Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valamana Vaazhvu Tharum Vainava Thalangal
Valamana Vaazhvu Tharum Vainava Thalangal
Valamana Vaazhvu Tharum Vainava Thalangal
Ebook147 pages30 minutes

Valamana Vaazhvu Tharum Vainava Thalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“வளமான வாழ்வு தரும் வைணவத்தலங்கள்” என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 வைணவத்தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் தினகரன் ஆன்மிகப் பலன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்ற பயனுள்ள பல ஆன்மிக நூல்கள் தொடர்ந்து வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580138807139
Valamana Vaazhvu Tharum Vainava Thalangal

Read more from R.V.Pathy

Related to Valamana Vaazhvu Tharum Vainava Thalangal

Related ebooks

Reviews for Valamana Vaazhvu Tharum Vainava Thalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valamana Vaazhvu Tharum Vainava Thalangal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    வளமான வாழ்வு தரும் வைணவத்தலங்கள்

    Valamana Vaazhvu Tharum Vainava Thalangal

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க ஸ்ரீரங்கநாதப்பெருமாள்

    புத்திரப்பேறு அருளும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்

    திருமணத் தடை நீக்கும் ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள்

    வாழ்வில் ஒளியேற்றும்  ஸ்ரீ மலைமண்டலப் பெருமாள்

    குடும்ப ஒற்றுமை சிறக்க ஸ்ரீகோதண்டராமர்

    நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஸ்ரீ ப்ரேமிக விட்டலர்

    கம்பீர வாழ்க்கை அருளும் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்மர்

    குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி

    தம்பதியிடையயே ஒற்றுமை சிறக்க ஸ்ரீ உத்திர ரங்கநாத ஸ்வாமி

    அற்புத வாழ்வை அருளும் ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாள்

    வாழ்வில் ஒளியேற்றும் தூப்புல் ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள்

    குறைகைளைத் தீர்க்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

    வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வைகுண்ட ரங்கநாதப் பெருமாள்

    சாபங்களை நீக்கியருளும் ஸ்ரீ ஸ்தலசயனப் பெருமாள்

    அழகிய வாழ்வினை அருளும் ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள்

    ஞானம் அருளும் ஸ்ரீ உத்தமர் கோயில்

    தோஷங்களிலிருந்து விடுபட ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்

    யோக வாழ்க்கை அருளும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

    வேண்டும் வரம் தரும் வரதராஜப் பெருமாள்

    வளமான வாழ்வு தரும் வைணவத்தலங்கள்
    ஆர்.வி.பதி

    60 குமுதம்

    அணுபுரம் 603127

    திருக்கழுக்குன்றம் வட்டம்

    செங்கற்பட்டு மாவட்டம்

    9443520904

    என்னுரை

    வணக்கம். வளமான வாழ்வு தரும் வைணவத்தலங்கள் என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 வைணவத்தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் தினகரன் ஆன்மிகப் பலன்,குமுதம் பக்தி ஸ்பெஷல்,தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை.இது போன்ற பயனுள்ள பல ஆன்மிக நூல்கள் தொடர்ந்து வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    மே 2021

    ஆதித்திருவரங்கம்

    கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க ஸ்ரீரங்கநாதப்பெருமாள்

    Adithiruvarangam Entrance

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் மிகப்பெரிய பெருமாள் என்ற சிறப்பைப் பெற்றவர் விழுப்புரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதித்திருவரங்கம் என்ற கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாள்.இந்த தலத்தில் ஸ்ரீரங்கநாதர் பதினைந்து அடி அளவில் கிழக்கு திசை நோக்கி தெற்கு வடக்காக சயனக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இந்தத் தலம் முதல் யுகமான கிருதயுகத்தைச் சேர்ந்ததாலும் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடையதாலும் ஆதித்திருவரங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகமிகப் பழமையான இந்த தலத்தின் மகிமையைப் பற்றி ஸ்காந்தபுராணத்தில் உத்திரகாண்டத்தில் 301 அத்தியாயம் முதல் 306 அத்தியாயம் வரை உத்திர ரங்க மஹாமித்யம் என்ற தலைப்பில் ஆறு அத்தியாயங்களில் வடமொழியில் விவரிக்கப்பட்டுள்ளது.

    தலவரலாறு

    Adithiruvarangam01

    ஆதிகாலத்தில் சோமுகன் என்ற அசுரன் தேவர்களை வெற்று வேதங்களை அபகரித்தான்.இதன் காரணமாக தேவர்களும் முனிவர்களும் மிகவும் கவலை அடைந்து பிரம்மாவைச் சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.அவரும் தேவர்களையும் முனிவர்களையும் திருப்பாற்கடல் அழைத்துச் சென்று ஸ்ரீமந்நாராயணனை வணங்கிப் பிரார்த்தித்து வேதங்களை மீட்டுத் தருமாறு விண்ணப்பித்துக் கொண்டார்கள்.பிரம்மா, தேவர்கள், முனிவர்கள் முதலானோரின் வேண்டுதலை ஏற்ற ஸ்ரீமந்நாராயணன் மச்ச அவதாரம் எடுத்து சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருந்த சோமுகனை சம்ஹரித்து வேதங்களை மீட்டுக் கொண்டு வந்து இந்த புண்ணியத்தலத்தில் பிரம்மாவிற்கு உபதேசித்தருளினார்.

    Adithiruvarangam Sthala Virutcham

    கிருதயுகத்தில் சுரதகீர்த்தி என்ற மன்னன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு எல்லா செல்வங்களும் அமையப்பெற்றிருந்தும் குழந்தைச் செல்வம் இல்லாமல் போனது.இதனால் வருந்திய மன்னனுக்கு நாரதமுனிவர் உத்தரரங்கம் என்னும் இத்திருத்தலத்தில் பாம்பனை மேல் கண்வளரும் திருவரங்கநாதனை வணங்கி வேண்டிக் கொள்ளுமாறு

    Enjoying the preview?
    Page 1 of 1