Yajnavalkyar
()
About this ebook
அத்தகைய மிக உயர்வான வேதகால முனிவர்களுள் ஒருவர் ‘யாக்ஞவல்கியர்'; முனிவர்களில் 'யோகீஸ்வரர்' என்றழைக்கப்பட்டவர் அவர் ஒருவரே; பாரதநாட்டின் மிகப்பழமையான வேதகால கலாச்சாரத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியதால் ‘யாக்ஞவல்கியரு’க்கு மிகச்சிறப்பான உயர்ந்த இடமுண்டு.
வேதவியாசரை விடவும் மிக உயர்ந்த இடம் ‘யாக்ஞவல்கியருக்கு உண்டு, ஏனெனில், வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள யாக்ஞவல்கியரின் கருத்துகளை வேதவியாசர் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
அத்தனை தகவல்களும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக ‘யாக்ஞவல்கியர்’ என்று இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
Read more from Aranthai Manian
Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal Rating: 0 out of 5 stars0 ratingsCarnataka Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsBharatanatyam Rating: 0 out of 5 stars0 ratingsYajnavalkyiya Smrithi Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Isai Marabu Rating: 0 out of 5 stars0 ratingsTamil Cinemavin Oli Oviyargal Rating: 0 out of 5 stars0 ratingsRaagangalum Thiraipada Paadalgalum Rating: 0 out of 5 stars0 ratingsYajnavalkyarin Vivaathangal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Nadaga Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsIsaiyin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsYajnavalkyar – Janagamannar Urayadalgal Rating: 0 out of 5 stars0 ratingsJ.R.D. Tata Rating: 0 out of 5 stars0 ratingsThiraipadangalana Ilakkiyangalum Naadgangalum Rating: 0 out of 5 stars0 ratingsChinnathirai Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsNaattiya Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsModern Theatres T. R. Sundaram Rating: 0 out of 5 stars0 ratingsHindustani Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsAmateur Nadagangalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsPammal Mudhal Komal Varai Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Pugazh Petra Porgal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Yajnavalkyar
Related ebooks
Yajnavalkyar – Janagamannar Urayadalgal Rating: 0 out of 5 stars0 ratingsThikkettum Thiru Murugan Rating: 0 out of 5 stars0 ratingsAanandham Arulum Arupadai Veedu Annal! Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsGreekka Mozhiyil Tamil Sorkkal! Greekka Nattil Indhumatha Sadangugal, Kathaigal!! Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Agarathi Rating: 0 out of 5 stars0 ratingsThiruvarur Tyagesan Thirukovil Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Muruganin Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsSri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratingsTiruvannamalai Girivalam Rating: 5 out of 5 stars5/5யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsAcham Thavir Ucham Thodu Rating: 0 out of 5 stars0 ratingsSikkal Singaravelava Jeevanai Sivanakkiduvai Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Thathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsNallana Ellam Arulum Naradar Puranam! Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Shankara Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsMahabharathamum – Mayakannanum Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural Part - 5 Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatha Marmam! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsJothida Medhaigalin Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsThalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5
Reviews for Yajnavalkyar
0 ratings0 reviews
Book preview
Yajnavalkyar - Aranthai Manian
http://www.pustaka.co.in
யாக்ஞவல்கியர்
Yajnavalkyar
Author:
அறந்தை மணியன்
Aranthai Manian
For more books
http://www.pustaka.co.in/home/author//aranthai-manian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பிறப்பும் குழந்தைப் பருவமும்
2. அ) யாக்ஞவல்கியரின் குருகுலவாசம்
3. 'சுக்ல-யஜுர் வேதத்தை' அறிந்து கொள்ளுதல்
4. யாக்ஞவல்கியரின் ஆஸ்ரமங்கள்
5. யாக்ஞவல்கியரின் இல்லறம்
6. ஜனக மன்னன் யாக்ஞவல்கியரின் மாணவரானது
7. யாக்ஞவல்கியர் தமது மனைவிகளுக்கு போதித்தல்
8. யாக்ஞவல்கியர் துறவு மேற்கொள்ளுதல்
முன்னுரை
ஹிந்து சமயத்தின் தத்துவங்களிலோ, சமய சிந்தனைகளிலோ, அல்லது தர்மநெறிகளிலோ என்றும் நிலைத்திருக்கின்ற மாபெரும் உண்மைகளெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாமுனிவர்கள் வழியாகத்தான் நம்மை வந்தடைந்துள்ளன. அந்த மகரிஷிகள் 'தவம்' என்றும் 'யோகம்' என்றும் அழைக்கப்படுகிற தங்களது தெய்வீக சக்திகள் மூலமாகப் புரிந்துகொண்ட உண்மைகளையே வேதங்கள் பதிவு செய்திருக்கின்றன. பல புராணங்களும் விவரிக்கின்ற - பலப்பல ஆண்டுகள் உணவின்றி மேற்கொள்ளப்பட்ட – 'தவம்' என்பதே கூட அத்தகைய தெய்வீக சக்தியால்தான் என்பது கண்கூடு. என்றும் நிலைத்திருக்கும் வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பேருண்மைகளும் கோட்பாடுகளும் அந்த மகா முனிவர்களால் பரவலாக வெளியிடப்பட்டன. அவற்றின் மூலம் அந்த தெய்வீக சக்தியைக் குறித்து மனித இனம் அறிந்து கொண்டது.
அத்தகைய மிக உயர்வான வேதகால முனிவர்களுள் ஒருவர் 'யாக்ஞவல்கியர்'; முனிவர்களில் 'யோகீஸ்வரர்' என்றழைக்கப்பட்டவர் அவர் ஒருவரே; பாரதநாட்டின் மிகப்பழமையான வேதகால கலாச்சாரத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியதால் 'யாக்ஞவல்கியரு'க்கு மிகச்சிறப்பான உயர்ந்த இடமுண்டு.
வேதவியாசரை விடவும் மிக உயர்ந்த இடம் 'யாக்ஞவல்கியருக்கு உண்டு, ஏனெனில், வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள யாக்ஞவல்கியரின் கருத்துகளை வேதவியாசர் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
'ஜைமினி' என்ற மற்றொரு மகாமுனிவர் தனிநபர்களை விட கருத்துகளுக்குத்தான் முக்கியத்துவமும் மதிப்பும் அளிக்கப் படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், கருத்துகளும் சிந்தனைகளும் என்றும் நிலைத்திருப்பவை. அந்த வகையிலும், இன்றும் நிலைத்திருக்கும் 'யாக்ஞவல்கியரின்' சிந்தனைகளும் கருத்துகளும், பெரும் முக்கியத்துவமுள்ளவை.
உபநிஷத்துக்களுள், உள்ளடக்கத்திலும், பொருளிலும் 'பிருஹராரண்யக' உபநிஷத்து மிகப் பெரியதாகும். அந்தப் பழமையான உபநிஷத்திலும், யாக்ஞவல்கியருக்குப் பெரும் பங்குண்டு; மிக நீண்ட பகுதிகளை அவர்தான் இயற்றினார்.
வேதகாலத்தில் ஆட்சி புரிந்த 'ஜனகர்' என்ற மன்னனுடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. அந்த மன்னன் அமைத்த 'யாகசாலை'களிலும், அவனது அவையிலும் அவர்களிருவரும் மேற்கொண்ட உரையாடல்களும், விவாதங்களும் ஹிந்து சமயக் கோட்பாடுகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.
'ப்ருஹதாரண்யக' உபநிஷத்தையும் 'ஈசாவாஸ்ய' உபநிஷத்தையும் மற்றும் ஏராளமான வேதகர்மாக்களுக்கான மந்திரங்களையும் உள்ளடக்கியுள்ள 'சுக்ல யஜுர் வேதம்' என்பது 'யாக்ஞவல்கியர்' கண்டுணர்ந்து வெளிப்படுத்தியது தான்.
பல்வேறு வேதகர்மாக்களின் உட்பொருளைக் குறித்த கலந்துரையாடல்களிலும் விவாதங்களிலும் 'யாக்ஞவல்கியர்' பங்கேற்றார் என்ற செய்தியை நாம் 'சதபாத ப்ராம்மணம்' என்ற பழம்பெரும் நூலிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
'கர்மாக்கள்' அல்லது 'சடங்குகளின் அடிப்படையில்தான் வேதங்கள் என்றும் நிலைபெற்று நிற்கின்றன. அத்தகைய சடங்குகள் குறித்த பெரும் நிபுணராகத் திகழ்ந்தவர் 'யாக்ஞவல்கியர்' வேறெந்தவொரு முனிவரும் அவரை மிஞ்ச முடிந்ததில்லை. 'யாக்ஞவல்கியர்' சடங்குகளில் மட்டும் நிபுணராக இருக்கவில்லை; தத்துவ ஞானியாகவும், விவாதம் செய்பவராகவும் சடங்குகளின் மறைபொருளை விளக்கியவராகவும் திகழ்ந்திருக்கிறார். 'பதஞ்சலி' என்ற முனிவருக்கு இணையாக 'யோக சாஸ்திரத்திலும்' அவர் நிபுணராக இருந்திருக்கிறார். அத்துடன் அவர் நெறிமுறைகளையும் சட்டங்களையும் வகுத்திருக்கிறார். 'நுண்பொருள் கோட்பாட்டியல்' (METAPHYSICS) எனப்படும் அறிவியலிலும் அவர் ஒரு மேதை!
மேலோட்டமாகப் பார்க்கும் போது 'கிருஷ்ண யஜுர் வேத'த்தில் விவரிக்கப்படும் சடங்குகளும் கிட்டத்தட்ட ஒரே வகையானவை என்றே தோன்றும். விளக்கவுரையாகத் திகழும் பல பகுதிகளும் ஒன்று போலேவே தெரியும். ஆயினும் மந்திரங்களை ஓதுவதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இதில் 'யாக்ஞவல்கி'யரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
அவரது படைப்புக்கள் குறித்தும், வேதாந்த தத்துவத்திற்கு அவரது பங்களிப்புகள் குறித்தும் தெரிந்துகொள்வது பலவகையிலும் பயனளிக்கக் கூடியதாகும். அவரைக் குறித்த பல தகவல்கள் 'சுக்லயஜுர் வேதத்திலும்' 'மகாபாரதத்திலும்' 'ஸ்கந்த புராணத்'திலும் காணக் கிடைக்கின்றன.
அத்தனை தகவல்களும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக 'யாக்ஞவல்கியர்' என்று இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
நான்கு வேதங்களைப் பற்றிய பொதுவான செய்திகள், 'யாக்ஞவல்கியஸ்மிருதி, சுக்ல யஜுர் வேதம், ப்ருஹ தாரண்யக உபநிஷத், ஈசாவாஸ்ய உபநிஷத், சதபாத ப்ராம் மணம் ஆகியவை அடுத்து வரும் தனித்தனி தொகுதிகளில் விரிவாகத் தரப்படும்.
அறந்தை மணியன்
1. பிறப்பும் குழந்தைப் பருவமும்
அ) பெற்றோர்
பாரத நாட்டின் வடமேற்குப் பகுதியில் பாஞ்சால நாடும், குரு நாடும் அடுத்தடுத்து இருந்தன. (இன்றைய பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள்). இருநாடுகளையும் குறுக்கே வெட்டியது போல கங்கை, யமுனை, சட்லெஜ், ஜீலம், ஜீநாப் ஆகிய ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. 'ப்ருகத்-கல்ப' காலகட்டத்தில், புனிதகங்கை நதிக்கரையில் இருந்த ஒரு நகரம் 'சமத்காரபுரம்' அந்நகரில் வாழ்ந்து வந்த ஓர் அந்தண தம்பதிக்கு இறையருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. (பாற்கடலில் பள்ளிகொண்டு 'யோக நித்திரை'யில் ஆழ்ந்திருந்த திருமாலின் நாபிக்கமலத்தில் அக்கரு உருவானதாக புராணங்கள் கூறுகின்றன.)
ஒரு வியாழக்கிழமை நன்னாளில், இளவேனிற்கால பௌர்ணமி அன்று விருச்சிக லக்னத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் அக்கரு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிவந்தது.
அந்த அந்தணப் பெற்றோர் குழந்தைக்கு 'பிரம்மரதன்' என்று பெயரிட்டனர். உரிய காலத்தில் முப்புரிநூல் அணிவித்து அவனுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினார் தந்தை. வேதங்களும்