ஒன்று. எக்கலையையும் அதன் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளாமலேயே ரசிக்க இயலும். ஆயினும், ஓரளவு அதன் வரலாற்றையும், வளர்ச்சியையும், சிறப்பியல்புகளையும் தெரிந்து கொண்டால் ரசிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் எளிதாக இருக்குமென்பதால், அக்கலையைப் புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாக அமையும்படி இச்சிறு நூல் படைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580136805959
Naattiya Varalaru

Read more from Aranthai Manian

Related to Naattiya Varalaru

Related ebooks

Reviews for Naattiya Varalaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naattiya Varalaru - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    நாட்டிய வரலாறு

    Naattiya Varalaru

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நாட்டியக் கலையின் பிரிவுகள்

    நமது நாட்டு செவ்வியல் நாட்டியங்களின் வரலாறு

    ஆடற்கலை இலக்கணம்

    நாட்டியத்தில் கால்கள் மற்றும் பாதங்களின் பங்கு

    நாட்டிய நிகழ்ச்சிகளின் அமைப்பு

    பரதநாட்டிய 'பாணிகள்'

    நாட்டுப்புற (கிராமிய) நடனங்கள்

    பிற மாநிலங்களின் கிராமிய நடனங்கள்

    திரைப்படங்களில் நாட்டியக் காட்சிகள்

    திரைப்படங்களில் கிராமிய நடனக்காட்சிகள்

    இந்த அகிலம் முழுதும் எப்போதும் அசைந்து கொண்டே தான் இருக்கிறது.

    அண்ட கோளங்கள் எல்லாம் ஓய்வின்றிச் சுழன்று கொண்டே இருக்கின்றன.

    சூழ்ந்திருக்கும் வானகமும், சூரியனும், சந்திரனும், பிற கோள்களும், விண்மீன்களும் அசையும் அழகோவியங்களே! இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அசைவும் தாளம் தவறாமல் இயங்குகிறது. அதனால்தான் எல்லா உயிரினமும் வாழ முடிகிறது.

    உயிரினங்களின் உட்கூறான 'செல்'லின் அணுக்களான, 'புரோட்டானும்’, 'நியூட்ரானும்’, 'எலெக்ட்ரானும்' லயம் பிசகாமல் அசைந்து கொண்டேதான் இருக்கின்றன.

    இந்தப் பிரபஞ்ச-நாட்டியம், தனது ஒழுங்கில் சிறிது தவறினாலும், இயற்கையின் அமைப்பு நிலைகுலைந்து போகும். அகிலம் தூள் தூளாகி விடும். தாளம் தவறாத லயக்கோலத்தில், நாதத்தின் ஒன்றிப்பில், பஞ்ச பூதங்களும் ஒருங்கே செயல்பட, இப்பிரபஞ்சம் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

    அதைப்போலவே, தாளம் தவறாத நாட்டியக்கலையில், மனித வாழ்வும் மறுமலர்ச்சி பெறுகிறது, மனக்கிளர்ச்சியடைகிறது. அக்கிளர்ச்சியினால், புதுத் தெம்பு கிடைக்கிறது. அக்கலையால் நமதறிவு சொல்ல இயலாததோர் ஆனந்த நிலையை அடைகிறது. அந்த ஆனந்த நிலை, நமது செயல்பாடுகளுக்குத் தேவையான உற்சாகத்தையளிக்கிறது!

    உள்ளத்தின் எழுச்சியால் உடல் ஆடுகிறது. மலைக்குகைகளில் வாழ்ந்த மனிதன், எப்போதாவது, சந்தோஷத்தின் மிகுதியால், தன்னை மறந்து சூழ்நிலையை மறந்து, கையைக் காலை தூக்கி ஆட்டி, துள்ளிக்குதித்து, ஆடியிருப்பான். (Danced in gay abandon). அந்தக் காலகட்டத்தில், அது ஒரு வெற்று ஆட்டமாகத் தான் இருந்திருக்கும்; அதன் வரம்புகள் வகுக்கப்படவில்லை; இலக்கணம் ஏற்படவில்லை; இயல்புகள் வரையறை செய்யப்படவில்லை. மயில் போன்ற சில பறவைகள் சிறகை விரித்து ஆடியதையும், மான்கள் போன்ற சில விலங்குகள் துள்ளிக்குதித்து, ஓடியதையும் கண்டு ரசித்திருப்பான். அவற்றில் அழகிய அசைவுகள் இருப்பதை உணர்ந்திருப்பான். பின்னர், கால ஓட்டத்தில், மனித நாகரிகம் வளர்ச்சியடையவே, அவனது ஆட்டங்களும் பண்பட்டிருக்க வேண்டும்.

    அதற்குப் பிறகு, பல நூற்றாண்டுகள் கடந்த பின்னே, இலக்கணங்கள் பிறந்திருக்கும்.

    ஒரு பக்கம் இசைக்கலை வளர்ந்து வந்தது. கூடவே நாட்டியக் கலையும் பரிணாம வளர்ச்சியடைந்தது. இரண்டும் இணைந்து செழித்தன.

    முதலில் ஆட்டம் 'சுத்த நிருத்தமாய்' (Pure Dance) இருந்தது. பாவங்களும், நவரசங்களும் அதனுடன் இணையவில்லை. இசையில்லாத் தாளத்திற்கு மட்டுமே ஆடப்பட்டது. பின்னர் இசை சேர்ந்தது. அந்த நிலையில் அது 'நிருத்தியம்' என வளர்ந்தது.

    இசையும் வெகுகாலம் வெறும் ஸ்வரக் கோர்வைகளாகவே இருந்தது. அர்த்த-புஷ்டியுடன் கூடிய வார்த்தைகள்/கவிதைகள்/பாடல்கள் இல்லை.

    பல காலம்

    Enjoying the preview?
    Page 1 of 1