Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gopalan Vaibhavam
Gopalan Vaibhavam
Gopalan Vaibhavam
Ebook72 pages24 minutes

Gopalan Vaibhavam

By RVS

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செம்பகாரண்ய க்ஷேத்திரமாகிய ராஜமன்னார்குடி திருத்தலத்தின் பெருமைகளும் அங்கே எம்பெருமான் கோபாலன் செய்த லீலைகளும்… இங்கே நாமும் தரிசிக்கலாமா...

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580152708053
Gopalan Vaibhavam

Read more from Rvs

Related to Gopalan Vaibhavam

Related ebooks

Reviews for Gopalan Vaibhavam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gopalan Vaibhavam - RVS

    http://www.pustaka.co.in

    கோபாலன் வைபவம்

    Gopalan Vaibhavam

    Author :

    ஆர்.வி.எஸ்

    RVS

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rvs

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    செம்பகாரண்ய க்ஷேத்திரமாகிய ராஜமன்னார்குடி திருத்தலத்தின் பெருமைகளும் அங்கே எம்பெருமான் கோபாலன் செய்த லீலைகளும்...

    ஆர்.வி.எஸ்

    கோபாலன் வைபவம் எழுத உந்துதலாகவும் விஷய தானமும் அளித்த ஆத்ம ஸ்நேகிதன் ஹரித்ராநதி கோபாலனாகிய ராஜகோபாலன் ரெங்கராஜனுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.

    விஷயஸூசிகை

    இந்த வைபவத்தைப் பற்றி...

    1. கோப்ரளய கோபில ரிஷிகளுக்கு அருளிய கோபாலன்

    2. கோபாலன் லீலைகள்

    3. செம்பகாரண்ய மஹாத்மியம் - கிருஷ்ணனின் சேவைகள்

    4. திருப்பாற்கடல்: லக்ஷ்மி தபஸ் செய்த திருக்குளம்

    5. ஹரித்ராநதியின் மகிமை

    6. செய்நன்றி கொன்ற பாவத்தைப் போக்கும் செம்பகாரண்யம்

    7. நவதீர்த்த மகிமை

    8. உற்சவ விவரங்கள்

    9. உசாத்துணை / உறுதுணை

    10. மாடு மேய்க்கும் கண்ணே...

    http://1.bp.blogspot.com/-w8IT8cvbViI/VHmSRgeOR-I/AAAAAAAAA-c/zkJk9FKMdTo/s1600/fb-theppakkulam.jpg

    ஹரித்ராநதி

    இந்த வைபவத்தைப் பற்றி...

    ராஜமன்னார்குடியின் திருத்தலத்து வரலாறு வடமொழியில் ப்ரஹ்மாண்ட புராணத்தின் உத்தர காண்டத்தில் விஷ்ணு க்ஷேத்ர விபாகத்தில் சம்பகாரண்ய மஹாத்மியம் என்று எட்டு அத்தியாயங்களாக இடம் பெற்றிருக்கிறது. நைமிசாரண்யத்தில் சௌனகாதி முனிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஸுதர் நூற்றெட்டு திவ்ய தேசங்களின் மஹாத்மியங்களைச் சொன்ன பிறகு சம்பகாரண்ய மஹாத்மியத்தை விஸ்தாரமாகச் சொன்னார்.

    கோபில-கோபிரளய முனிவர்களுக்கு எம்பெருமான் பிரத்யக்ஷமானது சம்பகாரண்ய மஹாத்மியத்தில் வருகிறது. மன்னார்குடி பகுதி வளம் கொழிக்கும் சம்பக வனமாய் இருந்திருக்கிறது. அகஸ்தியரால் உண்டான காவேரி நதியின் புண்ணியமும் அதை பானம் பண்ணுபவர்களுக்கு மறுஜன்மம் இல்லையென்றும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. காவேரி நதி தீரத்தில் உறையும் ஸ்ரீரங்கன், கும்மோணம் சார்ங்கபாணி மற்றும் மன்னை ஸ்ரீராஜகோபாலன் ஆகிய மூவரையும் தரிசிப்பவர்க்கு மோக்ஷம் நிச்சயம்.

    மன்னார்குடியில் பிருகு, பிரம்மா, அக்னி ஆகியோரும் லக்ஷ்மியும் தபஸ் செய்திருக்கிறார்கள். அக்னி தவமியற்றியிருக்கிறான். கோபாலன் கோபஸ்திரீகளுடன் ஹரித்ராநதியில் ஜலக்ரீடை விளையாடியிருக்கிறான். ஒரு சௌராஷ்டிர ராஜாவின் கதையும் அவன் செய்த கைங்கர்யங்களும் வருகிறது. துவாதசாக்ஷர மந்திரத்தின் வைபவம் வருகிறது. மன்னார்குடியில் இருக்கும் நவதீர்த்த மகிமை பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஓம் நமோ பகவதே வாஸுதேவாய:

    1. கோப்ரளய கோபில ரிஷிகளுக்கு அருளிய கோபாலன்

    நைமிசாரண்யத்தில் விண்ணைத் தொடும் நெடுமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து சூதப் பௌராணிகர் புராண இதிகாசங்ளைப் பற்றி பிரவசனம் செய்துகொண்டிருக்கிறார். முனிவர்கள் யோகியர்கள் வேதியர்கள் என்று ரிஷிக்கூட்டம் அமர்ந்து மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. வெள்ளி ஜடாமுடியும் தேஜஸுமாக முன் வரிசையில் அமர்ந்திருக்கும் சௌனகர் சூதரிடம் கேட்டார்.

    நூற்றியெட்டு விஷ்ணு க்ஷேத்திரங்களின் வைபவத்தை நாங்கள் அனுபவித்தோம். பிருகு அக்னி பிரம்மா லக்ஷ்மி போன்ற தேவதைகளும் கோபிலர் கோப்ரளயர் ஆகிய முனிவர்களும் தவமியற்றி பூஜித்த செம்பகாரண்ய மாஹாத்மியம் பற்றியும் தேவரீர் அருளவேண்டும்

    சூதர் அழகாக ஆரம்பித்தார்.

    காவேரி புண்ணிய நதி. அகஸ்தியரால் உண்டாக்கப்பட்டது.

    Enjoying the preview?
    Page 1 of 1