Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yajnavalkyarin Vivaathangal
Yajnavalkyarin Vivaathangal
Yajnavalkyarin Vivaathangal
Ebook58 pages20 minutes

Yajnavalkyarin Vivaathangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்றாம் பாகம் இது. முதல் பாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் யாக்ஞவல்கியரும் ஜனகமன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட உரையாடல்கள் தொகுத்துத் தரப்பட்டன.
இந்த மூன்றாம் பாகத்தில் யாக்ஞவல்கியருடன் ‘வைசம்பாயனர்’ ‘சித்ரரதன்’, ‘விஸ்வாவசு’, ‘உத்தாலகர்’, ‘அஸ்வலர்’, ‘அர்த்தபாகர்’, ‘புஜ்யூ’, ‘உஷஸ்தர்’, ‘கஹோலர்’, ‘கர்கி’, ‘ப்ருகஸ்பதி’, ‘அத்ரி’ ஆகிய முனிவர்களும், வேத விற்பன்னர்களும் நடத்திய விவாதங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
தொடர்ந்து வர இருக்கும் நான்காம் பாகத்தில் ‘யாக்ஞவல்கிய -ஸ்ம்ருதி’யின் தொகுப்பு இடம் பெறும்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136806072
Yajnavalkyarin Vivaathangal

Read more from Aranthai Manian

Related to Yajnavalkyarin Vivaathangal

Related ebooks

Reviews for Yajnavalkyarin Vivaathangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yajnavalkyarin Vivaathangal - Aranthai Manian

    https://www.pustaka.co.in

    யாக்ஞவல்கியரின் விவாதங்கள்

    Yajnavalkyarin Vivaathangal

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. யாக்ஞவல்கியர் – வைசம்பாயனர் விவாதங்கள்

    2. யாக்ஞவல்கியர் – சித்ரரதன் விவாதங்கள்

    3.யாக்ஞவல்கியர் - விஸ்வாவசு விவாதங்கள்

    4. யாக்ஞவல்கியர் – உத்தாலகர் விவாதங்கள்

    5. யாக்ஞவல்கியர் - அஸ்வலர் விவாதங்கள்

    6. யாக்ஞவல்கியர் – அர்த்தபாகர் விவாதங்கள்

    7. யாக்ஞவல்கியர் - புஜ்யூ விவாதங்கள்

    8.யாக்ஞவல்கியர் – உஷஸ்தர் விவாதங்கள்

    9.யாக்ஞவல்கியர்- கஹோலர் விவாதங்கள்

    10.யாக்ஞவல்கியர் - கர்கி விவாதங்கள்

    11.யாக்ஞவல்கியர் - ப்ருகஸ்பதி - அத்ரி முனிவர் விவாதங்கள்

    துணைநூல் பட்டியல்

    முன்னுரை

    ‘யோகீஸ்வரர்’ என்று போற்றப்பட்ட ‘யாக்ஞவல்கியர்’ வரலாற்றின் மூன்றாம் பாகம் இது. முதல் பாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் யாக்ஞவல்கியரும் ஜனகமன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட உரையாடல்கள் தொகுத்துத் தரப்பட்டன.

    இந்த மூன்றாம் பாகத்தில் யாக்ஞவல்கியருடன் ‘வைசம்பாயனர்’ ‘சித்ரரதன்’, ‘விஸ்வாவசு’, ‘உத்தாலகர்’, ‘அஸ்வலர்’, ‘அர்த்தபாகர்’, ‘புஜ்யூ’, ‘உஷஸ்தர்’, ‘கஹோலர்’, ‘கர்கி’, ‘ப்ருகஸ்பதி’, ‘அத்ரி’ ஆகிய முனிவர்களும், வேத விற்பன்னர்களும் நடத்திய விவாதங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

    தொடர்ந்து வர இருக்கும் நான்காம் பாகத்தில் ‘யாக்ஞவல்கிய -ஸ்ம்ருதி’யின் தொகுப்பு இடம் பெறும்.

    1. யாக்ஞவல்கியர் – வைசம்பாயனர் விவாதங்கள்

    ‘யோகீஸ்வரர்’ என்று போற்றப்பட்ட யாக்ஞவல்கியரும் அவரது தாய் மாமனும் குருவுமான வைசம்பாயனரும் பல சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகளின் காரணமாக, விவாதங்களில் ஈடுபட்டனர். அந்த விவாதங்கள் அவர்களது ‘மாமன்-மருமகன்’ என்ற உறவிலும் ‘குரு-சீடர்’ என்ற வகையிலும் பெரும் பிளவுகளை ஏற்படுத்தினாலும், உலகோர்க்கு, அந்த விவாதங்கள் வேதம், வேதாந்தம், உபநிஷத்துக்கள், யாகங்கள், பிற சடங்குகள் குறித்து விரிவான, மற்றும் விளக்கமான செய்திகள் கிடைக்கக் காரணமாகவும் அமைந்தன.

    ‘சுப்ரியன்’ என்ற மன்னன் நோய்வாய்ப்பட்டபோது ‘சாந்தீகம்’ என்ற ‘ஹோமம்’ செய்து அவனது நோயைப் போக்க வைசம்பாயனரும் அவரது மற்ற சீடர்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தராது போகவே, இறுதியாக, யாக்ஞவல்கியரை அழைத்து வைசம்பாயனர் அவரிடம் பின்வருமாறு கூறினார்.

    வைசம்பாயனர்: யாக்ஞவல்கியா... உனக்கு பிறவியிலேயே பெரும் சக்திகள் அமைந்திருக்கின்றன. நீ அறிவிற் சிறந்தவன்; எனது மாணவர்களிலேயே எல்லா வேதங்களையும் கசடறக் கற்றவன் நீ மட்டுமே! நீ இன்று ‘சாந்தீக ஹோமம்’

    Enjoying the preview?
    Page 1 of 1