Kannan Vazhi Gandhi Vazhi
By R.V.Pathy
()
About this ebook
கண்ணன் அநீதிகளைக் கண்டு அஞ்சாமல் நீதிக்காக நேர்மையாகப் போராடுவதை சிறப்பான நிகழ்ச்சிகள் மூலம் விளக்குகின்றார். கிழவிக்கு உதவித் தொகை பெற்றுத் தருவது, குளத்தைத் தூர்வாருவது போன்ற கண்ணனின் செயல்பாடுகள் பொதுத்தொண்டு செய்ய நல்ல தூண்டுதல்கள்; வழிகாட்டிகள்.
குடிகாரனை ஆசிரியரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கக் கூறுவது சிறிது மிகையானது. இது காந்திய வழியா என்ற கேள்வி எழலாம். ஆனால் குடிகாரனையும் காந்திய வழியில் திருத்த எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், ”கண்ணன் வழி காந்திவழி” புதினம் ஒரு நல்ல படைப்பு.
Read more from R.V.Pathy
Siruvar Ilakkiya Aaraichi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsNooru Varushathu Bommai Rating: 0 out of 5 stars0 ratingsThe Magical Lamp Rating: 0 out of 5 stars0 ratingsPalli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal Rating: 0 out of 5 stars0 ratingsKaagamum Naangu Meengalum Rating: 0 out of 5 stars0 ratingsAppuvin Cycle Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthai Ilakkiya Munnodigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kannan Vazhi Gandhi Vazhi
Related ebooks
En Pakkam Rating: 0 out of 5 stars0 ratingsNanban Endroru Puththagam Rating: 0 out of 5 stars0 ratingsAhimsai Nayagan Gandhiyadigal Rating: 0 out of 5 stars0 ratingsAppa Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Siruvar Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNanavodai Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagarsamiyin Neechal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Naan Santhithen Rating: 0 out of 5 stars0 ratingsOoraar Rating: 0 out of 5 stars0 ratingsGnanathin Vaayil Rating: 0 out of 5 stars0 ratingsNalamillai... Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyana Katralai Nokki Rating: 0 out of 5 stars0 ratingsMiss. Janaki Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratings‘Teen’ Tharikita Rating: 3 out of 5 stars3/5Oru Mudivin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsManathul Manitham Rating: 0 out of 5 stars0 ratingsSilaiyum Neeye Sirpiyum Neeye Rating: 0 out of 5 stars0 ratingsKai Vilangu Rating: 4 out of 5 stars4/5Engal Veettu Maadiyile Rating: 0 out of 5 stars0 ratingsVichuvukku Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsArabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsKanaa Kaanum Ullam Rating: 0 out of 5 stars0 ratingsAppavai Azhaithu Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKanna Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum Rating: 0 out of 5 stars0 ratings"Vaanavillin Ettavathu Vannam" Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyor Thaalattu Paadava? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kannan Vazhi Gandhi Vazhi
0 ratings0 reviews
Book preview
Kannan Vazhi Gandhi Vazhi - R.V.Pathy
http://www.pustaka.co.in
கண்ணன் வழி காந்தி வழி
Kannan Vazhi Gandhi Vazhi
Author:
ஆர்.வி. பதி
R.V. Pathy
For more books
http://www.pustaka.co.in/home/author/rv-pathy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
கண்ணன் வழி காந்தி வழி
(சிறுவர் நாவல்)
ஆர்.வி.பதி
சிறுவர்களின் சிந்தனையை வளப்படுத்தும் சிறப்பான படைப்பு
ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் பல காரணிகளைச் சார்ந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று சிறுவர்களின் ஆக்கம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இன்று ஏடு தூக்கிச் செல்பவர்கள் நாளை நாடு காக்கும் தலைவர்கள்
என்று கூறியதைப் போன்று இன்றைய சிறுவர்களை சிறந்த ஆளுமை உடையவர்களாக உருவாக்குவது காலத்தின் கட்டாயம். வளரும் பயிருக்கு உரமும் நீரும் போல, சிறுவர்களைச் செம்மைப்படுத்தி வளர்ப்பது இலக்கியம்.
ஏனோ, மற்றைய துறைகளில் நூல்கள் வருவதைப் போன்று சிறுவர்களின் சிந்தனையை வளப்படுத்தும் நூல்கள் மிகுதியாக வருவதில்லை. இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் எழுத்தாளர் ஆர்.வி.பதி கண்ணன் வழி காந்தி வழி
என்ற அருமையான புதினத்தைப் படைத்து தமிழன்னைக்கு ஆரமாகச் சூட்டி அழுகு சேர்த்திருக்கின்றார்.
2019 அக்டோபர் 2 அண்ணல் காந்தியடிகளின் 150 ஆம் பிறந்த நாள். இதனை உலகமே கொண்டாடி பெருமைப்படுகின்றது. இந்தச் சூழலுக்கேற்ப காந்தியடிகளின் கருத்து மணிகளை இளைஞர் தம் நெஞ்ச வயல்களில் தூவும் நோக்கில் இந்தப் புதினத்தைப் படைத்திருக்கின்றார். அதற்காக அவரை முதலில் பாராட்டுகின்றேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கண்ணன். அவனைச் சுற்றி கதை சுழன்று சுழன்று மேலேறி வண்ணப் பட்டம் போன்று பறக்கின்றது. அவனது உறவினர் ஒருவர் அவனது பிறந்த நாளுக்கு வழங்கிய அன்பளிப்பு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறான சத்தியசோதனை
நூல். அதனைப் படித்த கண்ணனின் உள்ளத்தில் காந்தியடிகளைப் போன்றே சத்தியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு அகிம்சை வழியில் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென்ற உறுதி பிறக்கின்றது. அதன்படி அவன் வாழ்ந்து படிப்படியாக உயர்ந்து மாவட்ட ஆட்சியாளராகச் சிறந்து விளங்குவதை அருமையான புதினமாக ஆர்.வி.பதி படைத்திருக்கின்றார்.
புதினம் பதினைந்து அதிகாரங்களாக படர் கொடியாக வளர்கின்றது. காந்தியடிகளைப் பின்பற்றிச் செயல்படும் ஒரு மாணவன் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்வான், எப்படித் தீர்வு கண்டு முன்னேறுவான் என்பதை பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் உள்ளத்தில் பதியும் வகையில் ஆசிரியர் கதையை வடிவமைத்திருக்கின்றார். கற்பனை என்றாலும் இன்றைய நடைமுறைகளுக்கேற்ப நிகழ்ச்சிகளைப் பின்னுவது படிப்பவர்களை உடன் இழுத்துச் செல்கின்றது. கண்ணன் தன்னோடு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், தந்தை ஆகியோரின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதை ஆசிரியர் இயல்பாக சுவைபடக் கூறியுள்ளார்.
கண்ணனின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுத்துகின்ற தலைமையாசிரியர் நல்ல சிறந்த ஆசிரியர்களுக்கு ஓர் அருமையான எடுத்தக்காட்டு. பள்ளியில் உண்டியல் வைத்து சேரும் பணத்தை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவது, மாணவர்களிடம் உயர்பண்பை வளர்க்க காந்தி நேர்மைக் கடை
தொடங்குவது போன்ற செயல் திட்டங்களை இன்றைக்கும் பள்ளிகளில் செயல்படுத்தலாம். நல்ல விளைவுகள் ஏற்படும்.
கண்ணன் அநீதிகளைக் கண்டு அஞ்சாமல் நீதிக்காக நேர்மையாகப் போராடுவதை சிறப்பான நிகழ்ச்சிகள் மூலம் விளக்குகின்றார். கிழவிக்கு உதவித் தொகை பெற்றுத் தருவது, குளத்தைத் தூர்வாருவது போன்ற கண்ணனின் செயல்பாடுகள் பொதுத்தொண்டு செய்ய நல்ல தூண்டுதல்கள்; வழிகாட்டிகள்.
குடிகாரனை ஆசிரியரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கக் கூறுவது சிறிது மிகையானது.