Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tiruvannamalai Girivalam
Tiruvannamalai Girivalam
Tiruvannamalai Girivalam
Ebook73 pages1 hour

Tiruvannamalai Girivalam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அரசியல், நாட்டு நடப்பு , சினிமா கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்ட இவர் B.Com FCA முடித்துவிட்டு, சென்னையில் தொடங்கி பிறகு ஜகர்த்தாவில் சில வருடங்கள் பின் வளைகுடா வாழ் தமிழனாய் சில வருடங்கள். இப்போது மறுபடியும் சென்னை வாசி. வேலூர் போன்ற ஒரு small town ல் சினிமா பார்த்து, விவித் பாரதி,இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் ஆசிய சேவையில் திரை இசை பாடல் கேட்டு , தெருவில் கிரிக்கெட் விளையாடி, வளர்ந்தவர். புத்தகங்கள், தமிழ் திரை இசை, கோவில்கள் மற்றும் தமிழ் இலக்கியம் பக்தி சார்ந்து இருப்பதை ரசிப்பவர்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119302133
Tiruvannamalai Girivalam

Related to Tiruvannamalai Girivalam

Related ebooks

Reviews for Tiruvannamalai Girivalam

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tiruvannamalai Girivalam - N. Mohanakrishnan

    http://www.pustaka.co.in

    திருவண்ணாமலை கிரிவலம்

    Tiruvannamalai Girivalam

    Author:

    நா. மோகனகிருஷ்ணன்

    N. Mohanakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/n-mohanakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    திருவண்ணாமலை கிரிவலம்

    ஒரு தரிசன வழிகாட்டி

    சொ. மணியன்

    நா. மோகன கிருஷ்ணன்

    1

    தமிழகத்தின் புகழ் பெற்ற சைவத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையின் மகிமைகளைப் பக்கம் பக்கமாகப் பேசலாம். ஆனால் அனைத்தையும் இரண்டே வார்த்தைகளில் மார்க்கண்டேய முனிவரிடம் சொல்லியிருக்கிறார் நந்தி பகவான், ‘நினைத்தாலே முக்தி’.

    சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. வருடம்முழுவதும் திருவிழாக்கோலம் கொண்டிருக்கும் புனித நகரம். குறிப்பாகக் கார்த்திகை மாதமும், திருக்கார்த்திகை தினத்தன்று இங்கே மலைமீது ஏற்றப்படுகிற மகாதீபமும் மிகப் பிரபலம்.

    திருவண்ணாமலையில் ஏற்றப்படுகிற கார்த்திகை தீபத்தை ஒருவர் ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். அவர்களுடைய இருபத்தொரு தலைமுறைகளுக்குப் புண்ணியம் சேரும் என்கிறது தலபுராணம்.

    கார்த்திகை தீபம் வருடத்துக்கு ஒருமுறைதான், ஆனால் மாதந்தோறும் இந்தச் சிறு நகரம் பரபரப்பாகும் தினம் ஒன்று உண்டு, பௌர்ணமி கிரிவலம்!

    ஆம், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தமிழகம்முழுவதிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையைத் தேடி வருகிறார்கள். ரம்யமான முழுநிலவு வெளிச்சத்தில் மலையைச் சுற்றி ‘கிரிவலம்’ வந்து ஈசனை வழிபடுகிறார்கள்.

    இந்தப் புத்தகம்முழுவதும் கிரிவலத்தைப்பற்றி விரிவாகப் பேசவிருக்கிறோம், அதற்குமுன்னால், திருவண்ணாமலைகுறித்த சில அடிப்படை விஷயங்களைப் பார்த்துவிடலாம்.

    முதலில், திருவண்ணாமலைக்கு எப்படிச் சென்று சேர்வது?

    தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்துடனும் நெடுஞ்சாலைவழி இணைக்கப்பட்டுள்ளது திருவண்ணாமலை நகரம். ஆகவே, நாள்முழுவதும் தொடர்ந்து பேருந்து வசதி உண்டு.

    இதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர எல்லையோர நகரங்கள் அனைத்திலிருந்தும் திருவண்ணாமலைக்கு ஓரளவு நல்ல சாலைகள் உண்டு, ஏராளமான பேருந்துகளும் தொடர்ந்து சென்றுவருகின்றன.

    ஒருவேளை நீங்கள் காரில் சென்று திரும்ப விரும்பினாலும் பிரச்னையில்லை, பெரும்பாலும் நன்கு வசதியான நெடுஞ்சாலையிலேயே பயணம் செய்யமுடியும். வழியில் உணவு, தங்குமிடம், மற்ற வசதிகளுக்கும் பிரச்னை இருக்காது.

    மற்ற மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் சென்னை அல்லது பெங்களூருவுக்கு ரயில் அல்லது விமானத்தின்மூலம் வந்துவிடுவது நல்லது, அதன்பிறகு பேருந்து அல்லது காரின்மூலம் திருவண்ணாமலைக்குப் பயணம் செய்யலாம்.

    திருவண்ணாமலைக்கு ரயில் வசதியும் உண்டு. ஆனால் பேருந்துடன் ஒப்பிடும்போது இது சில குறிப்பிட்ட நேரங்களில்தான் இருக்கும், எல்லா நகரங்களையும் இணைக்கும் என்று சொல்லமுடியாது. ஆகவே இங்கு பேருந்து, கார் போன்ற தனிப்பட்ட வாகனங்களின்மூலம் வந்து திரும்புகிறவர்கள் அதிகம்.

    கார்த்திகை தீப நேரத்தில்மட்டும், திருவண்ணாமலைக்குப் பல சிறப்பு ரயில்கள் விடப்படும். அந்த விவரத்தை அவ்வப்போது செய்தித்தாள்கள், இணைய தளங்களின்மூலம் தெரிந்துகொண்டு அதற்கேற்பத் திட்டமிட்டால் வசதியாக வந்து திரும்பலாம்.

    ஒரு விஷயம், பேருந்தோ, ரயிலோ, பௌர்ணமி கிரிவல நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும், ஊருக்குள்ளும் தங்குமிடம் போன்றவை நிரம்பிக் காணப்படும், ஆகவே முடிந்தவரை முன்பதிவு செய்துகொண்டு பயணத்தைத் தொடங்குவது புத்திசாலித்தனம்.

    சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களில் இருந்து திருவண்ணாமலை வந்து திரும்புவதற்கு ஒரு நாளோ, அதிகபட்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1